ராங்கால் பலம் காட்டும் இ.பி.எஸ்! பண்ருட்டி ஆலோசனைப்படி தேர்தல் ஆணைய கதவைத் தட்டும் ஓ.பி.எஸ்.! சி.எம். போஸ்ட்! அண்ணாமலை நடத்தும் அசுவமேத யாகம்!

ff

"ஹலோ தலைவரே, எடப்பாடி - ஓ.பி.எஸ்.ஸுக்கு இடையிலான அதிகார யுத்தம் விறுவிறுப்பு குறையாமலே தொடருது''”

"ஆமாம்பா, மாஜி மந்திரி பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பி.எஸ். போய் சந்திச்சிருக்காரே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க.வில் நடக்கும் அதிகார மோதலில், எடப்பாடித் தரப்புக்கு சாதகமாகவே நீதிமன்றத் தீர்ப்புகள் வந்துக் கிட்டு இருக்குது, இதனால், ஓ.பி.எஸ். ஸும் அவரது ஆதரவாளர்களும் சோர்வடைஞ்சி போயிருக்காங்க. அடுத்து என்ன செய்வதுன்னு யோசித்த ஓ.பி.எஸ்., அரசியல் அனுபவம் அதிகமுள்ள பண்ருட்டி ராமச்சந்திரனை இரண்டு நாளைக்கு முன்பு சந்தித்தார். ஏறத்தாழ ஒருமணி நேரம் நடந்த அந்தச் சந்திப்பின்போது, பல முக்கிய பாயிண்டுகளை எடுத்துக்காட்டி ஓ.பி.எஸ்.ஸுக்கு ரொம்பவே நம்பிக்கை கொடுத்திருக்கிறார் பண்ருட்டி. குறிப்பாக, நீதிமன்றங்கள் என்ன மாதிரியான தீர்ப்பைத் தந்தாலும், தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்தான் மிக முக்கியம். அந்த வகையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ஆணையம் ஏற்கனவே அங்கீகரித்திருப்பதால், அந்தப் பதவிகளின் காலம் 2026 வரை செல்லுபடியாகும். அதைச்சொல்லி ஆணையத்தில் முறையிடுங்கள். உங்களுக்குச் சாதகமான முடிவுக்கு அது வழிவகுக்கலாம்னு அவர் சொன்னாராம். ஆதன்படி தேர்தல் ஆணையத்தின் கதவை ஓ.பி.எஸ். தரப்பு தட்ட ஆரம்பிச்சிருக்கு.''”

opseps

"ஏற்கனவே ஓ.பி.எஸ். தரப்பு சொல்லி வருகிற வாதம்தானே இது? எடப்பாடியின் வியூகம் எப்படி இருக்கு?.''”

"ஓ.பி.எஸ்.ஸின் இதுபோன்ற மூவ்களை ஒரு காமெடிக் காட்சி மாதிரியே பார்க்கிறது எடப்பாடித் தரப்பு. அதே நேரம், கட்சி தன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது, அதிலும் தமிழகம் தழுவிய அளவில் அது இப்போது விறுவிறுப்பாக இயங்குகிறது என்று மீண்டும் உணர்த்த நினைச்ச எடப்பாடி, அண்மையில் தி.மு.க. அரசின் மின் கட்டண உயர்வை எதிர்த்து மாநில அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அதேபோல் அண்ணா பிறந்தநாள் விழாப் பொதுக் கூட்டங்களையும் பரவலாக நடத்தித் தன் பலத்தை அவர் காட்டியிருக்கிறார். இந்தக் கூட்டங்களில் அ.தி.மு.க.வின் முக்கிய புள்ளிகளும் எம்.எல்.ஏ.க்களும் பெருமளவில் கலந்துக்கிட்

"ஹலோ தலைவரே, எடப்பாடி - ஓ.பி.எஸ்.ஸுக்கு இடையிலான அதிகார யுத்தம் விறுவிறுப்பு குறையாமலே தொடருது''”

"ஆமாம்பா, மாஜி மந்திரி பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பி.எஸ். போய் சந்திச்சிருக்காரே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க.வில் நடக்கும் அதிகார மோதலில், எடப்பாடித் தரப்புக்கு சாதகமாகவே நீதிமன்றத் தீர்ப்புகள் வந்துக் கிட்டு இருக்குது, இதனால், ஓ.பி.எஸ். ஸும் அவரது ஆதரவாளர்களும் சோர்வடைஞ்சி போயிருக்காங்க. அடுத்து என்ன செய்வதுன்னு யோசித்த ஓ.பி.எஸ்., அரசியல் அனுபவம் அதிகமுள்ள பண்ருட்டி ராமச்சந்திரனை இரண்டு நாளைக்கு முன்பு சந்தித்தார். ஏறத்தாழ ஒருமணி நேரம் நடந்த அந்தச் சந்திப்பின்போது, பல முக்கிய பாயிண்டுகளை எடுத்துக்காட்டி ஓ.பி.எஸ்.ஸுக்கு ரொம்பவே நம்பிக்கை கொடுத்திருக்கிறார் பண்ருட்டி. குறிப்பாக, நீதிமன்றங்கள் என்ன மாதிரியான தீர்ப்பைத் தந்தாலும், தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்தான் மிக முக்கியம். அந்த வகையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ஆணையம் ஏற்கனவே அங்கீகரித்திருப்பதால், அந்தப் பதவிகளின் காலம் 2026 வரை செல்லுபடியாகும். அதைச்சொல்லி ஆணையத்தில் முறையிடுங்கள். உங்களுக்குச் சாதகமான முடிவுக்கு அது வழிவகுக்கலாம்னு அவர் சொன்னாராம். ஆதன்படி தேர்தல் ஆணையத்தின் கதவை ஓ.பி.எஸ். தரப்பு தட்ட ஆரம்பிச்சிருக்கு.''”

opseps

"ஏற்கனவே ஓ.பி.எஸ். தரப்பு சொல்லி வருகிற வாதம்தானே இது? எடப்பாடியின் வியூகம் எப்படி இருக்கு?.''”

"ஓ.பி.எஸ்.ஸின் இதுபோன்ற மூவ்களை ஒரு காமெடிக் காட்சி மாதிரியே பார்க்கிறது எடப்பாடித் தரப்பு. அதே நேரம், கட்சி தன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது, அதிலும் தமிழகம் தழுவிய அளவில் அது இப்போது விறுவிறுப்பாக இயங்குகிறது என்று மீண்டும் உணர்த்த நினைச்ச எடப்பாடி, அண்மையில் தி.மு.க. அரசின் மின் கட்டண உயர்வை எதிர்த்து மாநில அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அதேபோல் அண்ணா பிறந்தநாள் விழாப் பொதுக் கூட்டங்களையும் பரவலாக நடத்தித் தன் பலத்தை அவர் காட்டியிருக்கிறார். இந்தக் கூட்டங்களில் அ.தி.மு.க.வின் முக்கிய புள்ளிகளும் எம்.எல்.ஏ.க்களும் பெருமளவில் கலந்துக்கிட்டாங்க. ஆனால், ஓ.பி.எஸ். தரப்பால் இப்படி, ஒரு பொதுக்கூட்டத்தைக் கூட நடத்த முடியவில்லை. இதன்மூலம், சசிகலாவுக்கும் தன் பலத்தை எடப்பாடி உணர்த்தி இருக்கிறார்னு அவர் ஆட்களே சொல்றாங்க.''

"தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசா பேசியதை வைத்து பா.ஜ.க அரசியல் செய்யுதே?''”

rr

"தி.க. தலைவர் கி.வீரமணி விடுதலை நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி அரசியல் தலைவர்கள் பங்கேற்ற பாராட்டு விழா பெரியார் திடலில் நடந்தது. அதில் பங்கேற்ற ஆ.ராசா, இந்து மதத்தில் உள்ள சாதிய ஒடுக்குமுறைகள் குறித்துப் பேசினார். அப்போது மனுஸ்மிருதியில் சூத்திரன் என்ற வார்த்தைக்கு சொல்லப்பட்டிருக்கும் அர்த்தத்தையும் சுட்டிக்காட்டினார். இதைத்தான் இந்து மதத்தை ஆ.ராசா இழிவுசெய்து விட்டதாக சொல்லி பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவா சக்திகள் கொந்தளிக்க ஆரம்பிச்சிடுச்சி. அதோடு ராசாவுக்கு எதிராக தமிழகம் முழுக்க காவல் நிலையங்களில் பா.ஜ.க.வினர் புகார்களைக் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. ராசாவோடு சேர்த்து முதல்வர் ஸ்டாலினையும் விமர்சிக்கிறாங்க.''

"இதை தி.மு.க.வினர் எப்படிப் பார்க்கறாங்க?''”

"ஆ.ராசாவைப் பொறுத்தவரை, கேஸ் போடட்டும் பார்த்துக்குறேன்னு தெம்பா இருக்கிறார். ஏன்னா, பெரியார் முதல் கலைஞர் வரை மேடைகளில் சொன்னதைத்தான் அவரும் சொல்லியிருக்காரு. அம்பேத்கர் ஆய்வுகளும் இதைத்தான் சொல்லுது. ஆனால், தி.மு.கவில் உள்ள சீனியர்கள் சிலர் ராசாவின் வேகத்தைப் பார்த்து நெளியுறாங்க. முதல்வர் குடும்பமே பக்திமயமா இருக்கிறப்ப, ராசா ஏன் இதையெல்லாம் பேசணும்னு கேட்குறாங்க. ஓட்டு பாதிக்கப்படுமோன்னு பயப்படுறாங்க. இது பற்றி பொதுச்செயலாளர் துரை முருகனிடம் சீனியர் அமைச்சர்கள் சிலர் நேரடி யாகவே புகார் தெரிவிச் சிருக்காங்களாம்.''”

"பா.ஜ.க. அண்ணாமலை டெல்லிக்கு ஆன்மீக விசயமா சென்றிருக்கிறாரே?''”

annamalai

"ஆமாங்க தலைவரே, ஜோதிடர்கள் ஆலோசனைப்படி, டெல்லியில் அண்ணாமலை சிறப்பு யாகம் ஒன்றை நடத்துகிறாராம். அது குறித்து விசாரித்தபோது, தமிழகத்தின் அடுத்த முதல்வ ராகத் தான்தான் அமரணும்னு அண்ணாலை ஆசைப்படறார், அதற்கான அம்சங்கள் அவருக்கு இருக்கிறதாம். இதில் தடை யெதுவும் வந்துடக்கூடாது என்பதற்காக, குதிரையை வைத்துச் செய்யப்படும் அசுவமேத யாகத்தை அவர் நடத்துகிறார். இந்தக் குதிரை யாகம் அவரை முதல்வர் நாற் காலிக்கு அழைத்துச் சென்று அமரவைத்துவிடும் என்று அவர் நம்புகிறார் என்கிறார்கள். இங்குள்ள அரசியல் சூழலில் அது எப்படி சாத்தியம்? என்று அவர்களிடமே கேட்டபோது, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ரஜினியைத் தளபதியாக்கி, பா.ஜ.க. டீம் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்றும், அப்போது ரஜினி, தனக்கு முதல்வர் பதவி வேண்டாம்னு அதை அண்ணா மலையிடம் ஒப்படைப்பார் என்றும் அண்ணாமலை வியூகம் வகுத்துச் செயல்படுகிறார் என்றும் கூறுகிறார்கள்.''”

"அதுசரி... காங்கிரஸில் அடிக்கடி ஏதாவது சலசலப்பு கிளம்பிடுதே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப் பினர்களை நியமிப்பது தொடர்பான பரிந் துரைப் பட்டியல், டெல்லி மேலிடத்தின் ஒப்புத லைப் பெற அனுப்பி வைக்கப் பட்டிருக்கு. இதில் வழக்கமாக மாநில பதவிகளில் இருப் பவர்களும், கட்சியின் முன்னாள் தலைவர்களின் வாரிசுகளும் இந்தப் பதவியில் அமர்த்தப்படுவார்களாம். இந்த முறை அப்படிப்பட்ட நபர்களிடம், முக்கிய நபர்கள் சிலர் டீலிங் பேசினராம். அவர்கள் பணம்தர மறுத்ததால் அவர்களின் பெயர்களை மட்டும் இந்தப் பரிந்துரைப் பட்டியலில் இருந்து அவர்கள் நீக்கிவிட்டனராம். இதேபோல், கட்சியின் எம்.பி.க்கள் சிலரும் தங்கள் ஆதர வாளர்களிடம், பொதுக்குழு ஆசை காட்டிக் கணிசமாகக் கறந்துகொண்டு, தனிப்பட்டியலை டெல்லிக்கு அனுப்பி இருக்கிறார்களாம். இப்படிப்பட்ட வசூல் விவகாரங்கள்தான் இப்போது காங்கிரஸ் கட்சிக்குள் பூகம்பங்களை ஏற்படுத்தி வருகிறது.''”

"அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் சல சலப்பு கிளம்புதே?''”

rr

"ஆமாங்க தலைவரே, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கதிரேசன் என்பவரை கடந்த நவம்பரில் நியமித்தார் ஆளுநர் ரவி. அதனால் அவர் தமிழக அரசை மதிக்காமல் ராஜ்பவன் ஆளாகவே செயல்படுகிறாராம். குறிப்பாக, இங்கு பணிபுரியும் சுமார் 2000 பேரில், சிறப்பு அலுவலர் கள் மட்டும் 600 பேர்வரை இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை அதிகம் என்பதால், தங்களில் ஒரு பகுதியினரை, தமிழக அரசு வெவ்வேறு துறைகளுக்கு மாறுதல் செய்ய வேண்டும் என்று இவர்கள் அரசின் உயர்கல்வித் துறையிடம் கோரிக்கை வைத்தனர். அரசும் இதை ஏற்றுக்கொண்டு, அவர்களில் ஒரு பகுதியினரை பிற துறைகளுக்கு டெபுடேஷ னில் நியமிக்கத் திட்டமிட்டது. இதையறிந்து கடுப்பான துணைவேந்தர் கதிரேசன், அந்த சிறப்பு அலுவலர்களை டீப்ரோமோட் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறா ராம். இதனால், துணைவேந்தரின் சதித்திட்டத்தில் இருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று அவர்கள் மீண்டும் அரசுக்குக் கோரிக்கை வைத்துவருகிறார்கள்.''

"ம்...''”

"தலைவரே.. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது சம்பந்தமா ஒரு தகவலைச் சொல் றேன். ஏற்கனவே ஸ்டான்லி மருத்துவமனையில் ரெய்டு நடந்து டீன் பாலாஜி யைக் குடைஞ்சாங்க. அதன் தொடர்ச்சிதான் விஜயபாஸ்கர் மீதான ரெய்டு. கொரோனா காலத்தில் பொருட்கள் வாங்கியது தொடர்பான புகார் மீது ரெய்டு நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி கந்தசாமி நோட் அனுப்பியும், அது முதல்வர் அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியால், மாஜி மீதான பழைய பாசத் தால் தடுத்து வைக்கப்பட்டி ருந்ததாம். இது பற்றி கந்தசாமி, முதல்வருக்கே தகவல் அனுப்ப, முதல்வர் உடனடியாக அதனைக் கவனித்து ரெய்டுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்திருக் கிறார். அதுபோலவே, மாஜி மீதான மெடிக்கல் காலேஜ் சீட் விவகாரத்திலும் அந்த காலேஜ் ஓனருக்கு நெருக்கமான தி.மு.க. அமைச்சரின் விருப்பத்தையும் மீறி, நடவடிக்கைக்கு உத்தர விட்டிருக்கிறார் முதல்வர்.”

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். டெல்லியில் இருந்து கடந்த 16-ஆம் தேதி இரவு சென்னைக்கு வந்தார், பா.ஜ.க. ஒன்றிய அமைச்சரான எல்.முருகன். அதே விமானத் தில் டெல்லியிலிருந்து சி.பி.ஐ.யை சேர்ந்த 3 அதிகாரி களும் சென்னைக்கு வந்துள்ளனர். அவர்கள் 18ஆம் தேதிவரை சென்னையை விட்டுக் கிளம்பவில்லை. தி.மு.க. அமைச்சர்கள் சிலருக்கு எதிரான பல்வேறு டாகுமெண்டுகளுடன் அவர்கள் சென்னை வந்ததாக வும், அது குறித்து இங்குள்ள சி.பி.ஐ. அதிகாரிகளுடன் விவாதித்ததாகவும் செய்தியொன்று சிறகடிக்கிறது.''

___________

இறுதிச் சுற்று!

எடியூரப்பா மீது வழக்கு! எடப்பாடிக்கு சிக்கல்!

ff

கர்நாடக மாஜி முதல்வரான பா.ஜ.க. எடியூரப்பா மீது 12 கோடி ரூபாய் ஊழல் வழக்கைப் பதிவு செய்திருக் கிறது மக்கள் நீதி மன்றமான கர்நாடக லோக் ஆயுக்தா. அவர் முதல்வராக இருந்தபோது, பெங்களூர் வளர்ச்சி ஆணையத்தின் மூலம் குடியிருப்புகள் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான ஒப்பந்த வேலையை ஈரோட்டைச் சேர்ந்த சந்திரகாந்த் ராம-ங்கம் என்பவரின் நிறுவனம் பெற்றிருந்தது. இதற்கு கைமாறாக தன் மகன் விஜயேந்திரா மூலம் 12 கோடி ரூபாயை லஞ்சமாகப் பெற்றாராம் எடியூரப்பா. இது தொடர்பான, ராம-ங்கத்தின் உரையாடல் ஆடியோ ஒன்றும் அண்மையில் வெளியானது. இந்த ஊழல் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா மற்றும் தொடர்புடைய அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்குமாறு லோக் ஆயுக்தா அமைப்புக்கு அதிரடியாக உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த வழக்கில், முதல் குற்றவாளியாக சந்திரகாந்த் ராம-ங்கம் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இவர் எடப்பாடியின் நெருங்கிய உறவினர். எடப்பாடி முதல்வராக இருந்தபோது நெடுஞ்சாலைத் துறையின் சில காண்ட்ராக்டுகள் ராம -ங்கத்துக்குக் கொடுக்கப்பட்டது. இதனாலேயே அவர் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ.யும், வருமான வரித்துறையும் அப்போது ரெய்டுகளை நடத்தின. இதை எல்லாம் கர்நாடக லோக் ஆயுக்தாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும் ஒரு தரப்பு முயற்சி செய்கிறது. இதனால் எடப்பாடிக்கு சிக்கல் என்கிறார்கள் ஓ.பி.எஸ். தரப்பினர். -இளையர்

விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் பக்கத்தில் உள்ளது "கோல்டன் பார்க்' என்ற தனியார் விடுதி. தொழிலதிபர்கள் தொடங்கி நிழலான நபர்கள் வரை பலரும் அங்கு வந்து, குடி, கூத்து என ஆட்டம் போட்டுவிட்டுப் போகிறார்களாம். குறிப்பாக திண்டிவனத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிப் பிரமுகர் ஒருவரும் அந்த விடுதியின் ரெகுலர் கஸ்டமராம். பொதுமக்கள் வந்து புகார் சொன்னாலோ, காவல்துறை ரெய்டுக்கு வந்தாலோ, என் பலம் தெரியுமா? என் ஆளும்கட்சி செல்வாக்கு தெரியுமா? என்றெல்லாம் அதன் உரிமையாளர் பிரேம், முண்டா தட்டுகிறாராம்.

-பிரகாஷ்

nkn210922
இதையும் படியுங்கள்
Subscribe