எங்களுக்கு ஒரு பிரச்சனை என அவரிடம் பகிர்ந்து கொண்டால், "சிஸ்டம் அப்படித்தான்.! நாம் தான் பொறுத்துப் போகணும்.. அதுப்படி நடக்கணும்'' என எங்களுக்கு ஆறுதல் கூறுவார். ஆனால், அவர் தற்கொலை முடிவு எடுத்தது தான் எங்களால் ஜீரணிக்க முடியவில்லை." என்கின்றனர் துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்ட கோவை டி.ஐ.ஜி. விஜயகுமாரின் பேட்ஜ்மேட்கள்.
முதல் தகவலறிக்கை:
அந்த வெள்ளிக்கிழமை காலைப் பொழுது அவ்வளவு எளிதாகப் புலரவில்லை காவல் துறைக்கு. கோவை பந்தய சாலையிலுள்ள டி.ஐ.ஜி. கேம்ப் ஆபிஸில் கேட்ட துப்பாக்கிக் குண்டு சத்தம் தமிழ்நாடு காவல்துறையையே அலறவைத் தது எனலாம். "ஈரோடு மாவட்ட ஆயுதப்படையில் காவலராக சேர்ந்து கோவை டி.ஐ.ஜி.க்கு கன் மேனாக 2016 ஆம் ஆண்டிலிருந்தே பணி யாற்றி வருகின்றேன். சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (07.07.2023 ) காலை 6.30 மணிக்கெல்லாம் மேலே உள்ள அவரது இல்லத்திலிருந்து கீழே அலுவலகத்திற்கு வந்த டி.ஐ.ஜி. விஜயகுமார் சார், முந்தைய நாள் டி.எஸ். ஆர்.களை பார்த்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த ரவிவர்மா விடம் பால் கேட்க, அவரும் காய்ச்சி எடுத்துக் கொடுத்தார். அதற்கடுத்த சில நிமிடங்களில் என்னுடைய அறைக்கு வந்தவர்PISTOL (BUTT NO: 183 Fu\ 9 MM PISTOL) வைத்திருக்கும் இடத்திற்கு சென்று என்னுடைய PISTOLலை எடுத்தார். இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று என்னிடம் பேசிக் கொண்டே அறையை விட்டு வெளியே சென்றார். நான் ப-நஐஒதப போட்டுட்டு வெளியே வருவதற்குள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு நானும் என்னுடன் அறையில் இருந்த கேம்ப் ஆபிஸ் டிரைவர் அன்பழகனும் வெளியே ஓடி வந்து பார்த்தோம். அப்போது அவர் மல்லாந்த நிலையில் தலையில் இரத்தக் காயத்துடன் கீழே விழுந்து கிடந்தார். டஒநபஞக அங்கேயே கிடந்தது'' என கன்மேன் ரவிச்சந்திரனிடம் புகார் வாங்கி முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்தது கோவை இராமநாதபுரம் காவல் நிலையம்.
ஒருபக்கம் மாவட்ட எஸ்.பி.யின் கேம்ப் அலுவலகம், மறு பக்கத்தில் ஐ.ஜி., கமிஷனர் கேம்ப் அலுவலகங்கள். துப்பாக்கிச் சத்தம் கேட்ட உடனேயே எஸ்.பி.யும், கமிஷனரும் டி.ஐ.ஜி. கேம்ப் அலுவலகத்தில் ஆஜராகி முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்த அதே வேளையில், டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், டி.ஆர்.ஓ. ஷர்மிளா பார்வையிட்ட நிலையில் வடக்கு ஆர்.டி.ஓ. கோவிந்தன் தற்கொலை குறித்து விசாரணையை மேற்கொண்டார். தற்கொலை செய்து கொண்ட விஜயகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட் டத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவரின் வீட்டிற்கு முன்பாக வைக்கப்பட்ட விஜயகுமாரின் உடலுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய நிலையில், விஜயகுமாரின் ஐ.பி.எஸ். நெருங்கிய நண்பர்களான காவல்துறை உயர் அதிகாரிகள் தேம்பி தேம்பி அழுதது குறிப்பிடத்தக்கது.
இதே வேளையில், "டி.ஐ.ஜி. விஜயகுமாரின் மரணத்திற்குக் காரணம் குடும்ப பிரச்சனை தான் என்றும், காவல்துறையின் பணிச்சுமையுமே'' எனத் தகவலாக பரவிய நிலையில் அவசர அவசரமாக டி.ஐ.ஜி. விஜயகுமாரின் தற்கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அருண் நியமிக்கப்பட்டார்.
மன அழுத்தமே காரணம்:
"கடந்த சில வருடங்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார், அதற்கான சிகிச்சையும் அவர் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் சிகிச்சை எடுத்துக்கொண்ட மருத்துவரிடம் நாங்கள் பேசினோம், கோவை மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் அவருக்கு கவுன்சில் செய்தபடி இருந்துள்ளார் கள். அவருக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்த காரணத்தினால் தான் அவரது மனைவி மற்றும் மகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து இங்கு வந்து அவருடன் சேர்ந்து இருந்திருக்கிறார் கள். இப்படிப்பட்ட கட்டத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது. இதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் கிடை யாது. இது ஒரு மருத்துவ பிரச்சனை யினால் நிகழ்ந்த சம்பவம். காவல் துறையில் காவலர்களுக்கு மன அழுத் தத்தை போக்குவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மன உளைச்சல் என்பது வேறு, மன அழுத்தம் என்பது வேறு, மன அழுத்தத்திற்கு கவுன்சிலிங் மற்றும் மருத்துவர் உதவி தேவை. இவர் இந்த இரண்டையும் செய்துதான் வந்துள் ளார். அதனையும் மீறி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நான் தற்பொழுது வரை விசாரித்ததில் குடும்பப் பிரச்சனை எதுவும் கிடையாது, அவரது மனைவி மற்றும் குழந்தை அவருக்கு மிகவும் அரவணைப்பாகவும், ஒத்துழைப்பு நல்கியும்தான் இருந்துள் ளார்கள். அவர் ஒரு நல்ல இடத்தில் இருப்பதால் பணிச் சுமையும் கிடை யாது. அவர் இதுவரை தனக்கு ஓய்வு வேண்டும் என்று எதுவும் கேட்டதில்லை. அவர் டீப் டிப்ரஷனுக்கான சிகிச்சையை எடுத்து வந்துள்ளார். அவர் நேற்று கூட மேற்கு மண்டல ஐ.ஜி.யைப் பார்த்துள்ளார். கோவை மாவட்ட கண்காணிப் பாளர் அவருடன் பேசி உள்ளார், அவர் இரண்டு தினங்களாகவே மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அதனை அவர்கள் சரிசெய்ய முயற்சி செய்து வந் துள்ளனர். அவருடைய மருத்துவருடன் பேசும் பொழுது விஜயகுமாருக்கு, ஓ.சி.டி. கம் டிப்ரஷன் என்று கூறினார். அதற்கான மருந்து களையும் அவர் எடுத்துக்கொண்டுள்ளார். இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது'' என பணிச்சுமை, குடும்பப் பிரச்சனைகளை மறுத்துப் பேசினார் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அருண்.
ஒத்திகை:
இதே வேளையில், "கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவரது பெற்றோர் தேனி திரும்பிய வேளையில் மனைவியும், மகளும் கோவை திரும்பியிருக்கின்றனர். முந்தைய நாள் துணைக்கமிஷனர் ஒருவரின் மகன் பிறந்த நாள் விழாவிற்கு மனைவி, மகளுடன் சென்று திரும்பிய இவர், அன்றைய இரவில் மகளுடன் கேரம்போர்டு விளையாடியிருக்கின்றார். மகள் தூங்கியவுடன் மாடியிலிருந்து கீழே வந்த இவர், கன்மேன் ரவிச்சந்திரனைக் கூப்பிட்டு உன்னுடைய பிஸ்டலை கொண்டு வா.! எப்படி லோடு செய்வது..? எங்கே இதை வைப்பாய்.?'' எனக் கேட்டுக்கொண்டே விளையாட்டாக சுடுவது போல் நடித்திருக்கின்றார். அந்த விளையாட்டு காலையில் உண்மையாக இருந்திருக்கின்றது. முந்தைய நாளே தன்னுடைய தற்கொலைக்கு ஒத்திகை நடத்தியிருக்கின்றார் டி.ஐ.ஜி.'' என்கின்ற அதிர்ச்சியான தகவலும் வெளியாகியுள்ளது.
மனைவியின் ஏளனம்..?
இது இப்படியிருக்க, "டி.ஐ.ஜி. விஜயகுமாரின் மகள் +2 முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதியுள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றபோதும் மதிப்பெண் குறைவாக இருந்ததால், அரசு மருத்துவக்கல்லூரி யில் இடம் கிடைக்கவில்லை. சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளதாக தெரிகிறது. அவ்வளவு பணம் கட்டி படிக்க வைக்க முடியாது என்பதால் தேனியிலுள்ள தனது இடத்தை விற்று படிக்க வைக்க முயற்சித்துள்ளார். டி.ஐ.ஜி.யின் மனைவி கீதவாணி அவரை ஏளனப்படுத்தி பேசி மட்டம் தட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது'' என டி.ஐ.ஜி. மனைவி பக்கம் பிரச்சனை இருப்பதாக கைகாட்டினர் டி.ஐ.ஜி.யின் உறவினர்கள் சிலர். இதுகுறித்து சுமார் 20 நிமிடங்கள் வரை விஜய குமாரின் மனைவி கீதவாணி காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பணிச்சுமையே காரணம்.?
"தாகத்திற்கு தண்ணீர் கேட்டால், செத்ததுக்கு பிறகு பால் ஊத்துவது நம்ம காவல்துறையின் சிஸ்டம். அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார் என்பது உண்மையான விஷயம்தான்.! அதுபோல் அவருக்கு வீட்டில் பிரச்சனை இருந்ததும் உண்மையே.! வழக்கமான குடும்பச் சண்டைகள் தான் அவை.! அவருடைய பெண் மேல் மிகுந்த அன்பு அவருக்கு.. தன்னுடைய ஒரே மகளை எப்பாடுபட்டாவது மருத்துவராக்க வேண்டுமென்ற லட்சியமும் அவருக்கு இருந்தது. நீட்டில் மார்க் குறைவு என்பதால் சென்னையிலுள்ள சில தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கேட்டார். இந்த விஷயத்தில் நாங்களும் எங்களால் ஆன உதவிகளை செய்தோம். இதில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே 7 நாட்கள் விடுமுறை கேட்டிருந்தார். விடுமுறை கிடைக்கவில்லை. 7 நாட்கள் வேண்டாம். 4 நாட்கள் கொடுங்கள் என்றார். அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை. அதனுடைய வெளிப்பாடாகக் கூட இந்த தற்கொலை இருக்கலாம். எங்களுக்கு புத்தி சொல்ற அவர் ஏன் இந்த முடிவை எடுத் தாரெனத் தெரியவில்லை." என்கின்றனர் அவரது பேட்ஜ் மேட் அதிகாரி கள்.
முதல்வரின் இரங்கல்:
"கோவை டிஐஜி. விஜயகுமார் தற்கொலை செய்த துயரமான செய்தி யால் பெரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். இவரது பணிக்காலத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்த்தவர். அவரது மரணம் காவல்துறைக்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கும், காவல் துறை நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலை யும் தெரிவித்து கொள்கிறேன்' என முதல்வர் கூறியுள்ளார். ஒவ்வொரு தரப்பும் தங்களது தரப்பு நியாயங்களை கிசுகிசுத்த நிலையில், டி.ஐ.ஜி.யின் இறுதி ஊர்வலத்தில் விஜயகுமாருக்கு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க திறம்பட மரியாதை செய்தது டி.ஜி.பி. சங்கர் ஜூவால் தலைமையிலான காவல்துறை. இதில் டி.ஜி.பி. விஜயகுமாரின் சடலத்தை தோளில் தூக்கி நடந்த தையும் சிலாகிக்கின்றனர் சில காவல் அதிகாரிகள்.
"இதுவே போதும்’ என்று எங்கேயும் தேங்கிவிடாதீர்கள். ஓடிக்கொண்டே இருங்கள். வெற்றி உங்களைப் பின் தொடரும்!' எனத் தன்னம்பிக்கையுடன் கூறும், டி.ஐ.ஜி.. விஜயகுமாரின் மரணத்தை போலீஸ் வட்டாரமே அதிர்ச்சியுடன் பார்க் கிறது. அதே வேளையில் டி.ஐ.ஜி.யின் மரணத்தில் நீடிக்கும் குழப்பத்தை நிவர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை.!!