(35) அலுவல் நேரத்தில் தழுவல்!?
வாஜ்பாய் பிரதமரா இருந்தப்போ, துணை பிரதமரா இருந்த அத்வானி, "திருமணமான இந்துப் பெண்கள் ஒவ்வொருவரும் பதினாறு குழந்தைகள் பெத்துக்கணும். அப்படி பெத்துக்கிட்ட பெண்ணுக்கு "வீரத்தாய்' விருதும், வீரவாள் பரிசும் தரப்படும்' என அறிவிச்சார்.
"அரிசி, பருப்பு குடுத்தாக்கூட ஒருநேரம் சமைச்சு திங்கலாம். ஆனா.. வாளை வாங்கி சும்மா வீட்டுல வைக்கிறதுக்கு. சும்மாவே இருந்திரலாம்...' என ஆண்களே இந்த ஐடியாவை நிராகரித்துவிட்டனர்.
ஆனால் ரஷ்ய அதிபர் புதின்... ஏகப்பட்ட சலுகைகள அறிவிச்சிருக்கார்.
ரஷ்யா பெரும் நிலப்பரப்பு கொண்ட நாடு. ஆனால்... அதற்
(35) அலுவல் நேரத்தில் தழுவல்!?
வாஜ்பாய் பிரதமரா இருந்தப்போ, துணை பிரதமரா இருந்த அத்வானி, "திருமணமான இந்துப் பெண்கள் ஒவ்வொருவரும் பதினாறு குழந்தைகள் பெத்துக்கணும். அப்படி பெத்துக்கிட்ட பெண்ணுக்கு "வீரத்தாய்' விருதும், வீரவாள் பரிசும் தரப்படும்' என அறிவிச்சார்.
"அரிசி, பருப்பு குடுத்தாக்கூட ஒருநேரம் சமைச்சு திங்கலாம். ஆனா.. வாளை வாங்கி சும்மா வீட்டுல வைக்கிறதுக்கு. சும்மாவே இருந்திரலாம்...' என ஆண்களே இந்த ஐடியாவை நிராகரித்துவிட்டனர்.
ஆனால் ரஷ்ய அதிபர் புதின்... ஏகப்பட்ட சலுகைகள அறிவிச்சிருக்கார்.
ரஷ்யா பெரும் நிலப்பரப்பு கொண்ட நாடு. ஆனால்... அதற்கேற்ற மக்கள் தொகை இல்லாமல் நாளுக்குநாள் பிறப்பு விகிதம் குறைஞ்சுக்கிட்டே இருக்கு. பிறப்பு விகிதம் குறைஞ்சது னாலே நாட்டோட வளர்ச்சி பாதிக்கும்.
பிறப்பு விகிதமும், இறப்பு விகிதமும் குறிப்பிட்ட விகிதாச்சாரப்படி இருந்தாத்தான் நாடு நல்லாருக்கும். பிறப்பு விகிதம் குறைஞ்சுக்கிட்டே வந்தா... அப்புறம்... யாருமே இல்லாத கடையில யாருக்காக டீ ஆத்த முடியும்?
இந்தக் கவலை அதிபர் புதினை ரொம்பவே ஆட்டிப் படைக்குது.
ஏற்கனவே உக்ரைனுடனான போரில் மூணு லட்சம் ரஷ்ய வீரர்கள் பலியாகி யிருக்காங்க.
அதனால்... இனப்பெருக்கம் என்கிற இலக்கை நோக்கி மக்களை நகர்த்த நினைக்கிறார் புதின்.
பிள்ளை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் இல்லாமலிருக்கும் இளம் பெண்களை ஊக்கப்படுத்த பல்வேறு திட்டங்களையும் அறிவிச்சிருக்கார்.
அதன்படி...
18 வயசிலருந்து 40 வயசு வரைக்கும் உள்ள பெண்களுக்கு இலவச பரிசோதனை கள், சிகிச்சைகள் அளிக்க உத்தரவிட்டி ருக்கிறார். அதோட... பிறப்பு விகிதம் ரொம்பவே குறைஞ்சிருக்க சில மாகாணங்கள்ல இருக்கிற 24 வயதும், அதற்கு மேற்பட்ட வயதும் கொண்ட பெண்கள் முதல் குழந்தை பெற்றுக்கொண்டால்... ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரூபிள்... (இந்திய மதிப்பில் 9 லட்சத்து 50 ஆயிரம்) வரை ஊக்கப்பரிசு வழங்க உத்தரவிட்டி ருக்கிறார்.
இதுவரை எளிமையான விதிகளைக் கொண்டிருந்த கருக்கலைப்பு இப்போது கடுமையாக்கப்பட்டுள்ளது.
தம்பதிகள் விவாகரத்து செய்வதற்கான விதிகளும் கடுமையாக்கப்பட்டிருக்கு.
இதெல்லாம் சரி...
அதிபர் போட்டிருக்க இன்னொரு உத்தரவுதான் ரொம்ப இண்ட்ரஸ்டிங்காவும், காண்ட்ரவர்ஸியாவும் ஆகியிருக்கு.
"ஆபீஸ்ல வேலைப்பளு அதிகம். அதனால வீட்ல கணவன் -மனைவி உடல் தொடர்பு வச்சுக்க முடியலன்னு காரண மெல்லாம் சொல்லிக்கிட்டிருக்கக்கூடாது. வீட்ல முடியலேன்னா... ஆபீஸ்ல தாம் பத்யம் வச்சுக்கங்க. ஆபீஸ்ல டீ பிரேக் விடுறாங்கள்ல... அந்த நேரத்துல ஜாலியா இருங்க. ஆனா... கர்ப்பமும், குழந்தைப் பிறப்பும் முக்கியம்' என உத்தரவு போட்டிருக்கிறார்.
"என்னது இது? ஆபீஸ்ல இப்படி பண்ணிக்கிட்டிருந்தா... ஆபீஸ் வேலை எப்படி நடக்கும்?' என சர்ச்சைக்குரல்கள் ஒலிக்கிறது.
ஆனால்... "குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கவே அதிபர் இந்த உத்தரவை போட்டிருக்கார்' என ரஷ்யாவின் சுகாதாரத் துறை அமைச்சர் யேவ்ஜெனி தெரிவித் திருக்கிறார்.
"ஹலோ... ஆபீஸ எப்ப திறப்பீங்க?'
"யோவ்...! இன்னிக்கி ஞாயித்துக்கிழமை... ஆபீஸ் லீவுய்யா'
"எதுக்கு லீவு விடுறீங்க? இனிமே ஞாயித்துக்கிழமயும் ஆபீஸ் வைங்க'
இப்படி ஒரு கான்வர்சேஷன் ரஷ்யாவில் நடந்தாலும் நடக்கும்.
ஆபீஸ் வேல... வாழ்க்கைக்கான டூட்டின்னா....
இது வாழ்க்கையோட டூட்டி!