a story

என் பொண்டாட்டி ஊருக்குப் போயிருச்சு!

Advertisment

"புருஷன், ஊருக்குப் போய்விட்டாலும் பொண்டாட்டி, பொண்டாட்டியாகவேதான் இருக்கிறாள்; பொண்டாட்டி ஊருக்குப் போய்விட்டால் புருஷன், பேச்சிலர் ஆகி கொண்டாட்டமாக இருக்கிறான்.' "அக்னி நட்சத்திரம்' படத்தில் வீ.கே.ராமசாமி #ஜனகராஜ் செய்யும் காமெடியைப் பார்த்தால் இது புரியும். இது உள்ளூர் வழக்கம் மட்டுமல்ல; உலக வழக்கமும் இப்படித்தான் இருக்கிறது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனாதிபதி ஆவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. கடந்தவாரம் நியூயார்க் ஜூரிஸ் நீதிக் குழுவின் விசாரணையின் தீர்ப்பு, இந்த விஷயத்தை பரபரப்பாக்கியிருக்கிறது.

Advertisment

ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து விவாகரத்து பெற்ற டொனால்ட் ட்ரம்ப், மூன்றாவதாக 2005-ஆம் ஆண்டு பிரபல மாடலிங் பெண்மணி மெலனியா க்ளாûஸ திருமணம் செய்துகொண்டார். அவர்தான் இப்போதும் ட்ரம்ப்பின் வாழ்க்கைத் துணை.

2006-ஆம் ஆண்டு கர்ப்பிணியான மெலனியா தாய்வீட்டுக்குச் சென்றிருந்தபோதுதான் அந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.

அமெரிக்காவில் டஞதச ஙஞயஒஊந எனப்படும் பாலியல் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நபஞதஙவ உஆசஒஊகந ஸ்டோமி டேனியல்ஸ். பல்வேறு நிறுவனங்கள் நடத்திய போட்டியில் ரசிகர்களால் "சிறந்த மார்பழகி' பட்டத்தை வென்றவர் ஸ்டோமி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த "குறிப்பிடத்தக்கது'வை "கவனிக்கத்தக்கது' என கவனித்தாரோ என்னவோ டிரம்ப்; தன் தொழிலதிபருக்குரிய தோரணையில் ஸ்டோமியிடம் ரோமியோ ஆட்டம் ஆடியிருக்கிறார். சுமார் ஒரு வருடத்திற்கு இவர்கள் தொடர்பு நீடித்திருக்கிறது.

ஜனநாயக கட்சி தனது அதிகாரப்பூர்வ அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக 2016#ல் அறிவித்தது. அப்போதுதான் ஸ்டோமி விஷயம் மெல்ல மெல்ல கசிய ஆரம்பித்தது. ஓரிரு மீடியாக்களில் அரசல்புரசலாக இந்த விஷயத்தை லீக்செய்தார் ஸ்டோமி. உடனடியாக ஸ்டோமியைச் சந்தித்த ட்ரம்ப்பின் வக்கீல், ஒரு லட்சத்து முப்பதாயிரம் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ஒருகோடி ரூபாய்க்கு மேல்) கொடுத்து "ட்ரம்ப்பைப் பற்றி வாய் திறக்கக் கூடாது' என ஒரு சட்ட ஒப்பந்தம் போட்டுவிட்டு வந்தார்.

ட்ரம்ப் அதிபரான பிறகு ரகசிய போலீஸôர் ஸ்டோமியின் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த ட்ரம்ப்பிற்கு எதிரான ஆதாரங்களை அள்ளிக்கொண்டு போனார்கள். இதன் எதிரொ-யாக இந்த விஷயம் நீதி விசாரணைக்குப் போனது.

ஸ்டோமியுடன் ட்ரம்ப் தொடர்பு வைத்திருந்தது அவரின் தனிப்பட்ட விஷயம்; இருவருக்கும் இடையே ஒப்பந்தம் போட்டுக்கொண்டதும் அவர்கள் சொந்த விஷயம்; ஸ்டோமிக்கு ட்ரம்ப் தரப்பில் பணம் கொடுத்ததும் சொந்த விஷயம்.

ஆனால்... "குடியரசு கட்சிக்கு மக்களிடமிருந்து பெறப்பட்ட தேர்தல் நிதியை சொந்த விஷயத்திற்காக ட்ரம்ப் பயன்படுத்தியது குற்றம்; இந்த பண பரிவர்த்தனை குற்றத்தை மறைக்க, போலியாக தஸ்தாவேஜுக்கள் உருவாக்கியது குற்றம்; தேர்தல் செலவாக அரசிடம் இதை சமர்ப்பித்தது குற்றம்...'

-இப்படியாக இந்த விஷயத்தில் சுமார் 30 வகை குற்றங்களை ட்ரம்ப் செய்திருப்பதாக ஜூரி கவுன்சில் தெரிவித்திருக்கிறது. அத்துடன் இதற்குரிய தண்டனையை ஜூலை 11-ஆம் தேதி தெரிவிப்பதாகவும் நீதிபதிகள் சொல்-யுள்ளனர்.

மீண்டும் குடியரசு கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக டிரம்ப் பெயர் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் இந்தத் தீர்ப்பு பரபரக்க வைத்திருக்கிறது அமெரிக்க அரசியலை.

தற்போதைய அதிபர் ஜோ பைடன் இந்த தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்.

வழக்கமாக அரசியல்வாதிகள் என்ன பதில் சொல்லுவார்களோ?.... அதையேதான் டிரம்ப்பும் சொல்லியிருக்கிறார்...

இது அரசியல் சதி!