புயல் நிவாரணம்... பரிதவிக்கவிடும் அதிகாரிகள் - கொந்தளிப்பில் வடமாவட்ட மக்கள்!

ss

ஃபெஞ்சல் புயலால் சிதிலமடைந்த கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டுள்ள நிலை யில் ஆளும்கட்சியான தி.மு.க.வை தத்தளிக்க வைக்கின்றன எதிர்க்கட்சிகள். நிவாரண நிதி வழங்குவதற்காக வருவாய்த்துறை எடுக்கும் கணக்கெடுப்பில் குழப்பத்தை உருவாக்குவதால் மக்கள் அரசுமீது அதிருப்தியில் உள்ளனர்.

தென்பெண்ணையாற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி யில் கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கொளமஞ்சனூர், ராயன்டாபுரம், அகரம்பள்ளிப்பட்டு, வாழவச்சனூர் வழியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப் பட்டுக்குள் நுழைகிறது. இதில் அகரம்பள்ளிப்பட்டு தென்பெண்ணையாற்றின் வடக்குக் கரையிலுள்ள கிராமம். தெற்குக் கரையில் தொண்டமனூர் கிராமம் உள்ளது. அகரம்பள்ளிப்பட்டிலிருந்து தொண்ட மனூர் வழியாக பெருங்களத்தூர், வாழவச்சனூர் உட்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 2.5 கி.மீ தூரத்தில் செல்லமுடியும். இதற்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. மழைக்காலத்தில், ஆற்றில் தண்ணீர் வரும்போது சுமார் 10 கி.மீ தூரத்துக்கு சுற்றியே, மேற்கண்ட கிராமங்களுக்கு செல்லமுடி யும். இதனால் மேம்பாலம் கட்டித்தரவேண்டும் என்பது இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களின் கோரிக்கை.

ss

அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகரம்பள்ளிப்பட்டு- தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும்விதமாக 15.9 கோடி செலவில் 250 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் ஈரோட்டைச் சேர்ந்த ஏ.ஆர்.எஸ். என்கிற நிறுவனம் டெண்டர் எடுத்து கட்டியது. 2024, செப்டம்பர் 2-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அந்த மேம்பாலம் ஃபெஞ்சல் புயலுக்குப் பின் சாத்தனூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட 1.80 லட்சம் கனஅடி தண்ணீரால் 6, 7 துண்டுகளாக உடைந்தது, மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கடந்தகால ரெக்கார்டுகளைப் பார்த்துவிட்டு, இந்த அணையின்வழியாக அதைவிட அதிகமாக 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்லும் வகையிலேயே இந்த மேம்பாலம் கட்டப்பட்டது என அறிக்கை விட்டுள்ளது நெடுஞ்சாலைத்துறை. 1972-ல் 2 லட்சம் கனஅடி தண்ணீர் சாத்தனூர் அணையிலிருந்து வெளியேற்றியதற்கான ஆவணங் கள் உள்ளது. ஆற்றில் அடித்துப்போன பாலத்திற்கு அருகில் 5

ஃபெஞ்சல் புயலால் சிதிலமடைந்த கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டுள்ள நிலை யில் ஆளும்கட்சியான தி.மு.க.வை தத்தளிக்க வைக்கின்றன எதிர்க்கட்சிகள். நிவாரண நிதி வழங்குவதற்காக வருவாய்த்துறை எடுக்கும் கணக்கெடுப்பில் குழப்பத்தை உருவாக்குவதால் மக்கள் அரசுமீது அதிருப்தியில் உள்ளனர்.

தென்பெண்ணையாற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி யில் கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கொளமஞ்சனூர், ராயன்டாபுரம், அகரம்பள்ளிப்பட்டு, வாழவச்சனூர் வழியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப் பட்டுக்குள் நுழைகிறது. இதில் அகரம்பள்ளிப்பட்டு தென்பெண்ணையாற்றின் வடக்குக் கரையிலுள்ள கிராமம். தெற்குக் கரையில் தொண்டமனூர் கிராமம் உள்ளது. அகரம்பள்ளிப்பட்டிலிருந்து தொண்ட மனூர் வழியாக பெருங்களத்தூர், வாழவச்சனூர் உட்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 2.5 கி.மீ தூரத்தில் செல்லமுடியும். இதற்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. மழைக்காலத்தில், ஆற்றில் தண்ணீர் வரும்போது சுமார் 10 கி.மீ தூரத்துக்கு சுற்றியே, மேற்கண்ட கிராமங்களுக்கு செல்லமுடி யும். இதனால் மேம்பாலம் கட்டித்தரவேண்டும் என்பது இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களின் கோரிக்கை.

ss

அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகரம்பள்ளிப்பட்டு- தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும்விதமாக 15.9 கோடி செலவில் 250 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் ஈரோட்டைச் சேர்ந்த ஏ.ஆர்.எஸ். என்கிற நிறுவனம் டெண்டர் எடுத்து கட்டியது. 2024, செப்டம்பர் 2-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அந்த மேம்பாலம் ஃபெஞ்சல் புயலுக்குப் பின் சாத்தனூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட 1.80 லட்சம் கனஅடி தண்ணீரால் 6, 7 துண்டுகளாக உடைந்தது, மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கடந்தகால ரெக்கார்டுகளைப் பார்த்துவிட்டு, இந்த அணையின்வழியாக அதைவிட அதிகமாக 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்லும் வகையிலேயே இந்த மேம்பாலம் கட்டப்பட்டது என அறிக்கை விட்டுள்ளது நெடுஞ்சாலைத்துறை. 1972-ல் 2 லட்சம் கனஅடி தண்ணீர் சாத்தனூர் அணையிலிருந்து வெளியேற்றியதற்கான ஆவணங் கள் உள்ளது. ஆற்றில் அடித்துப்போன பாலத்திற்கு அருகில் 5 கி.மீ முன்பு 17 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய மேம்பாலம், அணையிலிருந்து 1 கி.மீ தூரத் தில் ஒரு பாலம், 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மூங்கில்துறைப்பட்டு பாலம் இருக்கு. அவை எதுவும் இந்த அதீத மழை வெள்ளத்தில் அடித்துப் போகவில்லையே என நேரில்வந்து பார்த்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு அதிகாரிகளிடம், ஆட்சியாளர்களிடம் பதில் இல்லை.

பாலம் கட்டும் பணியில் பணியாற்றிய தொழிலாளி ஒருவர் நம்மிடம், "கட்டுமான வேலை யின்போது 10 மூட்டை சிமெண்ட் போடவேண்டிய நேரத்தில் 3 மூட்டை சிமெண்ட்தான் போடச் சொன்னாங்க. அதிகாரிங்க திடீர்னு வந்துபார்த்து கேட்பாங்க, 10 மூட்டை போட்டோம்னு சொல்லுங்கன்னு சொன்னாங்க, நாங்க சிலமுறை இப்படி சொல்லியிருக்கோம். அதிகாரிங்க வரு வாங்க, பார்ப்பாங்க, போய்டுவாங்க. கட்டும்போது எந்த ஆய்வும் அதிகாரிங்க செய்யல''’என்றார்.

ss

தென்பெண்ணை கரையிலுள்ள கிராமங் களுக்கு நேரடியாக நாம் சென்று விசாரித்தோம். ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பாலத்திலிருந்து 50 மீட்டர் தூரத்தில் வீடுகட்டி வசிக்கும் அகரம் பள்ளிப்பட்டு ரவி-பாரதி தம்பதியினர், "டிசம்பர் 1-ஆம் தேதி இரவு 11 மணிக்கு பாலம் அடிச்சிக் கிட்டுப் போச்சு. அப்போ எங்க வீட்டுக்குள்ள 4 அடி உயரத்துக்கு தண்ணீர் வந்தது. நாங்க எங்கள காப்பாத்திக்க வீட்லயிருந்து மேடுநோக்கி ஓடினோம். நாங்க வளர்த்த 2 ஆடு, 1 மாடு ஆத்துல போய்டுச்சி. மழைத் தண்ணி வடிஞ்சதுக்குப்பிறகு வந்து கணக்கெடுத்தாங்க. அப்போ பயிர்கள மட்டும்தான் கணக்கெடுத்தாங்க. எங்க வீட்டு சுற்றுச்சுவர் இடிஞ்சி விழுந்துடுச்சு. ஆத்துல அடிச்சிக்கிட்டு போன மாடு, ஆடு கணக்கு எடுக்கல. கேட்டதுக்கு அப்புறம் வர்றோம்னு சொன்னாங்க, இப்பவரைக்கும் வரல''’என்றார்கள் சோகமாக.

"எங்க ஊர்ல மட்டும் ராஜேந்திரன்-தன லட்சுமி தம்பதியோட 6 ஆடுங்களும், சிவராஜ்- பவுனு வீட்ல வளர்த்துக்கிட்டு இருந்த 3 ஆடும் ஆத்துல அடிச்சிக்கிட்டு போய்டுச்சி'' என்றார்கள்.

இஸ்லாமியர் குடியிருப்பில் 4 வீடுகள், ஆற்றில் திரண்டுவந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட் டுள்ளது. “10 கோழி அடிச்சிக்கிட்டு போய்டுச்சி. வீட்டுக்கு வெளியில கட்டியிருந்த பாத்ரூம் அப் படியே அடிச்சிக்கிட்டு போய்டுச்சி. இதுவரைக்கும் வந்து பார்க்கல, கணக்கெடுக்கல''’என்றார் மும்தாஜ்.

தென்பள்ளிப்பட்டு முத்துவேல், “"20 மந்தை மாடு வச்சிருக்கன். ஆலயாறு கடந்து மேய்ச்சலுக்கு போய்ட்டு கால்வாய் வழியா திரும்பிவரும். மழையப்ப அதிக தண்ணீர் வந்து மாடுகளை அடிச்சிக்கிட்டுப் போய்டுச்சி. நானும் எங்கயாவது கரையேறியிருக்கும்னு 3 நாள் தேடினேன். எங்கயும் கிடைக்கல. அதுக்குபிறகுதான் போய் வி.ஏ.ஓ.விடம் சொன்னேன். மாடு போய்டுச்சின்னு எப்படி நம்பறது, செத்துப்போச்சின்னு டாக்டர் சர்டிபிகேட் வேணும், போட்டோ வேணும்னு கேட்டார். இதுக்கு நான் எங்க போறதுன்னு கேட்டதுக்கு, பிறகுவந்து பார்க்கறேன்னு சொன்னாரு. வரவேயில்ல. ஆனால் வேறு சிலர் சொன்னதும் அப்படியே எழுதிக்கிட்டாரு. அவுங்கள்ல பலர் வீட்லயே பால் மாடு வளர்க்கறவங்க, பாதுகாப்பா இருந்தது. அவுங்க செத்துடுச்சு, தண்ணியில அடிச்சிக்கிட்டு போய்டுச்சுன்னு சொன்னதை எழுதிக்கிட்டாரு. இதுலகூட சாதி பார்க்கறாங்க''’என்றார்.

வாழவச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜானகிராமன். ஆற்றை ஒட்டினாற்போல் நிலம் இருக்கிறது. “"இரவில் இந்த மாட்டுக் கொட்டாயில் தான் என்னுடைய இரண்டு மாடுகளைக் கட்டி வைப்போம். மழையன்று அணை திறந்துவிட்ட போது அதீத வெள்ளத்தில் எங்களது இரண்டு மாடும் ஆற்றில் அடித்துக்கொண்டு போய்விட்டது. இதை வி.ஏ.ஓ அலுவலகத்தில் போய் சொன்ன போது, மாடு அடிச்சுக்கிட்டுப் போனதை போட்டோ எடுத்துருக்கீங்களான்னு கேட்டாங்க. அது இல்லன்னா செத்துப்போச்சின்னு போட்டோ வும், டாக்டர் சர்டிபிகேட்டும் வாங்கிக்கிட்டு வான்னு சொல்றாங்க. திரும்பத் திரும்ப கேட்டதுக்கு, அடிச்சிக்கிட்டுப் போன மாட்டுக்கு நிதியுதவி இல்லைன்னு சொல்லிட்டாங்க. நானாவது பரவாயில்ல 2 மாடு. ஆத்துக்கு அந்தக்கரையில் உள்ள பொரசப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணி எங்களின் வாழவச்சனூர் கிராமத்தில் என் நிலத்துக்கு அருகிலுள்ள விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்யறார். அவரோட 6 மாடு, 1 கன்னுக்குட்டி தண்ணியில அடிச்சிக் கிட்டுப் போய்டுச்சு. அவரோட கிராமத்தில் எழுதித்தந்ததுக்கு, நீ அங்கபோய் எழுதித் தான்னு சொல்லிட்டாங்களாம். இங்க வந்து எழுதித் தந்ததுக்கு உன் வீடு அங்கதானே இருக்கு அங்க போன்னு விரட்டறாங்களாம். கண்ணீர் விடறாரு''’என்றார்.

ss

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகேயுள்ள பாபுகுளம் கிராமம் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த கிராமத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளி உமா நம்மிடம், "மழையால் நான் வளர்த்த 6 ஆடுகள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் சென்றுவிட்டது, எனது குடிசைவீடும் இடிந்து விழுந்துவிட்டது. வீடில்லாமல் தெருவில் நிற்கிறேன். ஆடு இறந்தது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டேன். அவர்கள் "போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வேண்டும்' என்கிறார்கள். அடித்துச் சென்ற ஆடுகளுக்கு நான் எப்படி போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கொடுக்கமுடியும். இதுபற்றி எங்களை பார்க்கவந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனிடம் முறையிட்டேன். அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். வெள்ளத்தில் பண்ணையாற்றின் கரையோரமிருந்த கிராமங் களில் ஆடு, மாடு, கோழிகள் அடித்துச் சென்றுவிட்டன. அதிகாரிகள் கேட்கும் சான்றிதழ் இல்லாததால் என்ன செய்வது என பலரும் முழிக்கிறார்கள். எங்களுக்கெல்லாம் அரசு நிவாரணம் கிடைக்க உதவி செய்யவேண்டும்''’என்றார்.

இதுகுறித்து விவசாய தொழி லாளர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட துணைத்தலைவர் அண்ணாமலை நம்மிடம், "ஆற்றில் அடித்துக்கொண்டு போன ஆடு, மாடுகளுக்கு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கேட்கறாங்களாம் அதிகாரிகள். விவசாயிங்க எங்களிடம் முறையிடுகின்றனர். பொய்யாக தகவல் தந்து நிவாரணம் பெறப் பார்க்கிறார்கள் எனச் சொல்கிறார்கள். கால்நடைத்துறை, கிராம நிர்வாக அலுவலர், பஞ்சாயத்து நிர்வாகத் திடம் கால்நடைகள் குறித்த விவரங்கள் இருக்குமே. நிவாரணத் துக்கு விண்ணப்பிப்பவர்கள் அந்த தகவலோடு ஒப்பீடுசெய்து சரிபார்த் துக்கொண்டு நிவாரணம் தரலாம், அதனை அதிகாரிகள் செய்ய வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து வலியுறுத்த வுள்ளோம்''’என்றார்.

செங்கம் தொகுதி எம்.எல்.ஏ மு.பெ.கிரியிடம் கேட்ட போது, “"மாடு வைத்திருக் காத சிலர் தவறான தகவல்களைத் தருகிறார்கள், அதனால் அவர்களுடையதை பதிவுசெய்யாமல் தவிர்த்திருப்பார்கள். ஆடு, மாடு, கோழி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது என்றால் உண்மையா என அக்கம்பக்கம் விசாரித்து பதிவுசெய்யுங்கள், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், போட்டோ தேவையில்லை, பாதிக்கப்பட்டவர்கள் யாரையும் விடாமல் பதிவுசெய்யுங்கள்” என தாசில்தாரிடம் கூறியுள்ளேன்'' என்றார்.

"வருவாய்த்துறையின் வி.ஏ.ஓ.க்கள்தான் பேரிடர் இழப்பு களை பதிவு செய்கிறார்கள். ஊரின் முக்கியஸ்தர்கள் சிலருடன் சில கிராம வி.ஏ.ஓ.க்கள் நெருங்கிய தொடர்புவைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட ஒரே நிலத்தின் நெற்பயிர்களை பல விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக பதிவுசெய்கிறார்கள். ஆயிரம், இரண்டாயிரம் பணம் வாங்கிட்டு பொய்யா பதிவுசெய்து நிவாரணம் கிடைக்கச்செய்கிறார்கள். எந்த குடும்பத்தில் எத்தனை ஆடு, மாடு, கோழி வளர்க்கிறார்கள் என்கிற கணக்குகள் உண்டு. நிவாரணம் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு, அதனை ஒப்பீடுசெய்தும், அக்கம்பக்கம் விசாரித்தும் அதிகாரிகள் நிவாரணத்துக்கு பரிந்துரை செய்யலாம்'' என்கிறார்கள் விவசாய சங்கத்தினரும், பாதிக்கப்பட்டவர்களும்.

கடலூர் மாவட்டத்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி இரண்டு முறை நேரில்வந்து ஆய்வுசெய்து நிவாரணப் பணிகளை வேகப்படுத்தினார். இதனால் அதிகாரிகள் கடலூர் மையப்பகுதி, மெயினான பகுதிகளை வேகமாக சீர்படுத்தினர். கிராமப்புறப் பகுதிகளுக்கு மெதுவாகவே அதிகாரிகள் வருகைதந்தனர். கடலூர் கடற்கரையொட்டியுள்ள குண்டுஉப்பளவாடி கிராமத்தின் வீடுகளுக்குள் வெள்ளப்பெருக்கால் 10 அடிக்கு மேல் தண்ணீர் வந்தது. இதனால் இக்கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கிராம மக்கள் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தஞ்சமடைந்தனர்.

புயல் மழையால் 3 மாவட்டங்கள் பெரியளவிலும், பகுதியளவில் 8 மாவட்டங்கள் பெரும் சேதத்தையும் சந்தித்துள்ள நிலையில், சேதத்தைப் பார்வையிட ஒன்றியரசின் உள்துறை பேரிடர் மேலாண்மைப் பிரிவின் இணையமைச் சர் ராஜேஷ்குப்தா தலைமையில் 7 பேர் கொண்ட குழு தமிழ்நாட்டுக்கு வந்தது. அக்குழு முதலமைச்சரைச் சந்தித்தபோது, அவர்களிடம் 6 ஆயிரம் கோடி இழப்பீடு வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைவைத்து மனுவைத் தந்தார். முதல்கட்டமாக அவசரநிதியாக இரண்டாயிரம் கோடி கேட்டபோது, 944 கோடி ரூபாயை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்க முடிவுசெய்துள்ளது ஒன்றிய அரசு.

இதுகுறித்து வேலூரில் ஆய்வுப்பணியிலிருந்த துணை முதலமைச்சர் உதயநிதியிடம் கேட்டபோது, “"இது பத்தாது... இதைக் கொடுத்ததே பெரிய விஷயம்''’என்றார்.

-து.ராஜா, காளிதாஸ்

nkn111224
இதையும் படியுங்கள்
Subscribe