ss

செம்மறி ஆடு.... செம Mood! ஆடுகள் என்றாலே "அப்பாவி'தான். ஆனால் அவை காரணமில்லாமல் கொடூரமாக சண்டையிடுவதைப் பார்த்தால் "அடப்பாவி' என்றுதான் சொல்லத் தோன்றும்.

1977 -அப்போது நான் விளாம்பட்டி கள்ளர் சீரமைப்புப் பள்ளியில் "நாலாப்பு' படித்துக் கொண்டிருந்தேன். நிலக்கோட்டை அன்பு தியேட்டரில் பள்ளி மாண வர்களுக்கான படம் போட்டி ருப்பதாகச் சொல்லி, எங்களை அழைத்துப் போனார்கள்.

அந்த அறிவியல் படத்தின் இடைவேளையின்போது... "பருத்தி எடுக்கையிலே' என ஒரு அழகான பெண் (ஸ்ரீப்ரியா) ஆடிப் பாடுவதை யும், ஒரு செம்மறி ஆட்டுக் கிடாய் பெரிய, பெரிய கொம்புகளுடன் வில்லன்களை முட்டித் தள்ளி சண்டை போடுவதையும் பார்த்த தும் பெரிய வகுப்பு பையன்கள்லாம் விசில் பறக்கவிட்டாங்க.

Advertisment

ss

"மத்தியான ஆட்டம் "ஆட்டுக்கார அலமேலு' படம் பார்த்துட்டுத்தான் போறோம்'' என வாத்தியார்கள் கூடிப் பேசி முடி வெடுத்தார்கள். இந்த ஆர்வத்துக்கு காரணமே படத்தோட முக்கிய ஹீரோவான "ராமு'வுக்கு எங்க ஊர்லருந்து ரெண்டு மைல் தொலை வில் இருக்க மட்டப்பாறை எனும் ஊர்தான். அந்த ஆடு செய்யும் கம்பீர விளையாட்டையும், குறும் பையும் யாரோ சின்னப்பதேவரிடம் சொல்ல, அவர் தனது தண்டாயுத பாணி ஃபிலிம்ஸ் சார்பில் படம் தயாரித்து ஆட்டை நடிக்கவைத்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் கலக்கியது ஆடு.

"படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம்?' என யோசித்தபடி தனது செவர்லெட் சிகப்பு நிற ஓப்பன் காரில் சென்னை ரோடுகளில் வலம்வந்த தேவருக்கு ஓரிடத்தில் எம்.ஜி.ஆர். நடித்த "மாட்டுக் கார வேலன்' பட போஸ்டர் கண்ணில் பட... இந்தப் படத்திற்கு "ஆட்டுக்கார அலமேலு' என டைட்டில் வைத்துவிட்டார்.

ஆடுகள் எங்கள் அன்றாட வாழ்வில் ஓர் அங்கம். ஊரில் பெரும்பாலும் வெள்ளாடு வளர்ப்பார்கள். சிலர் ஆட்டுப்பட்டி அமைத்து செம்மறி ஆடுகள் வளர்ப்பார்கள். வெள்ளாட்டை விட செம்மறி ஆடு மீது "கவுச்சி' ஜாஸ்தி. அதனால் கறிப்பிரியர்களின் பெரும்பாலான சாய்ஸ் வெள்ளாடுதான்.

செம்மறிக் கிடாய்கள் சண்டை போட்டுக் கொள்வதைப் பார்க்க, கிடாச்சண்டை நடக்கும் இடங்களுக்குப் போகத் தேவையில்லை. கீதாரிகள் கிடை போடும் இடங்களுக்குப் போனாலே போதும். ஆண் கிடாய்கள் அடிக்கடி முட்டிக்கொள் ளும். இதில் சிலநேரம் மண்டை பிளந்து மரண மும் சம்பவிக்கும்.

இதில் வருத்தப்பட ஏதுமில்லை. "இருந்தா பிழைப்புக்கு ஆகும்; செத்தா குழம்புக்கு ஆகும்.' இந்த செம்மறிக் கிடாய்ச் சண்டைகள் பெரும்பாலும் பெண் ஆட்டுடன் செக்ஸ் வைத்துக்கொள்வதற்காகவே நிகழும்.

விளைச்சல் கொடுத்து, தன் சத்தை இழந்த நிலத்து மண்ணுக்கு உயிர்ச்சத்து தரவே நிலங்களில் நில உரிமையாளர் பணம் கொடுத்து கிடை போடச் சொல்லுவார்.

நிலத்திற்குள் சிறு மூங்கில் குச்சிகளால் வட்ட வடிவ சுவர் போல் அமைத்து உறுதியாகக் கட்டி, அதற் குள் ஆடுகளை அடைப் பார்கள். உணவும் தரப்படும். அதை அசை போட்டபடி அங்கேயே சிறுநீரையும், மலம் எனும் புழுக்கையையும் ஆடுகள் கழிக்கும். ஆட்டு எருவில் தழைச் சத்துக்கள் அதிகம். சிறுநீரில் சாம்பல் சத்துக்கள் அதிகம். கால்சியமும் இதில் உள்ளது. கிடை போட்டபின் செய்யப்படும் பயிர் விளைச்சல் அதிக மகசூல் தரும். அதைவிட முக்கியம், விளைச்சல் மண்ணில் உள்ள ரசாயனத் தன்மை மிகவும் குறையும். மண் இயற்கை வளம் பெறும். இதனால்தான் கிடை போடப்படுகிறது.

Advertisment

ss

செம்மறிகளின் பாலியல் வாழ்க்கை எப்படிப்பட்டது?

பெண் ஆடு உறவை விரும்பினால் சில அறிகுறி களைக் காட்டும். இனப்பெருக்க உறுப்பு சிவந்து, அதிலிருந்து பிசுபிசுப்பான ஒரு திரவம் வழியும். வாலை ஏதாவது ஒரு ஸைடில் ஆட்டி, ஆட்டி காண்பிக்கும். கிடா இருக்கிற பக்கம் வலியப் போய் நடந்து கொடுக்கும். ஒருவிதமான குரலொலி எழுப்பும். இதை அறிந்துகொண்ட கிடா ஆடு, பெண் உறுப்பை முகர்ந்து பார்த்து, கழுத்தை கோணலாக நீட்டி, பெண் ஆட்டின் முதுகில் பற்களால் லேசாக கடிக்கும். கால்களைத் தரையில் சுரண்டியபடியே சட் டென பெண்மேல் தாவிவிடும். அது நிகழும்!

சிலசமயம் தன்னைச் சீண்டும் கிடாக்களை வயது முதிர்ந்த பெண் ஆடு கடுமையாக மோதி வீழ்த்திவிடும்.

"இப்படியே இதுங்க பரம்பரை பரம்பரயா சண்டை போடுதுங்க. கறிக் காகவும், கம்பளிக்காக வும் செம்மறி ஆடுகளை வளர்க்கிற தொழில் செய்றது பெரும்பாடா இருக்கே' என ஆட்டுப் பட்டி, ஆட்டுப் பண்ணை தொழில் செய்வோரின் பெரும் கவலைக்கு தீர்வு கண்டுபிடித்திருக்கிறார் பிரிட்டிஷ் பண்ணையாளர் ஒருவர்.

இங்கிலாந்தில் செம்மறி ஆட்டுப் பண் ணைத் தொழில் செய்துவரும் சாம்பிரைஸ் எனும் விவசாயி, உலகப் புகழ்பெற்ற பாடி ஸ்பிரேவான ஆண்கள் பயன்படுத்தும் (ஆலஊ நடதஆவ) ஸ்பிரேவை செம்மறி ஆடுகளுக்கு அடித்துவிட்டார் ஒருநாள்.

அன்று முழுக்க பண்ணை ஆடுகள் ஒன்றையொன்று குசலம் விசாரிப்பது போல் சிநேகமாக இருந்திருக்கிறது. தொடர்ந்து அதையே பயன்படுத்த நன்கு பலன் கிடைத்திருக்கிறது.

இந்த ஸ்பிரேவில் உள்ள அழுத்தமான வாசனை ஆடுகளின் எண்ஞ்ட்ற் ஙர்ர்க் ஹார்மோன்களைத் தூண்டாமல் செய் கிறதாம்.

"நண்பா! எனக்கு அவளோட ஜாலியா இருக்கணும் போல இருக்கு... நான் அவகிட்ட போகப்போறேன்; உனக்கு ஏதேனும் ஆட்சேபனை இல்லையே?'

"அட... நீ சந்தோஷமா போய்ட்டு வா நண்பா' என்று பேசிக்கொள்ளாத குறையாக ஆடுகளுக்குள் நட்பு நிலவுதாம்.

"செம்மறி ஆடே செம்மறி ஆடே

செய்வது சரியா சொல்?

செவத்த பொண்ணு இவட்ட நின்னு

தவிக்கலாமா சொல்?'

என பெண் ஆடுகள், ஆண் ஆடுகளுக்கு வலை விரித்தாலும் விரிக்கும்!