மாநில உரிமை! தமிழகத்துக்கு மேற்கு ஆஸ்திரரேலியா காட்டும் தேர்தல் பாதை!

ar

-டாக்டர். அண்ணாமலை மகிழ்நன், PhD,, ஆஸ்திரேலியா

ஸ்திரேலிய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்ட மேற்கு ஆஸ்திரேலியா, உலகிலேயே இரண்டாவது பெரிய மாநிலம். இம்மாநிலத் தேர்தல், கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி நடந்தது. ஆறு மணிக்குத் தேர்தல் முடிந்தது, இரவு 9:00 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் முடிந்து, முடிவுகளுக்காக ஒருமாதம் காத்திருப்பதெல்லாம் ‘ஒளிரும் டிஜிடல் இந்தியாவில்’ மட்டுமே சாத்தியம்.

ஆஸ்திரேலியாவில் மைய அரசுக்கான தேர்தல், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையும், மாநில அரசுகளுக்கான தேர்தல் நான்காண்டு களுக்கு ஒரு முறையும் நடைபெறும். தொழிலாளர் கட்சி, லிபரல் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளே இங்கு முதன்மையான அரசியல் கட்சிகள், மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் ஆட்சியில் இருந்த தொழிலாளர் கட்சி 2009-ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்றது. தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் தோற்றது. இம்மாநிலத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் 59. எட்டாண்டு காலம் (தமிழகத்தில் பத்தாண்டு காலம்) எதிர்க்கட்சியாக இருந்த தொழிலாளர் கட்சி, 2017 தேர்தலில் 41 இடங்களில் வெற்றி பெற்றது. மாநில முதல்வராக மார்க் மெக்கோவன் (Mark McGowan) பொறுப்பேற்றார். இவர் ஒரு வழக்கறிஞர். ஆஸ்திரேலியக் கப்பல் படையில் லெஃப்டினன்ட் ஆகவும், கடற்படை வழக்கறிஞராகவும் பணியாற்றியவர். அவருடைய இயல்பான தலைமைப் பண்புகளாலும், கடற்படைப் பயிற்சியாலும் ஒரு சிறந்த தலைவராக உருவெடுத்தார். 2017-ல் 41 இடங்களில் வென்ற தொழிலாளர் கட்சி, 2021 தேர்தலில் 59-க்கு 53 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய வரலாற்றி லேயே இல்லாத அளவிற்கு இமாலய சாதனையைப் படைத்ததன் காரணம், மார்க் மெக்கோவனின் தலைமையும் ஆஸ்தி ரேலியாவில் மாநிலங்களுக்கு இருக்கும் உரிமைகளும்தான்.

a

மாநில சுயாட்சி

இந்தியாவில் பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் மாநிலங்களுக்கு என்னென்ன உரிமை கள் இருக்க வேண்டும் என்று போராடினார்களோ, அந்த உரிமைகள் எல்லாம் இங்கு ஆஸ்திரேலியா வில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் உண்டு. ஆதலி னால், மாநில மக்களின் உரிமைகளுக்கும் நல்வாழ் விற்கும் மட்டுமே அந்தந்த மாநில முதல்வர்கள் உ

-டாக்டர். அண்ணாமலை மகிழ்நன், PhD,, ஆஸ்திரேலியா

ஸ்திரேலிய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்ட மேற்கு ஆஸ்திரேலியா, உலகிலேயே இரண்டாவது பெரிய மாநிலம். இம்மாநிலத் தேர்தல், கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி நடந்தது. ஆறு மணிக்குத் தேர்தல் முடிந்தது, இரவு 9:00 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் முடிந்து, முடிவுகளுக்காக ஒருமாதம் காத்திருப்பதெல்லாம் ‘ஒளிரும் டிஜிடல் இந்தியாவில்’ மட்டுமே சாத்தியம்.

ஆஸ்திரேலியாவில் மைய அரசுக்கான தேர்தல், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையும், மாநில அரசுகளுக்கான தேர்தல் நான்காண்டு களுக்கு ஒரு முறையும் நடைபெறும். தொழிலாளர் கட்சி, லிபரல் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளே இங்கு முதன்மையான அரசியல் கட்சிகள், மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் ஆட்சியில் இருந்த தொழிலாளர் கட்சி 2009-ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்றது. தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் தோற்றது. இம்மாநிலத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் 59. எட்டாண்டு காலம் (தமிழகத்தில் பத்தாண்டு காலம்) எதிர்க்கட்சியாக இருந்த தொழிலாளர் கட்சி, 2017 தேர்தலில் 41 இடங்களில் வெற்றி பெற்றது. மாநில முதல்வராக மார்க் மெக்கோவன் (Mark McGowan) பொறுப்பேற்றார். இவர் ஒரு வழக்கறிஞர். ஆஸ்திரேலியக் கப்பல் படையில் லெஃப்டினன்ட் ஆகவும், கடற்படை வழக்கறிஞராகவும் பணியாற்றியவர். அவருடைய இயல்பான தலைமைப் பண்புகளாலும், கடற்படைப் பயிற்சியாலும் ஒரு சிறந்த தலைவராக உருவெடுத்தார். 2017-ல் 41 இடங்களில் வென்ற தொழிலாளர் கட்சி, 2021 தேர்தலில் 59-க்கு 53 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய வரலாற்றி லேயே இல்லாத அளவிற்கு இமாலய சாதனையைப் படைத்ததன் காரணம், மார்க் மெக்கோவனின் தலைமையும் ஆஸ்தி ரேலியாவில் மாநிலங்களுக்கு இருக்கும் உரிமைகளும்தான்.

a

மாநில சுயாட்சி

இந்தியாவில் பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் மாநிலங்களுக்கு என்னென்ன உரிமை கள் இருக்க வேண்டும் என்று போராடினார்களோ, அந்த உரிமைகள் எல்லாம் இங்கு ஆஸ்திரேலியா வில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் உண்டு. ஆதலி னால், மாநில மக்களின் உரிமைகளுக்கும் நல்வாழ் விற்கும் மட்டுமே அந்தந்த மாநில முதல்வர்கள் உழைப்பார்கள், போராடுவார்கள். தமிழகம், கேரளம், மேற்குவங்கத்தைப் போலவே மேற்கு ஆஸ்திரேலியாவை இடதுசாரி தொழிலாளர் கட்சியும், ஆஸ்திரேலிய மைய அரசை இந்தியாவை ஆளும் பி.ஜே.பி.யைப் போன்ற வலதுசாரி லிபரல் கட்சியும் ஆள்கின்றன. ஆனால், இந்த மாநிலம் இப்படிச் செய்ய வேண்டும், இப்படிச் செய்யக் கூடாது என்று ஆஸ்திரேலிய பிரதமரோ அல்லது மைய அரசின் அமைச்சர்களோ பேசினால், "நீங்கள் மத்திய ஆட்சியைப் பாருங்கள், மாநிலத்தைப் பார்த்துக் கொள்ள எங்களுக்குத் தெரியும்'’என்று மாநில முதல்வர்கள் முகத்தில் அடித்தாற்போல் பதிலளிப்பார்கள். இது நம்மைப் போன்றவர்களுக்கு 1970-களில் கலைஞர் முதல்வராக இருந்தபொழுது, இந்திய மையஅரசை நோக்கி வீசிய விமர்சனங் களை நினைவுபடுத்தும்.

மாநில கவர்னரை முதல்வரே நியமிப்பார்!

மாநில சுயாட்சி என்பது அந்த மாநிலத்தை ஒரு தனிநாடு போலவே நிர்வகிக்கும் அனைத்து அதிகாரங்களையும் கொண்டதாகும். இந்தியாவில், மாநில முதல்வர்கள் கொத்தடிமைகள்போல் நடத்தப்படுவதும், கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமிழகத் தின் உரிமைகளை ஒவ்வொன்றாக வெட்டி யொழிக்கும் ஒரு மத்திய அரசும், அந்த மத்திய அரசின் பிரதமரின் முழங்காலில் தலைபடும் அளவிற்கு குனிந்து வணங்கும் சுயமரி யாதை அற்ற முதல்வர்களும், துணை முதல்வர்களும் உள்ள நாடு அல்ல ஆஸ்திரேலியா. ஒரு மாநில கவர்னர் என்பவர் ஒரு சம்பிரதாயப் பதவியில் இருப்பவர்தானேயொழிய, மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்டவர் அல்ல. அந்தப் பதவிக்கு ஒருவரை நியமிக்கும் அதிகாரமும், ஆஸ்திரேலிய மைய அரசுக்கு கிடையாது.

ad

இன்றும் இங்கிலாந்துப் பேரரசியார்தான் ஆஸ்திரேலிய ஆட்சித் தலைவர். ஒரு மாநில முதல்வர் பரிந்துரைக்கும் நபரை, அந்த மாநிலத் தின் கவர்னராக, மாட்சிமை தாங்கிய இங்கிலாந்து பேரரசியார் நியமிப்பார்கள். அதேபோல் மாநில ஆளுநர் அந்த மாநில அரசின் செயல்பாடுகளுக்கு மட்டுமே துணைநிற்பார். பிரதமருக்கும், கவர்னர் ஜெனரலுக்கும் செவிசாய்க்க வேண்டிய தேவை கவர்னருக்கு இல்லை.

கொரோனா கட்டுப்பாடு

மேற்கு ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றுநோயால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 984 பேர் மட்டுமே. மரணமடைந்த 9 பேரும் சொகுசு சுற்றுலாக் கப்பலில் பயணம்செய்து பெர்த் மருத்துவமனைகளில் மரணம் அடைந்தவர்கள். விகிதாசாரப்படி, பத்து லட்சம் பேரில் 369 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது. (படத்தில் மேற்கு ஆஸ்திரேலிய நல்வாழ்வுத்துறை இணை யம்) ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா நோய் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (26/04/2021) மஞ்சள் வட்டத்திற்குள் ளும், மரணமடைந்தோரின் எண்ணிக்கை சிவப்பு வட்டத்திற்குள்ளும் தரப்பட்டுள்ளன.)

சிறிய அளவிலுள்ள மாநிலங்களைவிட மிகப்பெரிய மாநிலமான மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் நோய்த்தொற்றும் குறைவு, மரணமடைந்தோரின் எண்ணிக்கையும் குறைவு. காரணம், மாநில முதல்வருக் குள்ள அதிகாரமும், அதனை அவர் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தி கொரோனா தொற்றுநோயைக் கட்டுப் படுத்த எடுத்த நடவடிக்கைகளும்தான்.

மாநில எல்லை மூடல்

ஆஸ்திரேலியாவில் விமானத்தில் சென்று தங்கி பணியாற்றிவிட்டு வரும் முறை (Fly in Fly Out) உண்டு. மேற்கு ஆஸ்தி ரேலியாவில் உள்ள எண்ணற்ற சுரங்கங் களில் பணியாற்ற, சிட்னி, மெல்போர்ன், ப்ரிஸ்பேன் போன்ற கிழக்கு மாநிலங்களில் இருந்து வந்து பணியாற்றுபவர்கள் ஏராளம். இப்படி வருபவர்களுள் எவருக்காவது கொரோனா தொற்று வைரஸ் இருந்து பரவினால் அந்தச் சுரங்கத்தையே மூடவேண்டிவரும். ஆஸ்தி ரேலியாவின் முதுகெலும்பே மேற்கு ஆஸ்திரேலியாவின் இரும்பு, தங்கம், வைரம் போன்ற சுரங்கங்கள்தான். அவை மூடப்பட்டால் நாட்டில் மிகப்பெரிய பொருளாதாரச் சீரழிவு வரும். எனவே, “நோய்நாடி அது தணிக்கும் வாய் நாடிச்” செயல்பட்ட மேற்கு ஆஸ்திரேலிய மாநிலம் தன்னுடைய எல்லைகளை மூடிவிட்டது. ஆஸ்திரேலியா என்னும் தீவிற்குள் மேற்கு ஆஸ்திரேலியா மற்றுமொரு தீவானது.

a

டொனால்ட் ட்ரம்ப், மோடி ஆகியோரின் நண்பர் ஸ்காட் மோரிசன் என்பவர்தான் ஆஸ்திரேலியப் பிரதமர். அவர், "ஆகா மாநில எல்லைகளை மூடினால் பொருளாதாரம் பாதிக்குமே'’என்றெல்லாம் கதைவிட்டுப் பார்த் தார். ஆனால் மேற்கு ஆஸ்திரேலிய முதல்வர் அதற்கெல்லாம் அசைந்தே கொடுக்கவில்லை. ஒரேநாடாக இருந்தாலும், ஒவ்வொரு மாநிலமும் தனி நாட்டைப்போல செயல்படுவதுதான் மாநில சுயாட்சி. மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் மக்களுக்கு, கொரொனாவின் தாக்கம் என்னவென்றே தெரியாத அளவிற்கும், எந்த சிறு, குறு மற்றும் பெருந்தொழில்களுக்கும் பாதகம் ஏற்படாத வகையிலும், மக்களைப் பாதுகாத்தார் இம்மாநில முதல்வர்.

இதைப்போன்ற மக்கள்நல நடவடிக்கை களால் மேற்கு ஆஸ்திரேலிய முதல்வர் மார்க் மெக்கோவன், மார்ச் மாதம் நடந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்கு விவரம்:

மார்க் மெக்கோ வன், தொழிலாளர் கட்சி - 20,836 (87.7%)

மைக்கேல் மெக்லூர், லிபரல் கட்சி - 2,916 (12.3%)

இப்படி, மாநில உரிமைகளை மக்கள் நலனுக்காகப் பயன் படுத்தும் தலைவர்கள் மட்டுமே வெற்றிபெறு வார்கள்.

மேற்கு ஆஸ்திரேலியா - தமிழகத் தேர்தல்கள்

தமிழகத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழும் நாம், மேற்கு ஆஸ்திரேலியாவில் நடந்த தேர்தல்களோடு தமிழகத் தேர்தல்களையும், இரண்டு மாநில முதல்வர்கள் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர்களையும், அவர்களின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். ஒப்பீட்டில் பல ஒற்றுமைகள், ஆனால் எதிரெதிராக உள்ளன. அதாவது, மேற்கு ஆஸ்திரேலிய ஆளும் கட்சிக்குண்டான தகுதிகள் தமிழக எதிர்க்கட்சியான தி.மு.க.விற்கும், தமிழக ஆளும் கட்சிக்குண்டான தகுதிகள், மேற்கு ஆஸ்திரேலிய எதிர்க்கட்சிக்கும் உள்ளன.

மேற்கு ஆஸ்திரேலிய முதல்வர், யாராலோ முதல்வராக்கப்பட்டவரில்லை. நான்கு ஆண்டு களுக்குமுன் நடந்த தேர்தலில், கட்சிக்குத் தலைமை தாங்கிப் போட்டியிட்டு வெற்றிபெற்று முதல்வரானவர். ஆஸ்திரேலிய மைய அரசிடம் எதற்காகவும் மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்தவரில்லை. மேற்கு ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவரோ பிரதமரின் லிபரல் கட்சிக்காரர். பிரதமரின் ஊதுகுழலாகச் செயல்பட்டவர். ஆகவே தேர்தலில் தோற் கடிக்கப்பட்டார். இப்படி நடந்த தேர்தல், மேற்கு ஆஸ்திரேலியத் தேர்தல்.

இன்றைய தமிழக முதல்வர், ஒரு இயக்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வ ரானவரில்லை. யாரோ சொல்ல, யாரோ கேட்டு முதல்வராக்கப்பட்டவர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை வராத ஜி.எஸ்.டி., நீட் தேர்வு, தமிழக அரசுப் பணிகளில், தமிழ்நாடு மின் வாரியத்தில் தமிழே தெரியாத வட நாட்டுக்காரர்களுக்குப் பணியமர்வு; தமிழ் மொழியை எல்லா இடங்களிலும் ஒழிப்பதற்கு நடந்த எல்லா செயல்களிலும் மத்திய அரசோடு கைகோர்த்துக்கொண்டு செயல்பட்டது, தெர்மோகோலைப் போட்டு மூடி நீர் ஆவியாகாமல் தடுக்கலாம் என்ற பேரறிவு கொண்ட அமைச்சர் குழாம், பொள்ளாச்சியில் நடந்த கொடுமைகளைக் காணொளியில் கண்டும் நடவடிக்கை எடுக்காத கயமை உள்ளிட்ட ஆயிரமாயிரம் மக்கள் விரோத செயல்களைச் செய்த ஆளும் கட்சி போட்டியிட்ட தேர்தல், தமிழகத் தேர்தல்.

திராவிட முன்னேற்ற கழகம்

மேற்கு ஆஸ்திரேலிய முதல்வர் செயல்படுத்தும் செயல் திட்டங்களைப்போல் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் உள்ளதாகத் தோன்றுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும், நடத்திய மக்களின் குறைகேட்பு நிகழ்ச்சிகள்; நமக்கு நாமே போன்ற நிகழ்வுகள்; 2016-ல் ஏற்பட்டதைப் போன்ற தவறுகள் மீண்டும் நேராவண்ணம் தோழமைக் கட்சிகளை இணைத்து ஏற்படுத்திய கூட்டணி; தமிழ், தமிழ்நாடு, தமிழர் நலன் ஆகியவற்றை திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே முழு வீச்சோடு செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைத்துள்ள விதம், இப்படிப் பல ஒற்றுமைகள் உள்ளதால், மேற்கு ஆஸ்திரேலியாவைப் போலவே தமிழகத்திலும் ஒரு மாபெரும் வெற்றியை திராவிட முன்னற்ற கழகம் பெறும் என்று தோன்றுகிறது. எது எப்படி இருந்தாலும், 18/10/2007 தேதியிட்ட நக்கீரனில் நாம் எழுதியவாறு ஸ்டாலின் முதல்வராகட்டும்

மேற்கு ஆஸ்திரேலியாவில் மொத்தம் உள்ள தொகுதிகள் 59. மக்கள் ஆதரிக்கும் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்ற இடங்கள் 53. இதே விகிதத்தில் தமிழகத் தேர்தலைக் கணக்கிட்டுப் பார்த்தால் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகள் 210. அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் 24. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்ற சட்ட மன்றத் தொகுதிகள், ஒரு பாராளுமன்றத் தொகுதியையும் சேர்த்து 15 மட்டுமே. ஆனால் இந்த சட்ட மன்றத் தர்தலில் அவர்கள் கூடுதலாக 9 இடங்களைப் பெற்று 24 இடங்களில் வெற்றிபெறக் கூடும். ஆனாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்ன செய்யும், அவற்றில் என்ன செய்ய முடியும் என்பதையெல்லாம் கணித்துச்சொல்ல நாம் தெர்மோகோல் அறிஞர்கள் அல்ல.

nkn010521
இதையும் படியுங்கள்
Subscribe