ங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மரண விவகாரத்தில் சத்தமின்றி நடந்து முடிந்த ஒரு அரசியலை உலக நாடுகள் உதட்டில் ஒரு நமட்டுச் சிரிப்புடன் கவனித்தன. சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் சித்ரவதை செய்யப்படுவதாக புகார் எழுந்தபோது, குறிப்பிட்ட சீன அதிகாரிகள் இங்கிலாந்து வர தடைவிதிக்கப்பட்டது. அதை கோபத்துடன் கவனித்த சீனா, இங்கிலாந்தின் சில நிறுவனங்களுக்கும், சில நபர்களுக்கும் சீனாவில் நுழைய தடைவிதித்தது. இதில் தற்போது ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவரும், 4 எம்.பி.க்களும் அடக்கம். இந்நிலையில் ராணி எலிசெபத் செப்டம்பர் 8-ஆம் தேதி இறந்துபோக, சீனாவைச் சேர்ந்த 5 எம்.பி.க்கள் உட்பட 7 பேர் குழு ராணிக்கு அஞ்சலிசெலுத்த அனுமதி கோரியது. இதையடுத்தே இவர்கள் 5 பேருக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. தடைக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என இங்கிலாந்து சொல்வதை, அத்தனை எளிதில் சீனா நம்பிவிடுமா என்ன? அஞ்சலியிலுமா அரசியல்!

dd

தீராத போர், உள்நாட்டுப் பிரச்சினைகளால் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான நாடுகளில் ஒன்று லெபனான். லெபனானைச் சேர்ந்த சலி ஹஃபீஸுக்கு நிதி நெருக்கடி. தங்கைக்கோ புற்றுநோய். புற்றுநோய் சிகிச்சைக்குப் பணம் தேவை. அவரிடம் இருந்த ஒரே தொகை 13,000 டாலர் வங்கிச் சேமிப்பில் இருந்தது. பொருளாதார நெருக்கடி தாளமுடியாமல், மக்கள் 200 டாலர்தான் எடுக்கலாம் என கெடுபிடியை அறிவித்துவிட்டது அரசு. சிகிச்சைக்கு வழியின்றி தங்கை தவிப்பதைப் பார்த்து, கையில் துப்பாக்கி சகிதம் பெய்ரூட் வங்கிக்குள் நுழைந்துவிட்டார் ஹஃபீஸ். தனது இக்கட்டான நிலையை விளக்கி, தான் உயிரை எடுக்க வரவில்லை. வங்கியில் சேமிப்பிலிருக்கும் தன் பணம் மட்டுமே இலக்கு என்று சொல்லி, பணத்தை மிரட்டிப் பறித்துச்சென்றிருக்கிறார். போலீஸ் வருவதற்குள் பணத்துடன் சலி ஹஃபீஸ் தப்பித்து விட்டார் என்றாலும், விரைவில் கைதுசெய்யப்படுவார் என்கிறது லெபனான் அரசியல் வட்டாரங்கள். சொந்தப் பணத்தைக் கொள்ளை யடிச்சது தப்பா சார்!

Advertisment

dd

Advertisment

டமாநிலங்களில் கால்நடை வளர்ப்பவர்கள் கவலை அடைந்துள்ளனர். குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் பெரியம்மை எனச் சொல்லப்படும் லம்பி ஸ்கின் நோய் கால்நடைகளை காவு வாங்கத் தொடங்கியுள்ளது. இதனால் இதுவரை இந்தியாவில் 67,000 கால்நடைகள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப் படுகிறது. கடந்த சில வாரங்களாக நோயின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. இந்த நோய் மனிதர்களுக்குப் பரவாது என்றாலும் நோய் குறித்த பயத்தால் சிலர் பால் வாங்கவும் தயங்கத் தொடங்கியுள்ளனர். பால் நிறுவனத்துக்குப் பெயர் போன அமுல் நிறுவனம் அமைந்துள்ள குஜராத்தில் மட்டும் 12,000-க்கும் அதிகமான பசுக்கள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து நோய் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்த பரிசீலனைகள் வேகம்பிடித்துள்ளன. நோய் தாக்கி இறந்த பசுக்களை கும்பல் கும்பலாக குழிதோண்டிப் புதைத்து வருகின்றனர். கோமாதாவைக் காப்பாத்துங்கப்பா!

த மற்றும் பிரிவினை அரசியல் விவகாரங்களில் சுறுசுறுப்பாக களத்துக்கு வரும் பா.ஜ.க., தி.மு.க. எம்.பி. ராஜாவின் சமீபத்திய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் ராஜாவின் பேச்சுக் குறித்து பா.ஜ.க.வினர் கேள்வியெழுப்ப முயன்றனர். வீண் வம்பை இழுக்க முயன்ற அவர்களிடம், நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கவில்லை என்பதுபோல் அமைச்சர் சேகர்பாபு சைகை காட்டிச்சென்றார். இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபுவைக் கார்னர் செய்வதற்காக புதுக்கோட்டை பா.ஜ.க. சார்பில் ரூ.7000 மதிப்பிலான காது கேட்கும் கருவியை வாங்கி, தலைமை தபால்நிலைய அலுவலகத்திலிருந்து சேகர்பாபுவின் முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுக்கெல்லாம் அசந்துடுவாரா!

பாத்திரம் நிறைய பால் இருந்தாலும், அதில் ஒரு துளி விஷம் கலந்தால் மொத்தமும் வீணாகிவிடும். அதுபோல அரசுத் துறை மருத்துவர்கள் இரவு -பகலாக சேவை செய்தபோதும், சிலர் செய்யும் அஜாக்கிரதைச் செயல்கள் ஒட்டுமொத்த அரசு மருத்துவர்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்திவிடுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் பெருங்குடியைச் சேர்ந்த மதிவாணன் என்பவர் செப்டம்பர் 17-ஆம் தேதி பைக்கில் வெளியூரிலிருந்து பெருங்குடிக்கு வந்துகொண்டிருந்தார். வழியில் மாடு குறுக்கே பாய்ந்ததால், மதிவாணன் பைக் விபத்துக் குள்ளாகி சாலை ஓரத்தில் குவிந்துகிடந்த ஜல்லிக் கற்களின் மீது சறுக்கிவிழுந்தது. காயங்களுக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட மதிவாணனுக்கு, காலில் தையல் போடப்பட்டது. வீடு திரும்பிய பின்னும் வலி குறையாத நிலையில் தனியார் மருத்துவமனை சென்றார். அப்போது ஸ்கேன் செய்தபோது இடதுகால் கட்டை விரலில் காயத்தின் மீதிருந்த ஜல்லிக் கற்களை அகற்றாமல் தையல் போட்டது தெரியவந்தது. கத்தரிப்பானையே வெச்சு தைச்ச கதையெல்லாம் இருக்கு!

-நாடோடி