த்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத் துறையால், 'பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா விருதுகள் - 2021' மற்றும் '150 நாட்கள் சவால்கள்' என்ற அடிப்படையில், மாநிலம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக் கான விருதுகள், சிறப்புப்பிரிவு விருதுகள் மற்றும் பயனாளிகளுக்கான விருதுகள் என 3 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

dd

அவற்றில், சிறப்பாக செயல்பட்ட மாநிலம் என்ற பிரிவில் தமிழகம் 3-வது இடத்தையும், மாநகராட்சிகளில் மதுரை மாநகராட்சி 3-வது இடத்தையும், பேரூராட்சிகள் பிரிவில் கோவை மாவட்டம் பெரிய நெகமம் பேரூராட்சி 5-வது இடத்தையும் பிடித்து விருதுகள் பெற்றுள்ளன. இந்த விருதை, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடியிடம் இருந்து தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெற்றுக்கொண்டார். வீடு கட்டி விருது அடிச்சிருக்காங்க!

மிழக அரசு தற்போது, மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக நிதி ஒதுக்கீடு செய்து, புத்தகக் கண்காட்சிகளை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வழிவகை செய்துள்ளது. நல்லதொரு முன்னெடுப்பான இதிலும் சில முணுமுணுப்புகள் எழுத்தாளர்கள் மத்தியில் கேட்கத் தொடங்கியுள்ளன. மாவட்ட அளவில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிகளில், அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய எழுத்தாளர்கள் அழைக்கப்படுவதோ, கவுரவிக்கப் படுவதோ இல்லையாம். மாவட்ட ஆட்சியர்களுக்கு நெருக்கமாகிக்கொண்ட சில பதிப்பகத்தாரும், எழுத் தாளர்களும், லாபநோக்கம் கருதி வெளியூர்ப் பிரபலங்களை அழைப்பதிலேயே குறியாக இருக்கிறார்களாம். வெளியூர் பிரபலங்களை அழைக்கும்போது, அவர்களின் பேச்சுக்கான தொகை போக, போக்குவரத்து, தங்குமிடம் என அனைத்திலும், குறிப்பிட்ட பெர்சன்டேஜ் அளவுக்கு லாபம் பார்க்கிறார்களாம். இந்த பிரபலங்கள், சினிமா வட்டாரம் சார்ந்தவர்களாக இருந்தால் கூடுதல் வசதி செய்துகொடுப்பதோடு, கூடுதல் கமிஷனும் பார்க்கிறார்களாம். உள்ளூர் எழுத்தாளர்களை அழைக்கும்போது இப்படியெல்லாம் லாபம் பார்க்க இயலாதென்பதால் அவர்களைப் புறக்கணிப்பதாக நொந்துகொள்கிறார்கள்! முணுமுணுப்பு கோஷமாகிறதுக்கு முன்னால கவனிங்க!

Advertisment

dd

ஓ.ஆர்.எஸ்.ஸை உங்களுக்குத் தெரிந்திருக்கும். வாந்தி, பேதி கண்டவர்களுக்கு கண்கண்ட மருந்து. இதைக் கண்டுபிடித்தவரை உங்களுக்கு தெரியுமா? வங்கதேசத் தின் மீது பாகிஸ்தான் போர் தொடுத்தபோது, மேற்கு வங்கத்தில் வந்து அகதிகள் குவியத் தொடங்கினர். 1 கோடிக்கும் அதிகமான அகதிகள் தங்கியிருந்த முகாம்களில் காலரா கொடுநடனம் ஆடத்தொடங்க, பிணங்கள் குவியத் தொடங்கியது. அப்போதெல்லாம் நீரிழப்புக்கு மருந்து கண்டுபிடிக்காத காலகட்டம். இதனாலேயே பெருமளவில் மரணம் நிகழ்ந்தது. இதைக் கவனித்த திலீப் மகாலபினஸ் என்னும் மருத்துவர், தான் புதிதாகக் கண்டுபிடித்த ஒருவகை உப்பு சர்க்கரைக் கரைசலைக் கொடுத்துப் பார்க்க, மரணங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. சோடியம், பொட்டாசியம், சிட்ரிக் உப்புக்களின் கலவைதான் இந்த ஓ.ஆர்.எஸ். கரைசல். பின் ஓ.ஆர்.எஸ்., நீரிழப்புக்கு உலகம் போற்றும் மருந் தானது. இதைக் கண்டு பிடித்த மருத்துவர் திலீப் மகாலபினஸ் கொல்கத்தா மருத்துவமனையில் அக்டோபர் 17-ஆம் தேதி முதுமை, உடல்நலக் குறை வால் மரணமடைந்திருக்கிறார். வி.ஆர்.ஆஸ். வாங்கி விடைபெற்றுட் டாரா!

ff

Advertisment

க்டோபர் 16 ஞாயிற்றுக்கிழமையன்று அப்படியொரு புகார்தாரரை எதிர்பார்க்கவில்லை சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா நாயக். மூன்றே வயதான சிறுவன் தன் தந்தையுடன் மத்தியப் பிரதேசத்தின் பர்ஹான்பூர் மாவட்டத்திலுள்ள டெட்தாலை காவல் நிலையத்துக்கு வந்திருந்தான். பிரியங்கா என்ன புகார் எனக் கேட்க, தனது அம்மா சாக்லெட்டுகளைத் திருடிவிட்ட தாகவும், எப்போதும் அவனைத் திட்டுவதாகவும் புகாரளித்தான். கூடவே வந்திருந்த அவனது தந்தை தர்மசங்கடமாக பிரியங்காவைப் பார்த்து, “சிறுவன் மிகவும் அடம் பிடித்ததால் அவனது அம்மா திட்டிவிட்டாள். அதற்காக புகாரளிக்க வருமாறு என்னை வற்புறுத்தினான்' என விளக்கமளித்திருக்கிறார். உடனே புகாரை குறித்துக்கொண்டார் சப் இன்ஸ்பெக்டர். இதை காவல் நிலை யத்தில் உள்ளவர்கள் வீடியோவாகப் பதிவுசெய்ய வீடியோ வைரலாகி மாநில உள்துறை அமைச்சர் வரை போயிருக்கிறது. சிறுவனைத் தொடர்பு கொண்டு தீபாவளிப் பரிசாக சாக்லெட்டும் சைக்கிளும் அனுப்புவதாக அமைச்சர் உறுதி யளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராகுல்குமார், அச்சமின்றி யார்வேண்டுமானாலும் காவல் நிலையத்தை அணுக அந்த வீடியோ உதவியிருப்பதாகப் பாராட்டியிருக்கிறார். இந்தக் காலத்து பொடிசுங்க ரொம்ப விவரம்!

ff

காஷ்மீரைச் சேர்ந்த புகைப்படச் செய்தியாளர் சன்னா மட்டூ. ராய்ட்டர் பத்திரி கைக்காக கோவிட் பெருந் தொற்றுக் காலத்தில் சிறப்பான புகைப் படங்களை எடுத்தவர். இவரது புகைப்படச் செய்திகளுக்காக சர்வதேச விருதான புலிட்சர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. அந்த விருதை வாங்குவதற்காக டெல்லி சர்வதேச விமான நிலையம் வந்து நியூயார்க் விமானத்தைப் பிடிக்கமுயன்ற சன்னா, இந்திய குடியேற்ற அலுவலக அதிகாரிகளால் தடுக்கப்பட்டிருக்கிறார். இத்தனைக்கும் சன்னா, முறையான பாஸ்போர்ட், விசா அனைத்தும் வைத்திருந்தும் இந்த நிலை. ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு முறை சன்னா வெளிநாடு போக விடா மல் தடுக்கப்பட்டார். சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டபின், ஜம்மு- காஷ்மீர் அரசியல்வாதிகளும், பத்திரிகை யாளர்களும் தொடர் வீட்டுச்சிறையிலோ, வெளிநாடு போகவிடாமலோ தடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. விருது வாங்கக்கூட கெடுபிடியா?

-நாடோடி