பீகார் மாநிலம் பாட்னாவில், மார்ச் 19-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ரயில் வந்து செல்லும் நேர அட்டவணையைப் பார்த்துக்கொண்டி ருந்த மக்கள் திடுக்கிட்டனர். பலர் தங்களுடன் வந்திருந்த குழந்தைகளின் கண்களைப் பொத்த தலைப் பட்டனர். காரணம், ரயில்களின் பட்டியலைக் காட்டும் டி.வி.யில் ஆபாசப் படம் ஓடியதுதான். கிட்டத்தட்ட 3 நிமிடங்கள் ஓடிய பிறகே, அதற் கான மின் இணைப்பைத் துண்டித்து திரையை இருளாக்கினர்.
இந்த ரயில்வே நிலையத்தின் மின்னணு விளம்பரத் திரையை இயக்க கொல்கத்தாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றிருந்தது. உடனடியாக அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதுடன், அந்நிறுவனத்தின் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவுசெய்யப்பட்டது. அந்த கணினித் திரையை இயக்கிக்கொண்டிருந்த பணி யாளர் விஷயம் தெரிந்து, ரயில்வே நிலையத்தை விட்டு உடனடியாகத் தப்பிச்சென்றுவிட் டார். இப்போது, தனியார் நிறுவனத்துடன் நிறுத்தாமல், சம்பந்தப்பட்ட ரயில் நிலைய அதிகாரிகள் மீதும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது இப்படியென்றால், பெரிய ரயில் நிலையமான பாட்னா ஜங்ஷ னிலேயே இருபது ஆண்டுகளுக்கு முன்பு இது போல் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறதாம்! ‘பலான’ ஸ்டேஷனா ஆக்கிட்டாங்களே!
கடந்த வருடம் புயல் மழையால் வந்த வெள்ளம் பாகிஸ்தானை சூறையாடியது. இன்னும் அதிலிருந்து பாகிஸ்தான் முழுமையாக மீள வில்லை. அத்தோடு பொருளாதாரப் பிரச்சனையும் அந்நாட்டை நெருக்கு கிறது. பாகிஸ்தானில் குழந்தைகள் உள்பட 1 கோடி பேர் பாதுகாப்பான குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் வெள்ளப் பாதிப்பு பிரச்சனைகளை எதிர்கொள்ள 173.5 மில்லியன் டாலர்கள் தேவை என மதிப்பிட்டு, உலக நாடுகளின் ஆதரவைக் கோரியிருந்தது ஐ.நா. ஆனால் அதில் பாதியளவிலான தொகை மட்டுமே ஐ.நா.வுக்குக் கிடைத்துள்ளது. மழை வெள்ளப் பிரச்சனைக்கு முன்பே பாகிஸ்தானின் நீரில் 36 சதவிகிதம் மட்டுமே மனிதன் பயன்படுத்துவதற்குத் தகுதியானது என மதிப்பிடப்பட்டிருந்தது. மழையால் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் செல்லும் குழாய்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கிட்டத்தட்ட அரைகோடி பேர் சுகாதாரமற்ற நீரைத்தான் பருகி வருகின்றனர். இதில் இருபது லட்சம்பேர் வரை குழந்தை கள். ஏற்கெனவே இப்பகுதியிலுள்ள குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இல்லாதவர்கள். அதனோடு சுகாதாரமற்ற நீர் பிரச்சனையும் சேரும்போது விளைவுகள் மோசமாக இருக்குமென யூனிசெப் எச்சரித்துள்ளது. தூய நீர்தான் எதிர்கால உலகப் பிரச்சனையாம்!
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த விவசாயிகள், 2020-ல் டெல்லியில் ஒன்றுகூடி போராட்டங்களை நடத்தினர். கிட்டத்தட்ட 1 வருடத்துக்கும் மேலாக நடந்த போராட்டம், அரசின் உறுதிமொழிகளை ஏற்று டிசம்பர் 2021-ல் முடிவுக்கு வந்தது. ஆனால் உறுதியளித்தபடி குறைந்தபட்ச ஆதாரவிலை உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை, அரசு நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்துள்ளது விவசாயிகள் கூட்டமைப்பான சம்யுக்த கிஷான் மோர்ச்சா. மார்ச் 20-ஆம் தேதி, ராமில்லா மைதானத்தில் நடைபெற்ற மகா பஞ்சாயத்தில், குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிசெய்யும் சட்டம், கடன் தள்ளு படி, ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும். இதுகுறித்து டெல்லியில் ஏப்ரல் 30-ஆம் தேதி கூடும் மகாபஞ்சாயத்தில் விவாதிக் கப்படும். தினந்தோறும் போராட்டம் நடத்த நாங்கள் விரும்பவில்லை. ஆனால் அரசு எங்கள் கோரிக்கைகளைப் புறந்தள்ளினால் முன்பு நடந்ததைவிட மிகப்பெரிய போராட்டத்தை மேற்கொள்வோம் என தெரி வித்துள்ளது கூட்டமைப்பு. விவசாயிகளை ஏய்க்காதீங்கப்பா!
"மாப்பிள்ளை என்னவோ அவர்தான்,… ஆனா அவர் போட்டிருக்கிறது என்னோட டிரெஸ்'ங்கிற கதையா ஒரு விவகாரம் நடந்திருக்கிறது. “"ரெய்டுக்கு வந்ததென்னவோ ஒரிஜினல் ஜி.எஸ்.டி. அதிகாரிகள்தான். ஆனா நடந்தது போலி ரெய்டு' எனச் சொல்லியிருக்கிறது மும்பை மஸ்கான் ஜி.எஸ்.டி. அலுவலகம். லால்சந்த் வானிகோட்டா எனும் தொழிலதி பரின் வியாபார அலுவலகத்துக்கு ரெய்டுக்குப் போயிருக்கிறார்கள் ஹிதேஷ் வாசிகர், மச்சிந்திரா கங்கனே, பிரகாஷ் சேகர் எனும் ஜி.எஸ்.டி. ஆய்வாளர்கள். அலுவலகத்தில் உள்ள மொத்தப் பணத்தையும் மேஜையில் குவிக்கச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் செலுத்திய ஜி.எஸ்.டி. ரசீதுகளையும் கேட்டிருக்கிறார் கள். லால்சந்த் கொண்டுவந்து வைத்த 30 லட்சம் பணத்தில் 11 லட்சத்தை, இது ஜி.எஸ்.டி. டெபாஸிட் என்றுசொல்லி எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள். மறுநாள் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் சென்று விசாரிக்க, அப்படியெதுவும் ரெய்டுக்கு உத்தரவிடப்படவில்லை. நடந்தது போலி ரெய்டு என்று சொல்லிவிட்டனர் அதிகாரி கள். லால்சந்த் விடாமல் அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளுடன் காவல் நிலையத்துக்குப் போய்விட்டார். அந்த வழக்கில்தான் இப்போது இந்த மூவரும் சிக்கி, பணிநீக்கத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதிகாரிகளுக்கு ரொம்பத்தான் துணிச்சல்!