ரிஸ்க் எடுக்குறது எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி என்கிறார் நர்பத் சிங் ராஜ்புரோகித். இவர் அப்படி என்ன ரிஸ்க் எடுத்தார் என்கிறீர்களா? ராஜஸ்தானைச் சேர்ந்த நர்பத் சிங் சைக்கிளிலேயே 30,121 கிலோமீட்டர் பயணித்து சாதனை படைத்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் தனது சாதனைப் பயணத்தைத் தொடங்கினார்.

dd

29 மாநிலங்களின் வழியாக 30,121 கிலோமீட்டர் பயணித்து, 2022 ஏப்ரலில் தனது சொந்த மாநிலமான ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் பயணத்தை நிறைவுசெய்தார். ஒரு நாட்டில் மிக நீண்ட தூரம் சைக்கிள் பயணம் செய்தவர் என்ற சான்றிதழை கின்னஸ் நிறுவனம் இவருக்கு வழங்கிக் கௌரவித்துள்ளனது. இவர் பயணம் ஆரம்பித்த நிலையில், கொரோனா ஊரடங்கு வரவே, தமிழகத்தில் சிக்கிக்கொண்டு 4 மாதங்கள் இருந்துள்ளார். அப்போது பெரும்பாலும் பிஸ்கட்தான் உணவாம். இவரது பயணத்தின் இலக்கே சுற்றுச்சூழலை மேம்படுத்துவதுதானாம். இதற்காக பயணத்துக்கு நடுவில் 1500 இடங்களில் கூட்டங்களையும் நடத்தி, சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்துப் பேசியுள்ளதோடு 93 ஆயிரம் மரக்கன்றுகளையும் நட்டிருக்கிறார். பாரதம் சுற்றிய வாலிபன்!

Advertisment

dd

சிகரத்தை அடையும் பயணமும் முதல் காலடி வைப்பிலிருந்தே தொடங்குகிறது என்பார்கள். அப்படித்தான் தன் கிராமத்துக்காக ஒரு அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார் பிரகாஷ் கோஸ்வாமி. உத்தரகாண்டிலுள்ள க்வார் கிராமத்துக்கும் முக்கிய சாலைக்கும் இடையில் மலையொன்று இடைஞ்சலாய் நிற்க, அரசிடம் உதவிகேட்டிருக்கிறார். நடக்கவில்லை. மலையைக் குடைந்து பாதை அமைக்கலாம் என கிராமத்தினரின் உதவியைக் கேட்டிருக்கிறார். நடக்கவில்லை. பிரகாஷோ கூலித்தொழிலாளி. அன்றன்றைக்கு வேலைக்குப் போனால்தான் சாப்பாடு. ஆனாலும் மனம்தளரவில்லை. பார்த்தார்… அதிகாலை 5 மணிக்கே எழுந்துவந்து மலையைக் குடைந்து பாதை அமைக்க ஆரம்பித்தார். நான்கு மணி நேர மலை குடையும் வேலை. பின் 9 மணிக்கு வழக்கமான கூலிவேலை. ஒன்பது மாதத்துக்குப் பின் தனது கிராமத்தை முக்கிய சாலையுடன் இணைத்து பாதை அமைத்துவிட்டார். இதற்காக கிராமத்தினர் ஆண்டுக்கணக்கில் அரசிடம் கோரிக்கை வைத்தபடி இருந்தனர். இந்த 500 மீட்டர் சாலையமைக்க இவருக்கு ஒன்பது மாதங்கள்தான் ஆகியிருக்கிறது. மனமிருந்தால் மார்க்கமுண்டு!

வீட்டுக்கு வீடு வாசப்படி. புதிய ஓய்வூதியத் திட்டம் வேண்டாம். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்று இந்தியத் தொழிலாளர்கள் கேட்கிறார்கள். பிரான்ஸிலோ புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிராக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். புதிய ஓய்வூதியத் திட்டம், தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தையே மறுக்கும் வகையில் அமைந்துள்ளது என்கிறார்கள் அங்குள்ள எதிர்க்கட்சிகள். புதிய திட்டத்துக்கு பிரான்ஸ் மக்களவையில் பெரும்பான்மை இல்லாதபோதும், அதிபர் எம்மானுவேல் மாக்ரோன் குறுக்குவழியில் நிறைவேற்ற முயல்வார் என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. இதற்கு எதிராக, இந்த ஆண்டில் ஆறுமுறை வேலைநிறுத்தம் செய்துள்ளனர் தொழிலாளர்கள். கடந்த ஐந்து முறை திரண்ட கூட்டத்தைவிடவும், கடைசிப் போராட்டத்தில் அதிக கூட்டம் திரண்டிருந்தது. சமீபத்திய போராட்டத்தில் 35 லட்சம் பேர் பங்குபெற்றுள்ளதாக பிரான்ஸ் தொழிற்சங்க அமைப்புகள் தெரிவித்துள்ளன. உழைப்பாளர் ஒற்றுமை ஓங்கட்டும்!

டந்த ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து புதுடெல்லி வந்த விமானத்தில் தொழிலதிபர் சங்கர் மிஸ்ரா, போதை தலைக்கேறிய நிலையில் 72 வயது மூதாட்டி மீது சிறுநீர் கழித்தது சர்ச்சையானது. இந்த விவகாரத்தை விமான நிறுவனமும் சங்கர் மிஸ்ராவும் மூடி மறைக்க முயல, மூதாட்டியால் அம்பலமாகி மிஸ்ரா கைதுசெய்யப் பட்டார். அவர் நான்கு மாதங்கள் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் 5-ஆம் தேதி அமெரிக்காவி லிருந்து இந்தியா வந்த விமானத்தில் ஆர்யா என்ற மாணவர் போதையில் சக பயணிமீது சிறுநீர் கழித்ததாக சர்ச்சையாகியுள்ளது. இதையடுத்து அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படித்துவரும் அந்த இந்திய மாணவர் விமானத்தில் பயணிக்க அமெரிக்க விமான நிறுவனத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸி லிருந்து வந்த ரயில் உத்தரப்பிரதேச மாநிலத் தில் பயணித்தபோது டிக்கெட் பரிசோதகர் முன்னா குமார், போதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்துள்ளார். பெண்ணின் அலறலால் விழித்த பயணிகள், முன்னா குமாரைப் பிடித்து ரயில்வே போலீஸில் ஒப்படைத் துள்ளனர். ஏன் அளவில் லாம குடிக்கணும்? அவஸ்தைப் படணும்!

-நாடோடி