எதற்கு வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விடவேண்டும் என்கிறார்கள் துருக்கி மக்கள். துருக்கியின் தெற்கு கடலோரப் பகுதியில், ரஷ்யாவின் ரொசாடம் நிறுவனம் அணுமின் நிலையம் கட்டிவருகிறது.
இங்கு 4800 மெகாவாட் திறனில் மின்சாரம் தயாரிக்கும் 4 அணுமின் உலைகள் அமையும். துருக்கியின் மொத்த மின்தேவையில் 10 சதவிகிதத்தை இது பூர்த்திசெய்யும். சமீபத்தில் பூகம்பம் ஏற்பட்ட பகுதியிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் இந்த மின்நிலையம் அமைந்துள்ளது. இதற்கு முன்பே எதிர்ப்பிருந்தபோதும் நிலநடுக்கத்துக்குப் பின் துருக்கி மக்களிடமிருந்து மீண்டும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பூகம்பம் ஏற்படும் பகுதிக்கு அருகே மின்நிலையம் இரட்டைத் தலைவலியாக முடியும் என மக்கள் ஆட்சேபிக்கின்றனர். எதிர்க்கட்சிகளும் இந்தக் கோரிக்கையை ஆதரிக்கின்றன. அண்டை நாடான சைப்ரஸ், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. ஆனால் மின்நிலையத்தைக் கட்டித்தரும் ரொசாடம் நிறுவனமோ, 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் பாதிக்கப்படாத அளவுக்கு அணு மின்நிலையத்தைக் கட்டிவருகிறோம் என்கிறது. இப்போதைக்கு இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் எண்ணம் இல்லை என்றிருக்கிறது துருக்கி! உலை பிழையாகிவிடக்கூடாதுன்னு பயம்தான்!
வெளிநாடுகளில் இந்தியாவின் பிம்பம் சேதாரமாக யாரும் எதுவும் செய்ய வேண்டியதில்லை. எதிர்பாராத சூழல்களில் மருத்துவமனைகளில் மரணம் நிகழும்போது, இறந்த உடலைக் கொண்டுவர ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படாதது ஒன்றே போதும். இதற்கு முன்பும் இப்படி இறந்துபோனவர்களைக் கொண்டுவர வழியில்லாமல் தோளிலும், சைக்கிளிலும் தூக்கிக்கொண்டு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்து வீடுதிரும்பியு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதே சம்பவம் மீண்டும் ஒருமுறை நிகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் குமடாவைச் சேர்ந்த தம்பதி கொண்டபாபுலி மகேஸ்வரி. நிறைமாத கர்ப்பிணியான மகேஸ்வரி 20 நாட்களுக்குமுன் விசாகப்பட்டினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தை பிறந்த சில தினங்களிலேயே இறந்துபோனது. குழந்தையின் உடலை ஊருக்குக் கொண்டுசெல்ல மருத்துவமனை ஆம்புலன்சைக் கேட்டனர். ஆனால் மருத்துவமனையில் யாரும் சரியாகப் பதிலளிக்கவில்லை. இதனால் அந்த தம்பதி, இறந்த குழந்தையை ஏந்தியபடி 120 கிலோமீட்டர் தூரம் ஸ்கூட்டரில் பயணித்து சொந்த ஊர் வந்திருக்கிறது. விஷயம் சர்ச்சையானதும், ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்வதற்குள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு தம்பதி சென்றுவிட்டதாகச் சொல்லி மருத்துவமனை நிர்வாகம் சமாளிக்கிறது. நம்பிட்டோம் சார்!
பெஷாவர் பள்ளிவாசல் தாக்குதலின் வடு மாறும்முன்பே அடுத்த தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது பாகிஸ்தான். இந்த முறை கராச்சி போலீஸ் நிலையம் தாக்குத லுக்கு உள்ளாகியிருக்கிறது. தஹ்ரீக் இ தலிபான் அமைப்பைச் சேர்ந்த போராளிகள் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர். வெள்ளிக் கிழமை இரவு பாகிஸ்தானின் முக்கிய நகரங் களில் ஒன்றான கராச்சியின் தலைநகரில், இரவில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. போலீ ஸுக்கும் தீவிரவாதிகளுக்குமான தாக்குதலால் இரவில் துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது. நுழைந்த வர்களில் ஒருவன் தன் உடலுடன் இணைத் திருந்த குண்டை வெடிக்கச் செய்தததில் காவல் நிலையமே அதிர்ந்தது. இதில் இரு போலீஸ் அதிகாரிகளும் பொது மக்களில் ஒருவரும் இறந்துள்ளனர். 18 பாதுகாப்புப்படை வீரர்கள் காயம்பட்டனர். தீவிரவாதிகளில் ஐவர் பலியாகினர். தாக்குதல் நிகழ்ந்த மூன்று மணி நேரத் தில், தீவிரவாதிகளின் பிடியிலிருந்து காவல் நிலையத்தை ராணுவமும் போலீஸும் சேர்ந்து மீட்டது. எதை வெல்ல இத்தனை ரத்தம்?
ஒரே நேரத்தில் பள்ளி மாணவர்களின் 150 செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டது உலகின் கண்களை வியப்பால் விரியவைத்துள்ளது. முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரான அப்துல்கலாம் நினை வாக, அப்துல் கலாம் அறக்கட்டளை இயங்கிவருகிறது. இந்தியா முழு வதுமுள்ள 3,500 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 5,000 மாணவர்கள் குழுக்களாக இணைந்து ராக்கெட்டை உருவாக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டது. இதன்படி பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ராக்கெட் மற்றும் செயற்கைக் கோள்கள் உருவாக்க பயிற்சியளிக்கப்பட்டது. பின் இஸ்ரோவின் அனுமதியுடன் மாமல்லபுரத்திலுள்ள டிடிடிசி ஓசோன் வியூவிலிருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்து வதற்கான வேலை தொடங்கப்பட்டது. ஆனால் கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகிலுள்ளதால் திருவிடந்தை மைதானத்திலிருந்து ராக்கெட்டை ஏவ அனுமதி வழங்கப்பட்டது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை முன்னிலையில் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. 150 செயற்கைக்கோள்கள் ஒரே ராக்கெட்டில் ஏவப்பட்டது உலக அளவில் இதுவே முதல்முறையாகும். இந்தக் கோள்கள் தனியே பிரிந்துசென்று வளிமண்டல நிலை, கதிர்வீச்சு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விவரங் களைக் கணக்கிட்டு, குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் பாராசூட் மூலம் பூமியை வந்தடைந்தன. இதைத் தான் வானம் வசப்படும்னாங்களோ!
-நாடோடி