போலீஸ்காரர்களுக்கு மிகவும் பிடித்த விலங்கு எது தெரியுமா? எலிதான். ஏன் தெரியுமா? ஏதாவது ஒரு வழக்கில் போதைப்பொருள் எதையும் கைப்பற்றி, அந்த வழக்கு பல மாதங்களுக்குப் பிறகு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் போதைப்பொருளை எலி தின்றுவிட்டது என அதன் தலையில் பழியைப் போட்டுவிடலாம். பீஹாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் இதுபோல் ஆயிரக்கணக் கான லிட்டர் மதுவைக் குடித்த பழி, எலி மீது போடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டு எலிகள் மட்டும் இளைத்தவையா? 2018-ல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 பெண்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்துக் கைதாகினர். அவர்களிடமிருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதன் விசாரணை சமீபத்தில் சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு கோர்ட் டில் நடந்தது. அப்போது போலீஸ் தரப்பில் 11 கிலோ கஞ்சா மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டது. மீதமுள்ள கஞ்சாவுக்கு வழக்கம்போல் எலியின் தலையில் பழி போடப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதி, கஞ்சா வின் அளவு குறைந்ததைக் கண்டித்ததோடு, பெண்கள் கஞ்சா கடத் தியதாகக் கூறப்பட்டதும் நிரூபிக்கப்பட வில்லையெனக் கூறி அவர்களை விடுவித்தார். ஊழல் பெருச்சாளிங்கனு எலி திட்டப்போவுது!
சிக்கில் செல் நோய் மற்றும் பீட்டா தாலசீமியா குறைபாடுள்ளவர்களுக்கு இந்த வருடத்தில் மரபணு திருத்தம் மூலம் புதிய சிகிச்சைகள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை எழுந் துள்ளது. சிக்கில் செல் நோய், இரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் ஹீமோகுளோபின் செல்கள் அரிவாள் போன்ற வடிவத்தில் சிதை வுறுவதாகும். அதேபோல தாலசீமியா நோயில், சிவப்பணுக்கள் தொடர்ந்து அழிந்துகொண்டிருக்கும்.
இந்த இரு நோய்களுக்கும் வெர் டெக்ஸ் பார்மாசூட் டிகல்ஸ் நிறுவனமும் சி.ஆர்.ஐ.எஸ்.பி.ஆர். தெரபியூட்டிக்ஸ் நிறுவனமும் மர பணுவைத் திருத்து வதன் மூலம் தீர்வு காணமுடியுமென நம்புகின்றன. அதாவது, குறை யுள்ள மரபணுக்களை நீக்கி விட்டு, பதிலாக ஆரோக்கியமான மரபணுக்களை நுழைத்து விடுவதுதான் இதற்கான சிகிச்சை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மருந்து வரன்முறை அமைப்புகள் அங்கீகரிக்கும் பட்சத்தில் இந்தவருடக் கடைசி யிலேயே இந்த சிகிச்சை நடை முறைக்கு வந்துவிடும். ஆனால் புதிய சிகிச்சை...…அதுவும் மரபணு திருத்தத்தோடு தொடர் புடையது என்பதால் அதிகம் செலவுபிடிப்பதாக இருக்கும். அதாவது இச்சிகிச்சையின் தோராய விலையே ரூ.7 கோடியிலிருந்து 28 கோடிவரை இருக்குமென கணிக்கப்படு கிறது. அதாவது டாடா, அம்பானி மாதிரி ஆட்களுக்கு இந்த நோய் இருந்தால் குணப்படுத்திக்கொள்ளலாம். சீக்கிரம் விலையைக் குறைங்கப்பு!
2023-ஆம் ஆண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டம் 2023, ஜனவரி 9-ஆம் தேதி நடைபெற்றது. கூட்டத்தைத் தொடங்கிவைத்து உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசால் தயாரிக்கப்பட்டு ஒப்புதலைப் பெற்ற உரையை வாசித்தார். அப்போது திராவிட மாடல் ஆட்சி, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் அண்ணா போன்ற சொற்கள் இடம்பெற்ற ஒரு பத்தியை வாசிக் காமலே தவிர்த்தார். இதையடுத்து பேசிய தமிழக முதல்வர், முறையாகப் படிக்காத ஆர்.என்.ரவியின் உரைக்கு மாறாக, அச்சிடப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உரையே அவைக்குறிப்பில் ஏறவேண்டுமென தீர்மானத்தை மொழிந்தார். இந்நிலையில் கூட்டத்தின் இடையி லேயே தேசிய கீதம் வாசிக்கப்படும்முன் ஆளுநர் ரவி சட்டமன்றத்தைவிட்டு வெளியேறினார். இவ்விவகாரம் சர்ச்சையான நிலையில்... அடுத்தகட்டமாக, தி.மு.க. பிரமுகர் ஹேமந்த் அண்ணாதுரை, "கெட் அவுட் ரவி' என்ற ஹேஷ்டாக்குடனான போஸ்டரை சென்னையெங்கும் ஒட்டினார். ஆளுநர் அரசியல் சூடு பிடிக்குதுபோல!