டக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று அல்ஜீரியா. அந்நாட்டு நீதிமன்றம் கொலை வழக்கு ஒன்றில் 49 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்திருப் பது உலகையே அதிரவைத்திருக் கிறது. அல்ஜீரியாவைச் சேர்ந்த பென் இஸ்மாயில் ஒரு ஓவியர். சமூக சேவகரும்கூட. இந்நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள கபைலி பகுதியில் காட்டுத் தீ பரவியது. இதையறிந்து தீயில் சிக்கியவர் களைக் காப்பாற்ற முயன்றார் பென் இஸ்மாயில். இதற்கிடையில், பென் இஸ்மாயிலால்தான் காட்டுத் தீ பரவியது என அங்கே வதந்தி பரவியது. இதை நம்பிய ஒரு கும்பல் பென் இஸ்மாயி லைத் தாக்கிக் கொன்ற துடன், அவரது உடலையும் தீவைத்துக் கொளுத்திவிட்டது. அல்ஜீரியாவையே அதிரச் செய்த இந்த வழக்கில் தான் 49 பேருக்கு தூக்குத் தண்டனையும் 38 பேருக்கு சிறைத் தண்டனையும் விதித்துள்ளது நீதிமன்றம். இது கொஞ்சம் டூமச்!

டுக்கும்போதெல்லாம் கனவில் பாம்பு வந்து கொத்தி யிருக்கிறது கோபிச்செட்டிப்பாளை யத்தைச் சேர்ந்த நெடுமாறனுக்கு. இரவை நினைத்தாலே நடுக்கம் வருமளவுக்கு ஆகிப்போன நெடுமாறன், இந்திய வழக்கப்படி ஒரு ஜோதிடரைப் போய்ப் பார்த்து பரிகாரம் கேட்டிருக்கிறார். நாகராஜாவுக்கு பூஜைசெய்யச் சொல்லி, பாம்புப் புற்று உள்ள ஒரு கோவிலையும் பரிந்துரைத்திருக் கிறார் ஜோதிடர். கோவிலில் பூஜை, புனஸ்காரம் எல்லாம் செய்து முடித்தபிறகு பூசாரி, அவர் பங்குக்கு பாம்புப் புற்றுக்கு முன்னால் தன் நாக்கை நீட்டச் சொல்லியிருக்கிறார். புற்றிலிருந்த பாம்பு, சுறுசுறுப்பாக வெளியே வந்து நெடுமாறன் நாக்கிலேயே கொத்த, அப்படியே மயக்கமாகி விட்டார். உடன் வந்திருந்த உறவினர் அவரை அள்ளிக்கொண்டு ஈரோடு மணியன் மெடிக்கல் சென்ட ருக்கு கொண்டு போயிருக்கிறார். நாக்கிலுள்ள திசுக்கள் விஷத் தால் மோச மாகப் பாதிக்கப் பட்டிருந்ததால், உயிரைக் காப் பாற்ற நாக்கை வெட்டியெடுத்திருக்கிறார்கள். நினைவு திரும்பிவிட்டாலும் ஜோதிடர், பூசாரி மேல் வழக்குக் கொடுக்க மறுத்துவிட்டார் நெடுமாறன். பரிகாரம் பரிதாபமா ஆகிப்போச்சே!

ee

Advertisment

நாலு கண்டங்களைத் தாண்டிச்சென்று உணவு விநியோ கித்த பெண்ணைப் பார்த்திருக் கிறீர்களா? சிங்கப்பூரிலிருந்து அன்டார்டிகா கண்டத்துக்கு ஃபுட்பன்டா நிறுவனம் சார்பில் உணவைக் கொண்டுசென்று விநியோகித்திருக்கிறார் மானசா கோபால். கிட்டத்தட்ட நாலு கண்டங்களைத் தாண்டி, 30,000 கிலோமீட்டர் பயணித்து அன்டார் டிகாவின் பனிக்கு நடுவில் நடந்து இதைச் சாதித்திருக்கிறார் மானசா. இது தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், சிங்கப்பூரிலிருந்து அன்டார்டிகாவுக்கு ஸ்பெஷ லான உணவு டெலிவரி செய் தேன்” என விரிவாக தனது அனு பவத்தைப் பேசுகிறார். எல்லாம் சொன்ன மானசா, அந்த டெலிவரிக்கு அந்த வாடிக்கையாளரிடம் எவ்வளவு வசூலித்தார் என்பதை மட்டும் சொல்லவில்லை. போக வர டிக்கெட் செலவு, சேவைக் கட்டணம், வழிச்செலவு என ஒரு பெரிய தொகையைச் சேர்த்து வசூலித்திருப்பார்கள். எனினும் உலகின் மிக தூரமான உணவு டெலிவரி செய்த பெருமை மானசாவுக்குக் கிடைத்திருக்கிறது. உலகம் சுற்றிய உணவுப் பார்சல்!

காஞ்சிபுரத்தை அடுத்த நெய்க்குப்பம் கிராமத்தில் பணி புரிந்து வந்திருக்கிறார் பீகாரைச் சேர்ந்த 62 வயது தொழிலாளி புஷ்கர். இவர் இதய நோயால் இறந்துவிடவே, அவரது குடும்பத் தினர் அவரது உடலை கிராமத்தின் இடுகாட்டில் புதைக்க முயன்றிருக்கின்றனர். ஆனால் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரான சாவித்திரி, அந்நியரான புஷ்கரின் உடலை, புதைக்க ஊரார் அனு மதிக்கமாட்டார்கள் என மறுத்து விட்டார். பக்கத்து கிராமம் வரை கொண்டுசென்று புதைக்க முயன்றும் அங்கும் இதே நிலை தான். பின் யாருக்கும் சொந்த மில்லாத பொதுவான நிலத்தில் கொண்டுசென்று புதைத்துவிட்டு அகன்றிருக்கின்றனர் குடும்பத் தினர். ஆனால், அங்கு சமீபத்தில் நல்ல மழைபெய்ததால், அப்பகுதி மண் அடித்துச் செல்லப்படவே, அவரது அழுகிய உடல் வெளியே வந்துவிட்டது. இப்போது அந்தக் கிராமத்துக்காரர்கள் அந்த உடலால் சுகாதாரக் கேடு வரும், அந்த உடலை ஊருக்குப் பொதுவான சுடுகாட்டில் புதைக்க அரசு அதிகாரிகள் உதவவேண் டும் என கோரிக்கை வைத்திருக் கிறார்களாம். அதைத்தான அந்தக் குடும்பம் முதல்லயே கேட்டுச்சு! பட்டாத்தான் புரியுது!

nn

Advertisment

ட்சிகளுக்கான நிதி, தேர்தல் நிதிப் பத்திரமாகத்தான் பெறவேண்டும் என நடைமுறை மாறியுள்ள நிலையில், கடந்த மார்ச் 2018 முதல் அக்டோபர் 2022 வரையிலான காலகட்டத்தில், குஜராத்தில் கட்சிகளுக்கு அளிக் கப்பட்ட நிதி எவ்வளவு என ஏ.டி.ஆர். எனும் அமைப்பு தகவலறி யும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேள்வி கேட்டது. இந்த நான் காண்டு காலத்தில் குஜராத்தில் அனைத்துக் கட்சிகளுக்கும் சேர்த்து தேர்தல் நிதிப் பத்திரம் மூலமாக ரூ.174 கோடி சேர்ந்துள்ளது. அதில் ரூ.163 கோடி பா.ஜ.க.வுக்கு அளிக்கப்பட்டது. காங்கிரஸுக்கு 10.5 கோடியும், ஆம் ஆத்மிக்கு 32 லட்சமும், மிச்சத் தொகை இதர கட்சி களுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. அதாவது மொத்த நிதியில் 94% பா.ஜ.க.வைச் சென்றடைந்துள்ளது. அடேங்கப்பா!

-நாடோடி