காராஷ்டிர இந்துத்துவச் செயல் பாட்டாளரான சாம்பாஜி பிடேவுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற் கெனவே இவரது பேச்சு தான் பீமா கோரேகான் கலவரத்துக்கு காரண மானது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மற்றொரு பிரச்சினையில் சிக்கியுள்ளார் சாம்பாஜி.

e

நவம்பம் 3-ஆம் தேதியன்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவைச் சந்தித்துப் பேசிவிட்டு வெளியே வந்தார். அப்போது சாம்பாஜியிடம் பெண் நிருபர் ஒருவர், "முதல்வரிடம் எது குறித்துப் பேசினீர்கள்?'' எனக் கேட்க, அந்தப் பெண்ணை ஏறிட்டுப் பார்த்த சாம்பாஜி, அவரது நெற்றியில் பொட்டு இல்லாததைக் கண்டு, "குங்குமம் வைத்த பெண் பாரத மாதா வைப் போன்றவர். அது இல்லாவிட்டால் விதவைக்குச் சமம். முதலில் குங்குமம் வைத்துவிட்டு வந்து கேள்வி கேள்'' எனக் கூறினார். இது வீடியோவாகவும் பதிவான நிலையில், பெண் செய்தியாளரை அவமதித்த சாம்பாஜிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதுக்கெல்லாம் பயந்துடுவா ராக்கும்?

ஹிமாச்சலப் பிரதேசத்துக்கும் குஜராத் துக்கும் தேர்தல் அறிவிப்பு வெவ்வேறு தேதிகளில் அறிவிக் கப்பட்டாலும், தேர்தல் முடிவு ஒரே நாளில் தான் அறிவிக்கப்பட வுள்ளது. குஜராத் துக்கு மட்டும் தாமத மாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதன் பின்னால் மத்திய அரசின் அழுத் தம் இருக்கிறது என குஜராத் காங்கிரஸ் பொறுப்பாள ரான ரகு ஷர்மா குற்றம்சாட்டியுள்ளார். இப்போது மட்டுமா? மோடி ஆட்சிக்கு வந்த எட்டாண்டுகளில் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பைத் தாமதப் படுத்துவது ஒன்றும் முதல்முறையல்ல. பா.ஜ.க. ஆட்சி யிலிருக்கும் மாநிலங்களில் நலத் திட்டங்கள் அறிவிப்பு முடியும்வரை, அல்லது கட்சிப் பேரணிகள், அல்லது கட்சி, தேர்தல் ஆயத்தங்கள் செய்யும்வரை தாமதம் செய்வதாக பல முறை புகார் வந்துள்ளது. இந்த முறையும் நடந்திருப்பது அதுதான். மத்தியில் ஆளும்கட்சின்னா சும்மாவா?

Advertisment

nn

ப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்குப் பகுதிகளிலுள்ள நாடுகளில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலை, போர், பஞ்சத்தால் தெற்கு ஐரோப்பிய நாடுகளைத் தேடி அகதிகள் வருவது சில ஆண்டுகளாகவே தொடர்ந்துவருகிறது. இத்தகையவர்கள் சாதாரணமான படகில் அதன் கொள்ளளவுக்கும் அதிகமான எண்ணிக்கையில் புகலிடம் தேடிவருவர். மத்திய தரைக்கடல் பகுதி, கொந்தளிப்பான கடல் அலைகளுக்குப் பேர்போனது. இதனால் படகு கவிழ்ந்து உயிர்ப் பலி ஏற் படுவது சமீபத் திய வாடிக்கை யாகியுள்ளது. துருக்கியின் இஸ்மிர் நகரிலிருந்து நவம்பர் 2-ஆம் தேதி கிளம்பிய படகு கிரீஸ் நாட்டு கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. 68 பேர் பயணித்த இந்தப் படகில் 22 பேர் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. 9 பேர் ஆள் நடமாட்ட மில்லாத கடல் பகுதியில் பட்டினியுடன் தவித்த நிலையில், கிரீஸ் காவல் படையால் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர் களின் நிலை தெரியவில்லை. உடலை உடனடியாகக் கதகதப்பாக்கும் பிரத்யேக துணியால் மூடி உயிர்பிழைத்த வர்களை அழைத்துவரும் படமே இங்கே நீங்கள் காண்பது. அகதியில்லாத உலகம் மலரட்டும்!

nn

Advertisment

முன்கூட்டியே தேர்தல் நடத்தவேண்டுமெனக் கேட்டு வஸீராபாத்திலிருந்து இஸ்லாமபாத்துக்கு பேரணியை நடத்திய பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான்கான்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இம்ரானுக்கு காலில் காயம் ஏற்பட்டதைத் தவிர, பெரிய ஆபத்தில்லை. ஆனால் இந்தக் கொலைமுயற்சியில் 7 பேர் காயம் பட்டதோடு, ஒருவர் பலியாகியிருக்கிறார். தற்போது லாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இம்ரான் நல்ல நிலையிலேயே இருக்கிறார். இம்ரானைக் கொல்ல முயன்ற நவீத், இம்ரானின் தொண்டர்களாலே பிடிபட்டு போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், "இம்ரான் மக்களைத் தவறாக வழிநடத்துகிறார். அதைப் பொறுக்க முடியாமல்தான் அவரைக் கொல்ல முயன்றேன்'' என்றிருக்கிறார். யார்க்கர்தான் விக்கெட் விழலை!

டையாறைச் சேர்ந்த கார் ஓனர் ஒருவருக்கு போக்கு வரத்துக் காவலர் ஒரே மாதத்தில் 54 போக்குவரத்து விதிமீறல் ரசீதுகள் கொடுத்திருக்கிறார். அப்படி என்ன விதிமீறினார் என்கிறீர்களா? ஹெல்மெட் அணியவில்லை என்றுதான். இத்தனைக்கும் அவர் கார் வாங்கியே ஒரு மாசம்தான் ஆகிறது. அதற்குள் 54 அபராத ரசீது! அதுவும் ஹெல்மெட் அணியாததற்கு! அக்டோபர் 19-ஆம் தேதிதான் அத்தனை ரசீதுகளும் வழங்கப்பட்டிருக் கின்றன. வழங்கியவர் வேப்பேரி காவல்நிலையத்தைச் சேர்ந்த பாண்டிவேலுவாம். இதையடுத்து வண்டிக்குச் சொந்தக்காரரான குமார், “சென்னை போலீஸ் இந்த விஷயத்தைக் கவனித்து, தேவை யான நடவடிக்கை எடுக்கவேண் டும்” என்று கேட்டுக்கொண்டி ருக்கிறார். இதையடுத்து சென்னை போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி, "கண்காணிப்புக் கேமராவால் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறால் இந்தத் தவறு நடந்திருக்கவேண்டும். அத னால்தான் ஒரே பிரச்சினைக்கு 54 ரசீதுகள் வழங்கப்பட்டிருக்கின் றன. இந்த ரசீதுகள் ரத்து செய்யப் படும். அந்த கார் உரிமையாளர் கவலைப்படத் தேவையில்லை'' என்றிருக்கிறார். அடுத்து டூவீலர் ஓட்டிகள் சீட்பெல்ட் போடாததுக்கு அபராதமா?

-நாடோடி