அறிவியல் கண்டுபிடிப்புகள், இலக்கியத்துக்கு நோபல் விருது கொடுப்பதுபோல், ஏமாற்று, மோசடிக்கு நோபல் பரிசுகொடுத்தால் அதை இந்தியர் கள் வருடா வருடம் வென்றுவிடுவார்கள். பீகாரின் நீரஜ் மோடி அதற்கு ஒரு நல்ல உதாரணம். ஆசிரியரான இவர், தனது மாணவியொருத்தியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிவிட்டார். இதையடுத்து பெண்ணின் தாயார் நீரஜ் மேல், பராகத் காவல் நிலையத் தில் புகார்கொடுக்க, போலீஸ் நடவடிக்கை எடுக்கத் தாமதம்செய்ய, விவகாரம் நீதி மன்றத்துக்கு வந்தது. அப்போது நீரஜ் இறந்துவிட்டார் என அவரது தந்தையால் சொல் லப்பட்டு, இறப்புச் சான்றிதழும் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் சில மாதங்களுக்குப் பின், பெண்ணின் தாய்க்கு நீரஜ் உயிரோடு இருப்பது சொல் லப்பட, உயர் அதிகாரி களிடம் மீண்டும்சென்று முறையிட்டிருக்கிறார். விசாரணையில் நீரஜின் தந்தை, போலீஸ் நட வடிக்கையிலிருந்து தப்ப மகனை இறந்ததுபோலும், அவரை எரிப்பதுபோலும் புகைப்படம் எடுத்து இறப்புச் சான்றிதழ் பெற்றது அம்பலமாக, நீதிம
அறிவியல் கண்டுபிடிப்புகள், இலக்கியத்துக்கு நோபல் விருது கொடுப்பதுபோல், ஏமாற்று, மோசடிக்கு நோபல் பரிசுகொடுத்தால் அதை இந்தியர் கள் வருடா வருடம் வென்றுவிடுவார்கள். பீகாரின் நீரஜ் மோடி அதற்கு ஒரு நல்ல உதாரணம். ஆசிரியரான இவர், தனது மாணவியொருத்தியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிவிட்டார். இதையடுத்து பெண்ணின் தாயார் நீரஜ் மேல், பராகத் காவல் நிலையத் தில் புகார்கொடுக்க, போலீஸ் நடவடிக்கை எடுக்கத் தாமதம்செய்ய, விவகாரம் நீதி மன்றத்துக்கு வந்தது. அப்போது நீரஜ் இறந்துவிட்டார் என அவரது தந்தையால் சொல் லப்பட்டு, இறப்புச் சான்றிதழும் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் சில மாதங்களுக்குப் பின், பெண்ணின் தாய்க்கு நீரஜ் உயிரோடு இருப்பது சொல் லப்பட, உயர் அதிகாரி களிடம் மீண்டும்சென்று முறையிட்டிருக்கிறார். விசாரணையில் நீரஜின் தந்தை, போலீஸ் நட வடிக்கையிலிருந்து தப்ப மகனை இறந்ததுபோலும், அவரை எரிப்பதுபோலும் புகைப்படம் எடுத்து இறப்புச் சான்றிதழ் பெற்றது அம்பலமாக, நீதிமன்றம் காவல்துறையை ஒரு பிடி பிடித்துவிட்டது. அப்பனும் பிள்ளையும் இப்போது சிறையில்!
உத்தரகாண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியில் இருக்கிறது பேகார் பந்த் பகுதி. இப்பகுதியில் சில குடியிருப்பினர் ரயில்வே நிலங்களை ஆக்கிரமித்துக் குடியிருக்கின்றனர். அவர்களோடு சேர்ந்து அனுமன் கோவிலும் இருக்க, அனைவரும் உடனடியாக இடத்தைக் காலிசெய்ய நோட்டீஸ் அனுப்பியதுடன், அனுமன் கோவிலில் நோட்டீஸையும் ஒட்டினார் அஸிஸ்டென்ட் எஞ்ஜினியரான ஆனந்த்குமார் பாண்டே. மசூதியையே தகர்த்துவிட்டு ராமருக்குக் கோவில் கட்டத் துடிக்கும் நாட்டில், அனுமனைக் காலிசெய்யச் சொல்லி நோட்டீஸ் அனுப்பலாமா? அப்பகுதிவாசிகள், ரயில்வேயின் நோட்டீஸுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி அமர்க்களப்படுத்த, ஆனந்த் பாண்டேவுக்கு மாற்றல் உத்தரவு வந்திருக்கிறது. ரயில்வே நிலத்தில் ஜம் மென்று உட்கார்ந்திருக்கிறார் அனுமன்! அனுமன்கிட்டயே வாலாட்டுறீங்களா?
இரத்த பிளாஸ்மாவுக்குப் பதில் சாத்துக்குடி சாறை டெங்கு நோயாளிக்கு ஏற்றியதால் ஒருவர் இறந்ததாக வந்த புகாரையடுத்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையை மூட உத்தரவிட்டுள்ளது அம்மாநில அரசு. எனினும், இந்தப் புகார் ஒரு வீடியோவால் வைரலானதே தவிர, மருத்துவரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை. சௌரப் மிஸ்ரா என்பவருக்குச் சொந்தமான தனியார் மருத்துவமனையில் பிரதீப் பாண்டே என்பவர் டெங்கு நோய்க்கு சிகிச்சை பெற சேர்ந்தார். அவர் இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை 17,000-க்கும் கீழ் இறங்கிய தால், இரத்தத் தட்டுகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு அவரது உறவினர்களிடம் மருத்துவ நிர்வாகம் கூறியது. அவர்கள் எஸ்.ஆர்.என். மருத்துவமனையிலிருந்து ஐந்து யூனிட் ரத்தத் தட்டுகளை வாங்கிவர, நோயாளிக் குச் செலுத்தப்பட்டது. மூன்றாவது யூனிட் செலுத்தும்போதே நோயாளியின் உடல்நிலை மோசமாக அத்துடன் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நோயாளிக்கு ஏற்றிய ரத்தத் தட்டுகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மருத்துவமனை மூடப்பட்டாலும், பரிசோதனை முடிவுக் குப் பிறகே மருத்துவமனை மீது வழக்குப் பதியப்படுமாம். பீதியைக் கிளப்புறாங்களே!
பூமியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிலவு விலகிச் செல்வதாகக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். இது ஒன்றும் சமீபத்திய நிகழ்வு இல்லை. ஆரம்பகட்டத்தில் பூமிக்கு மிக நெருக்கமாக இருந்துள்ளதாம் நிலவு. அதாவது 14000 மைல் தொலைவில். ஆனால் ஆண்டுக்கு 3.8 செமீ விலகிச் செல்ல ஆரம்பித்தது. ஆனால் பூமியும் நிலவும் தோன்றி லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டதால் பூமிக்கும் நிலவுக்குமான தொலைவு தற்போது 2,50,000 மைலாக அதிகரித்துள்ளதாம். எதிர்காலத்தில் அது இன்னும் அதிகரிக்குமெனச் சொல்லப்படுகிறது. இந்த பூமிக்கும் நிலவுக்குமான விலகலால், பூமியில் பருவநிலை மாற்றங்கள் அதிகரிக்குமெனவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நிலவே நிலவே விலகாதே!
விண்வெளி ஆராய்ச்சியிலும் ராக்கெட் அறிவியலிலும் சாதனை படைத்துவரும் இந்தியா, மற்றொரு சாதனையை நிகழ்த்தி யுள்ளது. இந்தியா முதன்முறையாக 36 செயற்கைக்கோள்களுடன் எல்.வி.எம்.3 என்ற ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிச் சாதித்துள்ளது. உலகின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஒன்வெப் நிறுவனம் வர்த்தகரீதியான இணையப் பயன்பாட்டுக்கான செயற்கைக் கோள் தயாரிப்பில் ஈடுபட்டுவருகிறது. அரசு, கல்வி, வர்த்தகம் தொடர்பான பயன்பாட்டுக்காக 36 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டது. இந்த ஒப்பந்தம் இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டது. அக்டோபர் 22-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் தவான் ஏவுதளத்திலிருந்து ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப் பட்டன. இந்த 36-ல் 16 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. மிச்சமுள்ள 20-ம் அவற்றின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதும் செயற்கைக்கோள்கள் தரவுகளை அனுப்ப ஆரம்பிக்குமாம். முதல்முறையாக, வர்த்தகரீதியாக அதிக டன் எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்திருக்கிறார்கள் இந்திய விஞ்ஞானிகள். ராக்கெட் ராஜாவா அசத்துது இந்தியா!
-நாடோடி