மாநிலம் தேசம் சர்வதேசம்!

ss

ங் சான் சூகிக்கு மேலும் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது மியான்மர் நீதிமன்றம். 2020-ல் நடந்த பொதுத் தேர்தலில் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடிவந்த சூகி வெற்றிபெற்றார். இந்த வெற்றியைத் தாளமுடியாத ராணுவம், தேர்தலில் முறைகேடு என்று கூறி ஆட்சியைக் கவிழ்த்ததுடன் ஆங் சான் சூகியையும் சிறைப்பிடித்தது. அப்போது முதலே சூகி வீட்டுக் காவலில் இருந்துவருகிறார். தனது செயலை நியாயப்படுத்துவதற்காக பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி, சூகி மீது நீதிமன்ற விசாரணையைத் தொடங் கியது ராணுவ ஆட்சி.

news

ஒவ்வொரு வழக்கிலும் ஆட்சியிலிருப்பவர் களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுபோல் சூகி மீது குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி யிடம் ஆங்சான் சூகி 5,50,000 அமெரிக்க டாலர் லஞ்சம் வாங்கிய தாகக் குற்றம் சுமத்தி விசாரித்துவந்தது நீதிமன்றம். இவ்வழக்கிலும் குற்றம் உறுதி செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது வரையிலா

ங் சான் சூகிக்கு மேலும் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது மியான்மர் நீதிமன்றம். 2020-ல் நடந்த பொதுத் தேர்தலில் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடிவந்த சூகி வெற்றிபெற்றார். இந்த வெற்றியைத் தாளமுடியாத ராணுவம், தேர்தலில் முறைகேடு என்று கூறி ஆட்சியைக் கவிழ்த்ததுடன் ஆங் சான் சூகியையும் சிறைப்பிடித்தது. அப்போது முதலே சூகி வீட்டுக் காவலில் இருந்துவருகிறார். தனது செயலை நியாயப்படுத்துவதற்காக பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி, சூகி மீது நீதிமன்ற விசாரணையைத் தொடங் கியது ராணுவ ஆட்சி.

news

ஒவ்வொரு வழக்கிலும் ஆட்சியிலிருப்பவர் களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுபோல் சூகி மீது குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி யிடம் ஆங்சான் சூகி 5,50,000 அமெரிக்க டாலர் லஞ்சம் வாங்கிய தாகக் குற்றம் சுமத்தி விசாரித்துவந்தது நீதிமன்றம். இவ்வழக்கிலும் குற்றம் உறுதி செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது வரையிலான வழக்குகளுக்கே சூகி இன்னும் 26 வருடம் சிறையில் இருக்கவேண்டும். இன்னும் எத்தனை வழக்குகளை ஆட்சி யாளர்கள் கையில் வைத்திருக்கிறார்களோ… மியான்மருக்கு என்று விடிவு காலமோ!

ர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பகவத்தின் சமீபத்திய கருத்தொன்று அசாதுதீன் உவைசியால் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. சமூகத்தின் அடிப்படையிலான மக்கள்தொகை சமநிலையின்மை நிலவுவதாக சமீபத்தில் மோகன் பகவத் குறிப்பிட்டார். அதன் பொருள், முஸ்லிம் களின் மக்கள் தொகை அதிகரித்துவருகிறது. அதைக் கட்டுப்படுத்தவேண்டும் என்பதுதான். “"இரண்டு குழந்தைகளுக்கு நடுவில் இடைவெளி விடுவதுதான் ஸ்பேஸிங் என அழைக்கப்படுகிறது. முஸ்லிம்கள் ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடையில் போதுமான இடைவெளி விடுகிறார்கள். முஸ்லிம்களே ஆணுறையை அதிகளவில் பயன்படுத்து கிறார்கள். உண்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முஸ்லிம்களின் மக்கள் தொகையைக் காரணம் காட்டி, இந்துக்களை அச்சுறுத்த விரும்புகிறார். உண்மையில் முஸ்லிம்களின் பிறப்பு விகிதம் குறைந்துவருகிறது''’என பதிலடி தந்திருக் கிறார் உவைசி. சர்ச்சைகளுக்கு முதல்ல கட்டுப்பாடு விதிக்கணும்!

2016-ல் மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு சட்ட அமர்வில் நடந்துவருகிறது. இந்த வழக்கில் 58 மனுதாரர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எதிராக மத்திய அரசின்மேல் வழக்குத் தொடுத்துள்ளார்கள். வழக்கு விசாரணையின்போது ஐந்து நீதிபதிகளுள் ஒருவரான எஸ்.அப்துல் நஸீர் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் தங்களது குறிக் கோளான கறுப்புப் பணம், தீவிரவாதத்துக்கு நிதியுதவியைத் தடுப்பது, கள்ள நோட்டு ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வந்தனவா என கேள்வியெழுப்பினார். மூத்த வழக்கறிஞர்களான ப.சிதம்பரமும், ஷியாம்திவானும் “1946, 1978 பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளின்போது தனிச் சட்டம் மூலம் அது செயல் படுத்தப்பட்டது. மாறாக, 2016-ல் வெறும் நோட்டிபிகேஷன் மூலம் மட்டுமே பணமதிப் பிழப்பு அறிவிக்கப்பட்டது. பயங்கரமான விளைவு களை ஏற்படுத்திய இந்நடவடிக்கை மீண்டும் மேற்கொள்ளப்படாது என்பது என்ன நிச்சயம்’ என கேள்விகளை எழுப்பினர். என்ன தீர்ப்பு வருதுனு பார்க்கலாம்!

வனியில் இல்லை அவன் இல்லாத இடம் என பெருமையாக கடவுள் நம்பிக்கையாளர்கள் குறிப்பிடுவார்கள். இதனோடு ப்ளாஸ்டிக் நுண்துகள்கள்களையும் சேர்த்துக்கொள்ளலாம். சமீபத்தில் நடந்துவரும் வெவ்வேறு ஆய்வுகள் கடல் நீரிலும், அண்டார்டிகா பனியிலும், கடலிலிருந்து தயாரிக்கப்படும் உப்பிலும் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை வெளிப்படுத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதையெல்லாம் பின்னுக்குத் தள்ளி வாயைப் பிளக்க வைத்திருக்கிறது சமீபத்திய ஆய்வு. இத்தாலி நாட்டின் ரோம் நகரில் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், தாய்ப்பாலிலும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 34 பாலூட்டும் அன்னைகளிடம் மேற்கொண்ட ஆய்வில், 75 சதவிகிதம் அன்னையரின் தாய்ப்பாலில் ப்ளாஸ்டிக் இருப்பது உறுதியாகியுள்ளதாம். ப்ளாஸ்டிக் டப்பாவில் வரும் குளிர்பானங்கள், உணவுப் பொருட்கள், ஊட்டச்சத்து உணவுப் பொருட்களை உண்டதால் அவர்களது உடலில் பிளாஸ்டிக் கலந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் யூகித்திருக்கிறார்கள். பாலும் பாழாப் போச்சா!

dd

ந்தியாவில் சிலையைக் காணவில்லையா, அமெரிக்காவில் தேடு எனச் சொல்லுமளவுக்கு, இங்கே காணாமல் போகும் பல சிலைகள் அமெரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. பாஸ் போர்ட், விசா வாங்கி மனிதர்கள் அமெரிக்கா போக சிரமப்படுகையில், சிலைகள் எளிதாக அமெரிக்காவுக் குள் காலடி எடுத்துவைத்துவிடு கின்றன. திருவாரூர் மாவட்டம் ஆலத்தூர் வேணுகோபால சுவாமி கோவில் யோகநரசிம்மர், கணேசர் சிலைகள் 50 ஆண்டுகளுக்கு முன் திருடு போயிருந்தன. இந்நிலையில் இந்தச் சிலை கள் அமெரிக்காவின் கான்சாஸ் நகரிலுள்ள நெல்சன்-அட்சன் அருங்காட்சியகங்களில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்புப் போலீசார் கண்டறிந்துள்ளனர். இவை தவிர தமிழகத்தைச் சேர்ந்த இன்னும் நான்கு சிலைகளும் அமெரிக்காவில் இருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இவற்றை மீட்டு இந்தியா கொண்டு வருவதற்கான சட்டபூர்வ வழிமுறைகள் மேற்கொள் ளப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். காப்பானை விட கள்ளன் பெரிசு தான் போல!

-நாடோடி

nkn191022
இதையும் படியுங்கள்
Subscribe