ந்தோனேசியா கால்பந்து மைதான நெரிசலில் 147 பேர் பலியான விவகாரம் குறித்து, கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவருக்கும் இது கருப்பு தினமென பிஃபா கருத்துத் தெரிவித்துள்ளது. இந்தோனேசியா நாட்டின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மலாங் நகரத்தில், கஞ்ஜுரு மைதானத்தில் இரு உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பெர்செபயா அணி வெற்றி பெற, அரேமா அணி ரசிகர்கள் அதிருப்தியடைந்து விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மீது தண்ணீர் பாட்டில்களையும் பிற பொருட்களையும் வீசத்தொடங்கினர். மைதானத்துக்குள்ளும் நுழைந்து வன் முறையில் ஈடுபடத் தொடங்கினர். இதையடுத்து போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர். புகைசூழ்ந்த மைதானத்திலிருந்து ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற முயல, பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 147 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். விளையாட்டு வினை ஆகிடிச்சே!

d

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு, டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் ஹெச்.ஐ.வி. தொற்றால் ஏற்படும் எய்ட்ஸ் நோயைக் கண்டறிவதற்கான, நோயாளிகளே சோதனை செய்து அறியக்கூடிய உபகரணம் வரவிருப்பதாக தெரிவித்துள்ளது. பொதுவாக, தங்களுக்கு எய்ட்ஸ் இருப்பதாக சந்தேகப்படும் நபர்கள்கூட, இதனை மருத்துவரிடம் எப்படி தெரிவிப்பது, சோதனை செய்யும்போது தெரிந்தவர் கண்களில் பட்டுவிட்டால் என்னாவது என சோதனை செய்யாமலே காலம்கடத்துவர். இதனால் நோய் முற்றி கடைசிக் காலத்தில்தான் சிகிச்சைக்கு வந்து சேருவர். இந்த உபகரணத்தின் வருகை நல்ல தாக்கத்தை ஏற்படுத் தும் என மருத்துவ அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஆய்வின்போது இந்த உபகரணத்தைப் பயன் படுத்தியவர்களில் 95 சதவிகிதம் பேர், இது பயன்படுத்த எளிதாக இருக்கிறது என கருத்துத் தெரிவித் துள்ளனர். மேலும் இந்த சாதனத் தால், ஹெச்.ஐ.வி. தொற்று இருக் கிறதா… இல்லையா என இருபது நிமிடத்தில் கண்டறிந்துவிடலாம். சயின்ஸுக்கு சலாம்!

ந்தியாவிலேயே புலிகள் அதிக எண்ணிக்கையுள்ள மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. வன உயிரின வாரவிழாவை அக்டோபர் 2-ஆம் தேதி வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார். தமிழகத்தில் முதன்முறையாக 2006-ஆம் வருடம் புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் 67 புலிகள் இருந்ததாகக் கணக்கெடுக்கப்பட்டது. பின், சரணாலயங்கள் மூலம் அவை வசிப்பதற்கான சூழல்கள் மேம்படுத்தப்பட்டு நான்கு ஆண்டு களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. 2018-ஆம் ஆண்டின் கணக் கெடுப்பின்படி தமிழகத்தில் 264 புலிகள் காணப்படுகின்றன. புலிகள் உள்ளிட்ட உயிரினங்களைப் பாதுகாப்பதன் வழியாகவே வனப்பகுதிகளை மேம்படுத்த முடியுமென அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தைப் போல உத்திரப்பிரதேசத்தின் கோரக்பூரிலும் புலிகளைப் பாதுகாப்பதற்காக விழா நிகழ்வு நடைபெற்றது. அதில் புலிபோல வேடமணிந்து மாணவிகள் செல்ஃபி எடுத்தது பலரையும் கவர்ந்தது. மனுஷன்கிட்ட யிருந்து எதையெல்லாம் காப்பாத்த வேண்டியிருக்கு!

Advertisment

ர்நாடக -மகாராஷ்டிர எல்லையில் அமைந்திருக்கிறது வத்கோன் கிராமம். சுற்றுவட்டாரத்திலுள்ள கிராமத் தலைவர்கள் எல்லாம் இந்தக் கிராமத்தை வந்து பார்வை யிட்டுப் போகின்றனர். இந்தக் கிராமத்தில் அப்படியென்ன விசேஷம் என்கிறீர்களா?… ஒவ்வொரு நாளும் இரவு ஏழு மணியானதும் ஒரு சங்குச் சத்தம் எழும். இதைக் கேட்டதும் கிராமத்தில் இருப்பவர்கள் அவர்கள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாலும், செல்போன் நோண்டிக்கொண்டி ருந்தாலும் வேறென்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் அதை வைத்துவிட்டு வெளியே வந்துவிடவேண்டும். அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு கிராமத்தில் உள்ளவர்களிடம் பேசிப் பழகி நேரத்தைச் செலவிடவேண்டும். ஒன்பது மணிக்கு அடுத்த சங்கு ஒலித்ததும்தான் அவர்கள் தங்கள் வேலை களுக்குத் திரும்பவேண்டும். இந்தக் கிராமத் தலைவரான விஜய் மொகைத், “"நவீன சாதனங்களுக்கு அடிமையாகும் போக்கு வளர்ந்துவருகிறது. அது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதை மாற்றுவதற்காகவும், மக்களுக்கு மக்கள் பேசிப் பழகும் குணம் மாறாமல் இருப்பதற்காவும்தான் இது கட்டாயமாக நடைமுறைத்தப்படுகிறது''’ என்கிறார். கிராமத்துல செஞ்சுடலாம்... சிட்டியில?

dd

வ்வருடம் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் விஞ்ஞானி ஸ்வந்தே பாபோவுக்கு வழங்கப் பட்டுள்ளது. மனித பரிமாணத்தின்போது, குரங்குகளிலிருந்து தற்போதைய மனிதன் உருவானான். ஹோமோ சேப்பியன்ஸ் தவிர வேறுவகை மனிதர்களும் இந்த உலகத்தில் இருந்துள்ளனர். தற்போதைய மனிதன் ஹோமோ சேப்பியன்ஸ் என்றால், அதற்கும் முன்னதாக நியாண்டர்தால்கள், ஹோமினின்கள் என பல்வேறு வகை மனிதர்கள் இருந்துள்ளனர். அவர்கள் காலப் போக்கில் அழிந்தும் போயுள்ளனர். இதில் அழிந்துபோன நியாண்டர் தால்களின் மரபணுக்களை வரிசைப் படுத்தியும், அழிந்த இனத்துக்கும் தற்போதைய மனிதர்களுக்கும் ஜீன் பரிமாற்றம் நடத்துள்ளதையும், தற்போதைய மனிதர்களுக்கும் அழிந்துபோன மனித இனத்துக்குமான தொடர்பு குறித்த அரிய பல தகவல்களைக் கண்டறிந்ததற்காகவே இவருக்கு நோபல் வழங்கப்பட்டுள்ளது. பாபோவின் கண்டுபிடிப்பு மனித வரலாற்றின் மீது கூடுதல் வெளிச்சத்தை வீச வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளது. தாத்தாக்களைப் பற்றிய பேரனின் ஆராய்ச்சி!

-நாடோடி