மாநிலம் தேசம் சர்வதேசம்!

dd

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத் தைச் சேர்ந்தவர் ரக்சயா. 20 வயதான ரக்சயா மிஸ் தமிழ்நாடாகத் தேர்வாகியிருக்கிறார். இவரது தந்தை மனோகர் கட்டடத் தொழிலாளி. ரக்சயா கல்லூரிப் படிப்பை முடித்ததும், பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டு அழகுப் போட்டிகளிலும் ஆர்வம் காட்டிவந்தார்.

nn

இவ்வருடம் பிப்ரவரி மாதம் மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் வென்ற அவர், மாநில அளவிலான போட்டிக்குத் தயாராகி வந்தார். ஃபார்எவர் ஸ்டார் இந்தியா நிறுவனம் ஜெய்ப்பூரில் நடத்திய அழகுப் போட்டியில்தான் இவர் மிஸ் தமிழ்நாடாகத் தேர்வாகியிருக்கிறார். இவ்வருடத்தின் இறுதியில் இதே போட்டியின் தொடர்ச்சியாக, மிஸ் இந்தியா தேர்வு நடைபெறும். கிட்டத்தட்ட 750 பேர் பங்குபெறும் போட்டியில் வெல்ல, இப்போதிருந்தே ஆயத்தமாகி வருகிறார் ரக்சயா! என்ன விலை அழகே!

dd

டிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் செப்டம்பர் 26 அன்று பழங்குடியினர் குறித்த என்சைக்ளோபீடியா ஒன்றை வெளி யிட்டிருக்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத் தைச் சேர்ந்தவர் ரக்சயா. 20 வயதான ரக்சயா மிஸ் தமிழ்நாடாகத் தேர்வாகியிருக்கிறார். இவரது தந்தை மனோகர் கட்டடத் தொழிலாளி. ரக்சயா கல்லூரிப் படிப்பை முடித்ததும், பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டு அழகுப் போட்டிகளிலும் ஆர்வம் காட்டிவந்தார்.

nn

இவ்வருடம் பிப்ரவரி மாதம் மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் வென்ற அவர், மாநில அளவிலான போட்டிக்குத் தயாராகி வந்தார். ஃபார்எவர் ஸ்டார் இந்தியா நிறுவனம் ஜெய்ப்பூரில் நடத்திய அழகுப் போட்டியில்தான் இவர் மிஸ் தமிழ்நாடாகத் தேர்வாகியிருக்கிறார். இவ்வருடத்தின் இறுதியில் இதே போட்டியின் தொடர்ச்சியாக, மிஸ் இந்தியா தேர்வு நடைபெறும். கிட்டத்தட்ட 750 பேர் பங்குபெறும் போட்டியில் வெல்ல, இப்போதிருந்தே ஆயத்தமாகி வருகிறார் ரக்சயா! என்ன விலை அழகே!

dd

டிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் செப்டம்பர் 26 அன்று பழங்குடியினர் குறித்த என்சைக்ளோபீடியா ஒன்றை வெளி யிட்டிருக்கிறார். ஒடிசா மாநிலத்தில் 62 பழங்குடியின சமூகங்கள் வசித்து வருகின்றன. ஐந்து பாகங்கள் கொண்ட இந்த என்சைக்ளோ பீடியா, அட்டவணை மரபினர், அட்டவணை பழங்குடியினர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், ஒடிசா மாநில பழங்குடிகள் அருங்காட்சி யகத்தால் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது. 3800 பக்கங்களும் 418 ஆராய்ச்சிக் கட்டுரைகளும் கொண்ட இந்நூலில் இந்தியாவில் அழிவின் விளிம்பிலிருக்கும் 13 பழங்குடியினர் பற்றிய விவரங்களும் இடம்பெற்றுள்ளன. கிட்டத்தட்ட கடந்த அறுபது வருடங்களாகச் சேகரிக்கப்பட்ட தகவல்கள், ஒடிசாவின் பல்வேறு பழங்குடியின சமூகங்களின் கலாச்சாரம், பண்பாடு, பிரச்சினைகள் போன்றவை இந்த நூலில் இடம் பெற்றுள்ளனவாம். பதிவு பண்ணவேண்டிய விஷயம்தான்!

ரான், மயிரே போச்சுனு இருந்திருந்தால் இத்தனை பெரிய பிரச்சினை வந்திருக்காது. மாஷா அம்னி, தனது கூந்தலை மறைக்காமல் ஹிஜாப் அணிந்ததற்காக கைதுசெய்யப் பட்டார். அவர் ஈரான் ஒழுக்கக் காவலர்களின் கஸ்டடியில் இறந்துபோக, ஈரான் பெண்கள் மாஷாவுக்கு ஆதரவாக போராட் டங்களில் இறங்கினர். அலையலையாக பெண்கள் ஹிஜாப்பை எரித்தும், கூந்தலை வெட்டியும் எதிர்ப்பை வெளிக்காட்டினர். 1979 முதல் ஈரானில் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. பெண்களின் இந்த திடீர் புரட்சியை அரசு முரட்டுத்தன மாக ஒடுக்கப் புறப்பட்டதில் இதுவரை 76 போராட்டக்காரர்கள் பலியாகி யுள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஹதிஸ் நஜாபி என்பவர் தனது கூந்தலை மறைக்காது போராட்டத் தில் தைரியமாக கலந்துகொண்ட வீடியோ வைரலானது. இந்நிலையில் ஹதிஸ் 6 துப்பாக்கிக் குண்டு காயங் களுடன் கண்டெடுக்கப்பட்டிருக் கிறார். ஈரான் அரசு அவர் இதய அடைப்பில் இறந்துபோனதாகச் சொல்கிறது. இதயம் அடைச் சிருக்கது அரசுக்கா... போராட் டக்காரர்களுக்கா...!

dd

கிரக நிலை சரியில்லை,…எல்லா கிரகங்களும் மோசமாகச் சஞ்சரிக்கிறது. சிறை செல்வதற்கான அனைத்துச் சூழலும் இருக்கிறது என ஜோசியர் சொல்கிறாரா… ஒன்றும் கவலையில்லை. உத்தரகாண்டின் ஹால்த்வானி ஜெயில் நிர்வாகம் உங்கள் கவலையைப் போக்க அருமையான யோசனை வைத்திருக்கிறது. ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்க்கிழமையும், 500 ரூபாய் கட்டணம் வாங்கிக்கொண்டு ஜாதகக் கட்டம் சரியில்லாத நபர்களை சிறைக்குள் அனுமதிக்கிறார்கள். இவர்களுக்கு சிறைச் சீருடை, உணவு, சிறைவாசம் எல்லாம் உண்டு. ஒரே நாள் ஜெயிலில் இருந்துவிட்டு, ஜாதகம் சொல்லும் பலனையும் அனுபவித்துவிடலாம். அசல் சிறைத்தண்டனையில் இருந்தும் தப்பித்துவிடலாம். சிறையில், கைவிடப்பட்ட பகுதியில் இருக்கும் ஒரு கட்டடத்தையே இப்படி ஜாதக நம்பிக்கையுள்ளவர்களை அடைத்து வைக்கப் பயன்படுத்துகிறார்களாம். இதற்கு மூத்த அதிகாரிகளின் அனுமதியும் இருக்காம். இரண்டு பொண்டாட்டி தோஷமிருந்தா வாழை மரத்துக்கு தாலிகட்டி வெட்டினவங்கதான நாம! நவகிரகங்களுக்கே அல்வாவா!

dd

நீர்நிலை ஆக்கிரமிப்பு, அரசு நிலம் ஆக்கிரமிப்பு, காக்கப்படும் வனப்பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகள் என பல்வேறு பகுதிகளில் கட்டப் பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 40,000 வீடுகள் எப்போது வேண்டுமானா லும் அகற்றப்படும் ஆபத்து இருப்ப தாக அரசுசாரா அமைப்பொன்று அறிக்கை அளித்துள்ளது. தமி ழகத்தைத் தவிர்த்து உத்தரப் பிரதேசம், டெல்லி, ஆந்திராவிலும் இப்படி அகற்றப்படவேண்டிய வீடுகள் அதிக முள்ளதாக இந்தக் கணக்கெடுப்பு தெரிவிக் கிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில்தான் இப்படி அகற்றப்படவேண்டிய வீடுகள் அதிகமுள்ளதாம். கூவம், அடையாறு நதிகளை பழைய நிலைக்குக் கொண்டுவரும் திட்டம் செயலுக்கு வருமானால், தோராயமாக 20,000 குடும்பங்கள் காலிசெய்ய வேண்டி யிருக்கும் எனவும், அடுத்தபடியாக நீர் நிலை ஆக்கிரமிப்புக்காக கோவையில் 10,000 குடும்பங்களை காலிசெய்ய வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை. வலுக்கட்டாயமாக அகற்றப்படும் குடும்பங் களுக்கு போதுமான மறு குடியமர்த்தல் மற்றும் மறுவாழ்வு அம்சங்களை மாநில அரசுகள் செயல்படுத்தவேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது. அடப் பாவமே!

-நாடோடி

nkn051022
இதையும் படியுங்கள்
Subscribe