டிகைகளுக்கும் அரசியல்வாதி களுக்கும் கோவில் கட்டுவதில் இந்தியா பெயர் பெற்றது. கடந்த வருடம் புனேயில் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கோவில் கட்டப் பட்டது.

dd

தற்போது அயோத்தியா மாவட்டம் பாரத்குண்ட் அருகே புர்வா கிராமத்தில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தை, ராமரின் அவதாரமாகச் சித்தரித்துக் கோவில் கட்டியிருக்கிறார் கள். கோவிலில், கையில் வில்லும் அம்புமாக ராமரின் தோற்றத்தில் சிலையாக நிற்கிறார் ஆதித்யநாத். காலை மாலை இருவேளை சிறப்பு பூஜையும் பிரசாதமும் இந்தக் கோவிலில் வழங்கப்படுகிறது. இந்தக் கோவிலை பிரபாகர் மௌர்யா எனும் ராமபக்தர், எட்டரை லட்ச ரூபாய் செலவில் கட்டியிருக்கிறார். மௌர்யாவுக்கு நிரந்தர வருமானம் இல்லாத நிலையில், கோவில் கட்ட எங்கிருந்து பணம் வந்தது என அகிலேஷ், டுவிட்டரில் பூடகமாக கேள்வியெழுப்பியிருக்கிறார்! அடுத்த கோவில் அமித்ஷாவுக்குத்தான் போல!

ந்தியாவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படுவது அபூர்வமாகவே நடக்கும். மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யாகூப்மேனன் 2015-ல் தூக்கிலிடப்பட்டதே கடைசித் தூக்குத் தண்டனை. அதன்பிறகு நம் நாட்டில் யாரும் தூக்குத் தண்டனையால் மரணமடைய வில்லை. ஆனால் கீழ்நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகின்றன. இவை உயர், உச்ச நீதிமன்றங்களை எட்டும்போது தண்டனைக் குறைப்பு அடைந்துவிடும். அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்குத் தண்டனை விதிக்கப்படவேண்டும் என்பது மரபு. குஜராத்தில் கடந்த 15 வருடங்களில் 46 பேருக்கு மட்டுமே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, இவ்வாண் டில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் மாநில விசாரணை நீதிமன்றங்கள் 50 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளன. முக்கியமாக, அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 38 பேருக்கு தூக்குவிதித்தததே இதற்குக் காரணம். கேட்கும்போதே "திக்'னு இருக்குதே!

Advertisment

dd

காவி வேட்டி கட்டி தொப்பியொன்றை மாட்டிக்கொண்டு வங்கிக்குப் போய் கல்விக் கடன் கேட்டால் கொடுப்பானா…? திருவாரூர் மாவட்டம் மூலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை. வெளிநாட்டில் வேலைபார்த்த இவர் பத்தாண்டுகளாக காவி உடை அணிய ஆரம்பித்தார். சாமியாரெல்லாம் இல்லை சம்சாரிதான். இரண்டு மகள் களும் உண்டு. மூத்த மகள் சீனாவில் மருத் துவப் படிப்பு படித்துவருகிறார். கல்விக் கட்டணம் கட்ட காசு தேவை. செப்டம்பர் 19-ஆம் தேதி வங்கிக்குச் சென்ற திருமலை, நேராக மேலாளரைப் போய்ப் பார்த்து கல்விக் கடன் கேட்டிருக்கிறார். கடனுக்கு ஜாமீன் காட்டவேண்டுமே, என்ன வைத்திருக்கிறீர் கள் என வங்கி மேலாளர் முத்துசாமி கேட்க, தான் கொண்டுவந்திருந்த துப்பாக்கியை எடுத்து மேலாளர் முகத்துக்கு நேராக நீட்ட, நடுங்கிப் போய்விட்டார் மேலாளர். இதற்கு நடுவில் வங்கிக்குள்ளேயே புகையும் பிடித்திருக்கிறார். வங்கி மேலாளர் காவல் நிலையத்தில் புகார் செய்ய, திருமலையிடமிருந்து துப்பாக்கியைக் கைப்பற்றி விசாரணை செய்துவருகின்றனர் போலீசார். காவின்னாலே டேஞ்சர்தான் போல!

Advertisment

சர்ச்சைகளை உருவாக்குவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கும் வாய்ச் சவடால் வீரர்கள் பலர் வாட்ஸ் அப்பில் இருக்கிறார்கள். சமீபத்தில் வாட்ஸ் அப்பில் தமிழகத்தின் மிகப்பெரும் பால் நிறுவனமான ஆவினின் வெண்ணெய் தயாரிப்பின் அட்டை யில் ஹலால் சான்றிதழ் இடம்பெற்றிருப்பதைக் குறிப்பிட்டு, தி.மு.க. ஒரு குறிப்பிட்ட மதத் தினருக்கு ஆதரவாக இருப்பதாக விமர்சித்து வாட்ஸ் அப்புகள் பெருமளவில் பரவ ஆரம்பித்தது. தவிரவும் இந்துக்கள் ஆவின் தயாரிப்புகளை வாங்கக்கூடாது என்ற விஷமப் பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டது. இதையடுத்து ஆவின் தரப்பிலிருந்து இந்த பிரச்சாரத்தை நீக்கவும், இதைப் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக் கவும் கோரிக்கை எழுந்தது. இந்த நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க பொதுமக்கள் தெரிந்துகொள் வதற்காக ஆவின் எம்.டி. பொன்னுச் சாமி, “"117 நாடு களுக்கு ஏற்றுமதி செய்ய இந்தச் சான்றிதழ் அவசியம். தேவையற்ற காலதாமதம் இதனால் தவிர்க்கப்படும். இத்தகைய சான்றிதழ் சில ஆண்டுகளாவே இடம்பெற்று வருகிறது''’ என விளக்கமளித்துள்ளார். எந்த வெண்ணெய் இந்த வேலையைப் பார்த்தது?

dd

ரானில் ஹிஜாப் விவகாரம் சூடுபிடித்திருக்கிறது. ஈரானில் 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணியவேண்டியது கட்டாயம். சமீபத்தில் ஈரானைச் சேர்ந்த மாசா அமினி என்ற பெண் தலைமுடியை முழுமையாக மறைக்காத விதத்தில் ஹிஜாப் அணிந்தததற்காக காவலர்களால் கைதுசெய்யப்பட்டார். ஒழுக்க கண்காணிப்பு காவலர்களின் கஸ்டடியில் இருந்த அவர், திடீரென உடல்நலக் குறைவால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் துன்புறுத்தல் காரணமாகவே மரணமடைந்தார் என ஈரான் பெண்கள் நம்புகின்றனர். இதை யடுத்து கூந்தலை வெட்டி எரித்தும், ஹிஜாப்பை நெருப்பி லிட்டும் தங்கள் எதிர்ப்பை வெளிப் படுத்தி வரு கின்றனர். இதுதொடர் பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. போராட் டத்தில் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். கலாச்சார காவலர்கள்னாலே சர்ச்சை தான் போல!

-நாடோடி