ந்தப் புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் ஆண் ஜார்ஜ், அர்ஜென்டி னாவைச் சேர்ந்தவர். 37 வயது. ஜார்ஜின் அம்மா வுக்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தாலமைடு மருந்து கொடுக்கப்பட்ட தன் விளைவுதான் ஜார்ஜின் இந்தக் குறைபாடு. இதுதவிர பிட்ரிஜியம் எனும் பார்வைக் குறைபாடும் உண்டு. இதனைக் கண்டுகொள்ளாமல் விட்டால் கண் பார்வையை முழுமையாக இழப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. இத்தனைக்கும் நடுவில் தான் இவர் தனது மேல் நிலை வகுப்புக் கல்வியை முடித் திருக்கிறார். எட்டு வருடங் களுக்கு முன் வெரோனிகாவை மணமுடித்தார்.

dd

வெரோனிகா வுக்கு தண்டுவடப் பிரச்சனை உண்டு. அதை நிமிர்த்துவதற்கு பல அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவருக்கு முறையான சிகிச்சையும் தொடர் கண்காணிப்பும் தேவை. வாழ்க்கை எத்தனை பார மாய்தான் இருந்தா லென்ன சுமப்போம் என்றபடி இந்தத் தம்பதி ஏஞ்சலீஸ் எனும் பெண்ணைத் தத்து வளர்க்கத் துணிந்திருக் கிறார்கள். வாழ்க்கையின் விசை என்ற பெயரில் ஜார்ஜ் குடும்பத்தை கான்ஸ்டான்சா போர்ட்னாய் எடுத்துத் தள்ளிய பல்வேறு புகைப்படங்களில் ஒன்று இது. நம்பிக்கைதானே வாழ்க்கை!

மிழ்நாடும் கர்நாடகமும் இணைந்து தென்பெண்ணை நதியைப் பாதுகாக்க வேண்டுமென தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் தென்பெண் ணை ஆறு தமிழகத்தில் நுழையும் கொடியாளம் அணைக்கட்டுப் பகுதியில் நீர் நுரைத்தபடி வெளி யேறியது. இந்த அளவுக் கதிகமான நுரை, பலரையும் கவலைக்குள் ளாக்கியது. கெலவரப்பள்ளி விவசாயிகள் இந்த நீரை நம்பித்தான் விவசாயம் செய்கிறார்கள். இந்த விவகாரத்தை தானே முன்வந்து எடுத்துக் கொண்ட பசுமைத் தீர்ப் பாயம், தென்பெண்ணை ஆற்று நீரை பல இடங் களில் மாதிரி எடுத்துச் சோதித்தது. அந்த ஆய்வில் தென்பெண்ணை நதி மாசுபட பிரதான காரணம், பெங்களூரு நகரின் சாக்கடை நீரை சற்றும் சுத்திகரிக்காமலோ, அரை குறையாக சுத்திகரிக்கப் பட்டோ ஏரி, குளங்களில் விடுகிறது பெங்களூரு. மழை வெள்ளத்தின்போது இந்த நீர் ஆற்றில் கலக்கிறது. இதுவே தென் பெண்ணை மாசுபடக் காரணமென எச்சரித்துள் ளது. நதியைப் பாதுகாக்க இரு மாநிலங்களும் செய்யவேண்டிய 17 தீர்வுகளை பசுமைத் தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியுள்ளது. உருப்படியா ஏதாச்சும் பண்ணுங்க முதல்வர்களே!

Advertisment

dd

திருடர்களை நாம் வெறும் திருடர்கள் என்று நினைக்கிறோம். ஆனால் திருடர்கள் கூர்மையான புத்தியுடையவர்கள். சாமர்த் தியசாலிகள். தங்கள் புத்திக்கூர்மையை சட்டப் பூர்வமற்ற முறையில் பயன்படுத்தக்கூடியவர்கள் என்பதுதான் அவர்களிடம் பிரச்சனை. சமீபத்தில் பிரிட்டனின் தலைநகரான லண்டனில் திருடப்பட்ட ஒரு கார் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதி லென்ன ஆச்சரியம் என்கிறீர்களா? திருடு போனது லண்டனில். கண்டுபிடிக்கப்பட்டது பாகிஸ்தானின் கராச்சியில். ரூ.6 கோடிக்கும் அதிக மான விலையுள்ள பென்ட்லி முல்சானே காரை நோட்டம்விட்டு கடத்தி விட்டனர். விசாரணையில் அது பாகிஸ்தானுக்குச் சென்றது தெரியவர, கராச்சி ராணுவக் குடி யிருப்பைச் சேர்ந்த ஜமீல் ஷபி என்பவரின் வீட்டுமுன் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், நவீத் பில்வானி தனக்கு காரை விற்றதாகத் தெரிவித்துள் ளார். இவர்களை வைத்து கார் கடத்தல் கும்பல் பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளது பாகிஸ்தான் காவல்துறை. இதுக் கெல்லாம் அசந்துடு வோமா!

Advertisment

dd

2012-ஆம் ஆண்டு இந்தியத் தலைநகர் டெல்லியில், தன் நண்ப ருடன் திரையரங்கம் சென்று திரும்பிய கல்லூரிப் பெண், பாலியல் அத்துமீறல் நிகழ்வில் கொடூரமாக உயிரிழந்தார். அவரது நினைவாக மத்திய அரசு நிர்பயா என்ற பெயரில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கிவருகிறது. இந்த நிதி பெண்களின் மேம்பாடுக்காகவும் பாது காப்புக்காகவும் பயன்படுத் தப்படவேண்டும். தமிழ் நாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிர்பயா நிதியில் கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் 33.57 கோடி ஒதுக்கி 5,594 தெருவிளக்குகளை நிர் மாணிக்கத் திட்டமிட்டுள் ளது. இரவு நேரங்களில் வேலைக்காகவும் பிற தேவைகளுக்காகவும் சென்று வரும் பெண் களுக்கு அச்சத்தை ஏற் படுத்தும் விஷயங்களில் ஒன்று இருள். இந்த விளக்குகள் பெண்களுக்கு தைரியத்தை ஏற்படுத்துவ தோடு, குற்ற நடவடிக்கை யில் ஈடுபட நினைப்பவர் களுக்கு அதைரியத்தை ஏற்படுத்தும். இவற்றில் 1,104 விளக்குகள் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பெருங்குடி, சோளிங்கநல் லூர் போன்ற பகுதிகளில் நிறுவப்பட உள்ளன. காமுகர் களின் மன இருள்வரை இந்த ஒளி எட்டுமா!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதி யைச் சேர்ந்த பார்த்திபனை போலீசார் கைதுசெய் துள்ளனர். எதற்கு என்கிறீர்களா? தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் புலிக்குட்டி விற்பனைக்குக் கிடைக்கும். விலை ரூ.25 லட்சம் என விளம்பரம் செய்திருக்கிறார். இதனைக் கவனித்த சென்னை வனத்துறை, வேலூர் வனத்துறையை அழைத்து விவரம் சொன் னது. வேலூர் வனத்துறை அதிகாரிகள் சார்பனாமேடு பார்த்திபனைக் கைது செய்து விசாரணை செய் தனர். அதில் சென்னை யைச் சேர்ந்த தமிழ் என்பவ ருக்கு தொடர்பு இருப் பதைக் கண்டறிந்துள்ளனர். தமிழ், பெட் ஷாப் வைத் துள்ளார். எங்கு விலங்கு கண்காட்சி நடந்தாலும் கலந்துகொள்வார். வளர்ப்பு விலங்குகள், பறவைகளை விற்பனை செய்பவர். இதனால் சந்தேகமடைந்த வனத்துறை இருவரையும் கைதுசெய்து விசாரணை யைத் தீவிரப்படுத்தி யுள்ளது. கொட்டை யெடுத்த புளியைச் சொன்னோம்னு சமாளிப் பாங்களோ!

-நாடோடி