பா.ஜ.க. ஆட்சியிலில்லாத மாநிலங்களில் ஆட்சிசெய்யும் முதல்வர்களுக்கு, பல்வேறு நெருக்கடிகள் தரப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் செய்து வருகின்றனர். சமீபத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன், கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கலாம் என பா.ஜ.க. ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதற்கு சோரன் மறுத்ததாகவும் பேச்சு எழுந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் -ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி அமைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சுரங்க ஏலங்களைப் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இருந்தாலும் பொறுக்காத பா.ஜ.க.வினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்தது. பா.ஜ.க.வின் புகாரை ஏற்று சுறுசுறுப்பான தேர்தல் ஆணையம், சோரனின் எம்.எல்.ஏ. பதவியை தகுதியிழப்பு செய்துள்ளது. விரைவில் அங்கு ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத
பா.ஜ.க. ஆட்சியிலில்லாத மாநிலங்களில் ஆட்சிசெய்யும் முதல்வர்களுக்கு, பல்வேறு நெருக்கடிகள் தரப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் செய்து வருகின்றனர். சமீபத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன், கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கலாம் என பா.ஜ.க. ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதற்கு சோரன் மறுத்ததாகவும் பேச்சு எழுந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் -ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி அமைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சுரங்க ஏலங்களைப் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இருந்தாலும் பொறுக்காத பா.ஜ.க.வினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்தது. பா.ஜ.க.வின் புகாரை ஏற்று சுறுசுறுப்பான தேர்தல் ஆணையம், சோரனின் எம்.எல்.ஏ. பதவியை தகுதியிழப்பு செய்துள்ளது. விரைவில் அங்கு ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒரே நாடு ஒரே கட்சி யோசனையோ!
ரோமானியாவின் புச்சா ரெஸ்ட்டில் நடைபெற்ற 21 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான பிரிவில் வென்று அசத்தியிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த அனுபமா ராமச்சந்திரன். வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் அனுபமா, இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் பஞ்சாயோ சன்னாவிடம் தோற்றதன் மூலம் தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டார். இதே போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த கீர்த்தனா பாண்டியன் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அனுபமாவை பயிற்றுவித்த சலீம் ஸ்னூக் கர் அகடமி இந்த வெற்றி யால் மகிழ்ச்சியடைந் திருக்கிறது. 16 வயதுக் குட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் 2017-ல் தங்கம் வென்ற சாதனையும் அனுபமாவின் வெற்றிமகுடத்தில் உண்டு. ஸ்னூக்கர் போன்ற போட்டிகளில் பங்கேற்க, மத்திய மாநில அரசுகள் அளிக்கும் உதவி போது மானதாக இல்லை. அப்படி கிடைக்கும் பட்சத்தில், இன்னும் பல பெண்கள் ஸ்னூக்கர் விளையாட முன்வருவார்கள் என்றி ருக்கிறார் அனுபமா. அசத்தல் அனுபமா!
பொன்முட்டையிடும் வாத்தானாலும் வயிறை அறுத்து ஆதாயம் பார்க்க நினைக்கக்கூடாது. சுங்கச் சாவடிகளை நிர்வகிப்பவர் களிடம் யார் போய் இதைச் சொல்வது? தமிழகத்தில் 50 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் அவற்றில் 28 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் மாதம் முதல் கட்டணம் உயர வாய்ப் புள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. ஏற் கெனவே சுங்கச்சாவடிகளில் கட்ட ணம் வசூலிக்க நேரம் விரயாமாவதால், பாஸ்ட் டேக் முறை கட்டாயமாக்கப்பட்டு, நாட்டின் 90 சதவிகித சுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறையே கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள ஐந்து நுழை வாயில்களில் ஒன்றில் மட்டுமே கட்டணத்தை பணமாகச் செலுத்து வோருக்கு ஒதுக்கப்பட்டுள் ளது. 28 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வென்றால், மீதமுள்ள 22 சாவடிகளில் உயராதா என்று கேட்பவர் களுக்கு, அது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படுமாம். பிடுங்கிச் சிவந்த கரங்களா இருக்கே!
டிசம்பர் 2, 1984-ஆம் வருடத்தின் இரவை போபால்வாசிகள் அத்தனை லேசில் மறக்கமுடியாது. அன்றுதான் அமெரிக்க உர நிறுவனமான யூனியன் கார்பைடு நிறுவனத்தில் விஷவாயு கசிந்து மத்திய பிரதேசத்தையே நடுங்க வைத்தது. உலகத்தின் மிகமோசமான விபத்துகளில் ஒன்றாக கருதப்படும் இவ்விபத்தில் 8000 பேர் ஒரே வாரத்தில் உயிரிழந் தனர். மெல்ல மெல்ல பின் வந்த மாதங்களில் 8000 பேர் உயிரிழந்தனர். 8 லட்சத் துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை, அதிகாரிகள் குறைந்த எண்ணிக்கையில் பதிவுசெய்ததால், ஆயிரக் கணக்கான பேர் இன்றும் நிவாரணம் கேட்டுப் போராடிவருகிறார்கள். இது ஆறாத ரணம்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தன் புதிய நாவல் குறித்து வாசகர்களுடன் உரையாடல் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட சல்மான் ருஷ்டி, ஹடி மட்டார் எனும் இஸ்லாமிய நபரால் கொடூரமாகத் தாக்கப்பட் டார். சாத்தானின் கவிதை கள் என்ற அவரது நாவல், நபியை இழிவுபடுத்துவதாகக் கூறி அவரது மீது "பத்வா' விதிக்கப்பட்டது. பத்தாண்டு களுக்கும் மேலாக தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர், அமெரிக்காவில் கொடூரமாகத் தாக்கப் பட்டதற்கு உலகமெங்கும் இருந்து கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. பாகிஸ் தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்கூட இந்தத் தாக்குதலைக் கண்டித்திருந் தார். ஆனால், இந்தியத் தரப்பிலிருந்து இரண்டு வார காலமாக ஆழ்ந்த மௌனம் நிலவிய நிலையில், வெளி யுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, இந்தியாவின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். சாத்தானின் கவிதைகள் நாவல் இந்தியாவில் அனு மதிக்கப்பட்டபோது, இந்தியா வில் எழுந்த எதிர்ப்பை மனதில்கொண்டே, தற்போது கண்டனத்துக்கும் தாமதமான தாக விமர்சனங்கள் எழுந் துள்ளன. கண்டனத்துக்குக் கூட யோசிக்க வேண்டி யிருக்கு!
-நாடோடி