பீகாரில் ஆசிரியர் பணி நியமனம் தாமதமாவதாகக் கூறி நடைபெற்ற போராட்டத்தில், இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், ஆசிரியர் பணி நியமனம் தாமதமாவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை கலைந்துசெல்லும்படி எச்சரித்த காவல்துறை, போகாதவர்கள் மீது தடியடி நடத்தியது.
அப்போது போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞரொருவர், தேசியக்கொடியை ஏந்தியபடி சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார். இதனால் ஆத்திரமடைந்த பாட்னா கூடுதல் மாவட்ட கலெக்டர் கே.கே.சிங் போலீஸிடமிருந்து லத்தியை வாங்கி அந்த இளைஞரை கொடூரமாகத் தாக்கத் தொடங்கினார். இது வீடியாவாக வைரலான நிலையில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக துணைமுதல்வர் தேஜஸ்வி யாதவ் உறுதியளித்துள்ளார். மாவட்ட ஆட்சியரா? குண்டரா?
1.22 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது. சமீபகாலமாக தொடர் மழை காரணமாக பெரும்பாலான அணைகள் நிரம்பிக் காணப்படுவதால், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயத்திற்கு முறையாகத் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாக குறுவை, சம்பா சாகு படிகள் நல்லமுறையில் நடைபெற்று வருகின்றன. 2001-ஆம் ஆண்டு 20,80,010 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு 1,11,60,711 மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. அதன்பிறகு 20 வருடங்கள் கழித்து 22,05,470 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு 1,22,22,460 மெட்ரிக் டன் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாம். நெற்களஞ்சியத்துக்கு மட்டுமில்லாம தமிழகத்துக்கே மகிழ்ச்சியான செய்திதான். சந்தோஷ விளைச்சலும் அதிகம்னு சொல்லுங்க!
தென்னை மரத்துல தேள் கொட்டுனா பனை மரத்துல நெரி கட்டுமா? கட்டும். உக்ரைன்- ரஷ்யா போர் விவகாரத்தால் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு, விலையேற்றம் கண்டுள்ளன. அவற்றில் பங்களாதேஷும் அடக்கம். பங்களாதேஷில் 50 சதவிகிதம் விலை அதிகரித்து, தாறுமாறான விலையில் பெட்ரோல், டீசல் விற்பனையாகிறது. இங்கே பல இடங்களில் டீசலில் இயங்கும் சிறிய மின்னுற்பத்தி நிலையங்கள் உண்டு. தற்போதைய விலையேற்றத்தால் இவை மூடப்பட்டுள்ளன. இதனால் மின்னுற்பத்தி சரிந்துள்ளது. இதைச் சரிக்கட்ட பள்ளிக்கூடங்களுக்கு கூடுதலாக ஒருநாள் விடுமுறை விடப்படுகிறது. தவிரவும் அலுவலகங்கள், வங்கிகளின் வேலைநேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாம். மின் வெட்டுக்கு எதிராக, மக்கள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளனராம். இலங்கைக்கு அடுத்தபடியாக, உலக நிதியத்திடம் கடன் கேட்டு நிற்கும் பங்களாதேஷ், இப்போது இந்த எரிபொருள் விலை உயர்வால் கூடுதல் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. மக்கள் போராட்டம் அதிபரோட பவரை கட் பண்ணிடக்கூடாதுல்ல!
கொசுக்களை தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய முடியுமா? முடியும் என்கிறார் பில்கேட்ஸ். சரி, எதற்கு கொசுக்களை உற்பத்தி செய்யவேண்டும்? கொலம்பியா நாட்டின் மெடலினில் ஒரு தொழிற்சாலை இருக்கிறது. இங்கு விஞ்ஞானிகள் வாரத்துக்கு 3 கோடி கொசுக்களை உற்பத்தி செய்கின்றனர். இந்த கொசுக்களில் ஒரு சிறப்பு உண்டு. இவை ஓல்பாசியா என்ற பாக்டீரியாவை உற்பத்தி செய்ய வல்லவை. இந்தக் கொசுக்கள் காடுகளில் விடப்படும். இவை டெங்கு, சிக்கன்குன்யா, ஜிகா வைர ஸைப் பரப்பும் கொசுக்களு டன் இணைந்து, நோய் களைப் பரப்பும் கொசுக் களின் வீரியத்தைக் குறைக் கும் வேலைகளைச் செய் கிறது. இந்தத் திட்டம் பிரேசில், இந்தோனேஷியா, மெக்சிகோ, வியட்நாம், இலங்கை, ஆஸ்திரேலியா நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாம். இந்த கொசு உற்பத்தி தொடங்கியது முதல் டெங்கு பாதிப்பு 89% குறைந்துள்ளதாக, பில்கேட்ஸ் சொல் கிறார். நல்லா இருக்குங்க சார் உங்க யோசனை!
இந்த புகைப்படத்தை எடுத்தவர் போட்டோ ஜர்னலிஸ்ட்டும், டாக்குமெண்ட்ரி புகைப்பட நிபுணருமான அனின்டிட்டோ முகர்ஜி. 2020, கோவிட் தொற்றின்போது டெல்லியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்று. தடுப் பூசி கண்டறியப்படாத நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்ல, மருத்துவம் அளிக்க வேண்டிய மருத்துவர்கள் மட்டுமல்லாது, ஆம்புலன்ஸ் டிரைவர்கள், இறுதிச் சடங்கு செய்யவேண்டியவர்கள் அனைவருமே பாதுகாப்பு கவச உடையுடன் நடமாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. பிண ஊர்தி, எரியூட்டுமிடம், புதைக்குமிடமென, முதல்முறையாய் பிணங்களும் வரி சையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. போட்டோகிராபி 4 ஹ்யூமனிட்டி புகைப்படப் போட்டியில், (2020) "தி லாஸ்ட் ரைட்ஸ்' என்னும் தலைப்பில் இறுதிச்சுற்றுக்கு வந்த புகைப் படங்களில் ஒன்றாகத் தேர்வுபெற்றது. தீவிரம் மற்றும் நேர்த்தி காரணமாக, ஐ.நா. அமைப்பால் உலகளவில் விர்ச் சுவல் கண்காட்சியாகவும் வைக்கப்பட்டது இந்த புகைப் படம். தொற்று பயம் காரணமாக இறந்த உடல் எத்தனை ஜாக்கிரதையாகக் கையாளப்படுகிறது என பாருங்கள்! மெமரி ஆப் கொரோனா!
-நாடோடி