மெரிக்காவின் நியூயார்க் நகரின் தெற்கு ரிச்மண்ட் ஹில் பகுதியிலுள்ள ஹிந்து கோயிலுக்கு எதிரே மகாத்மா காந்தி சிலை ஒன்று அமைந்துள்ளது. சமீபத்தில் அந்தச் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து அதனைச் சரிசெய்து நிறுவப்பட்ட நிலையில் அந்தச் சிலை ஆகஸ்ட் 16-ஆம் தேதி மீண்டும் சேதப்படுத்தப் பட்டுள்ளது. 4000 டாலர்கள் மதிப்புள்ள இந்தச் சிலையைச் சேதப்படுத்தியவர்கள், கோயிலுக்கு அருகிலும் சற்று தள்ளியும் நாய் என்றும், காந்தி நாய் என்றும் ஸ்ப்ரே செய்துள்ளனர்.

dd

சி.சி.டி.வி. காட்சியில் சிலையைச் சேதப்படுத்தும் 6 நபர்கள் பதிவாகியிருந்ததன் அடிப்படையில் அமெரிக்க போலீஸார் அவர்களைக் அடையாளம் கண்டு கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளனர். தென்னாப்பிரிக்கா சென்றபோது நிறத்தின் அடிப்படையில் காந்தி இழிவுபடுத்தப்பட்டார். சில குறிப்பிட்ட பிரிவினரின் நம்பிக்கைக்கு எதிராகப் பேசி செயல்பட்டதற்காக, சுதந்திர இந்தியாவில் சுட்டுக்கொல்லப்பட்டார். இறந்தபின்னும், அவர் பேசிய கருத்து களுக்காக அயல்நாடு ஒன்றில் நொறுக்கி வீழ்த்தப்பட்டிருக்கிறார். இம்சைக்கு ஆளாகும் அஹிம்சை!

Advertisment

த்தியபிரதேச மாநிலம் ஓடபூர்வா எனும் கிராமத்தில் 17 வயதுப் பெண் உடல் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப் பட்டது. அவர் யாரென அடையாளம் காணப்பட்டு, அந்தப் பெண்ணின் உறவினர்களிடம் யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என விசாரித்தது போலீஸ். உறவினர்கள் 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தனர். மூவரையும் கைதுசெய்து விசாரித்த போலீஸ், உரிய ஆதாரங்கள் இல்லையென அவர்களை விடுவித்தது. வழக்கு மேற்கொண்டு முன்னேற்றம் காணாததால் துணை ஆய்வாளரான அனில் ஷர்மா, உள்ளூர் சாமியார் ஒருவரைத் தஞ்சமடைந்தார். அந்தப் பெண்ணைக் கொலை செய்தது யாரெனக் கேட்க, சாமியாரும் அருள்வாக்கு சொல்லி, சில பேரை அடையாளம் காட்டியிருக்கிறார். ஆனால் துணை ஆய்வாளருக்கு வேண்டாத யாரோ, அருள்வாக்கு கேட்பதை வீடியோவாகப் பதிவுசெய்து வைரலாக்கிவிட்டார்கள். இதனால் கோபமான உயரதிகாரிகள் அருள்வாக்கு கேட்ட காவலர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார்கள். கொலையாளியைப் பிடிக்க குறி கேட்டா விளங்குமா!

ன்னா மரினை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பின்லாந்து நாட்டின் பிரதமர். 2019-ல் இவர் பிரதமரானபோது, உலகின் இளம்வயது பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார். அவர்தான் இப்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டில் பார்ட்டி கொண்டாடினார். பார்ட்டியில் மது இல்லாமல் இருக்குமா? மது சாப்பிட்ட பின் நடனமாடாமல் முடியுமா... அதை யாரோ வீடியோவாக எடுத்து வெளியிட, எதிர்க்கட்சிகள் பிலுபிலுவென்று பிடித்துக்கொண் டன. "குடிமக்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்கவேண்டிய பிரதமரே இப்படி நடந்துகொள்வதா? சன்னா வுக்கு போதைப்பொருள் சோதனை நடத்தவேண்டும்'' என விமர்சித் துள்ளன. பதிலுக்கு சன்னாவும், "நான் எந்தத் தவறும் செய்யவில்லை. போதைப் பொருள் சோதனைக்குத் தயார்'' என்றுள்ளார். குடி பிரதமர் பதவிக்கும் கேடு!

விவசாய அமைப்புகளின் தலைவரான ராகேஷ் திகைத்தை டெல்லி போலீஸ் கைதுசெய்துள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு எதிராக டெல்லி ஜந்தர்மந்தரில் விவசாய அமைப்புகள் சார்பாக போராட்டம் நடைபெறும் என ராகேஷ் அறிவித்திருந்தார். இந்நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக கிளம்பிய ராகேஷை காஸிப்பூர் எல்லையில் வைத்து டெல்லி போலீஸ் கைதுசெய்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி மத்திய அரசை நிலைகுலைய வைத்ததை காவல்துறை மறந்திருக்காது. இன்னொரு முறை அப்படியொரு இக்கட் டான சூழல் ஏற்படக்கூடாதென, தலைநகரின் சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்க முயல்வதாகக் கூறி ராகேஷ் திகைத்தை போலீஸ் கைது செய்துள்ளது. இருந்தும் டெல்-யில் போராட்டம் நடத்தியுள்ளனர். பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல!

Advertisment

-நாடோடி

d

ந்த புகைப்படம், புகைப்படக் கலைஞர் பாத்திமா சபைரால் எடுக்கப்பட்டது. பாலஸ்தீனியப் பகுதியில் இஸ்ரேல் உருவானது முதலே இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்குமான போர் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துவருகிறது. பல பத்தாண்டுகளாக நடக்கும் இந்தப் போரில் இரு தரப்பிலும் போரிடுபவர்கள் மரணிப்பதை விடுங்கள். கடந்த இருபதாண்டுகளில் 2,171 பாலஸ்தீனியக் குழந்தைகள் ராணுவ நடவடிக்கைக்குப் பலியாகியுள்ளனர். எப்போது குண்டுவீச்சு தொடங்கும், எரிகணைகள் வந்துவிழுமென்பது யாருக்கும் தெரியாது. நொறுங்கிய கட்டடங்களின் பின்னணியில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் மங்கிய மெழுகுதிரி வெளிச்சத்தில் அமர்ந்திருக்கும் குழந்தைகளின் புகைப்படம், அவர்களது வாழ்க்கையின் சிதைவுகளையும், எதிர்காலம் அத்தனை பிரகாசமில்லாததையும் தெளிவாகவே சுட்டிக்காட்டுகிறது. வேர்ல்டு பிரஸ் போட்டோ நடத்திய போட்டியில் விருது வென்ற படங்களில் ஒன்று. இன்னும் நம்பிக்கை மட்டும் நொறுங்கவில்லை!