நெல்லை மாவட்டத்தின் அகத்தியமலை யானைகள் காப்பகமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஆனைமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் யானைகள் காப்பகங் கள் அமைந்துள்ளன. இந்நிலை யில் யானைகள் தினத்தை யொட்டி ஆகஸ்ட் 12-ஆம் தேதி, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபந்தேர் யாதவால், அகத்தியமலை 5-ஆவது யானைகள் காப்பகமாக அறி விக்கப்பட்டுள்ளது.

dd

இந்தியாவில் யானைகள் அதிகம் வாழும் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. சமீபத்திய கணக்கெடுப்புப்படி தமிழகத்தில் 2700 யானைகள் உள்ளன. அதேசமயம் தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 79 யானைகள், இறந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மின்வேலி, தண்டவாளத் தைக் கடக்கும்போது ஏற்படும் விபத்தால் இறக் கின்றன. இதற்கும் ஒரு தீர்வு காணப்பட்டால் மகிழ்ச்சி! யானை மரணத் தடுப்பக மும் வேண்டும்!

மிழகத்தில் பல்வேறு இடங்களில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடைபெற்றுவருகிறது. தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பரும்பு பகுதியில் நடைபெறும் 3-வது கட்ட ஆய்வில் தங்கப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆய்வாளர்களை விழிவிரியச் செய்துள்ளது. பழங்கால மக்களின் வாழ்விடங்களைக் கண்டுபிடிக்கும் நோக்கில் சிவகளை பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல்கோட்டை திரடு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இவற்றில் தொல்லியல் துறை இயக்குனர் பிரபாகரன் தலை மையில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றபோது, பராக் கிரமபாண்டி திரடு பகுதியில் சுமார் 1 செ.மீ. நீளமும் 30 மில்லிகிராம் எடையும் கொண்ட தங்கப் பொருள் கிடைத்துள்ளது. மெல்லிய கோடுகள் கொண்ட அது சிதைந்த நிலையில் உள்ளதால், அது ஆபரணமா, வேறெதுவுமா என்பது குறித்து ஆய்வாளர்கள் பரிசீலித்துவருகின்றனர். தொல்பொருள் ஆய்வின் பொற்காலம்!

Advertisment

மாணவர்களின் புத்திக் கூர்மையே தனிதான். ஆனால் அதைப் பலர் சரியான வழியில் பயன்படுத்துவதில்லை. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தேர்வுக்கு சரியானபடி ஆயத்தமாகவில்லை. இருந்தாலும் இயற்பியல் மற்றும் வேதியியல் தேர்வுகளை எழுதிய மாணவன், விடைத்தாளில் ஒரு பக்கம் புரட்டியதும் புத்தம் புது ஐநூறு ரூபாய்த் தாளை கண்ணில் படும்படி, ஸ்டேப்ளர் அடித்து இணைத்து, தயவுசெய்து பாஸ் மட்டும் செய்துவிடவும் என குறிப்பு எழுதி வைத்திருக் கிறான். அவனது தாளைத் திருத்தியவர் இதைக் கவனித்து புகாரளித்ததால், மாணவன் ஒரு வருடம் தேர்வு எழுத தடை விதிக் கப்பட்டுள்ளதாம். குறுக்குவழி எப்போதும் உதவாது!

dd

ந்தியா சுதந்திர மடைந்து 75-ஆண்டுகள் ஆவதையொட்டி, இந்திய வரலாற்று ஆராய்ச்சி சபை வெளியிட்ட போஸ்டரில் நேருவின் புகைப்படம் தவிர்க்கப்பட்டது சர்ச்சை யாக வெடித்தது. இந்தச் செயல்பாடு அற்பத்தனம் மற்றும் கொடூரத்தின் வெளிப்பாடு என விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து இந்திய வரலாற்று ஆராய்ச்சி சபையின் மூத்த அதிகாரி ஒருவர், “"சுதந்திரப் போராட்டத்தில் யாருடைய பங்கையும் குறைத்து மதிப்பிட நாங்கள் முயலவில்லை. சுதந்திர அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் கீழாக வெளியிடப்பட்ட பல்வேறு போஸ்டர்களில் ஒரு போஸ் டர்தான் இது. அடுத்துவரும் போஸ்டர்களில் நேரு இடம் பெறுவார். இதனை சர்ச்சை யாக்குவது தேவையில்லாதது''’என சமாளித்தார். அதன்பின் காங் கிரஸ் தரப்பிலிருந்து பெரிய எதிர்ப்பு இல்லாததைக் கவனித்த பா.ஜ.க. அரசு, தற்போது 75-வது சுதந்திரதின நிறைவுக் கொண் டாட்டத்தில் வெளியிடப்பட்ட பல்வேறு அரசு விளம்பரங்களி லும் சாவர்க்காரை இணைத்து, நேருவைத் திட்டமிட்டு தவிர்த் துள்ளது. நேரு காங்கிரஸ் தலைவர் மட்டுமல்ல… இந்தியா வின் முதல் பிரதமர் என்பதை மறந்துபோயுள்ளது பா.ஜ.க. நேரு சிரிக்கிறார்!

Advertisment

dd

த்தரப்பிரதேச சாமியார் களில் ஒரு பகுதியினர் 2022, பிப்ரவரியில் நடைபெற்ற மகா கும்பமேளாவில், இந்தியாவை இந்து தேசியமாக ஆக்க முடி வெடுத்து, அதற்கான அரசிய லமைப்புச் சட்டத்தை தயாரித்து வருகின்றனர். 30 பேர் கொண்ட, சுவாமி ஆனந்த் ஸ்வரூப்பை தலைவராகக் கொண்ட இந்தக் குழுவால் உருவாக்கப்படும் அரசியலமைப்புச் சட்டத்தில் 750 பக்கங்கள் இருக்குமாம். இதில் 300 பக்கங்கள், அலகாபாத்தில் நடைபெறும் 2023 மகாமேளாவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதன்படி, கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களுக்கு வாக்குரிமை கிடையாது. இந்தியத் தலைநகர் டெல்லியி லிருந்து காசிக்கு மாற்றப்படும். இந்தக் குழுவில் கமலேஷ்வர் உபாத்யாய், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர், பி.என். ரெட்டி, அஜய் சிங் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தவிரவும், இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளை இந்தியாவுடன் இணைப்பதற் கான முயற்சிகளும் மேற்கொள் ளப்படும் என்கின்றனர். நகைச் சுவை ஒருபுறம் இருக்கட்டும்,… ஜனநாயக நாட்டில், போட்டி அரசியலமைப்புச் சட்டம் தயாரித்து தைரியமாக வெளி யிடுபவர்கள் மீது நடவடிக்கை கிடையாதா?! இந்தியாவையே மூடர்கூடமா மாத்தப் போறாங் களோ!

-நாடோடி