அமெரிக்காவில் இந்திய மானம் போயிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் கனடாவிலிருந்து அமெரிக்கா நுழையமுயன்ற 6 இந்திய இளைஞர் கள் பிடிபட்டிருக்கின்றனர். அவர்களிடம் நீதிபதிகள் விசாரிக்க முயன்றபோது, ஆங்கிலத்தில் அவர்களால் பேசமுடியவில்லை. இதையடுத்து இந்தி மொழிபெயர்ப் பாளர்கள் துணையுடன் அவர் களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், கனடா வழியாக அமெரிக்காவில் நுழைய முயன்றதும், ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வில் 7 மதிப் பெண் பெற்றிருந்ததும் தெரியவந்திருக்கிறது. இந்த ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வு வெளிநாடுகளில் படிக்கவும் வேலைக்குச் செல்லவும் நடத்தப் படும் தேர்வாகும். ஆங்கிலத்தில் செழிப்பான அறிவுமிக்கவர்களே இத்தகைய மதிப்பெண்கள் பெறமுடியும். எனவே இவர்கள் முறைகேடாக இதில் தேர்வாகியது தெரியவந்துள்ளது. இதுதொடர் பாக அமெரிக்க அதிகாரிகள் குஜராத் போலீசாரிடம் விசா ரணை செய்துள்ளனர். லாங்வேஜா முக்கியம். சர்ட்டிபிகேட் போதாதா!
சர்வதேச புக்கர் பரிசை வென்ற இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலிஸ்ரீ. இவரது "ரெட் சமாதி' எனும் நாவல் "டாம்ப் ஆப் சாண்ட்' எனும் பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க் கப்பட்டு புக்கர் விருதைப் பெற்றுள்ளது. ஜூலை 30-ஆம் தேதி ஆக்ராவில் எழுத்தாள ருக்கு பாராட்டுவிழா நடை பெற இருந்தது. இந்நிலையில், ஹாத்ராஸ் மாவட்டம் சத்பத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் பதக் என்பவர் இந்நாவலின் சில பகுதிகளில் சிவன், பார்வதியைக் குறித்துத் தவறாக எழுதப்பட்டுள்ளது என காவல்நிலையத்தில் புகாரளித்தார். தவிரவும் புத்தகத்தில் ஆட்சேப மானவை என அவர் கருதும் பகுதிகளை புகைப்பட மெடுத்து ட்வீட் செய்து, உ.பி. முதல்வர் யோகிக்கும் பிரதமருக்கும் அதை டேக் செய்துள்ளார். இது சர்ச்சையானதை அடுத்து பாராட்டுவிழா தடைப் பட்டது. கீதாஞ்சலிக்கு எதிராக வழக்குப் பதியவேண்டும் என்ற குரல்களும் எழுந்திருக்கும் நிலையில், இந்தியா சகிப்புத் தன்மையற்றதாக மாறி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ. பேபி விமர்சித்துள்ளார். சிவசிவா இதென்ன இலக்கியத்துக்கு வந்த சோதனை!
2001, செப்டம்பர் 11-ஆம் தேதியையும், உலக வணிக மையம் இருந்த இரட்டைக் கோபுரத்தையும் அமெரிக்கர்கள் எளிதில் மறக்கமுடியாது. இந்தக் கோபுரங்கள் தகர்க்கப் பட்டதன் எதிர்வினையாகத் தான் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படையைக் கொண்டுவந்து நிறுத்தி, தலிபான் ஆட்சியை அகற்றி யது. தொடர்ந்து இதில் தொடர்புடைய பின்லேடனை பாகிஸ்தானில் வைத்து அமெரிக்கப் படை சுட்டுக் கொன்றது. இருந்தாலும் அல்கொய்தா அமைப்பின் தலைவர் அல்-ஜவாஹிரியை அமெரிக்கா தேடிவந்தது. தற்போது ஆப்கானிஸ்தான் தலைநகரில் பதுங்கியிருந்த ஜவாஹிரியையும் ட்ரோன் தாக்குதல்மூலம் கொன்று 20 ஆண்டுகளுக்கு முந்தைய அவமானத்துக்கு பழிதீர்த் திருக்கிறது அமெரிக்கா. இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவுக்கு நீதி கிடைத் துள்ளது என்றிருக்கிறார். அதுசரி, அமெரிக்காவால் பாதிக்கப்பட்ட, வியட்நாம் முதல் ஈராக், ஈரான், வட அமெரிக்க நாடுகளுக்கு எப்போது நீதி கிடைக்கும்? வல்லரசுன்னா நாடுபுகுந்து தாக்கலாம்!
அரசின் முக்கிய அறிவிப்புகளை ஊர் ஊராக அறிவிப்பதற்கும், வரி வசூல் குறித்து தெரிவிப்பதற்கும், பேரிடர் காலங் களில் பொது மக்களை எச்ச ரிக்கை செய்வதற் கும் தண்டோரா போடும் நடை முறை வெகுகாலமாக இருந்துவரு கிறது. இது பழங் காலத்தில் நம் மக்களால் பின்பற்றப்பட்ட முறை. ஆனால் இன்றைக்கு உலகம் எங்கேயோ போய் விட்டது. நாட்டு மக்களுக்கு செய்திகளைத் தெரிவிக்க வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், சமூக ஊடகங் கள் என ஆயிரத்தெட்டு வழிமுறைகள் வந்துவிட்டன. தவிரவும் தண்டோரா போடுபவர், மக்களை சாமியோவ் என அழைத்தே செய்திகளைத் தெரிவிக்க வேண்டும். அதில் மறை முகமாக சாதிய மேலாதிக்கப் போக்கு மறைந்துள்ளது. எனவே காலத்தால் பிந்திய தண்டோரா முறையை கைவிட தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. எனவே இதுகுறித்து தெரிவித் துள்ள தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, “"தண்டோரா போட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி அதில் ஈடுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவுசெய்யப் பட்டுள்ளது'’என அறிவித் துள்ளார். தண்டோரா காலாவதியாகிறது!
கடந்த ஜூலை 16-ஆம் தேதியன்று இந்தியப் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேசத்தின் சித்திரக்கூடம் மாவட்டத்தையும், தில்லியையும் இணைக்கும் 4 வழிச்சாலையைத் திறந்துவைத் தார். இந்த சாலைக்கு பந்தேல் கண்ட் எக்ஸ்பிரஸ் சாலை எனப் பெயரிடப்பட்டது. 14,850 கோடி செலவில் அமைக்கப்பட்டு, சாலை திறந்துவைக்கப்பட்ட நான்கே நாட்களில் ஒரு கனமழை பெய்ய, மழையோடு பெரும்பகுதி சாலை போய்விட்டது. சலீம்பூர் பகுதியில் சாலையில் ஒன்றரை அடிக்குப் பள்ளம் ஏற்பட்டதுடன் சாலையே இரண்டாகப் பிளந்துவிட்டது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், தனது ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சாலையில் யானை நடந்துசெல்லும் வீடியோவைப் பதிவிட்டு, "இதே யானை பந்தேல்கண்ட் சாலையில் நடந்துசென்றிருந்தால்?' என மோடியையும், உ.பி. முதல்வர் யோகியையும் விமர்சித்துள்ளார். அதுசரி யானை மாயா வதி சின்னமாச்சே!
-நாடோடி