பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான்கான் இடைக் கால ஜாமீனுக்காக அலைந்து கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ- இன்சாப் கட்சியின் ஆட்சி பறிபோன நிலையில், மே 25-ஆம் தேதி மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினார் இம்ரான் கான். பேரணியின் போது ஏற்பட்ட வன்முறைகளுக்கு இம்ரான் கானே பொறுப்பு என அவரை ஆளும்கட்சி கைதுசெய்ததுடன் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் அவருக்கு எதிராகத் தொடரப்பட் டன. இவ்வழக்குகளுக்காக நீதிமன் றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்குக் கோரியும், இடைக்கால ஜாமீன் கேட்டும் இம்ரானின் வழக்கறிஞர் மாவட்ட நீதிமன்றத் தில் கோரிக்கை வைத்தார். கோசார் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் ஜாமீன் தருவதற்கு இம்ரான், நேரில் ஆஜராகவேண்டுமென நீதிபதி கண்டிப்புடன் கூறிவிட்டார். ஆட்சி போனாலே வழக்கும் சிறையும்தானே!
வெப்ப அலை தாளாமல் தவித்துக்கொண்டி ருக்கிறது ஐரோப்பா. பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளில் இத்தனை ஆண்டுகளில் முதல்முறையாக 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி யுள்ளது. சூழலியல் அறிஞர்களோ, போதிய தடுப்பு நடவடிக்கைகளில் உலகம் இறங்காவிட்டால், வரும் ஆண்டுகளில் இந்த வெப்பம் இன்னும் அதிகரிக்கும் என எச்சரிக் கிறார்கள். முன்னுதாரணமில்லாத இந்த வெப்ப அலையைத் தவிர்க்க, சில ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பதுடன் பள்ளிகளுக்கும் விடுமுறையளிக் கப்பட்டுள்ளன. பிரான்ஸில் மேற்கு அட்லாண்டிக் கடற்கரையோரமுள்ள 64 இடங்களில் அதீத வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த நாடுகளில் கட்டுக்கடங்காத வெயிலால் பல தீவிபத்து நிகழ்வுகளும் பதிவாகி யுள்ளன. போர்ச்சுகலில் ஏற்பட்டுள்ள பெரும் தீவிபத்தைக் கட்டுக்குள் கொண்டுவர 1400 தீயணைப்பு வீரர்கள் போராடிவருகின்றனர். விதைச்சதுதானே விளையும்!
மகாத்மா காந்திக் காக அர்ப்பணிக்கப்பட்ட தேசிய அருங்காட்சியகம் "அந்திம் ஜன்' என்ற ஒரு இதழை நடத்திவருகிறது. இந்த இதழ் ஜூன் மாதம் சாவர்க்கருக்காக ஒரு சிறப்பிதழ் வெளியிட்டுள் ளது. காந்தி சமிதி மற்றும் தர்ஷன் சமிதி என்னும் அமைப்பால் நடத்தப் படுகிறது இந்த இதழ். இந்த அமைப்பின் தலைவர் இந்தியப் பிர தமர் என்பது குறிப்பிடத் தக்கது. சாவர்க்கர் குறித்த பழைய, புதிய கட்டுரைகளுடன் அட்டைப் படத்திலும் சாவர்க்கர் படம் இடம்பெற்றுள்ளது. இந்த இதழுக்கான முன்னுரையில் இவ்வமைப்பின் துணைத் தலைவர் விஜய் கோயல், “"விஜய் தாமோதர சாவர்க்கர், பெரும் தேசப்பற்றுடையவர், சுதந்திரப் போராளி, அசாத்தியமான தைரியமுடையவர், சிறந்த சொற்பொழிவாளர்''’என்று புகழ்ந்திருக்கிறார். அத்துடன், “"சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் பங்கைவிட, சாவர்க்கரின் பங்கு குறைந்ததல்ல'' என பாராட்டியும் குறிப்பிட்டிருக்கிறார். தேசத்தந்தை பட்டத்தையும் பாகம் பிரிச்சுடுவாங்களோ!
உத்தரபிரதேசத்தில், குப்பையள்ளும் வண்டியில் பிரதமர் மோடி மற்றும் உ.பி. முதல்வர் யோகி படம் இடம்பெற்றதற்காக, பணிநீக்கம் செய்யப்பட்ட சுகாதாரப் பணியாளரை மீண்டும் வேலையில் சேர்க்காவிட்டால், மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் செய்யப்போவதாக சுகாதாரப் பணியாளர்கள் கூறியுள்ளனர். மாதுரா- விருந்தாவன் நகராட்சியில் ஒப்பந்த சுகாதாரப் பணியாளராக இருப்பவர் பாபி. இவருக்கு மூன்று பெண் குழந்தைகள், இரு ஆண் குழந்தைகள். இவரது ஊதியம் வெறும் 5,500 ரூபாய்தான். தனது வண்டியில் இந்தப் படங்கள் இருப்பது குறித்தே தெரியாது. வழியில் சென்றவர்கள் வண்டியை வீடியோ எடுத்தபோதுதான் இப்படங்கள் இருந்ததே தெரியும் என்கிறார் பாபி. ஆனால் நகராட்சி ஆணையாள ரோ, “சம்பந்தப்பட்ட பணியாளர், சுகாதார ஆய்வாளர், மேற்பார்வையாளரிடமிருந்து மன்னிப்புக் கோரலும், கருணை விண்ணப்பமும் வந்துள்ளது. மூன்று நபர் குழு நடந்ததைக் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கும்” என்றிருக் கிறார். செய்தித்தாளில், கட்அவுட்டுகளில் புகைப்படம் இடம்பெறுவது கௌரவம்…. குப்பைத் வண்டியில் இடம்பெறுவது அகௌரவம் என்று யார் முடிவுசெய்தார்கள்? தவிரவும், இச்சம்பவத்துக்கு சுகாதாரப் பணியாளர் எப்படிப் பொறுப்பாவார்? ஏழை வயிற்றிலடிப் பதுதான் ராம ராஜ்யமா?
நல்லா இருக்குங்க சார் உங்க நியாயம் என முனகுகின்றனர் ரயில்வே பயணிகள். ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி எக்ஸ்பிரஸ்களில் ஏற்கெனவே பயணக் கட்டணம் அதிகம். அதுபோதா தென்று பயணிகளிடம் பிற வகைகளி லும் பகல் கொள்ளை நடக்கிறதென்று புகார் எழுந்துள்ளது. இந்த ரயில்களில் உணவு முன்பதிவு செய்யாத பயணி களுக்கு டீ, காபியின் விலை ரூ.70 வசூலிக் கப்படுவதாக ரசீதுடன் சமூக வலைத்தளங் களில் பதிவுகள் வைரலாகின. இந் நிலையில், பயணத்தின்போது உணவை முன்பதிவு செய்யாதவர்களுக்கு மட்டுமே சேவைக் கட்டணம் 50 வசூலிக்கப்படுவ தாக ரயில்வே துறை விளக்கமளித்தது. இருந்தாலும் சர்ச்சை நீடித்த நிலையில் டீ, காபி, பாலுக்கு இந்த சேவைக் கட்டணத்தை நீக்கியுள்ளது. எனினும் சாப்பாடுக்கு இந்த சேவைக் கட்டணம் நீக்கப்படாது என்று கெடுபிடி காட்டு கிறது ரயில்வே! சுண்டைக்கா கால்பணம் சுமைகூலி முக்கால் பணம்!
-நாடோடி