லைலா ராகேஷிடமிருந்து நாம் தன்னம்பிக்கையைக் கற்றுக்கொள்ளவேண்டும். லைலாவின் சொந்த நாடு ஆப்கானிஸ்தான். அவரது தாய் பிழைப்புக்கு வழியில்லாமல், லைலாவை 7 வயதிலேயே விபச்சாரத்தில் தள்ள, அவரது வாழ்வே நரகமானது. அவரது அதிர்ஷ்டம், ஆப்கன் பெண்களுக்கான தன்னார்வ அமைப்பொன்று லைலாவை இந்தியாவுக்கு மீட்டுவந்தது. கொடைக்கானலில் நல்லதொரு பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
ஊடகத்துறையில் ஆர்வமுள்ள லைலா சென்னை ஆசியன் காலேஜ் ஆப் ஜர்ன லிஸத்தில் முதுகலைப் பட்டயப் படிப்பையும் முடித் திருக்கிறார். லண்டனிலுள்ள ஸ்கூல் ஆப் ஓரியண்டல் ஸ்டடிஸ் கல்விநிறுவனத்தில் சர்வதேச அரசியல் பற்றி படிக்க விரும்பும் லைலா, க்ரவுட்பண்டிங் முறையில் இதற்கான 20 லட்சம் நிதியில் 15 லட்சம் வரை திரட்டிவிட்டார். “"லண்டனில் படிக்கச் செல்வது என் கேரியரை நோக்கிய கடைசிப்படி மட்டுமல்ல... மீண்டும் காபூலுக்கு நான் அனுப் பப்படாமல் காப்பாற்றும் விஷயமும்கூட''’
லைலா ராகேஷிடமிருந்து நாம் தன்னம்பிக்கையைக் கற்றுக்கொள்ளவேண்டும். லைலாவின் சொந்த நாடு ஆப்கானிஸ்தான். அவரது தாய் பிழைப்புக்கு வழியில்லாமல், லைலாவை 7 வயதிலேயே விபச்சாரத்தில் தள்ள, அவரது வாழ்வே நரகமானது. அவரது அதிர்ஷ்டம், ஆப்கன் பெண்களுக்கான தன்னார்வ அமைப்பொன்று லைலாவை இந்தியாவுக்கு மீட்டுவந்தது. கொடைக்கானலில் நல்லதொரு பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
ஊடகத்துறையில் ஆர்வமுள்ள லைலா சென்னை ஆசியன் காலேஜ் ஆப் ஜர்ன லிஸத்தில் முதுகலைப் பட்டயப் படிப்பையும் முடித் திருக்கிறார். லண்டனிலுள்ள ஸ்கூல் ஆப் ஓரியண்டல் ஸ்டடிஸ் கல்விநிறுவனத்தில் சர்வதேச அரசியல் பற்றி படிக்க விரும்பும் லைலா, க்ரவுட்பண்டிங் முறையில் இதற்கான 20 லட்சம் நிதியில் 15 லட்சம் வரை திரட்டிவிட்டார். “"லண்டனில் படிக்கச் செல்வது என் கேரியரை நோக்கிய கடைசிப்படி மட்டுமல்ல... மீண்டும் காபூலுக்கு நான் அனுப் பப்படாமல் காப்பாற்றும் விஷயமும்கூட''’என்கிறார் லைலா! ஒரு லைலாவை மீட்டுவிட்டோம். பிற லைலாக்கள்?
உத்தரப்பிரதேசத்தின் வனத்துறை அமைச்சர் அருண்குமார் சக்சேனா. இவரது மருமகன் பரேய்லியில் தேநீர்க் கடை அருகே இருந்த காவலர் ஓமேந்திர குமாரை மோசமாகத் திட்டுவதும், சீருடையைக் கிழிப்பதும் அடிப்பதுமான வீடியோ உ.பி.யெங்கும் வைரலானது. இதுகுறித்து ஓமேந்திர குமார் உள்ளூர் காவல்நிலையத்தில் புகாரளித்த போது, எஃப்.ஐ.ஆரில் அடித்தவரின் பெயரைக் குறிப்பிட மறுத்திருக்கிறது போலீஸ். ஆனால் இந்த வீடியோ ஆயிரக்கணக்கில் பரவி மாநில அளவில் பெரிய விஷயமாகப் பேசப்பட்ட பிறகே பரேய்லி போலீஸ் சூப்ரிடெண்ட், அமைச்சரின் மருமகன் பெயரைச் சேர்க்கச் சொல்லியிருக்கிறார். “"வீடியோ இருக்கிறது... புகார் இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றிருக்கிறார் சூப்ரிடெண்ட். பார்க்கலாம்! நல்லா இருக்குங்க சார் உங்க சட்டம்!
பீகார் சமஷ்டிபூரில் வசிப்பவர் மகேஷ் தாக்குர். இவரது மகன் திடீரென காணாமல் போகவே அவரை அவரது குடும்பத்தினர் தேடிவந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் செய்திருந்தார். இந்நிலையில், சதார் காவல் நிலையம் தந்த தகவலால், அவரது மகன் இறந்துவிட்டதும் அவன் உடல் அரசு மருத்துவமனையில் இருப்பதும் அவர்களுக்குத் தெரியவந்திருக்கிறது. அங்கு சென்றபோது மருத்துவமனை ஊழியர்கள் மகேஷிடம் அவரது மகன் உடலைத் தர 50,000 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கின்றனர். தனது ஏழ்மையை விளக்கியபோதும் அவர்கள் இரங்கவில்லை. இதனால் அவர் ஊருக்குள் சென்று, தன் மகன் உடலை மீட்க பிச்சை யெடுத்து காசு சேர்த்திருக்கிறார். இதை சமூக ஆர்வலர் ஒருவர் பதிவுசெய்து வலைத்தளங்களில் பதிவிட, வைரலாகிவிட்டது. இதையடுத்து இம்மருத்துவ மனையின் பொது அறுவை சிகிச்சை மருத்துவர் எஸ்.கே. சௌத்ரி, "தவறு செய்தவர் மீது நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றுள்ளார். பிணத்தைக் கொடுக்கவுமா பணம் கேட்பீங்க?
அமெரிக்காவின் கூகுள் புதிய இக்கட்டில் சிக்கியிருக் கிறது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வழக் கறிஞர் சுஷில் குமார் மிஸ்ரா. இவர் அலகாபாத் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய் தார். 2015-ல் அவர், உலகின் டாப் டென் குற்றவாளிகள் பட்டியலை கூகுளில் தேடிய தாகவும், அந்தப் பட்டியலில் இந்தியப் பிரதமர் மோடியின் பெயர் வந்ததாகவும், அதுகுறித்து கூகுளுக்கு எழுதியும் பயனில்லை. குற்றவாளிகளின் பட்டியலில் பிரதமர் மோடியின் படத்தைச் சேர்த்த கூகுள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டு மென்பதுதான் அவர் மனுவின் சாராம்சம். நீதிமன்றமும் கூகுள் சி.இ.ஓ., இந்தியப் பிரிவுத் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி பதிலளிக்கு மாறு உத்தரவிட்டுள்ளது. கூகுள் தலைமை அலுவலகம் மட்டும் உபி.ல இருந்திருந்தா, அதை இடிச்சு பாடம் கற்பிச்சிருக்கலாம்! பிரதமர்னும் பாக் காம பட்டியல் போட்ருக்காங்க!
"என்னைக்கு வழக்கு நடந்து, என்னைக்குத் தீர்ப்பு வந்து' என்ற குடிமக்க ளின் அதிருப்தியை மாநில அரசுகள் கையிலெடுத்துக் கொண்டு தண்டனை வழங்க ஆரம்பித்திருக்கின்றன. ஜ்யான் வாபி மசூதி விவகாரத்தில், ஊடகத்தில் முகம்மது நபி குறித்து மோசமாக கருத்துச் சொன்னதற்காக, கான்பூரில் முஸ்லிம்கள் போராட்டத்தில் இறங்கினர். இது கலவர மாகவும் மாறியது. இந்த விவகாரத்தில் இதுவரை 316 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. 6000 பேர் மேல் எப்.ஐ.ஆர். பதியப்பட்டுள்ளது. அகமதாபாத் இந்த கலவரத் தில் முக்கிய குற்றவாளியென உ.பி. அரசு முடிவுசெய்துள்ள ஜாவேத் அகமதின் வீடு, அப்பகுதி நகராட்சி நிர்வாகத் தால் இடித்துத் தகர்க்கப் பட்டுள்ளது. இது இப்படி யிருக்க, மத்தியப் பிரதேசத்தில் பெண் ஒருவரிடம் மூன்று நபர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரத்தில், பிரதான குற்ற வாளியாகச் சந் தேகிக்கப்படும் பாட்ஷா என்பவ ரின் வீட்டை இடித்துத் தகர்த்துள்ள னர் அதிகாரிகள். நீதி மன்றத்துக்கு வேலையில்லாமப் பண்ணிடு வாங்களோ!
-நாடோடி