பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் மஞ்சள் பை திட்டத்தைத் தொடங்கிவைத்தார். மேலும், தமிழகத்தில் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பை, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு சீல், உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுவருகின்றன. தமிழகத் தலைநகரான சென்னையில் அதிக மக்கள் வந்துசெல்லும் கோயம்பேடு சந்தையில் மக்கள் பிளாஸ்டிக் பொருளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க மஞ்சள்பை அளிக்கும் எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. 10 ரூபாய் நாணயத்தை எந்திரத்தில் செலுத்தினால், மஞ்சள் பையைக் கொடுக்கும். இந்த இயந்திரத்தை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் யோசனையும் தமிழக அரசுக்கு இருக்கிறதாம். மாசில்லாத மங்களகரமான திட்டம்!
தொடர்ந்து செய்தி
பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் மஞ்சள் பை திட்டத்தைத் தொடங்கிவைத்தார். மேலும், தமிழகத்தில் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பை, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு சீல், உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுவருகின்றன. தமிழகத் தலைநகரான சென்னையில் அதிக மக்கள் வந்துசெல்லும் கோயம்பேடு சந்தையில் மக்கள் பிளாஸ்டிக் பொருளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க மஞ்சள்பை அளிக்கும் எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. 10 ரூபாய் நாணயத்தை எந்திரத்தில் செலுத்தினால், மஞ்சள் பையைக் கொடுக்கும். இந்த இயந்திரத்தை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் யோசனையும் தமிழக அரசுக்கு இருக்கிறதாம். மாசில்லாத மங்களகரமான திட்டம்!
தொடர்ந்து செய்திகளைக் கவனிப்பவர்களுக்கு சோமாலியாவைத் தெரியாமல் இருக்காது. ஆப்பிரிக்கக் கண்டத்தின் வறுமையான நாடுகளில் ஒன்று. ஏற்கெனவே பஞ்சத்தில் இருக்கும் இந்த நாடு, கடந்த நாற்பதாண்டுகளில் காணாத பஞ்சத்தைக் காணப்போகிறதாம். அதன் ஆட்சியாளர்களும் மக்களும் இதுவரை எதிர்கொள்ளாத சிரமத்தை எதிர்கொள்வார்கள் என ஐ.நா. எச்சரித்துள்ளது. நான்கு பருவங்களாக தொடர்ந்து பருவமழை பொய்த்துள்ளதால் 70 லட்சம் பேர் கடும் பஞ்சத்தை எதிர்கொள்ளப்போகிறார்கள். ஏற்கெனவே 8 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளார்கள். உக்ரைன்- ரஷ்யப் போரால் மனிதாபிமான உதவிகளும் நின்றுபோயுள்ளதால் நிலைமை மோசமடைந்துவருகிறது. பஞ்சத்தால் முப்பது லட்சம் கால்நடைகள் இறந்துள்ளதாகக் கணிக்கப்படுகிறது. உலக நாடுகள் சுதாரித்து உதவாவிட்டால் மூன்றரை லட்சம் குழந்தைகள் உயிரிழக்கக் கூடும் என எச்சரிக்கிறது ஐ.நா. உலக வல்லரசுகள் கவனிக்குமா?
பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா, தொலைக்காட்சி விவாதமொன்றில் இஸ்லாமிய மதத்தின் தூதர் முகம்மது நபியைப் பற்றி விமர்சித்ததன் எதிரொலியாக, கான்பூரில் ஜூன் 3-ஆம் தேதி தொழுகைக்குப் பின் இஸ்லாமியர்கள் அப்பகுதியில் கடை யடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அதற்கு இன் னொரு தரப்பிடமிருந்து எதிர்ப்பு வரவே உரசல் ஏற்பட்டு கல்வீச்சில் சென்று முடிந்தது. இதையடுத்து உ.பி. அரசு சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வந்தது. இந்த விவகாரத்தில் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் 40 பேரை அடையாளம் கண்டறிந்து, அந்த நாற்பது பேரின் புகைப்படங்களை பிரமாண்டமான போர்டாக அடித்து அப்பகுதியில் பல இடங்களில் வைத்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களைப் பற்றி தகவல்தர செல்போன் எண்ணையும் காவல்துறை தந்துள்ளது. போலீஸ் தரப்பில் 800 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப் பட்டுள்ளது. 100 பேர் கல்லெறிந்தவர்கள் என கூறப்படுகிறது. அதேசமயம், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில், நீதிமன்றம் முடிவு செய்யும்முன் அறிவிப்புப் பலகை மூலம் சந்தேகத் துக்குரியவர்களை குற்ற வாளிகளாக விளம்பரம் செய்ததற்காக ஏற்கெனவே நீதிமன்றம் உ.பி. அரசைக் கண்டித்துள்ளது. இருந்தும் இன்னொரு முறை அதே யுக்தியைக் கையாண்டுள்ளது யோகி அரசு. அத்துமீறலுக்கு டாக்டரேட் கொடுக்க வேண்டிய அரசு!
ரூபாய் நோட்டில் காந்தி படம் மட்டுமே இடம்பிடித்துவரும் நிலையில், ரிசர்வ் வங்கியும் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவும் இணைந்து அப்துல் கலாம், ரவீந்திரநாத் தாகூர் படங்களையும் ரூபாய் நோட்டில் அச்சிட முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் பரவியது. இதற்கான மாதிரி நோட்டுகள் அச்சிடப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளதாம். உரிய அதிகாரிகளின் ஒப்புதல் கிடைத்ததும், மத்திய அரசின் அனுமதியுடன் இது நடைமுறைக்கு வரும் என சொல்லப்பட்டது. தற்போது, இந்தச் செய்தியை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளதுடன், காந்தி படத்துக்குப் பதிலாக வேறு தலைவர்களின் படத்தைப் பயன்படுத்த பரிசீலித்து வருவதாகச் சொல்லப்படும் தகவல் உண்மையில்லை என்று விளக்கமளித்துள்ளது. சத்திய சோதனை விலகிடுச்சு!
உங்கள் குழந்தைகளை விடுமுறையில் சென்னைக்கு அனுப்பியிருக்கிறீர்களா? குழந்தைகளுக்கு பயனுள்ளதும் அபூர்வ மானதுமான ஒன்றைக் காட்ட விருப்பமா? அவர்களை சென்னை பாம்புப் பண்ணைக்கு அனுப்புங்கள். இங்கே விதவித மான பாம்புகளுடன், உடும்புகளுக்கும் தனிப் பகுதி உள்ளது. இந்த உடும்புகளுக்கான பகுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த பச்சை உடும்பு ஜோடி உள்ளது. இரண்டா வது முறையாக ஈன்றிருக்கும் இந்த ஜோடிகள்தான் தற்போது இந்தப் பாம்புப் பண்ணை யின் கவன ஈர்ப்பாளர்கள். இந்த முறை 26 குட்டிகளை ஈன்றிருக்கும் இந்த உடும்பு ஜோடி யையும் குட்டிகளையும் பார்க்க பார்வை யாளர்கள் வந்து குவிகிறார்கள். உங்கள் பிள்ளை களுக்கும் காட்டிமகிழுங்கள். அமெரிக்க விருந்தாளிகளைப் பார்க்க ரெடியா!
-நாடோடி