வினை விதைத்தவன் தினையா அறுப்பான்?
தமிழகத்தில் ஒளிந்து ஒளிந்து பெரியாரின் சிலையை உடைத்த சமூகச் சீரழிவு சக்திகள், அடுத்த கட்டத்துக்கு நகர முயற்சிக்கின்றன. தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன் றுக்காக ஒரு சிறுமி பெரியார் வேஷமணிந்து கலந்துகொண்டாள். இதனால் ஆத்திர மடைந்த தூத்துக்குடி மாவட் டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்பாபு என்பவர், சமூக நல்லிணக்கத்தைப் பாதிக் கும் வகையிலும், சமூகத் தலை வர்களை இழிவுபடுத்தும் விதத் திலும், குழந்தையை அச்சுறுத் தும் வகையிலும் முகநூலில் கருத்தொன்றைப் பதிவிட்டார். இதனையடுத்து கயத்தார் காவல் நிலையம் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து அவரைச் சிறையில் அடைத் திருக்கிறது. “"சமூக வலைத்தளங் களில் தலைவர்களை இழிவாக வும், யாரையும் அச்சுறுத்தும் விதத்திலும் பதிவிடுபவர்களின் மேல் கடுமையான நடவடிக்கை பாயும்' என எச்சரித்துள்ளார் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார்.
மக்கள் முகத்தில் பூசப்பட்ட கரி!
கடந்த 14 ஆண்டுகளில் நிலக்கரியில் 6000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாக குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் வல்லப் குற்றம் சாட்டியிருக்கிறார். சிறு தொழிற் சாலைகளுக்கு மலிவு விலையில் நிலக்கரி வழங்கும் திட்டத்தின் கீழ், சிறு தொழிற்சாலைகளுக்குக் கொடுத்ததாக கணக்கு காட்டி, குஜராத்தில் ஆட்சியிலிருந்தவர் கள் அந்த நிலக்கரியை டன் ஒன்றுக்கு ரூ 8000 முதல் 10000 வரை கூடுதல் விலைக்கு 60 லட்சம் டன் நிலக்கரியை விற்றுக் காசுபார்த்திருக்கிறார்கள். இதில் நரேந்திர மோடி தொடங்கி ஆனந்திபென் படேல், விஜய் ரூபானி, பூபேந்திரபாய் படேல் வரை தொடர்பு இருக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் இந்த ஊழல் குறித்து விசாரிக்கவேண்டும் என்று குமுறியிருக்கிறார் வல்லப்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
கர்நாடக மாநிலம் ஷிமோகா, ஷிவ்மொக்கா பாரதி காலனியில் பஜ்ரங்தள் தொண்ட ரான ஹர்ஷா குத்திக் கொல்லப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஹர்ஷாவின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையில் 3 போலீ சார், 2 பத்திரிகையாளர்கள் உள் ளிட்ட 30 பேர் காயமடைந்தனர். பலியான ஹர்ஷாவின் சகோதரி யாகிய அஸ்வினி, தனது தம்பியின் மரணம் குறித்து பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. “"எனக்கு இப்போது சகோதரர் இல்லை. நீங்கள் அனைவரும் உங்கள் பெற்றோரின் பிள்ளைகள். உங்கள் வாழ்க்கையை ஹர்ஷாபோல ஆக்கிக்கொள்ளாதீர்கள். பெற்றோர் உங்கள் எதிர்காலத்துக்காக நிறைய பிரச்சினைகளை எதிர் கொள்கிறார்கள்''’என நாசூக்காக இந்துத்துவ அமைப்புகளின் முகத்தில் காறித்துப்பியிருக்கிறார்.
எங்களுக்கும் பரட்டைதான்! நாங்களும் கலைச்சுவிடுவோம்!
வடிவேலு பாணியில், இந்தியா, இங்கிலாந்துதான் கருத்துச் சொல்லணுமா, நாங் களும் ரஷ்ய- உக்ரைன் போரில் கருத்துச் சொல்வோமென இறங்கியுள்ளது ஆப்கானிஸ் தான். ஆப்கன் தலிபான் அரசு, ரஷ்யாவும்- உக்ரைனும் அமைதிப் பேச்சு வார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ் தானில் அமெரிக்கா இருந்த வரை தலைமறைவாக இருந்த தலிபான் அமைப்பு, அமெரிக் கப் படைகள் கிளம்பத் தொடங் கியதும் அங்கு நடப்பி லிருந்த அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி யைத் தொடங்கி நாட்டைக் கைப்பற்றியது. தற்போது வரை ஆயுதங்கள் மூலமே தங்களது சேதியைச் சொல்லி வரும் தலிபான் அரசு, அமைதிப் பேச்சுவார்த்தையைப் பற்றிய சிபாரிசு செய் திருப்பதை புன்னகை யுடன் எதிர்கொள் கிறது உலகம்!
நவீன துர்க்கைகள்!
சலவைத் தொழிலாளி துணியை வெளுப்பதைவிட மோசமாக, கொரோனா உலகத்தை வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறது. அதன்பிடியிலிருந்து இந்தியாவும் தப்ப வில்லை. எனினும் கோவிட் தடுப்பூசியின் வருகை, பலி எண் ணிக்கையைக் கணிசமாகக் குறைத் திருக்கிறது. கங்கையெல்லாம் பிணங்கள் மிதப்பதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது. இந்தியாவில் கோவிட் தடுப்பூசி 100 கோடி டோஸ் போடப் பட்டதை யொட்டி பல்வேறு கைகளுடன் அபயமுத்திரை காட்டும் துர்க்கை யைப் போன்று, அரசு மருத்துவ மனைகளில் செவிலியர்கள் கையில் கோவிட் தடுப்பூசியுடன் புகைப்படம் எடுத்தனர். அந்தப் புகைப்படம் 2021-ன் உலகைக் கவர்ந்த புகைப்படங்களின் வரி சையில் இடம் பெற்றிருக்கிறது.
போர் என்னும் சர்வநாசம்!
உக்ரைன் -ரஷ்யா போரை முன்கூட்டிக் கணிக்கத் தவறிய இந்தியா, அங்கு சிக்கி யுள்ள இந்திய மாணவர்களை தாமதமாக மீட்டுவந்தபடி இருக்கிறது. இதனால் பல்வேறு இக்கட்டுகளும் எழுந்துள்ளன. வேலூர் மாவட்டம் பேர்ணாம் பட்டைச் சேர்ந்த தமிழக மாண வர், பதுங்கிய இடத்தில் மூன்று நாட்களாக குடிநீரின்றி காய்ச் சலே வந்துவிட்டது. இதனால் அருகிலுள்ள சாக்கடை நீரை சுத்தம் செய்து குடிக்கிறோம் என்றுள்ளார். உக்ரைன்- போலந்து எல்லையில் தப்பிச் செல்வதற்காக வரும் மாணவர் களை ராணுவ வீரர்கள் தாக் கும், வசை பொழியும் சில வீடியோக்களும் வந்துள்ளன. இருப்பினும் வீடியோவிலிருப் பது உக்ரைன் வீரரா என்பதை உறுதிசெய்ய முடியவில்லை. இதற்கிடையில் மீட் கப்பட்ட 1500 இந் தியர்களில் 23 பேர் மட்டுமே தமி ழர்கள் என் பது சல சலப்பை ஏற் படுத்தியுள்ளது. உக்ரைனில் 5000 தமிழக மாணவர் கள் சிக்கியுள் ளது குறிப் பிடத்தக்கது.
-நாடோடி