ராங்கால்- ஸ்டாலின் வைத்த திராவிடப் பொங்கல்! ராஜ்பவனைப் புறக்கணித்த தமிழ்நாடு! எடப்பாடி V/s வாசன் -தொடங்கியது கூட்டணி மோதல்

rr

"ஹலோ தலைவரே, உலகத் தமிழினமே தமிழர் திருநாளான பொங்கல் விழாவை கோலாகலமாகக் கொண்டாடியிருக்கு.''”

"அதுக்கு முன்னதாகவே தமிழக சட்டப் பேரவையில் நம்ம தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஜ்பவனின் அதிகார மமதைக்கு எதிரா பொங்கல் வச்சி, தமிழன்னா யாருன்னு காட்டிட்டாரே?''’

dd

"ஆமாங்க தலைவரே, சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட திராவிடப் பொங்கல் ஒட்டு மொத்த தமிழர்களையும் நிமிர வச்சிருக்கு. கவர்னருக்கு எதிரான முதல்வரின் அதிரடித் தீர்மானத்தை எதிர்க்கட்சியினரும் கூட மனசுக் குள் ரொம்பவே ரசிச்சாங்க. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தமிழர் திருநாளான தைப்பொங்கலையும் ரொம்பவே உற்சாகமாக் கொண்டாடினார். ஒருபக்கம் "சென்னை சங்கமம்- நம்ம ஊர் திருவிழா'வை ரசனையோட தொடங்கி வச்ச அவர், தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் கூடத்திலும் ராஜ்பவனுக்கு எதிராக ஏகத்துக்கும் பொங்கித் தீர்த்தார். 15ஆம் தேதி வழக்கமான வெள்ளை உடைக்கு பதிலா. பட்டுவேட்டி சட்டை அணிந்தபடி, முதலில் கோபாலபுரம் போய் தயாளு அம்மாவிடம் வாழ்த்தைப் பெற்ற ஸ்டாலின். கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடங்களில் வணங்கிவிட்டு, வீட்டில் தன்னை சந்திக்க வந்த கட்சியினருக்கு புத்தம்புது நூறு ரூபாய் நோட்டுக்களுடன் பொங்கல் வாழ்த்தையும் தெரிவித்தார். அன்றே பல்வேறு பொங்கல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொதுமக்களைய

"ஹலோ தலைவரே, உலகத் தமிழினமே தமிழர் திருநாளான பொங்கல் விழாவை கோலாகலமாகக் கொண்டாடியிருக்கு.''”

"அதுக்கு முன்னதாகவே தமிழக சட்டப் பேரவையில் நம்ம தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஜ்பவனின் அதிகார மமதைக்கு எதிரா பொங்கல் வச்சி, தமிழன்னா யாருன்னு காட்டிட்டாரே?''’

dd

"ஆமாங்க தலைவரே, சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட திராவிடப் பொங்கல் ஒட்டு மொத்த தமிழர்களையும் நிமிர வச்சிருக்கு. கவர்னருக்கு எதிரான முதல்வரின் அதிரடித் தீர்மானத்தை எதிர்க்கட்சியினரும் கூட மனசுக் குள் ரொம்பவே ரசிச்சாங்க. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தமிழர் திருநாளான தைப்பொங்கலையும் ரொம்பவே உற்சாகமாக் கொண்டாடினார். ஒருபக்கம் "சென்னை சங்கமம்- நம்ம ஊர் திருவிழா'வை ரசனையோட தொடங்கி வச்ச அவர், தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் கூடத்திலும் ராஜ்பவனுக்கு எதிராக ஏகத்துக்கும் பொங்கித் தீர்த்தார். 15ஆம் தேதி வழக்கமான வெள்ளை உடைக்கு பதிலா. பட்டுவேட்டி சட்டை அணிந்தபடி, முதலில் கோபாலபுரம் போய் தயாளு அம்மாவிடம் வாழ்த்தைப் பெற்ற ஸ்டாலின். கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடங்களில் வணங்கிவிட்டு, வீட்டில் தன்னை சந்திக்க வந்த கட்சியினருக்கு புத்தம்புது நூறு ரூபாய் நோட்டுக்களுடன் பொங்கல் வாழ்த்தையும் தெரிவித்தார். அன்றே பல்வேறு பொங்கல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொதுமக்களையும் கட்சியினரையும் உற்சாகப் படுத்தியிருக்கார்.''”

"ராஜ்பவன் பொங்கல் விழா எப்படி இருந்தது?''”

"பொங்கல் விழாவை கவர்னர் ஆர்.என். ரவி, 12ஆம் தேதி ராஜ்பவனில் கொண்டாடி னார். இதில் கலந்துகொள்ளுமாறு ராஜ்பவனில் இருந்து அழைப்பு அனுப்பப்பட்டும், சட்டப் பேரவையில் கவர்னர் ஏறுக்கு மாறாக நடந்து கொண்ட முறையால், முதல்வர் உள்ளிட்ட ஆளும் தரப்பினர் முழுதாக அந்த விழாவைப் புறக்கணித்தனர். அதேபோல் 99 சதவீத ஐ.ஏ. எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் கவர்னர் விழாவைப் புறக்கணித்து, தங்கள் உணர்வைப் பிரதிபலித்த னர். இது, ஒட்டுமொத்த தமிழ்நாடும் ராஜ் பவனைப் புறக்கணித்த மாதிரி இருந்தது. அதே நேரம், சிவ்தாஸ்மீனா, முருகானந்தம், ஜெகன் னாதன், அனந்தகுமார் மற்றும் விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி உள்ளிட்ட ஒருசில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டும் ராஜ்பவனில் ஆஜரானார்கள். இவர்கள் ராஜ்பவன் செல்ல, அரசின் அனுமதியைப் பெற்றார்களா? என்ற விவாதம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியி லேயே நடந்தது. ராஜ்பவன் சென்ற அதிகாரிகள் பட்டியலில் முதல்வரின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுத்துறைச் செயலாளர் ஜெகன்னாதனும் இருந்தது பலரையும் தகிக்க வைத்திருக்கிறது. ராஜ்பவன் சென்றவர்களை வைத்தே ஆர்.எஸ்.எஸ். ஆதரவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் யார் யார் என்ற பட்டியல் எடுக்கப் பட்டிருக்கிறதாம்.''”

"மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப் பட்டிருக்கே?''”

"இதுபற்றி அவங்க கட்சித் தரப்பிலேயே விசாரிச்சேங்க தலைவரே, தன் மீது அதிக கவனம் திரும்பணும்னு நினைச்ச அண்ணாமலை, தன் உயிருக்கு ஆபத்து இருப்ப தாக உளவுத்துறை மூலம் ஒரு ரிப்போர்ட்டை ரெடி பண்ணி, இசட் பிரிவு பாதுகாப்பை வாங்கிக்கிட்டார்னு நமட்டுச் சிரிப்போடு சொல்றாங்க. இவ்வளவு பெரிய பாதுகாப்பைக் கொடுக்கற அளவுக்கு அரசியல்ல அவர் அப்படி என்ன அதிரடியில் இறங்கினார்? அவர் உயிருக்கு அச்சுறுத்தல்னு சொல்றதெலாம் கட்டுக்கதை. இவரது இந்த இசட் பிரிவு பாதுகாப்பு ஆசைக்கான செலவெல்லாம் மக்களின் வரிப்பணத்தில் இருந்துதானே போகப்போகுது என்றும், அவர்களே ஆதங் கத்தைத் தெரிவிக்கிறார்கள். இதற்கிடையே, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இருப்பதாகக் காட்டவும், அதை உருவாக்கவும் தான் அண்ணாமலைக்கு இப்படியொரு பாது காப்பு கொடுக்கப்பட்டிருக்குன்னு காவல்துறை மட்டத்திலேயே விமர்சனம் எழுந்திருக்கு.'”

"எடப்பாடி மீது த.மா.கா. வாசன் எரிச்சல்ல இருக்காரே?''”

rr

"கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில், அ.தி.மு,.க. கூட்டணியில் த.மா.கா. சார்பில் யுவராஜா போட்டி யிட்டார். எனினும் தி.மு.க. கூட்டணியில் காங் கிரஸைச் சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா. வெற்றிபெற்றார். அவர் மறைவை யொட்டி இடைத் தேர்தலை சந்திக்க இருக்கும் இந்தத் தொகுதியில், த.மா.கா. மீண்டும் களமிறங்கத் துடிக்குது. ஆனால் எடப் பாடியோ, கூட்டணி தர்மத் தின்படி, த.மா.கா.வுக்கு இந்தத் தொகுதி யை ஒதுக்க எனக்கு விருப்பம் தான். ஆனால், இடைத்தேர்தலில் தி.மு.க. கூட் டணியை தோற் கடிக்கணும்னா அ.தி.மு.க.தான் போட்டியிட வேண்டும்னு எங்கள் கட்சி சீனியர்கள் விரும்புகிறார்கள். உங்கள் கட்சி போட்டியிட்டால், எளிதாக அவர்கள் ஜெயித்து விடுவார்கள். அதனால், இந்தமுறை உங்களை விட பலமான நாங்களே நிற்க இருக்கிறோம்னு வாசனிடமே சொல்லியிருக்கிறார். இதைக்கேட்டு எரிச்சலான வாசன், ’போங்கய்யா நீங்களும் உங்க கூட்டணி தர்மமும்” என்று ஆவேசப்பட்டதோடு, எடப் பாடி தரப்பிடம் இருந்து ஈரோடு கிழக்கை வாங்க, டெல்லி சிபாரிசைப் பிடிக்கலாமா? என்று தாயம் உருட்டுகிறாராம். இப்பவே அந்தப் பக்கம் கூட்டணி மோதல் ஆரம்பிச்சிடுச்சி.''”

"ஆவினிலும் சலசலப்பு தெரியுதேப்பா?''”

"முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி காலகட்டத்தில், தேர்தல் தேதி அறிவிக்கப் போகிறார்கள் என்று தெரிந்த நிலையிலும், அவசரம் அவசரமாக ஆவின் நிறு வனத்தில் 238 பணியாளர் களைப் பல்வேறு பணிகளுக் காக, பல்வேறு நிலைகளில் நேரடியாகப் பணி நியமனம் செய்தார்கள். இந்த அவசரகதி நியமனங்களுக்கு உத்தரவு போட்டவர் அன்றைக்கு ஆவின் நிறுவன நிர்வாக இயக்குநராக இருந்த நந்த கோபால் ஐ.ஏ.எஸ்.தான். அன்றைய பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜியும் நந்தகோபால் ஐ.ஏ.எஸ்.ஸும் இணைந்தே அந்த நியமனத்தை செய் திருந்தனர். இரண்டு வருடம் கழிந்திருக் கும் இந்த சூழலில், இந்தப் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகவும் கரன்சிகள் ஏகத்துக்கும் வசூலிக்கப்பட்டதாகவும் புகார்கள் குவிந்ததால், தற்போதைய ஆவினின் நிர்வாக நியக்குனர் சுப்பையன் ஐ.ஏ.எஸ்., அந்த பணி நியமனங்களை அதிரடியாக ரத்து செய்துவிட்டார். அதுதான் சம்பந்தப்பட்ட ஆவின் பணியாளர்களைப் பொங்க வச்சிருக்கு.''”

rr

"நானும் இது தொடர்பான தகவல் ஒன்றைப் பகிர்ந்துக்கறேன். இந்த அதிரடி உத்தரவால் பாதிக்கப்பட்ட ஆவின் பணியாளர்கள், அந்த ரத்து உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத் தின் கதவைத் தட்டினார்கள். வழக்கை விசாரித்த நீதிமன்றம், எவ்வித விளக்கமும் கேட்காமல் தன்னிச்சையாக இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறி, சுப்பையன் ஐ.ஏ.எஸ். எடுத்த நடவடிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருக்கிறது. இது ஒரு புறமிருக்க, ஆவினில் உள்ள துணைப் பதிவாளர் கள்தான் செலக்சன் கமிட்டியில் இருந்தார்கள். அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்காமல், பணியாளர்களை மட்டும் தண்டிப்பது நியாயமா? என்ற ஆதங்கக் குரல் ஆவினில் அதிகம் கேட் கிறது.''

nkn180123
இதையும் படியுங்கள்
Subscribe