ராங்கால் மா.செ.க்களை எச்சரித்த ஸ்டாலின்! முதல்வரிடம் கவர்னர் வன்மம்! வசூல் யாத்திரை! பா.ஜ.க. களேபரம்!

ff

"ஹலோ தலைவரே, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் தமிழக விசிட்டின்போது, முதல்வர் ஸ்டாலின் மீதான கவர்னரின் தனிப்பட்ட வன்மம் பகிரங்கமாக வெளிப்பட்டிருக்கு''”

"ஆமாம்பா, நானும் கவனிச்சேன்.''”

"சென்னை பல்கலைக்கழகத்தின் 165ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் முர்மு சென்னை வந்திருந்தார். அவரை தமிழக முதல்வர் ஸ்டாலினும் கவர்னர் ஆர்.என்.ரவி யும் விமானநிலையம் சென்று வரவேற்றனர். பல்கலைக்கழக விழாவில் கவர்னர் தமிழில் வரவேற்புரையாற்றியதைக் கூட ஸ்டாலின், புன்னகையோடு ரசித்தார். அப்படி இருந் தும், ராஜ்பவனின் அதி காரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், ஜனாதிபதியை கவர்னர் ரவி வரவேற்கும் புகைப்படத்தை பதிவேற் றும்போது, கவர்னர் அருகில் நின்றுகொண்டி ருந்த முதல்வர் ஸ்டாலினின் படத்தை வெட்டி விட்டு, அதை வெளியிட வைத்திருக்கிறார் கவர் னர். இதன்மூலம் முதல் வர் ஸ்டாலின் மீதான தனிப்பட்ட வன்மத்தை கவர்னர் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருப்பதை, பலரும் சோசியல் மீடியாக்களில் விமர்சனம் செய்திருக்காங்க.''”

"அதைவிடுப்பா, தி.மு.க. மா.செ.க்கள் கூட்டத்தை ஸ்டாலின் நடத்தியிருக்காரே?''”

ff

"ஆமாங்க தலைவரே, நாடாளுமன்றத் தேர்தலுக் காக பூத் கமிட்டி கூட்டங்களை நடத்தி வந்த தி.மு.க., இதில் பல்வேறு இடங்களில் பிரச்சனை வெடித்ததால் ஷாக் ஆனது. இதையொட்டித்தான் கட்சியின் மா.செ.க்கள் கூட்டத்தைக் கூட்டியிருந்தார் ஸ்டாலின். கட்சி வரலாற்றில் இதுவரை இல்லாதபடி, இந்தக் கூட் டத்தை அவர் காணொலிக் காட்சி வழியாக நடத்தினார். இதை மா.செ.க்கள் யாரும் ரசிக்கவில்லை. இருந்தும் இது குறித்து தலைமையிடம் பேச எல்லோருமே தயங்கினர். அமைச்சர்களில் ஒருவரான எம்.ஆர்.கே., கனடா போயிருந்த நிலையில், அங்கிருந்தபடியே கூட்டத்தில் கலந்துக்கிட்டார். இந்தக் கூட்டத்தில் கலந்துக்கிட்ட மா.செ.க்கள் யாரும் தங்கள் கருத்தை

"ஹலோ தலைவரே, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் தமிழக விசிட்டின்போது, முதல்வர் ஸ்டாலின் மீதான கவர்னரின் தனிப்பட்ட வன்மம் பகிரங்கமாக வெளிப்பட்டிருக்கு''”

"ஆமாம்பா, நானும் கவனிச்சேன்.''”

"சென்னை பல்கலைக்கழகத்தின் 165ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் முர்மு சென்னை வந்திருந்தார். அவரை தமிழக முதல்வர் ஸ்டாலினும் கவர்னர் ஆர்.என்.ரவி யும் விமானநிலையம் சென்று வரவேற்றனர். பல்கலைக்கழக விழாவில் கவர்னர் தமிழில் வரவேற்புரையாற்றியதைக் கூட ஸ்டாலின், புன்னகையோடு ரசித்தார். அப்படி இருந் தும், ராஜ்பவனின் அதி காரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், ஜனாதிபதியை கவர்னர் ரவி வரவேற்கும் புகைப்படத்தை பதிவேற் றும்போது, கவர்னர் அருகில் நின்றுகொண்டி ருந்த முதல்வர் ஸ்டாலினின் படத்தை வெட்டி விட்டு, அதை வெளியிட வைத்திருக்கிறார் கவர் னர். இதன்மூலம் முதல் வர் ஸ்டாலின் மீதான தனிப்பட்ட வன்மத்தை கவர்னர் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருப்பதை, பலரும் சோசியல் மீடியாக்களில் விமர்சனம் செய்திருக்காங்க.''”

"அதைவிடுப்பா, தி.மு.க. மா.செ.க்கள் கூட்டத்தை ஸ்டாலின் நடத்தியிருக்காரே?''”

ff

"ஆமாங்க தலைவரே, நாடாளுமன்றத் தேர்தலுக் காக பூத் கமிட்டி கூட்டங்களை நடத்தி வந்த தி.மு.க., இதில் பல்வேறு இடங்களில் பிரச்சனை வெடித்ததால் ஷாக் ஆனது. இதையொட்டித்தான் கட்சியின் மா.செ.க்கள் கூட்டத்தைக் கூட்டியிருந்தார் ஸ்டாலின். கட்சி வரலாற்றில் இதுவரை இல்லாதபடி, இந்தக் கூட் டத்தை அவர் காணொலிக் காட்சி வழியாக நடத்தினார். இதை மா.செ.க்கள் யாரும் ரசிக்கவில்லை. இருந்தும் இது குறித்து தலைமையிடம் பேச எல்லோருமே தயங்கினர். அமைச்சர்களில் ஒருவரான எம்.ஆர்.கே., கனடா போயிருந்த நிலையில், அங்கிருந்தபடியே கூட்டத்தில் கலந்துக்கிட்டார். இந்தக் கூட்டத்தில் கலந்துக்கிட்ட மா.செ.க்கள் யாரும் தங்கள் கருத்தை எடுத்துச்சொல்ல அதிக ஆர்வம் காட்டலையாம்.''”

"அதே சமயம்,கட்சி மா.செ.க்களுக்கு இந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்திருக்காரே?''”

rr

"உண்மைதாங்க தலை வரே, கட்சியில் அமைச்சர் களுக்கும், மா.செ.க்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும், பூத் கமிட்டி உறுப்பினர்களுக் கும் இடையே ஒற்றுமை இல்லாததையும், தேர்தல் பணிகளில் ஆர்வம் இல்லாததையும், முரண்பாடுகள் அதி கரித்து வருவதையும் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், மா.செ.க்களைக் கடுமையாகக் கடிந்துகொண்டார். அப்போது அவர், ‘"எத்தனையோ முறை உங்களை எல்லாம் எச்சரித்திருக்கிறேன். ஆனாலும், நீங்கள் திருந்த மாட்டேன் என்கிறீர்கள். இனியும் இப்படி இருந்தால் நான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கமாட்டேன்'’என்று ஸ்டாலின் தன் கோபத்தைக் கொட்டி அவர்களை அதிரவச்சிருக்கார். மேலும், "ஒற்றுமை இல்லாதது உங்களுக்கும் நல்லதல்ல, கட்சிக்கும் நல்லதல்ல. கட்சி நல்லா இருந்தால்தான், நீங்கள் நன்றாக இருக்க முடியும். கட்சியும் ஆட்சியும் இங்கிருக்கும் நிர்வாகிகளுக்கு மட்டும் சொந்தமானதல்ல, கட்சித் தொண்டர்களுக்கும் சொந்தமானது. இதை எல்லாம் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்' என்று அட்வைஸும் செய்திருக்கிறார் ஸ்டாலின்.”

"பாத யாத்திரை நடத்திய பா.ஜ.க. அண்ணாமலை, பாதியிலேயே டெல்லி தன்னை அழைத்ததாகச் சொல்லிவிட்டு, ஸ்பாட்டில் இருந்து கிளம்பிவிட்டாரே?''”

rr

"அண்ணாமலை, தனது ‘"என் மண்; என் மக்கள்'’ பாத யாத்திரையைத் தொடங்கும்போதே, கட்சியினரிடமும் தொழி லதிபர்களிடமும் கணிசமாக வசூலித்துவிட்டார் என்கிறார்கள் பா.ஜ.க. நிர்வாகிகள். இது தவிர பிரச்சாரத்துக்கான விளம்பர செலவு, ஆள் திரட்டும் செலவு என்று அவர் சொல்ல, பா.ஜ.க. வின் அகில இந்தியத் தலைமையும் தன் பங்கிற்கு அண்ணா மலைக்கு 20 கோடி ரூபாய் வரை மொய் எழுதியிருக்கிறதாம். இருந்தும் அண்ணாமலையால் சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று நான்கு கிலோ மீட்டருக்கு மேல் நடக்க முடியவில்லை யாம். இத்தனை நாள் லக்ஸுரியாகவே இருந்ததால் அவர் உடல் நிலை, பாத யாத்திரைக்கு ஒத்துழைக்கவில்லை. வயிற்றுக் கோளாறும் அவரை சங்கடப்படுத்த ஆரம்பித்துவிட்டது. இதனால் நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறிய அண்ணாமலை, டெல்லியில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகச் சொல்லிவிட்டு, யாத்திரையில் இருந்து பாதியிலேயே அவர் சென்னைக்கு மூட்டை கட்டிவிட்டார். எனினும் கட்சி நிர்வாகிகள், இப்படி அடிக்கடி நடைபயணத்திற்கு கேப் விடுவது சரியல்ல என்று அறிவுறுத்தி வருகின்றனர். அண்ணா மலையின் யாத்திரை, பாத யாத்திரை அல்ல; வசூல் யாத்திரை’ என்ற விமர்சனமும் இப்போது அவர்கள் தரப்பிலேயே வைக்கப்படுகிறது.''”

"சரிப்பா, பா.ஜ.க. அண்ணாமலைக்கும் எடப்பாடிக்கும் ஏழாம் பொருத்தம் என்றாலும், எடப்பாடித் தரப்பினர் அண்ணாமலையுடன் நெருக்கம் பாராட்டறாங்களே?''”

“"உண்மைதாங்க தலைவரே, அண்ணாமலை மீது கடும் எரிச்சலிலேயே இருக்கும் எடப்பாடி, அவரை தமிழக பா.ஜ.க,. தலைவர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று, டெல்லிக்கு இப்போது வரை கோரிக்கை வைத்தபடியே இருக்கிறார். இது ஒருபக்கம் என்றால், எடப்பாடி தரப்பில் இருக்கும் அடுத்த கட்டத் தலைவர்கள் பலரும், எடப்பாடிக்குத் தெரியாமலே அண்ணாமலையிடம் நெருக்கமாக நட்பு பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் அண்ணாமலை தனது பாத யாத்திரையைக் காரணம் காட்டி, நிதி கேட்டதும், எடப்பாடி தரப்பைச் சேர்ந்த மாஜி மந்திரி விஜய பாஸ்கர் 5 ’சி’ வரை அள்ளிக் கொடுக்க, தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட மாஜிக்களும் தங்கள் விருப்பம்போல் அவரிடம் தாராளம் காட்டியிருக் கிறார்களாம். டெல்லியின் கோபப் பார்வை தங்கள் பக்கம், அமலாக்கத் துறை, வருமான வரித்துறை என்று பாயாமல் இருக்கவே இவர்கள் எடப்பாடியையும் மீறி, அண்ணா மலையிடம் நட்பு பாராட்டி வருவதோடு, அவருக்கு அடிக்கடி கப்பமும் கட்டுகிறார்களாம்.''”

"சரிப்பா, தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை, அக்கட்சியின் தலைமை டெல்லிக்கு அழைத்து கூட்டம் நடத்தியிருக்குதே?''”

rr

"நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஒவ்வொரு மாநில காங்கிரஸ் தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்திவருகிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. அந்த வகையில் கடந்த 4ஆம் தேதி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட கட்சியின் முன்னாள் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என சுமார் 60-க்கும் மேற்பட்டோர் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ராகுல்காந்தி முன்னிலை யில் அவர்களுடன் இந்த ஆலோசனைக் கூட் டத்தை நடத்தினார் கார்கே. விவாதத்தின் போது, "கட்சி பலவீனமாக இருக்கிறது. அதை சரிசெய்ய என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்'னு கார்கே, அவர்களிடம் கருத்து கேட்டிருக்கிறார்.''”

"அப்போது சிலர், "தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியை மாற்றணும்'னு சொல்லியிருக்காங்களே?''”

’"ஆமாங்க தலைவரே, இங்கிருந்து சென்ற பலரும் தலைவர் மாற்றம் இருந்தால்தான் கட்சியை வளர்க்க முடியும்னு ஒருமித்த குரலில் சொல்ல, அப்போது குறுக்கிட்ட ராகுல், "தலைவரை மாற்று வது இருக்கட்டும். இங்கு வந்திருக்கும் ஒவ்வொரு வரும் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்க என்ன செய்திருக்கிறீர்கள்? தொகுதியின் வளர்ச்சிக்கு என்ன செய்திருக்கிறீர்கள்?' என கேட்க, எல்லோரும் கப்சிப் ஆகிவிட்டார்கள். அடுத்து, திருநாவுக்கரசு உள்ளிட்ட எம்.பி.க்கள் சிலர், "கடந்த முறையை விட அதிக எண்ணிக்கையில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும். அதற்கேற்ப தி.மு.க.விடம் பேசி அதிக இடங்களைப் பெற வேண்டும். ஒரு வேளை அதிக இடங்கள் கிடைக்காது போனாலும், சிட்டிங் தொகுதிகளை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண் டும். அந்த தொகுதிகளை நாம் இழந்துவிடக்கூடாது' என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். பொதுவாக, இந்தமுறை கூடுதல் தொகுதிகளில் நாம் போட்டியிட வேண்டும் என்பதை மட்டும் பலரும் சொல்லியிருக்கிறார்கள். இதனை காங்கிரஸ் தலைமை கவனத்தில் எடுத்துக்கொண்டதாம்.''”

rr

"புதுச்சேரி முதல்வரின் பிறந்தநாள் பரபரப்பைக் கேள்விப்பட்டீங்களா தலைவரே''”

"உன் காதுக்கும் அந்த மேட்டர் வந்துடுச்சா?… ஆகஸ்ட் 4-ஆம் தேதி பிறந்த தினத்தைக் கொண் டாட அவரது கட்சிக்காரர்களும் தொண்டர்களும் ஆயத்தமா இருக்க, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையும் அவரை வாழ்த்துவதற்காக கிளம்பி வந்திருக்காங்க. இதற்கிடையில் முதல்வருக்கு நெருக்கமான, "சத்தியம் சிவம்'…வரிசையில் கடைசிப் பெயரைக் கொண்டவரும் அவரது துணையும் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு அழைக்காத வருத்தத்தில் போனில் பலமுறை அழைச்சிருக் காங்க. முதல்வர் போனை எடுக்காததில் "அமைதி'யை இழந்த அந்தப்பெண் விஷம் குடித்து, ஜிப்மருக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்காராம். ஆளுநர் வரும் நேரத்தில் இந்தத் தகவல் முதல்வர் காதுக்கு வர, ஆளுநரைக்கூட வரவேற்காமல் அடித்துப்புரண்டு பார்க்கக் கிளம்பியிருக்காராம் முதல்வர். இதில் தலைவரின் பிறந்தநாளை சரிவரக் கொண்டாட முடியாததில் தொண்டர்களும், கட்சிக்காரர்களும் ஏக அப்செட்டாம். நேரம் குறித்துத்தானே வந்தோம், ஏன் முதல்வர் கிளம்பிவிட்டார் என கவர்னரும் வருத்தத்தில் உள்ளாராம்.''

"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகும் எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் இருப்பைக் காட்டும் விதமாக, ஆர்ப்பாட்டம், போராட்டம், மாநாடுன்னு நடத்த ஆரம்பிச் சிடுச்சி. இந்த வகையில் பா.ம.க. விரைவில் ஒரு மாநாட்டை நடத்தத் தயாராகிவருகிறது. குறிப்பாக வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு கோரிக்கை யை முன்னிறுத்தி இந்த மாநாட்டை பா.ம.க. நடத்தப்போகிறது. இது தொடர்பான ஆலோசனைகளை அன்புமணி தீவிரமாக நடத்திக் கிட்டிருக்கார்.''’

nkn090823
இதையும் படியுங்கள்
Subscribe