தி.மு.க. அரசின் முதல்வர் ஸ்டா-ன் நியமித்த பொருளியல் அறிஞர் ஆலோசனை ஐவர் குழுவை, தினமும் மலரும் நாளிதழில் மூன்று சனாதனிகள், திராவிடர்களிடையே பொருளியல் அறிஞர்கள் இல்லையா? ஐவரில் மூவர் பிராமணர்கள்.

1. அரவிந்த் சுப்ரமணியன்

2. இரகுராம் ராஜன்

3. டாக்டர் எஸ்.நாராயணன், ஐ.ஏ.எஸ்.

Advertisment

மற்ற இருவரும் வெளிநாட்டினர் என்றனர்.

சமூகநீதி என்றால் அர்த்தம் புரியாத மூவர், "காணாமல் போன சமூகநீதிக் கொள்கை' என்று ஐவர் குழு நியமனத்தை சாடியுள்ளனர்.

sa

Advertisment

ஸ்ரீராம் சேஷாத்ரி, இரமேஷ், எஸ்.எஸ். ஸ்ரீராம் ஆகியோர், “திராவிட இயக்கத்தின் வழி வந்தவர்கள். "நாங்கள், ஒருநாளும் பிராமணர்களை யும் பிராமண சித்தாந்தத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என்றவர்களுக்கு, இன்றைக்கு தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த உலகப் புகழ்பெற்ற பிராமணர்கள் வேண்டுமா? என்றும், "சமூகநீதி பேசக்கூடிய தி.மு.க. ஆட்சியில்தான் இப்படி நடக்கிறது. அவர்களுக்கு தேவையென்றால், பீகார் பிராமணர் பிரசாந்த் கிஷோர் வேண்டும், பொரு ளாதரத்தைச் சீர்செய்ய மூன்று பிராமணர்கள் ஆலோசனைக்குத் தேவைப்படுகிறார்கள். "இது தான், திராவிட இயக்க சிந்த னையா?' என்றும் கேட்டுள்ளனர். அடுத்து இரமேஷ் என்பவர் "தி.மு.க. என்றாலே பேச்சுக்கும் செயலுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது'' என்றார். "ஆடிட்டர், வழக்கறிஞர்கள் என்று பிராமணர்களையே நாடுவர்'' என்று கலாய்த்துள்ளார்.

ஆக, "திராவிடச் சிந்தனை உள்ளவர்களுக்கு பொருளாதாரம் தெரியாதா? இப்படி ஒரு "சீன்' போட்டுக் காட்டு கிறார்கள்'' என்றும் விமர்சனம் வந்துள்ளது.

"அரவிந்த் சுப்ரமணியனும் இரகுராம் ராஜனும் ஒன்றிய அரசின் ஆலோசகர்களாக இருந்தபோதுதான் பொருளாதாரம் சரிந்தது'' என்று அங்கலாய்க்கிறார். எனவே, பிராமணர் களோடு வெளிநாட்டினரையும் கூவி அழைத்துள்ள னர்'' என்கிறார்.

மூன்றாவதாக, எஸ்.எஸ்.ஸ்ரீராம் என்பவர், "பிராமணர்களை ஆலோசகர்களாக ஸ்டாலினுக்கு அமர்த்தியதன் மூலம் தி.மு.க.வின் வெற்றுப் பிரச்சாரம் வெளிவந்துவிட்டது.'' என்கிறார்.

sa

"அந்த மூன்று பிராமணர்கள் அறிவார்ந்த பொருளாதார மேதைகள் என எடுத்துக்கொண்டால், உங்களுக்கும் பொருளாதார அறிஞர் என்று சொல்ல ஒரு திராவிடன் கூட இல்லையா? அந்த அளவிற்கு அறிவுப் பஞ்சம் உள்ளவர்கள்தான், கூடவே இருக்கும் திராவிடர்களா? அப்படி அது நிஜம் என்றால், பிராமணர்கள் என்றால், ஏன் இளக்காரமாக உள்ளது?'' என்றும் கேட்கிறார்கள்.

மேலும், பொருளாதார ஆலோசனைக் குழுவில் உள்ள சிலர் இலவசங்களுக்கு எதிரானவர்கள், ஆனால் திராவிடக் கட்சிகள் sஇலவசங்களை நம்பியுள்ளனர். எனவே இவர்களது சிபாரிசுகளை தி.மு.க. ஏற்குமா என்பது ஐயமே என்று விமர்சிக்கும் மூவரும், இந்திய -தமிழக சமூகப் பொருளாதாரத்தை கருத்தில் கொள்ளாமல், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. சனாதன சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

அவர்களுக்கு நம் விடை:

முதலில் ஒரு பிராமணர் கடல் கடந்து சென்றால் பிராமணர், இந்து அல்ல என்பது இந்து சாஸ் திரம். அதனால்தான், உலகப் புகழ் கணிதமேதை இராமானுஜன் இறந்த பின்னர் அவருக்கு ஈமச்சடங்கு செய்ய ஒரு பட்டாச்சாரியும் வர மறுத்துவிட்டனர்.

காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை யுண்டவர், சென்னை உயர்நீதிமன்றத் தில் "ஜெயேந்திரர் சீனாவிற்கு செல் லக்கூடாது, கடல் கடந்து செல்வது இந்து துறவிக்கு எதிரானது' என்று வழக்குத் தொடுத்து தடை ஆணை யைப் பெற்றுள்ளார்.

ஆக, பிராமணன் என்ற வாதம் சொத்தையானது. இது சாதியில்லை, புரோகிதத் தொழிலாகும். ரிக் வேதத் தில் கூறப்பட்ட எட்டு வகை புரோகி தர்களில் பிராமணப் புரோகிதர் எட்டா வதாக வருபவர். இங்கு ஆலோசனைக் குழுவில் உள்ள மூவரும் பிராமணர்கள் அல்ல மிலேச்சர்கள். கமலா ஹாரிஸ் போல அனைத்து உணவுகளை உண்டு, அனைத்தையும் படித்து மேதாவிகளாக உள்ளனர்.

வேதத்தைக் கேட்டால், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று. படித்தால் நாக்கைத் துண்டித்துவிடு என்ற பிராமண அராஜகத்தால் சூத்திரர் கள், திராவிடர்கள், பஞ்சமர்கள் படிக்க வாய்ப்பை இழந்தனர். சமஸ்கிருதம் தெரியாதவ ன் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாது. நீதிக்கட்சியின் ஆட்சியில் பனகல் அரசர் மதராஸ் இராஜதானியில் முதல்வராக இருந்தபொழுது இந்தத் தடையை நீக்கினார்.

இந்து சாஸ்திரப்படி ஒரு பிராமணன் மருத்துவப் படிப்பை ஏற்கக்கூடாது என்று அக்கினிகோத்ர ராமானுஜ ஐயங்கார், "இந்துமதம் எங்கே போகிறது?' என்ற நூலில் எழுதியுள்ளார். வருணாஸ்ரம ஜாதி அடுக்குமுறையால், பாதிக்கப்பட்ட திராவிடர்கள், கல்வி மேம்பாட்டில் முன்னணியில் மிகச்சிலரே வர முடிந்தது என்பது உண்மை.

"சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய சமூகத்தினருக்கு வேலையிலும், கல்வியிலும் தனி இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும்' என்று அம்பேத்கர் வாதிடும்போது... வரலாற்று ரீதியில் ஒன்றுதிரண்டுள்ள இயலாமைகளால் (ஐண்ள்ற்ர்ழ்ண்ஸ்ரீஹப்ப்ஹ் ஹஸ்ரீஸ்ரீன்ம்ன்ப்ஹற்ங்க் க்ண்ள்ஹக்ஷண்ப்ண்ற்ண்ங்ள்) என்றார். இதற்கு முழுமுதற்காரணம் பிராமணர்களும், பிராமணிய மும் ஆகும்.

வேதவியாசரும், வால்மீகியும், விசுவாமித் திரரும் பிராமணர்கள் அல்லவே. இந்துக்கள் வணங்கும் கடவுள்கள் பிராமணர்கள்ss இல் லையே. பிராமணர் கள் திராவிடர் களை நம்பி ஆட்சி செய்த வரலாறு உண்டு.

1. இந்தியா விடுதலை பெற்றபின் இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார். இவர் காங்கிரஸ் கட்சி அல்ல. என்றாலும், நேரு என்ற பிராமணர், ஒரு சூத்திரரை நிதித்துறையில் அறிவாளி என்ற முறையில் அமைச்சராக்கினார். இவர் நீதிக் கட்சியைச் சார்ந்தவர். பெரியார் குழுமத்தில் இருந்தவர்.

ஏன் பிராமணர் நேரு, திராவிடர் ஆர்.கே.சண்முகத்தை, தமிழரை, சூத்திரரை இந்தியாவின் முதல் நிதியமைச்சராக நியமித்தார்? பிராமணரில் பொருளாதார மேதை இல்லையா? பிராமணர்கள் நிதியில் மூடர்களா? என்ற பல வினாக்கள் எழுகின்றன.

2. 1990-களில் இந்தியப் பொருளாதாரத்தில் உள்ளும் புறமும் மாபெரும் சிக்கல்கள் ஏற்பட்டபொழுது, பிராமணர், பி.வி.நரசிம்மராவால் ஏன் இந்து அல்லாத சீக்கியரான டாக்டர் மன்மோகன்சிங் நிதியமைச்சராக அமர்த்தப்பட்டார்? கலப்படமில்லாத சனாதன முதலாளித்துவ பொருளாதார மேதை, அமெரிக்க பல்கலைக்கழகப் பேராசிரியரான டாக்டர் சுப்பிரமணிய சாமியை ஏன் நிதியமைச்சராக நியமிக்கவில்லை?

3. இந்தியாவின் அணுகுண்டு பரிசோதனையை வெற்றிகரமாக 1998-இல் இராஜஸ்தான் பாலைவனத்தில் பொக்ரான் 2-ஐ செய்த இஸ்லாம் சூத்திரர் டாக்டர் அப்துல்கலாம்தான் இந்தியாவின் "ஏவுகணைகளின் தந்தை' ஆவார். ஏன் பிராமணர் கஸ்தூரிரங்கன், இந்தப் புகழை அடையவில்லை. இவருக்கு அணுவில் போதிய ஞானம் இல்லையா? பிராமணர் வாஜ்பாய் தூங்கிவிட்டாரா?

4. இந்தியாவில் முதன்முதலில் பொருளியலில் நோபல் பரிசு பெற்ற வங்காளி, ஒரு சூத்திரர், திராவிடர். அவர் பிராமணர் அல்ல என்பதை அவரே சென்னைக்கு வந்த பொழுது யஐந (யர்ப்ன்ய்ற்ங்ழ் ஐங்ஹப்ற்ட் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்) மருத்துவமனையில் நடந்த வரவேற்பு உரையில் ஓ.கே. என்று கூறினார்.

அந்தக் கூட்டத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் இருந்தார். நானும் அங்கு அமர்ந்திருந்தேன். இவருக்கு ஈடு இணையாக எந்தப் பிராமணப் பொருளியல் அறிஞர்களும் இல்லை. டாக்டர் சுப்ரமணியசாமி, இரகுராம் ராஜனையும், நிர்மலாவையும் பொருளாதாரத்தில் ஒன்றும் தெரியாதவர்கள் என்று சாடியுள்ளார். பிரதமர் மோடிக்கு பொருளியல் பயிற்சி இல்லை என்றார். இரகுராம் ராஜனும் அரவிந்த் சுப்ரமணியனும் பண மதிப்பிழப்பையும் பண்டம் மாற்று சேவை வரிகளை (ஏநப) ஒத்துக்கொள்ள வில்லை. இலவசங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் பரவாயில்லை. எல்லோரும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.

வறுமை, வேலையின்மை, பொரு ளாதார ஏற்றத்தாழ்வுகள், சேமிப்பு, முதலீடு, குறைந்த வாழ்க்கைத்தரம், உற்பத்திக் குறைவு, வேளாண்தொழில், சேவை, கடன், கல்வி, சுகாதாரம் போன்றவற்றை சீர் செய்வதே இன்றைய சிக்கல்கள் ஆகும். இதில் பிராமணர், சூத்திரர், பஞ்சமர் என்பதற்கு வேலை இல்லை.

அம்பேத்கர் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாவார். இவர் ஒரு பஞ்சமர். இவருக்கு இணையாக இந்தியா வில் வேறொரு சட்ட மேதையைக் காண இயலாது. தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு ஈடாக இந்தியாவில் எந்த ஒரு நிதி யமைச்சரும் இல்லை.

இவர், ஸ்டாலினுக்கு பொருளியல் அறிஞர்கள் ஆலோசனைக் குழு அமைப்பதற்கு பின்புலமாக இருந்தார் என்பது பெருமைக்குரிய தாகும். திராவிட இயக்கம் பார்ப்பனியத் திற்கு எதிரியே தவிர, பார்ப்பனர்களுக்கு அல்ல என்பது இம்மூவரை ஆலோசனைக் குழுவில் நியமித்ததிலிருந்து வெள்ளிடைமலை. மற்ற விமர்சனங்கள் யாவும் அர்த்தமற்றது. தனது சிறப்பான தேர்வினால் இந்தியாவைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.