"ஹலோ தலைவரே, போர்க்களத் தைப் பார்க்கற மாதிரி, கோட்டையே பரபரப்பில் மூழ்கியிருக்கு.''”

"ஆமாம்பா, 2022-23ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் 18-ஆம் தேதி தொடங்குதே. அந்தப் பரபரப்பு இருக்கத்தானே செய்யும்.''”

"ஆமாங்க தலைவரே, பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான 18-ஆம் தேதியே பொது பட்ஜெட்டும், 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கலாகுது. இவற்றின் மீதான விவாதம் 21, 22, 23 ஆகிய 3 நாட்கள் மட்டுமே நடக்க இருக்குது. பிறகு, 24-ஆம் தேதி இந்த விவாதங்களுக்கு முதல் வர் ஸ்டாலின் பதிலளிக்கிறார். அதன்பிறகு சபை ஒத்தி வைக்கப்படுது. துறைரீதியான மானியக் கோரிக்கைகள் இப்போது இல்லை. பொதுவாக, தி.மு.க. ஆட்சியில் பட்ஜெட் கூட்டமும் மானியக் கோரிக்கைகள் நிறை வேற்றமும் கேப்பே இல்லாமல் தொடர்ச்சியாக நடக்கும். தற்போது பட்ஜெட்டைத் தனியாக வும் மானியக் கோரிக்கைகளைத் தனியாகவும் தாக்கல்செய்யப் போகிறார் ஸ்டாலின்.''”

"நடுவில் முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் இருக்குதே?''”

Advertisment

rang

Advertisment

"ஆமாங்க தலைவரே, தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்க 26-ஆம் தேதி துபாய் செல்கிறார் முதல்வர். ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளி நாட்டுப் பயணம் இது. வெளிநாடு சென்று திரும்பி வந்ததும் மானியக் கோரிக்கைகளுக் காக, பேரவை கூட இருக்குது. தொழில்துறை யில் ஈடுபாடு கொண்டவரான சபரீசன் முயற்சியில் வெளிநாட்டுத் தொழில் ஒப்பந் தங்கள் சில முடிவு செய்யப்பட லாம்னு தகவல் வருது.''”.

"ரொம்ப நாளைக்குப் பிறகு சென்னையில் மு.க.அழகிரியின் தலை தென்பட்டதே?''”

rang

"ஆமாங்க தலைவரே, தி.மு.க. எம்.பி. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் இல்லத் திருமண வரவேற்பு விழாவுக்கு, தன் குடும்பத்தினரோடு சென்னைக்கு வந்திருந்தார் அழகிரி. தமிழச்சியும், அவரது சகோதரரான அமைச்சர் தங்கம் தென்னரசுவும் அழகிரி குடும்பத்தை உற்சாகத்தோடு வரவேற்றாங்க. விழாவுக்கு வந்த அழகியிடம் தி.மு.க. வினர் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினாங்க. அழகிரி குடும்பத்தை கார்வரை சென்று தங்கம் தென்னரசு வழியனுப்பிவைத் தார். அழகிரியின் இந்த விசிட் ரொம்பவே கவனம் பெற்றது.''”

"கிரிமினல் வழக்கில் சிக்கிய ஒரு பெரிய இடத்து இளைஞரை, அமைச்சர் ஒருவர் காப்பாற்றியதாக பரபரப்பா டாக் அடிபடுதே?''”

"சென்னை திருமங்கலம் பகுதியில் ஆட்டோ மெக்கானிக் ஒருவர் கடை வைத்திருக்கிறார். காஸ்ட்லி பைக்குகளை ரிப்பேர் செய்யக்கூடியவர் என்பதால் பெரிய இடத்துப்பிள்ளைகள் அங்கே எப்பவும் மொய்ப்பாங்க. அப்படிப்பட்ட மெக்கானிக்கை சமீபத்தில் ஒரு மர்மக் கும்பல், அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடியது. இந்த விவகாரத்தை விசாரித்த காவல்துறையினர், ஒரு இளம் பெண்ணைக் காதலிப்பது தொடர்பான போட்டியில் இந்தக் கொடூரத் தாக்குதல் நடந் திருப்பதைக் கண்டுபிடித்தனர். அப்போதுதான் அவர்களுக்குத் தெரியவந்தது, அந்த மர்ம கும்பலை அனுப்பி மெக்கானிக்கை வெட்டச் சொன்னவர், உடன்பிறவா சகோதரி குடும்பத்தைச் சேர்ந்த விவேகமானவர்னும், அவரை விசாரணை வளை யத்துக்குள் கொண்டுவர போலீஸ் ரெடியானப்ப, ஜெ. ஆட்சியிலும் ஸ்டாலின் ஆட்சியிலும் அமைச்சரா இருப்பவர், விவேகமானவருக்கு சிக்கல் ஏற்படாதபடி காப்பாத்திட்டாருன்னும் போலீஸ் தரப்பிலேயே ஷாக் அடிச்ச மாதிரி சொல்றாங்க.''”

"சென்னையின் புதிய மேயர் பிரியாவுக்கு எதிரா அஸ்திரங்களைத் தேட ஆரம் பிச்சிருக்கே பா.ஜ.க. தரப்பு?''”

rra

"ஆமாங்க தலைவரே, தலித் பெண் மேயர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார் பிரியா. முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவத்தின் பேத்தி முறை கொண்டவர். பா.ஜ.க. தரப்பிலோ, கிறிஸ்தவ முறைப்படி ஞானஸ்நானம் பெற்றவர்தான் பிரியா. மத நிகழ்ச்சிகளில் நிறைய பங்கேற்றும் இருக்கிறார். கிறிஸ்தவராக இருப்பவர் தலித் கோட்டாவில் சீட் பெற முடியாது. ஆக... பிரியா கவுன்சிலரானதும், அவர் மேயராகப் பொறுப்பேற்றதும் செல்லவே செல்லாது என்று கோர்ட்டுக்குப் போக ரெடியாகிறார்களாம்.''”

"சசிகலா விவகாரத்தில் அடக்கி வாசிக்கும் படி ஓ.பி.எஸ்.சுக்கு எச்சரிக்கை கொடுத்திருந்தாரே எடப்பாடி?''”

rang

"ஆமாங்க தலைவரே, அதனால்தான் 7-ந் தேதி மதுரை ஏர்போர்ட்டில் ஓ.பி.எஸ்.சை முற்றுகையிட்ட பத்திரிகையாளர்கள், அவரிடம் சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்வீர் களா?ன்னு கேட்க, ஆளை விடுங்க சாமி என்று அவர் சிரித்துக்கொண்டே நழுவிவிட்டார். அங்கிருந்து சென்னை வந்தவர், எடப்பாடியுடன் சேர்ந்து மகளிர் தினக் கொண்டாட்டத்தின் அடையாளமாக கேக் வெட்டினார். அப்போது எடப்பாடி தனக்கு அருகில் இருந்த வளர்மதிக்கு கேக்கை ஊட்ட, அதைப் பார்த்த ஓ.பி.எஸ்.சும், ஒரு கேக் துண்டை எடுத்து தனக்கு அருகில் இருந்த கோகுலஇந்திராவுக்கு ஊட்டினார். இரண்டு பெண்மணிகளும் பதிலுக்கு எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் கேக் ஊட்டினாங்க. பொதுக்குழுவை எப்போது கூட்டுவது என சீனியர்களுடன் விவாதித்தனர். சசிகலா குறித்து அவர்கள் பொருட்படுத்தியதாகவே காட்டிக்கொள்ளவில்லை.''”

rang

"ஆனாலும், சசிகலா தரப்பில் புதிய உற்சாகம் தெரியுதே?''”

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.வின் லகானை சசிகலா விரைவில் கைப்பற்றுவார் என்கிறது அவர் தரப்பு. அ.தி.மு.க.வுக்குள் மெல்ல மெல்ல ஊடுருவி வரும் அவர், மாஜி மந்திரிகள், மா.செ.க்கள் என பலரது இணக்கத்தையும் பெற்றுவிட்டாராம். முழுதாக வளைக்க கரன்சி மழை பெய்தாக வேண்டும் என்பதால் சொத்துக்கள் மற்றும் முதலீடுகளை ரொக்கமாக மாற்றிவருகிறாராம். அந்த வகையில் பிரபல நிறுவனமான ஈ.டி.ஏ.வில் தான் போட்ட முதலீட்டையும் பணமாக மாற்றி வாங்கியிருக்கிறாராம்.''”

"பா.ம.க. தரப்பில் சலசலப்பு கேட்குதே?''”

"உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. வுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து மாவட்ட வாரியாக விசாரணை நடத்தி வருகிறார் டாக்டர் ராமதாஸ். சேலம் மாவட்டத்திலேயே கட்சி படுதோல்வி அடையக் காரணம், அக்கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் 4 பேரில், இருவரை அமைச்சர் நேரு விலைக்கு வாங்கி விட்டார் என்று பா.ம.க.வினர் குமுறுகின்றனர். அண்மையில், மேட்டூர் அணை பாசனத் திட்டத்தை ஆய்வு செய்ய வந்திருந்த அன்புமணியிடம், சேலம் மாவட்ட நிர்வாகிகள் பலரும் இதுகுறித்து புகார் வாசித்து அவரை அதிர வைத்திருக்கிறார்களாம்.''”

"பா.ஜ.க.வின் புதிய பொறுப்பா ளர்கள் நியமனம் பற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்புதே?''

"ஆமாங்க தலைவரே, பதவிகள் விற்கப்பட்டதாகப் புகார்கள் வலுத் திருக்கு. குறிப்பாக சென்னை மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் மனோகர், வாரங்கல்லில் குவாரி நடத்துகிறவராம். கட்சிப் பிரமுகர்கள் பலருக்கும் செல் போன் உட்பட பல்வேறு பரிசுப் பொருட்களை பரிசளிப்பது வழக்கமாம். குற்றச்சாட்டுகள் கிளம்பியதையடுத்து, மனோகரை நான் நியமிக்கலை, கட்சிப் பிரமுகரான கேசவ விநாயகம்தான் வெயிட்டான கவனிப்பின் அடிப்படை யில் நியமித்திருக்கிறார்னு அண்ணா மலை பகிரங்கப்படுத்திவிட்டார். அதோடு அண்ணாமலைக்கு எதிராக, கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, பொன்னார், கேசவ விநாயகம் உள்ளிட்டோர் ஒரு அணியாக வரிந்துகட்டி வருகின்றனராம்.''

"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை, அறப்போர் இயக்க ஒருங்கிணைப் பாளர் ஜெயராமன் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித் திருக்கிறார். அதில், இ-டெண்டர் முறையைக் கொண்டுவர சட்டத் திருத்தம் செய்யவேண்டும், அரசுத் துறை தகவல்களை இணையத்தில் ஒரு போர்ட்டல் மூலம் வெளியிட வேண்டும், டெண்டரில் கூட்டுச் சதி ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும், அனைத்து துறைகளுக்கும் ஆர்.டி.ஐ. மூலம் கேள்வி கேட்க வழி வகை காணவேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் இடம்பெற் றுள்ளன.''”