ன்னும் இரண்டொரு தினங்களில் வரவிருக்கின்றது மகா சிவராத்திரி. இந்த நாளுக்காகத்தான் காத்திருப்பேன் என்பதுபோல் நடிகைகளுடன் டான்ஸ் ஆடி தன்னுடைய ஆன்மிகத்தை காசாக்குவார் ஜக்கி வாசுதேவ். ஜக்கியின் ஏரியாவான கோவையிலேயே 20 ஆயிரம் கல்லூரி மாணாக்கர்கள் உள்ளிட்ட 50 ஆயிரம் நபர்களைக் கூட்டமாகக் கூட்டி, தான்தான் உண்மையான ஆன்மீகவாதி என கம்பு சுழற்றியுள்ளார் "வாழும் கலை' ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.

மார்ச் 2, 3 தேதிகளில் கோவையில் மாபெரும் பொது தியான நிகழ்ச்சி, பிரத்யேக பூஜையை நடத்துவதற்கு வருவதாக பிரபல ஆன்மீகத் தலைவரும், இலாப நோக்கற்ற, கல்வி மற்றும் மனிதாபிமான அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் என்று ஜிகினா வார்த்தைகளுடன் அறிவித்தனர், கோயம்புத்தூர் குருதேவ் தியான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் புருஷோத்தமன், தி.ஆர்ட்.ஆஃப் லிவிங்கின் கோர் கமிட்டியைச் சேர்ந்த சசிரேகா.

ff

2-ஆம் தேதி மதியப்பொழுதில் பெங்களூருவி லிருந்து சிறிய சாப்பர் வகை ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்தடைந்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள பயோடா சாஃப்ட்வேர் மற்றும் ஷார்ப் இன்டஸ்ட்ரீஸ் அதிபரான ஆனந்த் புருஷோத்தமன் வீட்டில் தங்கியவர், தொடர்ந்து கோவையில் நரேன் கார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள், தொழிலதிபர்களை தனித்தனியாகச் சந்தித்தார். பின்னர் இந்து முன்னணி அமைப் பினர், பா.ஜ.க.வினர் சிலரை சந்தித்துவிட்டு நிகழ்ச்சிக்குத் தயாரானார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே கொடிசியா அருகே தனியார் ஹோட்டலில் பத்திரிகையாளர் களை சந்தித்தவர், "மனஅழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகின்றது. இதிலிருந்து விடுபட தியானம் அவசியம். தியானம் மதம் தொடர்பானது இல்லை. அனைத்து மதமும் சம்மதமே. மாணவர்களுக்கு பரிட்சை, மக்களுக்கு வேலை என ஒவ்வொருவருக்கும் நிறைய டென்சன் இருக்கின்றது. இதிலிருந்து விடுதலை பெற தியானம் மேற்கொள்வது அவசியம். அதுபோல் போதைப் பொருளுக்கு அடிமை யாவது அதிகரித்து வருகின்றது. தமிழகத்தில் போதைக்கு எதி ரான விழிப்புணர்விற்காக தியான நிகழ்வு நடத்தப்படுகின்றது'' என பேசியவர் தொடர்ந்து, "தமிழகத் தில் 85 நதிகள் ஆவணங்களில் இருக்கிறது, ஆனால் சில நதிகள் மட்டுமே ஓடுகின்றது. மற்ற நதி களை புனரமைக்கவேண்டிய தேவை இருக்கின்றது. கோவை யில் கௌசிகா நதி, நொய்யல் நதி புனரமைக்கப்படவேண்டும். 85 நதிகளையும் மீட்டால் தமிழகத் தில் சுற்றுச்சூழல் பிரச்சினை, தண்ணீர்ப் பிரச்சினை இருக் காது'' என ஜக்கிக்கு எதிரான பிட்டையும் மறக்காமல் போட்டார்.

தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் ஏற்பாடு செய் யப்பட்டிருந்த பிரம் மாண்ட மேடையில் சத் சங்க நிகழ்வில் கலந்து கொண்ட வாழும் கலை ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கழுத்தில் தாமரை மாலை, மனோரஞ்சித மாலைகளுடன் தோன்றி னார். தியான முறைகளை சொல்லிக்கொடுத்ததுடன் போதைப் பொரு ளுக்கு எதிரான உறுதிமொழியையும் மாணவர்களை எடுக்கசெய்தார். மறுநாள், கொடிசியா டி ஹாலில் மகாருத்ர பூஜையை நடத்தியவர், அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ரேஸ்கோர்ஸ் சாலை வீட்டிற்குச் சென்று மாலை 4 மணிக்கு சென்னை புறப்பட்டுச் சென்றார்.

"சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை வந்திருக்கின்றார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். இது அரிதான விஷயம். இனிமேல் இதுபோல் இங்கு பார்க்கலாம் என்றும் கூறியிருக்கின்றார். இது முழுக்க முழுக்க ஜக்கிக்கு எதிரானது என்றுதான் நாங்கள் கூறுவோம். மகாசிவராத்திரியில் ஈஷாவில் நடக்கும் கூத்துக்களை உலகமே அறியும். அந்த நாள்தான் ஜக்கிக்கு வசூல்கொழிக்கும் நாள். ஆனால், மகாசிவராத்திரி வரும் நாளையொட்டி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்காக இப்படியொரு கூட்டம் கூடியது ஒருவரின் முகத்தில் கரியைப் பூசவே. எங்களைப் பொறுத்தவரை ஆன்மிகம் என்பது இதுவே. ஜக்கி செய்யும் போதை பூஜை அல்ல. ஆன்மிகத்தின் பெயரில் நல்லது செய்யுங்கள். ஏமாறாதீர்கள் என்பார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். உண்மையும் அதுவே'' என்றார் தாராபுரத்தைச் சேர்ந்த வாழும்கலை வாலண்டியர் ஒருவர்.

இந்து முன்னணி அமைப்பினைச் சேர்ந்தவரும், ஜக்கியின் முன்னாள் சீடருமான ஒருவரோ, "மகாசிவராத்திரி டான்ஸை வைச்சுத்தான் கல்லா கட்டுவாங்க. போன வருஷத்தில் சுபஸ்ரீ மரண விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்த நிலையில்... அனைத்து முன்னணி தொலைக்காட்சிகளுக்கும் மகாசிவராத்திரி குறித்து விளம்பரங்களைக் கொடுத்தது ஜக்கி டீம். இந்த முறை அது கிடையாது. மகாசிவராத்திரி பற்றி எந்தவித பெரிய அறிவிப்பும் இப்பொழுதுவரை இல்லை. கோவையில் தம்முடைய செல்வாக்கு குறைந்துவிட்டது என்பதை யறிந்த ஜக்கி, கர்நாடகாவில் ஈஷாவை உருவாக்கி அதில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறார். தாமிர உலோகமே ஆன்மிகத்தை சேர்ப்பிக்கும் என முன்பு தாமிரத்தில் பாம்பு மோதிரத்தை விற்ற ஈஷா நிர்வாகம், இப்பொழுது அதே பாம்பு மோதிரத்தை வெள்ளி, தங்கத்தில் செய்து விற்றுவருவது ஏன்? முழுக்க வர்த்தகமயமாகிவிட்டது ஈஷா. ஜக்கியின் சாயம் வெளுக்க ஆரம்பித் ததை தன்னுடைய சகாக்கள் மூலம் அறிந்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கிக்கு எதிராக கோவையிலேயே கம்பு சுழற்றியிருக்கின்றார்.

இதன் தொடக்கமாகவே ஜக்கியின் பிரபல திட்டமான மிஸ்டுகால் மூலம் நதிநீர் இணைப்புத் திட்டத்தினை மாற்றுவடிவத்தில் அறிவித்திருக்கிறார் ரவிசங்கர்'' என்றார்.

Advertisment

படங்கள்: விவேக்