ஸ்ரீமதி வழக்கு விசா ரணையிலும், பிரதேப் பரிசோதனையிலும் சில முக்கியமான சந்தேகங் களை, மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு எழுப்புகிறார். போலீஸின் விசாரணை செல்லும் திசையின் நம்பகத்தன்மையை அசைத்துப் பார்ப்பதாக இருக்கின்றன அவரது வினாக்கள்.

"ஸ்ரீமதி புதைக்கப்பட வில்லை விதைக்கப் பட்டிருக்கிறார்' என்று அவரது அப்பா சொல்லி யிருக்கிறார். ஸ்ரீமதி மரணம் கொலையா? தற்கொலையா? ஒரு வழக்கறிஞராக எப்படி பார்க்கிறீர்கள்?

sri

Advertisment

ஸ்ரீமதி மரணம் தற்கொலை கிடை யாது. கொலை என்பதற்காகத்தான் போராடிக்கொண்டிருக்கிறோம். கே.எம்.சி. மருத்துவமனை டாக்டர் செல்வக்குமாரிடம், "கற்பழிப்பு மற்றும் கொலை என்பதை 3-வது பிரேதப் பரிசோதனையில் கண்டு பிடிக்க முடியுமா?' என நீதிபதி கேட்டார். "இரண்டு பிரேதப் பரிசோதனையிலேயே எல்லா உறுப்புகளையும் எடுத்திருப்பார்கள். 3-ஆவதாக பண்ணமுடியாது. இரண்டு பிரேதப் பரிசோதனை அறிக்கைகள், வீடியோக்களை ஆய்வுசெய்து ஒரு கருத்து வாங்கலாம்' என்றார். இரண்டு பிரேதப் பரிசோத னை அறிக்கைகள், வீடி யோக்களை 3 மருத் துவர்களைக் கொண்ட புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக் குழு ஆய்வுசெய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முதல் பிரேதப் பரி சோதனை அறிக்கையில் முக்கியமான தடயம் என்னவென்றால், வலது மார்பகத்தில் காயம் இருப்பதாக சொல்லப் பட்டிருக்கிறது. அந்தக் காயம் புணர்ச்சி செய்வதற்கு முன்புதான் ஆகியிருக்கும் என் கிறார்கள். அப்படி இருக்கும்போது உமிழ்நீர் இருப் பதற்கான சான்ஸ் இருக்கிறது.

தற்கொலை யாக இருந்தால்கூட, கன்னித்திரை கிழிந் திருக்கிறதா, கற்பழிக்கப்பட்டிருக் கிறாரா, விந்து அணுக்கள் இருக் கிறதா என ஆய்வுசெய்வார்கள். முதல் பிரேதப் பரிசோதனையில் எதுவுமே செய்யவில்லை.

இதுபோன்ற வழக்குகளில் துறைத் தலைவர், மூத்த பேராசிரியர், உதவிப் பேராசிரியர் தகுதியுடையவர்களை வைத்து தான் பிரேதப் பரிசோதனை செய்வார்கள். ஆனால் முதல் பிரேதப் பரிசோதனையின் போது டியூட்டர், ஆர்.எம்.ஓ. ஆகியோரை வைத்து செய் துள்ளனர்.

அந்தப் பெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப் பட்டிருப்பார் என்ற சந்தேகம் இருக்கிறதா...!?

சந்தேகம் இருக்கிறது. அந்த சந்தேகத்தின் அடிப்படைதான் இந்த காயம். இது கடித்ததால் வந்திருக்கக்கூடிய காயம். கீழே விழுந்திருந்தால் இதுபோன்ற காயம் வர வாய்ப்பே இல்லை. திசுக்கள் லேப்புக்கு அனுப்பப் பட்டுள்ளது. ஐஒநபஞ டஆபஐஞகஞஏவலிக்கு அனுப்பப் பட்டுள்ளது. மேலும் சுடி தாரில் ரத்தக் காயங்கள் இருப்பதாகவும், சுடிதார் பேண்ட் பின்பக்கம் முடிச்சுப் போடப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

sankarsubbu

Advertisment

இந்த வழக்கில் பிரேதப் பரிசோதனை வரை அலட்சியம் தொடர்ந்ததாக நினைக்கிறீர்களா?

பிரேதப் பரிசோதனை செய்தபோது இந்த இறப்பு 36 மணி நேரத்திற்கு முன்பு ஏற்பட்டிருக்கலாம் என் கிறார்கள். அப்படியானால் 12-ஆம் தேதி இரவு. அன்று இரவு 8 மணிக்கு சாப்பிட்ட உணவு செரிக்காமல் இரைப் பையில் இருந்துள்ளது. உணவு செரிக்க 4 மணி நேரமாவது ஆகும். அப்படியானால் 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் இறந்திருக்கலாம் என கணிக்கிறார்கள். அப்படி யிருக்கும்போது 2-வது, 3-வது மாடியில் இருந்த குழந்தைகள் பார்த்திருக்கலாம். நிச்சயம் வாட்ச்மேன் பார்த்திருக்கலாம். இவர்கள் என்ன சொல்கிறார்கள். நாங்களே காலையில்தான் பார்த்தோம். போலீஸ் 9 மணிக்குத்தான் தகவல் வந்தது என்கிறார்கள். இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

இரண்டாவது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் என்ன உள்ளது?

இரண்டாவது பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லையே... எங்க ளுக்கு சந்தேகம் வலுத் துள்ளதால், நாங்கள் தனியாக அந்த அறிக்கைகள், வீடியோக் கள் வந்ததும் மருத்துவர்களை வைத்து கருத்துக் கேட்க முடிவுசெய்துள்ளோம்.

என்ன சந்தேகம்...?

கற்பழிப்பு மற்றும் கொலை எனச் சொல்கிறோம். ஆனால் அவர்கள் தற்கொலை என்கிறார்கள். மாணவி எழுதிய கடிதம் என்கிறார்கள். ஆனால் மாணவியின் தாயார் 20 நோட்டுக்களைக் கொடுத்தார். அந்த நோட்டுக்களை பாருங் கள். அந்த கடிதம் என் மகளின் கையெழுத்தே இல்லை என் கிறார். மாணவியின் கையெ ழுத்தே இல்லை என்கிறபோது, அந்த கடிதத்தை உருவாக்கியது யார்? சி.பி.சி.ஐ.டி. வந்தும் விசாரணை நத்தை மாதிரி நடக்கிறது.

அந்தக் கடிதத்தில் இரண்டு ஆசிரியர்கள் குறித்து வருகிறது. அப்போது தானே பலிகடா ஆகச் சம்மதிக் கிறார்களா?

அதெல்லாம் நிர்வாகத் தில் சிலபல யுக்திகள் இருக் கிறது. நிர்வாகத்தை எப்படி யாவது நடத்தணும் என்பதற் காக, தெரிந்தவர்களை அதைச் செய்து தருகிறோம், இதைச் செய்து தருகிறோம், வேறு எங்கேயாவது வேலை வாங்கித்தருகிறோம் எனச் சொல்லிச் செய்வார்கள்.

மேலேயிருந்து தூக்கிப் போட்டார்களா... மாணவியே கீழே விழுந்ததா என தெளிவு ஏதேனும் இருக்கிறதா...

எந்த இடத்தில் மாணவி விழுந்தார் என இதுவரை சொல்லவில்லை. 3-வது மாடி யில் இருந்து விழுந்திருந்தால் அந்த இடத்தில் ரத்தம் இருந் திருக்கணும். இரும்புக் கம்பி யால் பின்பக்கத்தில் தாக்கினால் தான் இதுபோன்ற காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இந்தக் காயங்கள் எல்லாம் இறப்புக்கு முன்னால் ஏற்பட்ட காயங்கள். அந்த காயங்களால் இறந்திருக்க லாம். படிக்கட்டில் ஏறும் இடத்தில் மாணவி கையி லுள்ள ரத்தக் கறை படிந்துள் ளது. அதனை போட்டோ எடுத்திருக்கிறார்கள்.

டீச்சர்கள் திட்டியதால் தான் தற்கொலைக்கு மாணவி போனார் என்று சொல் கிறார்கள். 10-ஆம் வகுப்பில் நல்ல மார்க் வாங்கின மாணவி, டாக்டர் ஆகணும் என்ற கனவு உள்ள மாணவிக்கு வேதியியல், கணிதம் பாடங் கள் பிரச்சனையாக இருக்கும் என பெற்றோர்கள், டீச்சர்கள் நினைக்கிறார்களா?

எங்கள் மகள் தற்கொலை பண்ணவில்லை என்கிறார்கள் பெற்றோர். இதில் நீங்கள் கேட்கக்கூடிய எல்லா கேள்வி களுக்கும் பதிலிருக்கிறது. எங்கள் மகள் கோழைத் தனமாக நடக்கமாட்டாள். வேறு ஏதோ நடந்திருக்கிறது என்கிறார்கள்.

தொகுப்பு: வே.ராஜவேல்