கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தின் வாலிநோக்கம் வந்த தூத்துக்குடி புள்ளி ஒருவர், அங்குள்ள முக்கிய புள்ளிக்கு 2 கிலோ உயர்ரக கிறிஸ்டல் மெத்தாபெட்டமைன் கொடுத்தவர், அதற்கான லட்சங்களைப் பெற்றுச்சென்றிருக்கிறார். அவரின் பெயர் உட்பட சகல விவரங்களும் தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை தலைமைக்குப் போயிருக்கிறது. அதையடுத்து அலர்ட்டான டிபார்ட்மெண்ட், மதுவிலக்கு டி.எஸ்.பி. செந்தில் இளந்திரையன், இன்ஸ்பெக்டர் மீகா, மதுவிலக்கு தனிப்பிரிவு எஸ்.ஐ. ரவிக்குமார் உள்ளிட்ட தனிப்படையினரை உஷார்படுத்தியது.
ஜூன்-21 அன்று தூத்துக்குடியின் இனிகோ நகரிலுள்ள குறிப்பிட்ட அந்த வீட்டை ரவுண்டப் செய்து ரெய்டு நடத்தியதில் தடிமனான பிளாஸ்டிக் கவர் கொண்டு பேக்கிங் செய்யப்பட்ட 8 பாக்கெட்களை கைப்பற்றியவர்கள் நிர்மல்ராஜ், அவரது மனைவி ஷிவானி இருவரையும் கஸ்டடிக்குள் கொண்டுவந்தனர். விசாரணை டீமிற்கு வேலையே வைக்காமல், கைப்பற்றப்பட்டது கிறிஸ்டல் மெத்தாபெட்டமைன் என்று தெரிவித்திருக்கிறார் நிர்மல்ராஜ்.
வ
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தின் வாலிநோக்கம் வந்த தூத்துக்குடி புள்ளி ஒருவர், அங்குள்ள முக்கிய புள்ளிக்கு 2 கிலோ உயர்ரக கிறிஸ்டல் மெத்தாபெட்டமைன் கொடுத்தவர், அதற்கான லட்சங்களைப் பெற்றுச்சென்றிருக்கிறார். அவரின் பெயர் உட்பட சகல விவரங்களும் தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை தலைமைக்குப் போயிருக்கிறது. அதையடுத்து அலர்ட்டான டிபார்ட்மெண்ட், மதுவிலக்கு டி.எஸ்.பி. செந்தில் இளந்திரையன், இன்ஸ்பெக்டர் மீகா, மதுவிலக்கு தனிப்பிரிவு எஸ்.ஐ. ரவிக்குமார் உள்ளிட்ட தனிப்படையினரை உஷார்படுத்தியது.
ஜூன்-21 அன்று தூத்துக்குடியின் இனிகோ நகரிலுள்ள குறிப்பிட்ட அந்த வீட்டை ரவுண்டப் செய்து ரெய்டு நடத்தியதில் தடிமனான பிளாஸ்டிக் கவர் கொண்டு பேக்கிங் செய்யப்பட்ட 8 பாக்கெட்களை கைப்பற்றியவர்கள் நிர்மல்ராஜ், அவரது மனைவி ஷிவானி இருவரையும் கஸ்டடிக்குள் கொண்டுவந்தனர். விசாரணை டீமிற்கு வேலையே வைக்காமல், கைப்பற்றப்பட்டது கிறிஸ்டல் மெத்தாபெட்டமைன் என்று தெரிவித்திருக்கிறார் நிர்மல்ராஜ்.
விசாரணையில் கிடைத்த தகவல்கள் திகைக்கவைக்கின்றன. பிடிபட்ட கிறிஸ்டல் மெத்தாபெட்டமைனின் மதிப்பு உலகச் சந்தையில் 24 கோடி. ஐஸ் போன்ற குளிர்நிலையிலிருக்கும் இந்த போதைச் சரக்கு, காற்றுப்புகாத கனமான பிளாஸ்டிக் கவரால் பேக் செய்யப்பட்டது. காற்று புகுந்தால் மொத்தச் சரக்கும் தண்ணீரைப் போன்று உருகி நாசமாகிவிடும். இதனால்தான் சரக்கின் பேக்கிங் உறுதித்தன்மையுடனிருக்குமாம்.
இதன் 10 கிராம் இங்குள்ள சில்லரை ரேட்டில் இரண்டாயிரமாம். சாதாரணமானவர்கள் முதல் பெரிய பெரிய தனவந்தர்கள் வரை இதற்கு அடிமை. இதன் பயன்பாடு அளவுக்கதிகமானால், பாதிப்புகளும் தீவிரமானவை என்று சொல்கிறார்கள். தூத்துக்குடியிலிருந்து இலங்கையின் கொழும்பு நகருக்குக் கடத்தப்பட்டு பின்பு அங்கிருந்து தாய்லாந்து, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏஜண்டுகள் மூலம் சென்றுவிடும். இதற்காக தனக்கு கடத்தல் தொகையாக கணிசமான லட்சங்கள் கிடைப்பதையும் மதுவிலக்குப் படையினரிடம் தெரிவித்திருக்கிறார் நிர்மல்ராஜ்.
கடந்த ஒன்றரை வருடங்களாகத் தொடர்ந்து போதைச் சரக்கை 30 கிலோ வீதம் 4 முறை இலங்கைக்குக் கடத்திச்சென்ற நிர்மல்ராஜ், நான்காவது முறை கொடுத்த 30 கிலோவில் 10 கிலோவை திருடி அதை விற்க ஏற்பாடு செய்தபோது பிடிபட்டிருக்கிறார். கடத்தல் தொழில் முறை போட்டி காரணமாக மட்டக்கடை பகுதியிலுள்ள சிலர் அவரிடம் தகராறு செய்ததுடன் அவரை வெட்டிக் கொலைசெய்ய முயன்றதில் நிர்மல்ராஜுக்கு காயமேற்பட்டதால் தப்பி தூத்துக்குடியில் குடியேறியிருக்கிறார்.
இயல்பாகவே கிறிஸ்டல் மெத்தாபெட்டமைன் உப்புக்கல் போன்று துகள்களாக இருப்பதால், உணவுக்கான உப்பு பண்டல் என்று வழியோர போலீசாரின் சோதனையின்போது சந்தேகம் கிளம்பாமலிருந்ததும் கடத்தல் புள்ளிகளுக்கு வாய்ப்பாகிப் போனதாம். ஒருகட்டத்தில், க்யூ பிரிவு போலீசாரின் ஆழமான சோதனையின்போதுதான் போவது உப்புப் பாக்கெட் அல்ல. அது கிறிஸ்டல் மெத்தாபெட்டமைன் என்ற விஷயம் வெளியேறி டிபார்ட்மெண்ட்டையே அதிரவைக்க, உஷாராகியிருக்கிறார்களாம்.
பெட்டமைன் போன்று உயர்ரக போதைப் பொருளான ஹசீஷ், கொக்கைன், நேபாள கஞ்சா ஆயில் போன்ற பெருமதிப்பிலான போதைப்பொருட்கள் இலங்கைக்குக் கடத்தப்படுவதையும், பிடிபடுவதையும் குறித்து பேசிய தமிழக தென்கடலோர கோஸ்டல் கார்ட் படையின் அதிகாரி, "கொரோனா பொருளாதார வீழ்ச்சி, அரசியல் குழப்பம், தலைவர்கள் மாற்றம் உள்நாட்டுப் போர் என சரிவைக் கண்ட இலங்கை, அதை ஈடுகட்ட போதைக் கடத்தலுக்கு கொடியசைத்துவிட்டது. தன்னுடைய தென்கடல் வாசலைத் திறந்துவிட்டதால் போதைக் கடத்தல்கள் சகஜமாகி, இலங்கையை டிரான்ஷிப்மெண்ட் மையமாக வைத்து உலக நாடுகளுக்குக் கடத்தல் தடையின்றி நடக்கத்தொடங்கியது.
போதைச் சரக்கு கடத்தும் ஏஜெண்ட்கள் பிடிபடாமலிருக்க டெக்னிக்கலான வழியையும் கையாள்கிறார்கள். பொதுவாக படகுகளில் கடத்தப்படும் சரக்குகள் சில, கோஸ்டல் கார்டு கண்ணில்படாமல் நடுக்கடலில் சரக்கை வேறொரு படகுக்கு மாற்றுவதுண்டு. அடுத்து, சரக்கை விரைவாகக் கொண்டுசேர்க்க, அரசால் தடைசெய்யப்பட்ட 20 ஹார்ஸ் பவர் இன்ஜின் கொண்ட பைபர் படகில் கடத்துவர். இந்த ஹைபவர் பைபர் படகுகள் குறைவான தொலைவுகொண்ட ராமேஸ்வரம்-இலங்கை கடல் வழியை ஹைபவர் பைபர் படகுகள் இரண்டு மணி நேரததில் சென்றடைந்துவிடும். கப்பற்படை அதிகாரிகளின் படகுகளால்கூட இதை விரட்டிப்பிடிப்பது சிரமம்’’ என்கிறார்.
இந்த வழியில்தான் சென்னை பார்ட்டிகள், இலங்கைக்கு கடத்தவேண்டிய போதைச் சரக்கை வேம்பாரிலுள்ள ஏஜண்ட் இருதவாசிடம் ரெகுலராகக் கொடுத்திருக்கிறார்கள். தரப்படும் சரக்கின் மதிப்பு, அளவிற்கேற்ப ரேட் பேசி இலங்கையில் முறையாகச் சேர்த்துவந்திருக்கிறது இருதயவாஸின் கோஷ்டி. ஆனால் க்யூ பிரிவினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடுக்கடலில் வழிமறித்து கிறிஸ்டல் மெத்தாபெட்டமைன் மொத்தச் சரக்கையும், கைப்பற்றியதுடன் இருதயவாûஸயும் கஸ்டடிக்குள் கொண்டுவந்து ரிமாண்ட் செய்துவிட்டனர். தூத்துக்குடியின் திரேஸ்புரம் கடலோரப் பகுதிகளில் நோட்டமிட்டுவந்த பிரிட்டனைச் சேர்ந்த போதைக் கடத்தல் மாஃபியா ஜோனாதன் தோர்ன் என்பவரையும் மடக்கிய க்யூ பிரிவு சென்னை புழல் சிறையிலடைத்திருக்கிறது.
அதையடுத்தே கடத்தல் ஏஜெண்ட்களில் ஒருவரான நிர்மல்ராஜ் 24 கோடி மதிப்புள்ள சரக்குடன் மது விலக்குப் பிரிவினரால் மடக்கப்பட்டிருக்கிறார்.