"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலினின் கேரள விசிட்டையும், மலையாளத்திலும் தமிழிலும் அவர் பேசியதையும் கவனிச்சீங்களா?''”
"ஆமாம்பா... நாம கவனிச்சது இருக்கட்டும். டெல்லி இதை உற்றுக் கவனித்து ஆடிப் போயிருக்குதாம். மு.க.ஸ்டாலின் தன்னு டைய பெயருக்கேற்ப, கேரளாங்கிற சிவப்பு சிந்தாந்த பூமிக்கே போய், ஒரு மாபெரும் புரட்சிக்கு வித்திடுவது போல் பேசி யிருக்கிறார்ங்கிறதுதான் ஒன்றிய அரசுக்கு போயி ருக்கும் ரிப்போர்ட்.''”
"உண்மைதாங்க தலைவரே, மாநில உரிமை களுக்குக் குரல் கொடுக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் அதிரடியாகப் பேசி வருவதை, மிரட்ட லாகவே பார்த்து வருகிறது டெல்லி. குறிப்பாக, ஸ்டாலின் பேசும் பேச்சுகள், அவர் கொடுக்கும் பேட்டிகள் என அனைத்தையும் உடனுக்குடன் உளவுத் துறை, ஒன்றிய அரசுக்கு அனுப்பிக்கிட்டே இருக் குது. டெல்லியில் தி.மு.க. அலுவலகத் தைத் திறந்துவைக்கச் சென்ற ஸ்டாலின், அங்கு கொடுத்த பேட்டியில், பா.ஜ. க.வுக்கு எதிராக தேசிய சக்திகள் ஒன்றி ணைய வேண்டும் என்று அறிவித்தது மோடியை ரொம்பவே அதிரவச்சிருக்கு. இந்த நிலையில்தான் ஸ்டாலின் கேரளாவுக்குப் போயும் சரவெடிகளை வெடிச்சிருக்கார்.''”
"கேரளாவில் ஸ்டாலினுக்குக் கிடைத்த வரவேற்பும் முக்கியத்துவமும் கூட டெல்லியால் கவனிக்கப்பட்டி ருக்குமே?''”
"சரியாச் சொன்னீங்க தலைவரே, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கள் அத்தனை பேரும் ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத் தாங்க. கண்ணூரில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டுக் கருத்தரங்கில் பேசிய ஸ்டாலின், ”ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி, ஒரே மதம் என்றாக்க இந்தியாவில் முயற்சிகள் நடக்கின்றன. மாநிலங்கள் இல்லாமல் இந்தியா என்ற நாடு இல்லை. மாநிலங்களைப் பழிவாங்குவதாக எண்ணி, மக்களைப் பழி வாங்குகிறது ஒன்றிய அரசு. எனவே, தென்மாநில முதல்வர்களின் குழு ஒன்றை உருவாக்க வேண்டும். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் இருக்கும் வகையில் அரசிய லமைப்புச் சட்டத்தையும் திருத்த வேண்டும்னு அதிரடியாகச் சொன்னதோடு, பா.ஜ.க.வையும் ஒருபிடி பிடிச்சிருக்கார்.''”
"ஸ்டாலினின் உரையைக் கேட்ட கேரள முதல்வர் பினராய் விஜயன் ரொம்பவே நெகிழ்ந்துவிட்டாரே?''”
"ஆமாங்க தலைவரே, இந்தியாவில் உள்ள முதல்வர் களிலேயே சிங்கம் போன்றவர் பினராயி விஜயன் என்றும், மாநில உரிமைகளைக் காப்பதற் காக அவர் கர்ஜிக்கிறார் என்றும், தனக்கு முன்னோடி யாக பினராயி விளங்குகிறார் னும் ஸ்டாலின் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்து போய்விட் டாராம் பினராய். உடனே அவர் ஸ்டாலினின் கைகளைப் பிடித்துக்கொண்டு, ’என்னை ரொம்பவே பெருமைப்படுத்தி இருக்கிறீர்கள். உங்களுடைய திராவிட மாடல் ஆட்சிதான் கேரளாவிற்கு உறுதுணையாக இருக்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தென்மாநில முதல்வர்களின் குழு அமைக் கப்பட வேண்டும் என்கிற உங்கள் யோசனை, சரியானதுன்னு ரொம்பவே பாராட்டியிருக் கிறார்.''”
"சரிப்பா, தமிழகத்தில் முதலீடு செய்ய வருபவர்களை பா.ஜ.க. மிரட்டுகிறதாமே?''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழக முதல்வர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க துபாய் போய் வந்ததோடு, இங்கே தொழில் தொடங்க முன்வந்த நிறுவனங் களுக்கும் உரிய சலுகைகளை வழங்கி வருகிறார். இதனால் சர்வதேச அளவிலான தொழில் முதலீடுகள், தமிழகத்தை நோக்கித் திரும்பியிருக்கும் நிலையில், பா.ஜ.க. அண்ணாமலை பிரபல நிறுவனமான பி.ஜி.ஆர். பற்றியும், ஆளும் தரப்புக்கு நெருக்கமான ஜி ஸ்கொயர் போன்ற நிறுவனங்களையும், கடுமையாக விமர்சிப்பதோடு, .தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்களை யும், அவற்றோடு பேச்சுவார்த்தை நடத்தும் முதல்வர் தரப்பைச் சேர்ந்தவர்களையும் மறைமுகமாக மிரட்டுகிறாராம். இதன்மூலம், இங்கு வரும் முதலீடுகளை, தான் ஐ.பி.எஸ்.ஸாக இருந்த கர்நாடகாவின் பக்கம் திருப்ப முயல்கிறாராம் அண்ணாமலை.''”
"தொழில்துறை சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித் தார்களே?''’
"ஆமாங்க தலைவரே, கொரோனா நெருக்கடி கால கட்டங்களில் சீர்குலைந்து போன சிறு குறு தொழில் நிறுவனங்களை மீட்டுருவாக் கம் செய்ய சிறப்புக் குழு ஒன்றை அமைத்திருக்கிறார் ஸ்டாலின். இதற்காக கோவை கொடிசியா தொழில் கூட்ட மைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், கோட்டையில் 8-ந் தேதி ஸ்டாலினை சந்தித்து மகிழ் வோடு நன்றி சொன்னார்கள். அப்போது அவர்களுடன் நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில், துறை சார்ந்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன் ஆகியோரோடு, அமைச்சர் செந்தில்பாலாஜியும் கலந்து கொண்டார்.''”
"தொழில் நிறுவனங் களுக்கு மின்சார வசதி செய்து தரவேண்டும் என்பது தொடர் பாக செந்தில்பாலாஜி அழைக் கப்படிருந்தாரா?''”
"இல்லீங்க தலைவரே.. கோவையில் தி.மு.க.வுக்கு எம்.எல்.ஏ.வே கிடையாது. அதனால், செந்தில் பாலாஜிதான் பொறுப்பு அமைச்சர். அத்துடன், இந்த சந்திப்புக்கு முதல்வரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொடுத்தே செந்தில்பாலாஜிதான்.''”
"கால்நடைத் துறையில் சூறாவளி கிளம்புதே?''
"ஆமாங்க தலைவரே, கால்நடைத் துறையில் உதவி பேராசிரியர்கள் 52 பேருக்கு, இணை பேராசிரியர்களாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டி ருக்கு. அவர்களிடம், நீங்கள் இப்போது பணிபுரியும் இடத்திலேயே இணை பேராசிரியராக பதவி உயர்வோடு இருக்க வேண்டுமாயின் 10 லட்சம் தரவேண்டும் என்று துறை அமைச்சருக்கே தெரியாமல் பேரம் பேசப்பட்டிருக்கிறது. அதன்படி, 42 பேரிடம் தலா 10 லட்சங்கள் வசூலிக்கப்பட்டி ருக்கிறது. மீதமுள்ள 10 பேர் பணம் தர சம்மதிக் காததால், அவர்கள் வெவ்வேறு மாவட்டங்களுக்கு தூக்கி வீசப்பட்டிருக் கிறார்கள். இது தொடர்பான புகார் கள் கவர்னர் வரை இப்போது பறந்திருக் கிறது. இப்படி வசூ லில் இறங்கியது யார் என்று கேட்ட போது, அமைச்சரின் பி.ஏ. ராம்பிரபுவும், கால் நடைப் பல்கலைக்கழகப் பதிவாளர் டென்சிங் ஜெபராஜும் தான் என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.''”
"ஐ.ஏ.எஸ். தரப்பிலும் பரபரப்பு தெரியுதேப்பா?''”
"உண்மைதாங்க தலைவரே, இதுவரை அதிகாரிகள் டிரான்ஸ்பர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிகம் தலையிட்டது இல்லை என்பார் கள். மிக முக்கியமான பரிந்துரைகள் என்றால் கூட அவர்கள் தொடர்பான உளவுத்துறையின் ரிப்போர்ட்டை வைத்தே அவர் முடிவெடுப்பா ராம். அப்படிப்பட்ட ஸ்டாலின், பிற்பட்டோர் நலத்துறையில் இருந்த ஜூனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான காமராஜ், விரும்பியபடி அவரை தமிழ்நாடு அரசு சிமெண்ட் கழகத்துக்கு நியமிக்கும் படி உத்தரவிட்டிருக்கிறார். போக்குவரத்துத் துறை யில் இருந்து பிற்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப் பட்ட ராஜ.கண்ணப்பனைக் கண்டு மிரண்டுதான், அவர் டிரான்ஸ்பர் கேட்டார் என்கிறார்கள். காமராஜ் பற்றி அதிகாரிகள் சொல்லியும், முதல்வர் கறாராக உத்தரவிட்டுள்ளாராம்.''”
"தமிழக அரசுத்துறைகளை ஒரு கவர்ச்சிப் புயல் ஆட்டிப் படைக்குதே?''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழக காவல்துறையில் உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியும், நேர்மைக்குப் பெயர்போன ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும் நெருக்கமான நண்பர்கள். இவர்கள் இருவரும் ராம்ஜி என்கிற ’ஆல் இன் ஆல்’ நபர் மூலம் டிபென்ஸ் காலனியில் வீடுகளை வாங்கியிருக்கிறார்கள். மாலை நேரங்களிலும் ஓய்வு நேரங்களிலும் அவர்களுக்கு அந்த வீடுகள்தான் உல்லாசபுரியாம். இந்த நிலையில், அந்தக் காவல்துறை அதிகாரிக்கு, பிரபல திரைப்பட கவர்ச்சி நடிகை மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அந்த நடிகை, உலக நாயகர் நடத்திய பிரபல கேம் ஷோவிலும் பங்குபெற்றவராம்.''”
"ம்...''”
"இந்த கேரள நடிகை மீதான தனது ஆசையை காவல் அதிகாரி, அந்த ராம்ஜியிடம் சொல்ல, அவர் அண்மையில் ஒரு நாள், காவல் அதிகாரியின் டிபென்ஸ் காலனி இல்லத்திற்கே நடிகையை வரவழைத்துத் தந்திருக்கிறார். இதில் பூரித்துப்போன காவல் அதிகாரி, யான் பெற்ற இன்பம், பெருகட்டும் நண்பருக்கும் என்று அந்த ஐ.பி.எஸ். அதிகாரிக்கும் நடிகையை பரிந்துரைக்க, அங்கும் நடிகை எழுந்தருளினார். இப்படி நடிகை மூலம் இரண்டு அதிகாரிகளின் குடுமியும் தன் கையில் சிக்கிக்கொண்டதால் அந்த ராம்ஜியாகப் பட்டவர், காண்ட்ராக்ட் தொடங்கி அரசுத்துறை வேலைகள் பலவற்றையும் சாதித்துக் கொண்டிருக் கிறாராம். இதெல்லாம் அந்த நடிகையின் புண்ணி யத்தில்தான் என்கிறது கோட்டைத் தரப்பு.''”
"அமைச்சர்களின் அல்லக்கைகளையும் ஒன்றிய உளவுத்துறை கண்காணிக்கிதே?''”
"உண்மைதாங்க தலைவரே, தென்மாவட்டங்களைச் சேர்ந்த 2 அமைச்சர்களுக்கு அவர்களின் பினாமி போலவே செயல்படும், அல்லக்கைகள் இருக்கிறார்கள். அவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருமான வரித்துறைக்கு தகவல் கொடுத்துவருகிறதாம் ஒன்றிய உளவுத்துறை. அதில் ஒருவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராமர். இவர் சீனியர் அமைச்சர் ஒருவரின் நிழல்போல் இருப்பவர். அவரின் அனைத்து கொடுக்கல் வாங்கலும் ராமருக்கு மட்டும்தான் தெரியுமாம். இப்போது இருக்கும் இலாகா வேண்டாம். வேறு இலாகாவைக் கேட்டு வாங்குங்கள் என்று அமைச்சருக்கு தூபம் போடுவதே ராமர்தானாம். இதேபோல், வருவாய் தரக்கூடிய இன்னொரு முக்கிய துறையின் அமைச்சராக இருப்பவரிடம், கலெக்ஷன் ஏஜண்டாக இருப்பவர் இருளப்பன். இவர் சொன்னால்தான் அந்தத் துறையில் இடமாறுதல் கூட நடக்குமாம். இவர்கள் இருவரையும்தான் கடந்த 4 மாதங்களாக கண்காணித்து, வருமான வரித்துறைக்கு தகவல் அனுப்பிவருகிறதாம் உளவுத்துறை.''
"ஏற்கனவே நாம் பேசிக்கிட்டபடி, பா.ம.க. அன்புமணி, முதல்வர் ஸ்டாலினை சந்திச் சிட்டாரே?''”
"வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு விசயத்தில் ஏதாவது சாதகமாக நடக்காதாங்கிற எதிர்பார்ப்பில், தி.மு.க.வுடன் பா.ம.க. நெருக்கம் பாராட்ட ஆரம்பிச்சிருக்கு. இதன் எதிரொலி யாய், ஸ்டாலினைத் தம்பி என்று டாக்டர் ராமதாஸ் அழைக்கத் தொடங்கி இருக்கிறார். அன்புமணி கேட்டபடி அவரைச் சந்திக்க ஸ்டாலின் நேரம் ஒதுக்கி னார். இதைத் தொடர்ந்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அவரைச் சந்தித்தார் அன்புமணி. அப்போது, சமூகநீதியை நிலைநாட்டுவதற்காக ஸ்டாலின் எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டிய அன்புமணி, அப்பாவும் இந்த விசயத்தில் நீங்கள் கலைஞரைப் போலவே செயல்படுவதாகச் சொன்னார் என்று சொல்ல, பதிலுக்கு ஸ்டாலினும், சமூகநீதிப் போராளின்னு ராமதாசைப் பாராட்டி இருக்கார். சந்திப்பின்போது, இட ஒதுக்கீட்டுக்கு உதவும்படி கோரிக்கை மனு ஒன்றையும் ஸ்டாலினிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் அன்புமணி.''
"நீங்க ஆரம்பத்தில் பேசிய சப்ஜெக்ட் பற்றி கடைசியா நான் ஒரு தகவல் சொல்றேன்.. தமிழக முதல்வர், ஒன்றிய அரசின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வருவது டெல்லியை டார்ச்சராக்கி இருக்கிறது. இங்கிலீஷூக்குப் பதில் இந்தி பேசணும்னு அமித்ஷா சொன்ன நிலையில், அதற்கு உடனடி கண்டன ட்வீட் செய்தவர் ஸ்டாலின். அத்துடன் கேரளாவில் மலையாளம், ஆங்கிலம், தமிழ் மொழிகளில் பேசினார். முதல்வரின் அதிரடி செயல்பாடுகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தனது அலுவலக உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி 9-ந் தேதி இரவு தீவிரமாக ஆலோசனை நடத்தி இருக்கிறார்.''”