பேரறிஞர் அண்ணா, நாஞ்சில் மனோகரன், வெங்கட்ராமன், முரசொலி மாறன், நடிகை வைஜெயந்திமாலா ஆகிய வி.வி.ஐ.பி.க் களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்த தொகுதி தென்சென்னை. இதில், சோழிங்கநல்லூர், மைலாப்பூர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், தி.நகர், வேளச்சேரி ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகள் அடங்கியிருக் கின்றன. தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதியாக இருக்கும் தென் சென்னையில் 20 லட்சத்து 7 ஆயிரத்து 816 வாக்காளர்கள் இருக்கின்றனர்.
தொகுதி உருவாக்கப்பட்டது முதல் இதுவரை 16 பொதுத் தேர்தல்களையும், ஒரு இடைத் தேர்தலையும் சந்தித்துள்ள தென் சென்னையில், தி.மு.க. 9 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அ.தி.மு.க. 3 முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன.
தற்போது இத்தொகுதியை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள தி.மு.க.வின் சிட்டிங் எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், தி.மு.க.விடமிருந்து கைப்பற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான அ.தி.மு.க.வின் ஜெயவர்த்தன், பா.ஜ.க.வின் முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோர் களத்திலிருக்கிறார்கள். இவர்களுக்கு நட
பேரறிஞர் அண்ணா, நாஞ்சில் மனோகரன், வெங்கட்ராமன், முரசொலி மாறன், நடிகை வைஜெயந்திமாலா ஆகிய வி.வி.ஐ.பி.க் களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்த தொகுதி தென்சென்னை. இதில், சோழிங்கநல்லூர், மைலாப்பூர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், தி.நகர், வேளச்சேரி ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகள் அடங்கியிருக் கின்றன. தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதியாக இருக்கும் தென் சென்னையில் 20 லட்சத்து 7 ஆயிரத்து 816 வாக்காளர்கள் இருக்கின்றனர்.
தொகுதி உருவாக்கப்பட்டது முதல் இதுவரை 16 பொதுத் தேர்தல்களையும், ஒரு இடைத் தேர்தலையும் சந்தித்துள்ள தென் சென்னையில், தி.மு.க. 9 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அ.தி.மு.க. 3 முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன.
தற்போது இத்தொகுதியை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள தி.மு.க.வின் சிட்டிங் எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், தி.மு.க.விடமிருந்து கைப்பற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான அ.தி.மு.க.வின் ஜெயவர்த்தன், பா.ஜ.க.வின் முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோர் களத்திலிருக்கிறார்கள். இவர்களுக்கு நடுவே நாம் தமிழர் கட்சியின் தமிழ்ச்செல்வி வாள் சுழற்றிவருகிறார்.
மும்முனைப் போட்டி சூழ்ந்திருக்கும் தென்சென்னையில் வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் வேகமெடுத்துள்ளன. ஓட்டுகளை வேட்டையாட மூன்று கட்சிகளுமே பல்வேறு வியூகங்களை வகுத்தபடி தொகுதிக்குள் வலம் வருகிறார்கள்.
தி.மு.க. : தமிழச்சி தங்கபாண்டியன்
கடந்த 2009, 2014 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் தொடர் வெற்றியை பெற்ற அ.தி.மு.க.விடமிருந்து 2019-ல் தென்சென்னையை கைப்பற்றியது தி.மு.க. அந்த வகையில், மாவட்ட செயலாளரும் மந்திரியுமான மா.சுப்பிரமணியனிடம் தென்சென்னை கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழச்சியை ஜெயிக்கவைத்து தொகுதியை தக்க வைத்துக்கொள்ள பம்பரமாக சுற்றிக்கொண்டிருக்கிறார்.
செயல்வீரர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், தேர்தல் பிரச்சாரம் என திட்டமிட்டு தேர்தல் பணிகளை முன்னெடுக்கும் மா.சு., வாக்காளர்களை கவரும் வகையில் வியூகங்களை வகுத்துக் கொடுத்து பகுதிச் செயலாளர்களையும், வட்டச் செயலாளர்களையும் வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார். கரன்சி கட்டுகள் பலமாக உடைக்கப்படாமல் இருப்பது உ.பி.க்களின் மனக் குறை. அதேபோல, சைதாப்பேட்டையைத் தவிர்த்து மற்ற 5 சட்டமன்ற தொகுதிகளின் வட்டச் செயலாளர்களிடம் வேகம் தெரியவில்லை.
கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்குள் கொண்டு வந்துள்ள திட்டங்கள், முதல்வர் ஸ்டாலினின் 3 ஆண்டுகால சாதனைகள், தென்சென்னை மக்களுக்காக நாடாளுமன்றத்தில் பேசியவைகள் ஆகியவற்றை சொல்லி ஓட்டு கேட்கிறார் தமிழச்சி.
அ.தி.மு.க. : டாக்டர் ஜெயவர்த்தன்
ஜெயவர்த்தனின் தந்தை ஜெயக்குமார் போட்டுக் கொடுக்கும் வியூகங்கள்படி ஜெய வர்த்தனுக்காக ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள் ர.ர.க்கள். கரன்சி கட்டுகள் அவிழ்க்கப்பட்டுள்ளன. தேர்தல் களம் சூடுபிடிக்க... பிடிக்க கரன்சிகளின் சத்தம் அதிகமாகும் என்கிற எதிர்பார்ப்பில் தேர்தல் பிரச்சாரத்தையும், வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பதையும் அ.தி.மு.க.வினர் தீவிரப் படுத்தியுள்ளனர்.
பா.ஜ.க. : தமிழிசை சௌந்திரராஜன்
அதிகாரமிக்க கவர்னர் பதவியை உதறிவிட்டு, மக்களுக்கு சேவை செய்ய தென்சென்னையில் போட்டியிடுவதாக சொல்லிவருகிறார் பா.ஜ.க. தமிழிசை. பா.ஜ.க.வின் மாநில தலைவராக இருந்தபோது, "தாமரை மலர்ந்தே தீரும்' எனும் அவரின் வசீகரமான குரலால், சென்னை மக்களை கவர்ந்தவர். அதனால் இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு செக் வைக்கிறது தமிழிசை யின் திடீர் பிரவேசம்.
யாருக்கு வெற்றி?
தேர்தல் களத்தில் சர்வே எடுப்பதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனத்தினர், தேர்தல் வியூக வகுப்பாளர்கள், அரசியல் விமர்சகர்கள் என மூன்று தரப்பிலும் தென்சென்னை குறித்து நாம் விவாதித்தபோது, "தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் காரணிகளில் அரித்மேட்டிக் கால்குலேசன் மிக முக்கிய மானது. அந்த வகையில், தி.மு.க.வின் கட்டமைப்பும், வாக்கு வங்கியும் தென் சென்னையில் வலிமையாக இருக்கிறது.
அதாவது, தொகுதியில் அடங்கிய 6 சட்டமன்ற தொகுதிகளில் 5 தொகுதிகளில் தி.மு.க.வும், வேளச்சேரியில் தி.மு.க. கூட்டணி யில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில் 6 எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் தான்.
இந்த 6 தொகுதிகளிலும் தி.மு.க. பெற்ற வாக்குகளை மொத்தமாக கணக்கிடும் போது 1 லட் சத்து 332 வாக்கு கள் வித்தி யாசத்தில் 2021 தேர்தலில் வெற்றி பெற்றது. ஆனால், அதற்கு முன்பு நடந்த (2019) நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 2 லட்சத்து 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. ஜெயித்திருக்கிறது. இவைகளை ஒப்பிடும்போது 2019-ல் பெற்ற வாக்குகளை விட 2021 -ல் சுமார் 1 லட்சம் வாக்குகள் குறைந்துள்ளது. அந்த வாக்கு வித்தியாசம் இந்த முறையும் குறைய வாய்ப்பிருக்கிறது. காரணம், 2019 தேர்தலை விட இந்த முறை சுமார் 34 ஆயிரம் பேர் இத்தொகுதியில் புதிய வாக்காளர்களாக சேர்ந்திருக்கிறார்கள்.
இவர்கள்தான் இந்த தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பவர்களாக இருந்தாலும் இறுதி வெற்றி தி.மு.க.வுக்குத்தான் என்பதே கள நிலவரம். அந்த வகையில் இப்போது களத்தில் முந்தியிருக்கிறது தி.மு.க.'’என்று விவரிக் கின்றனர்.
மழை வெள்ள நிவாரணமாக 6,000 கொடுத்திருப்பது, மகளிருக்கு உரிமைத் தொகை, மகளிருக்கு இலவச பேருந்து உள்ளிட்டவைகள் மக்களிடம் தி.மு.க.வுக்கு பாசிட்டிவ் எனெர்ஜியை தந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில், தற்போது முதலிடத்தில் தி.மு.க.வும், இரண்டாம் இடத்தில் அ.தி.மு.க.வும், மூன்றாவது இடத்தில் பா.ஜ.க.வும் இருப்பதே தென்சென்னையின் கள நிலவரம்!
படங்கள் : எஸ்.பி.சுந்தர்