தஞ்சாவூர் மாவட் டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள உதயசூரியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன். இவர் மதுரை மேலூர் பகுதியில் டிராவல்ஸ் நடத்திவந்தபோது, அதே பகுதியில் ராசி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கபிலன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். தி.மு.க. பிரமுகரான இவர், மேலூர் தொகுதியில் சீட்டு கேட்டுக் கிடைக்காததால் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில், மதுரை பெத்தநாயக்கன்புரம் பகுதியைச் சேர்ந்த மதுரை மாநகர மகளிரணி பா.ஜ.க. பொறுப்பிலிருந்த சரண்யா
தஞ்சாவூர் மாவட் டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள உதயசூரியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன். இவர் மதுரை மேலூர் பகுதியில் டிராவல்ஸ் நடத்திவந்தபோது, அதே பகுதியில் ராசி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கபிலன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். தி.மு.க. பிரமுகரான இவர், மேலூர் தொகுதியில் சீட்டு கேட்டுக் கிடைக்காததால் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில், மதுரை பெத்தநாயக்கன்புரம் பகுதியைச் சேர்ந்த மதுரை மாநகர மகளிரணி பா.ஜ.க. பொறுப்பிலிருந்த சரண்யாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சரண்யாவிற்கும் ஏற்கனவே சண்முகசுந்தரம் என்பவருடன் திருமணமாகி இரு மகன்கள் உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு சண்முகசுந்தரம் கொலை செய்யப் பட்டுள்ளார்.
கணவர் இறந்துவிட்ட நிலையில் சரண்யா வுக்கு மேலூர் பாலனுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் பட்டுக்கோட்டை உதயசூரியபுரத்திற்கு வந்து தங்கி டிராவல்ஸ் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்திவந்தனர். இவர்களுடன் சரண்யாவின் மகன்களும் உள்ளனர். இந்த சரண்யா தான் மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார்மீது செருப்பு வீசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் என்று கூறப்படுகிறது. ஆனால் அச்சம்பவத்தில் பா.ஜ.க. ஆதரவாக இல்லாததால் கட்சியிலிருந்தே ஒதுங்கியிருந்திருக்கிறார்.
இந்நிலையில் மே 5ஆம் தேதி, திங்கட் கிழமை இரவில் கடையை மூடிவிட்டு கணவரும், மகன்களும் பைக்கில் சென்றுவிட, சரண்யா மட்டும் வீட்டிற்கு நடந்து சென்ற போது ஒரு குறுகலான சந்தில் நின்ற மர்ம நபர்கள் சரண்யாவை வெட்டிச் சாய்த்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. வந்துவிட, அது ஒரத்தநாடு சப்டிவிசன் என்பதால், வாட்டாத்திக் கோட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் யாரென்ற விசாரணையில், சரண்யாவின் ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்த துர்கா என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரித்தபோது, பாலனின் முதல் மனைவி ராசியின் மகன் கபிலன் கொலை செய்த தையும், அதற்கு அவர் வேவு பார்த்து தகவல் தந்த தையும் ஒப்புக்கொண்டிருக்கிறார். சம்பவத்தன்று கபிலனோடு, துர்காவின் கணவர் பார்த்திபன், குகன் உள்ளிட்ட பலர் கொண்ட டீம், குறுகலான சந்தில் சரண்யாவை சுத்துப்போட்டு வெட்டிச் சாய்த்திருக்கிறது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கபிலன், பார்த்திபன், குகன் ஆகியோர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். பா.ஜ.க. பெண் பிரமுகர் கொலைக்கு அவரது கடையில் வேலை செய்த பெண்ணே வேவு பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்களைத் தவிக்கவிட்டுவிட்டு மற்றொரு பெண்ணிடம் சந்தோசமாக இருக்கும் தந்தையைப் பழிவாங்கவே அவரது மனைவியைக் கொன்றதாகக் கூறியுள்ளார் கபிலன்.