வந்த செய்தி!விசாரித்த உண்மை!

news

news

வந்த செய்தி: ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் பட்டியலும் ரிலீஸ், அதிருப்தியும் ரிலீஸ்.

விசாரித்த உண்மை: கடந்த வாரம் நெல்லை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள், பல்வேறு அணிகளுக்கான செயலாளர்கள் பட்டியலை ரஜினியின் ஒப்புதலோடு வெளியிட்டார் மாநில பொறுப்பாளர் வி.எம்.சுதாகர். இதில், 30 வருடங்களுக்கு முன்பே பானு சவுண்ட் சர்வீஸ் நடத்திக் கொண்டே, பட்டிதொட்டியெல்லாம் ரஜினி மன்றங்களை உருவாக்கிய பானுசேகரை கௌரவச் செயலாளராக்கிவிட்டு, வெயிட் பார்ட்டியான டாக்டர் செல்வகுமார் என்பவரை மா.செ.வாக நியமித்திருப்பது, மக்கள் மன்றத்தினர் மத்தியில் அதிருப்தியைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் செயலாளர்களில் ஒருவரிடம் கேட்டபோது, ""தலைவரிடம் நேரடியாகப் பேசும் மாவட்டத் தலைவர்களில் பானுசேகரும் ஒருவர். ஆனால் அவரின் உடல்நிலை இப்போதிருக்கும் நிலையில் ஆக்டிவ்வாக செயல்பட முடியாது என்பதால், பானுசேகரின் ஒப்புதலோடுதான் இந்தப் பட்டியலை சுதாகர் வெளியிட்டுள்ளார்''’என்றார். ஆனாலும் புகைச்சல் ஓயவில்லை.

-பரமசிவன்

news1

வந்த செய்தி: கடத்தல் புள்ளிக்கு

news

வந்த செய்தி: ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் பட்டியலும் ரிலீஸ், அதிருப்தியும் ரிலீஸ்.

விசாரித்த உண்மை: கடந்த வாரம் நெல்லை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள், பல்வேறு அணிகளுக்கான செயலாளர்கள் பட்டியலை ரஜினியின் ஒப்புதலோடு வெளியிட்டார் மாநில பொறுப்பாளர் வி.எம்.சுதாகர். இதில், 30 வருடங்களுக்கு முன்பே பானு சவுண்ட் சர்வீஸ் நடத்திக் கொண்டே, பட்டிதொட்டியெல்லாம் ரஜினி மன்றங்களை உருவாக்கிய பானுசேகரை கௌரவச் செயலாளராக்கிவிட்டு, வெயிட் பார்ட்டியான டாக்டர் செல்வகுமார் என்பவரை மா.செ.வாக நியமித்திருப்பது, மக்கள் மன்றத்தினர் மத்தியில் அதிருப்தியைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் செயலாளர்களில் ஒருவரிடம் கேட்டபோது, ""தலைவரிடம் நேரடியாகப் பேசும் மாவட்டத் தலைவர்களில் பானுசேகரும் ஒருவர். ஆனால் அவரின் உடல்நிலை இப்போதிருக்கும் நிலையில் ஆக்டிவ்வாக செயல்பட முடியாது என்பதால், பானுசேகரின் ஒப்புதலோடுதான் இந்தப் பட்டியலை சுதாகர் வெளியிட்டுள்ளார்''’என்றார். ஆனாலும் புகைச்சல் ஓயவில்லை.

-பரமசிவன்

news1

வந்த செய்தி: கடத்தல் புள்ளிக்கு கட்சிப் பதவி, காங்கிரஸ் சர்ச்சை.

விசாரித்த உண்மை: கட்சியின் அகில இந்திய கமிட்டிக்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த குட்லக் ராஜேந்திரன் பெயரைப் பரிந்துரை செய்திருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர். இதையறிந்து கொதித்துப் போன ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தரப்பு, "இந்த குட்லக் ராஜேந்திரன் மாவட்டக் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, தங்க கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்ததால், இவரது பதவி பறிக்கப்பட்டது. அப்படிப்பட்டவரை தமிழக காங்கிரசில் பொதுக்குழு உறுப்பினராக்கிய திருநாவுக்கரசர், இப்போது அவரை அகில இந்திய பொறுப்புக்கும் பரிந்துரைக்கிறார், இதை ஏற்கக்கூடாது. இப்படிப்பட்டவர்களுக்கே அனுசரணையாக இருக்கும் திருநாவுக்கரசர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற ரீதியில் ராகுலுக்கு புகார்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது இளங்கோவன் தரப்பு.

-இளையர்

வந்த செய்தி: "சேலத்துக்கு நான்தான் அம்மா'. கலெக்டர் உத்தரவால் முணுமுணுக்கும் அதிகாரிகள்.

விசாரித்த உண்மை: சேலம் கலெக்டர் ரோகிணி, தினமும் ஏதாவது ஒரு இடத்தில் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்பார். அதுபற்றிய செய்திகளும் பத்திரிகை, டி.வி.க்களில் ஃப்ளாஷ் ஆகும். அதேபோல் அரசு விழாவிற்கு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகள் எல்லாம் வந்த பிறகு தான் வருவார். தனக்கு போடப்பட்டிருக்கும் நாற்காலி மேல் வெள்ளைத் துண்டு போட வேண்டும் என்பது ரோகிணியின் கண்டிஷனாம். ஜனவரி 30-ஆம் தேதி பனைமரத்துப்பட்டியை அடுத்த கோணமடுவு, அரசு பழங்குடியினர் உறைவிட உயர்நிலைப்பள்ளியில் மனிதநேய விழா நடந்தது. நண்பகல் 12 மணி விழாவிற்கு ஆத்தூர் எம்.எல்.ஏ. சின்னதம்பி, வீரபாண்டி எம்.எல்.ஏ. மனோன்மணி ஆகியோர் 11:30-க்கு வந்துவிட்டனர். ஒருமணி நேரம் காத்திருந்தும் கலெக்டர் ரோகிணி வராததால், எம்.எல்.ஏ.க்கள் டென்ஷனாகி கிளம்பிவிட்டனர். 1:20-க்கு வந்த கலெக்டர், "ஒருவருக்கொருவர் அன்புடனும் பண்புடனும் பழகவேண்டும்' என மாணவர்கள் மத்தியில் பேசிவிட்டுக் கிளம்பினார். கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது, “"யாரும் "மேடம்'னு கூப்பிடக்கூடாதாம், "அம்மா'ன்னுதான் கூப்பிடணுமாம்... புது உத்தரவு'’என்கிறார்கள்.

-சிவசுப்பிரமணியம்

newssவந்த செய்தி: விஜய்யுடன் இரண்டாம் முறையாக ஜோடிபோடும் கீர்த்திசுரேஷ். கடுகடுப்பில் ராகுல்பிரீத்சிங்கும் சோனாக்ஷி சின்ஹாவும்.

விசாரித்த உண்மை: "சன் பிக்சர்ஸ்' கலாநிதிமாறன் தயாரிப்பில் விஜய் நடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ட் பண்ணும் படத்தின் போட்டோஷூட் முடிந்து ஷூட்டிங்கும் ஆரம்பமாகவுள்ளது. "பைரவா'வில் விஜய்க்கு ஜோடி போட்ட கீர்த்தி சுரேஷ்தான், பெயரிடப்படாத இந்த விஜய் படத்திலும் ஜோடி. இந்தியில் "அகிரா'வை எடுத்த வகையில் சோனாக்ஷி சின்ஹாவும், தெலுங்கில் "ஸ்பைடர்'’ எடுத்த வகையில் ராகுல் பிரீத்சிங்கும் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், தங்களைத்தான் செலக்ட் பண்ணுவார் என ஆசையாக காத்திருந்தனர். ஆனால் விஜய்யோ, கீர்த்தி சுரேஷை "டிக்' அடித்ததும், "இந்த சான்ஸை எப்படி அவ கேட்ச் பண்ணுனா' என்ற கடுகடுப்பில் இருக்கிறார்களாம், மிஸ் பண்ணிய இருவரும்.

-பரமேஷ்

வந்த செய்தி: கமல் கட்சியின் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்த கல்லூரி நிர்வாகங்கள். ஓ.கே.சொன்ன தி.மு.க. ஒ.செ.

விசாரித்த உண்மை: பிப்ரவரி 21-ந் தேதி ராமேஸ்வரம் அப்துல்கலாம் வீட்டிலிருந்து ‘"நாளை நமதே'வை ஆரம்பித்துவிட்டு, மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தும் ஐடியாவுக்கு வந்த கமல், இடத் தேர்வு குறித்து முடிவு செய்வதற்காக நற்பணி இயக்கத்தின் மாநிலத் தலைவர் கோவை தங்கவேலுவை மதுரைக்கு அனுப்பினார். மதுரையில் உள்ள அனைத்து தனியார் கல்லூரி நிர்வாகிகளையும் நேரில் சென்று சந்தித்து, கூட்டம் நடத்துவதற்காக கல்லூரி மைதானத்தைக் கேட்டபோது, அனைவருமே மறுத்துவிட்டனராம். இதையடுத்து ஒத்தக்கடையில், தனக்குச் சொந்தமான இடத்தில் கமல் கூட்டம் நடத்த ஓ.கே. சொல்லிவிட்டாராம் மேலூர் தி.மு.க. ஒ.செ. ரகுபதி.

-ஷாகுல்

வந்த செய்தி: ரஜினியை சந்திக்கும் முயற்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்.

விசாரித்த உண்மை: ரஜினி அரசியல் கட்சி துவங்கியவுடன், அவருடன் கூட்டணி வைப்பதில், த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் ஆர்வமாக இருப்பதாக ஜன.26-28 நக்கீரனில் இதே பகுதியில் எழுதியிருந்தோம். இந்த விஷயத்தில் அடுத்தகட்டமாக, ரஜினியை சந்தித்துப் பேசுமாறு வாசனை வலியுறுத்தி வருகிறார்கள் த.மா.கா.வின் முன்னணித் தலைவர்கள். இது குறித்து தனது குடும்பத்தினரிடமும் வாசன் ஆலோசித்துவிட்டு, ரஜினியை சந்திக்கும் முடிவுக்கு வந்துவிட்டார். இதையடுத்து ரஜினி-வாசன் சந்திப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க வாசன் குடும்பத்தினர் களம் இறங்கியுள்ளனர்.

-சஞ்சய்

இதையும் படியுங்கள்
Subscribe