போராட்டம் பலவிதம்!
பொதுவான விஷயங்களுக்கான போராட்டம், தனிமனித போராட்டம்... என பலவகை போராட்டங்கள் நடந்தபடியே இருக்கின்றன.
சினிமா சார்ந்த சில போராட்டங்களை நம்ம "டூரிங் டாக்கீஸ்'ல ஓட்டப்போறோம்.
கோலிவுட் போராட்டம்!
"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை நிறுத்த வேண்டும்'’ என வலியுறுத்தி தமிழ்த் திரைப்பட நட்சத்திரங்கள் மௌனப் போராட்டம் நடத்தினார்கள். பெரிய நட்சத்திரங்களில் அஜீத், சிம்பு, த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட சிலர் இதில் கலந்துகொள்ளவில்லையென்றாலும்... தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக... திரைத்துறையினர் நடத்திய போராட்டம், அவர்கள் மீதான அபிமானத்தை உயர்த்தி இருக்கிறது. இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார் விஷால்.
இன்னொருபுறம்... ‘புதுப்படங்களை வெளியிடாமல் சினிமா தயாரிப்பாளர்கள்’நடத்திவரும் போராட்டத்தைக் குலைக்க...
போராட்டம் பலவிதம்!
பொதுவான விஷயங்களுக்கான போராட்டம், தனிமனித போராட்டம்... என பலவகை போராட்டங்கள் நடந்தபடியே இருக்கின்றன.
சினிமா சார்ந்த சில போராட்டங்களை நம்ம "டூரிங் டாக்கீஸ்'ல ஓட்டப்போறோம்.
கோலிவுட் போராட்டம்!
"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை நிறுத்த வேண்டும்'’ என வலியுறுத்தி தமிழ்த் திரைப்பட நட்சத்திரங்கள் மௌனப் போராட்டம் நடத்தினார்கள். பெரிய நட்சத்திரங்களில் அஜீத், சிம்பு, த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட சிலர் இதில் கலந்துகொள்ளவில்லையென்றாலும்... தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக... திரைத்துறையினர் நடத்திய போராட்டம், அவர்கள் மீதான அபிமானத்தை உயர்த்தி இருக்கிறது. இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார் விஷால்.
இன்னொருபுறம்... ‘புதுப்படங்களை வெளியிடாமல் சினிமா தயாரிப்பாளர்கள்’நடத்திவரும் போராட்டத்தைக் குலைக்க... சில வேலைகள் நடந்திருக்கின்றன.
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவிருக்கும் "பீட்சா'’டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்... தான் தயாரித்து இயக்கியிருக்கும் "மெர்குரி'’படத்தை, தயாரிப்பாளர் சங்கத்தின் தடையை மீறி வெளியிடப்போவதாக ஒரு தகவலை கசியவிட... பொதுவாக சினிமா துறையினர் நடத்தும் போராட்டங்கள் பெரும்பாலும் பிசுபிசுத்த நிலையில்... தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் முடிவை ஏற்று... கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குமேல் உறுதியாக ‘நோ ரிலீஸ்’ போராட்டம் நடத்திவருகிறார்கள். அவர்களெல்லாம் கார்த்திக் சுப்புராஜுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்க... இப்போது... "தடையை மீறும் ஐடியா இல்லை'’என சொல்லியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
"திரைத்துறையினரின் போராட்டம் விரைவில் சுமுகமுடிவை எட்டும்' எனச் சொல்லப்படுகிறது.
பாலிவுட் போராட்டம்!
மான்களை வேட்டையாடி கொன்ற வழக்கில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நீதிமன்றத்தால் ஐந்தாண்டு தண்டனை விதிக்கப்பட்ட சல்மான்கான்... கைதி எண் 106-வாக ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறைக்குள் நுழைந்தபோது... சிறை அதிகாரிகள் தந்த சில குளுகோஸ் பிஸ்கெட்டுகளையும், டீயையும் மட்டும் சாப்பிட்ட சல்மான்... சிறை அறைக்குள் போனபிறகு எதுவும் சாப்பிடவில்லை. பருப்பு, சப்பாத்தி, கிச்சடி, சாதம்... என சிறை அதிகாரிகள் வழங்கிய உணவை உண்ணாமல் மூன்று வேளை பட்டினியாக இருந்து உண்ணாவிரத போராட்டம் நடத்திய சல்லு... அந்தக் கொல பட்டினியுடனே... கடுமையா உடற்பயிற்சிகளைச் செய்து... சிறை அதிகாரிகளையே மிரள வைத்துவிட்டார். தன் சகோதரி வந்து சமாதானப்படுத்திய பிறகே... உண்ணா போராட்டத்தை கைவிட்டார்.
ஐம்பதாயிரம் பிணைத்தொகை கட்டி... ’"சள்'ளுனு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார் சல்லு.
டோலிவுட் போராட்டம்!
சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தருவதற்காக நடிகைகளை பாலியல் ரீதியாக இம்சை செய்கிறார்கள்' என கடந்த சில நாட்களாக தெலுங்கு சினிமா உலகின் மீது குற்றம்சாட்டி வந்த நடிகை ஸ்ரீரெட்டி... ‘"விருப்பத்திற்கு உடன்பட மறுப்பதால் வேறுமொழிப் பெண்களை தெலுங்கு சினிமாவில் நடிக்க வைக்கிறார்கள்'’என்றும் சொன்னார். அத்துடன்... சூசகமாக பிரபல ஹீரோ ஒருவரையும், வெளிப்படையாக பிரபல டைரக்டர் சேகர் கம்முலாவையும்... இந்த விஷயத்தில் தொடர்பு படுத்தினார் ஸ்ரீரெட்டி. அத்துடன் ‘"மூவி ஆர்ட்டிஸ்ட் அஸோஸியேஷன்'’ எனப்படும் தெலுங்கு சினிமா நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினராகச் சேர ஸ்ரீரெட்டி கொடுத்த விண்ணப்பத்தையும் பல மாதங்களாக கிடப்பில் போட்டார்களாம்.
இதனால் ஆத்திரமான ஸ்ரீரெட்டி, ஹைதராபாத்தில் உள்ள நடிகர் சங்க அலுவலகம் முன்பாக அரைநிர்வாணப் போராட்டம் நடத்தி அலறவிட்டிருக்கிறார்.
கடந்த ஞாயிறன்று அந்த அலுவலக வளாக வாசலில் அமர்ந்து, தன் மேலாடையை முழுவதுமாக நீக்கி... தன் கைகளால் மறைத்துக்கொண்டு போராட்டம் நடத்த... இப்போது ஸ்ரீரெட்டி மீது போலீஸ் வழக்குத் தொடர்ந்திருக்கிறது.
ஹாலிவுட் போராட்டம்!
நம்ம ஊர் நெடுவாசல் வகையறா போராட்டம் போன்றதுதான் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பசிபிக் கடற்கரை பகுதியை காக்க நடக்கிற போராட்டம். அந்தப் பகுதியில் எண்ணெய்க் கிணறு தோண்ட அரசு முடிவெடுத்து... துரப்பன கப்பலை நிறுத்தியுள்ள நிலையில்... அந்தப் பகுதியின் பூர்வகுடி மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்திவரும் நிலையில்...
""இது பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம்... முக்கியமானதுதான். ஆனா... அதைவிட முக்கியம்... அந்தப் பகுதியில் வாழ்ற மக்களோட வாழ்வாதாரம். இந்த திட்டத்த அனுமதிச்சா கடல்வளம் அழியும், கடல் உணவு பற்றாக்குறை ஏற்படும், சுற்றுலாத் தொழில் நசியும், சுற்றுச்சூழல் மாசுபடும். அதனால... பசிபிக் கடற்கரை பகுதியை பாதுகாத்தே ஆகணும்''’’என போராட்டக் குரல் கொடுத்திருக்கிறார் ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோவும், அரசியல்வாதியுமான அர்னால்ட். ஹீரோ தலையிட்டதால்... விஷயம் வேகமாக மக்கள்ட்ட பரவி வருது.
-ஆர்.டி.எ(க்)ஸ்