கிழிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!

fight

பூட்டுப் போடுதல், சாலை மறியல், உள்ளிருப்பு போராட்டம், முற்றுகை என கூட்டுறவு சங்கத் தேர்தல் களம் தாறுமாறாக உள்ளது.

fight

புதுக்கோட்டை அர்பன் வங்கி தேர்தலுக்கு அ.தி.மு.க. எடப்பாடி அணி ந.செ. பாஸ்கர் தரப்பு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வர... அடுத்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி மாஜிக்களான கார்த்திக் தொண்டைமான், ராஜசேகர் அணியினர், தி.மு.க., அ.ம.மு.க. அணிகளை வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்தனர். போலீசாரும் குவிக்கப்பட்ட நிலையில் அ.தி

பூட்டுப் போடுதல், சாலை மறியல், உள்ளிருப்பு போராட்டம், முற்றுகை என கூட்டுறவு சங்கத் தேர்தல் களம் தாறுமாறாக உள்ளது.

fight

புதுக்கோட்டை அர்பன் வங்கி தேர்தலுக்கு அ.தி.மு.க. எடப்பாடி அணி ந.செ. பாஸ்கர் தரப்பு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வர... அடுத்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி மாஜிக்களான கார்த்திக் தொண்டைமான், ராஜசேகர் அணியினர், தி.மு.க., அ.ம.மு.க. அணிகளை வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்தனர். போலீசாரும் குவிக்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க. கல்வீச்சு கலவரத்தில் ஈடுபட்டதால் தி.மு.க. இலக்கிய அணி மாஜி கவிதைப்பித்தன், தி.மு.க. ராசேந்திரன், கணேஷ் நகர் உதவி ஆய்வாளர் யோகரத்தினம் மற்றும் பலருக்கு செங்கல் தாக்குதலால் காயம் ஏற்பட்டது. தேர்தல் அதிகாரி, பின்வாசல் வழியாக ஓடியிருந்தார்.

இந்த நிலையில் 3-ந் தேதி கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட இணைப்பதிவாளர் மிருணாளினியிடம் தி.மு.க. ரகுபதி எம்.எல்.ஏ., செல்லப்பாண்டியன் தலைமையில் சில வழக்கறிஞர்கள் உள்பட 30 பேர் மனு கொடுக்கச் சென்றனர். அங்கே இணைப்பதிவாளர் எஸ்கேப். அதனால் நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு குப்பைத் தொட்டியில் மனுவை போட்டுவிட்டு வெளியே செல்ல முயன்ற நேரத்தில் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையிலான போலீசார், தி.மு.க.வினரிடம் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளு ஏற்பட்ட நேரத்தில் குண்டுக்கட்டாக இழுத்துச் சென்று கைது செய்தனர். இரவு 7 மணிவரை மண்டபத்தில் வைத்திருந்த நேரத்தில் "ரிமாண்ட் செய்தால் பிரச்சினை பெரிதாகும்' என்று மேலிடத்தில் இருந்து சொன்னதால் விடுதலை செய்யப்பட்டனர்.

அதே நேரத்தில் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சிக்கன நாணய சங்கத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்த நேரத்தில் 11 அ.தி.மு.க. ஆசிரியர்களின் பெயர்களை மட்டும் தகுதியான வேட்பாளர்கள் என பட்டியல் ஒட்டிவிட்டு, தேர்தல் அதிகாரி சென்றுவிட... ஆசிரியர்கள் தர்ணா, ஆர்ப்பாட்டம் செய்த நிலையில், போலீசாரும் வந்தனர். "முழுமையாக வேட்பாளர் பட்டியல் ஒட்டாத வரை இங்கிருந்து போகமாட்டோம்' என்று ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர... அதன்பிறகு வந்த தேர்தல் அதிகாரி, முதலில் ஒட்டிய அ.தி.மு.க. வேட்பாளர்கள் 11 பேர் பட்டியலை கிழித்துவிட்டு அனைத்து வேட்பாளர்களும் அடங்கிய பட்டியலை ஒட்டினார்.

அதிகாரி வருவது, ஒட்டுவது என அனைத்தையும் தங்கள் செல்போனில் பதிவு செய்துகொண்டு வெளியே வந்த ஆசிரியர்கள் நம்மிடம்... ""தமிழக கூட்டுறவு சங்கத் தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக... தேர்தல் அதிகாரி ஒட்டிய அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை அதேஅதிகாரி கிழித்துவிட்டு பிறகு அனைத்து வேட்பாளர்கள் பட்டியலையும் ஒட்டிய சம்பவம் புதுக்கோட்டையில் மட்டும்தான் நடந்திருக்கிறது. அதனால் தேர்தலை நிறுத்த திட்டமிடலாம் அல்லது தேர்தல் அதிகாரியை மாற்றவும் செய்யலாம்'' என்றனர்.

fight
இதையும் படியுங்கள்
Subscribe