Skip to main content

பார்வை!-சீனிவாசன் சமூக ஆர்வலர்

Published on 20/03/2018 | Edited on 21/03/2018
பிரஸ் ரிலீஸ்தான் செய்தியாக வரும் என்ற வழக்கத்தை மாற்றிக் காண்பித்த ஆளுமை நக்கீரன். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மக்களின் பணத்தை எப்படியெல்லாம் சுரண்டி ஊழல் செய் கிறார்கள் என்பதை நக்கீரன் படித்தாலே தெரிந்துவிடும். ஜெயலலிதா என்கிற மிகப்பெரிய அரசியல்வாதியின் அடக்கு முறையாளரின் அத் தனை... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி விழா: முதல்வருக்கு அழைப்பு விடுத்த சீனிவாசன்!

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

m k stalin

 

2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது. அதேநேரத்தில், தோனி 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகர் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதால், அவரால் சென்னை அணியின் வெற்றிக்குப் பிறகு உடனடியாக இந்தியா வரவில்லை.

 

இந்தச் சூழலில், உலகக்கோப்பை முடிந்ததும் தோனி தமிழ்நாடு வந்து ஐபிஎல் கோப்பையைத் தமிழ்நாடு முதல்வரிடம் அளிப்பார் எனவும், அந்த விழா சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில் உலகக்கோப்பை போட்டிகள் முடிந்து தோனி இந்தியா திரும்பியுள்ளதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா வரும் நவம்பர் 20ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன், இன்று (16.11.2021) முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து விழாவுக்கான அழைப்பிதழை அளித்தார்.

 

இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு.என்.சீனிவாசன் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2021 ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்றதையொட்டி 20.11.2021 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினார்" என கூறப்பட்டுள்ளது.

 

 

Next Story

'டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகளே இல்லை!' - பா.ஜ.க சீனிவாசன் பேச்சு!

Published on 10/12/2020 | Edited on 11/12/2020

 

 'Those who are fighting in Delhi are not farmers' - BJP Srinivasan speaks!

 

பா.ஜ.கவின் மதுரை மண்டலப் பொறுப்பாளர் சீனிவாசன், இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டம் குறித்த விரிவான விளக்கம் அளித்த அவர், வேளாண் சட்டத்தை எதிர்த்து, டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் யாரும், விவசாயிகள் அல்ல. அவர்கள் மாஃபியாக்களின் தூண்டுதலினால் ஒன்று சேர்ந்த கூட்டம். இந்த வேளாண் சட்டம் முழுமையாக விவசாயிகளுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

அதேபோல் விவசாய நிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களால் அபகரிக்கப்படும் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தி.மு.கவால் பரப்பப்பட்ட பொய்யான தகவல். தமிழகத்தில் தி.மு.க மீதுதான் அதிக அளவில் நிலம் கையகப்படுத்தப்பட்ட புகார்கள் அதிகம் உள்ளன. தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற இருந்த பந்த் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. அதற்குக் காரணம் தமிழக விவசாயிகளுக்கு நன்றாகவே இந்தச் சட்டம் குறித்த அறிவும், ஞானமும் இருக்கிறது. தி.மு.க தேர்தல் அறிக்கையில் இந்தப் புதிய வேளாண் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என அவர்களே முன்வைத்துவிட்டு, இன்று அவர்களே அதற்கு எதிராகப் போராட்டம் நடத்துவது என்பது விவசாயிகளை ஏமாற்றுவதாகும்.

 

எனவே இந்த மாதம் 8ஆம் தேதி முதல் 'விவசாயிகளின் நண்பன் மோடி' என்ற ஒரு அமைப்பை தொடங்கி, தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து இந்த வேளாண் சட்டத்தைக் குறித்தும், மத்திய அரசினுடைய திட்டங்கள் குறித்தும் நேரில் அவர்களுக்கு விளக்க இருக்கிறோம். இந்த அமைப்பு கடந்த 8-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கி, இந்த மாதம் இறுதிவரை இந்தப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது எனத் தெரிவித்தார். 

 

மத்திய அரசு ஒருபோதும் இந்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெறப் போவதில்லை. சட்டம் குறித்த அனைத்து விளக்கங்களும் அந்தந்த மொழிகளில் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துச் சொல்லப்படும். எனவே உண்மையான விவசாயிகள் யாரும் இதுவரை எந்தப் போராட்டத்திலும் ஈடுபடவில்லை. எனவே, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் விவசாயிகள் அல்ல. அவர்கள் காசு கொடுத்துக் கூட்டி வந்த கூட்டம் என்றும் சாடினார் சீனிவாசன்.