பார்வை   தூண்டுகோல்!  -ரா. அன்புமேரி  இல்லத்தரசி  

p

ள்ளிக் காலங்கள் யாவருக்கும் மிகமிக முக்கியமானவை. பள்ளிக்கூடங்கள் கொடுத்த புத்தகங்களுக்கிடையில் என் அப்பாவால் பைபிள் எனக்கு கொடுக்கப்பட்டதைப்போல, அப்பா வாங்கி வைத்திருக்கும் புத்தகத்தில் நானே எடுத்துக் கொண்ட புத்தகம் என்றால் அது நக்கீரன்தான்.

வீரப்பன் என்ற முகத்தை நக்கீரன் வெளிக்கொண்டு வந்தபோது... என்ன ஒரு அசாத்திய துணிச்சல் அந்த மீசைக்காரருக்கு..? என என் அப்பா சிலாகிக்கும்போதெல்லா

p

ள்ளிக் காலங்கள் யாவருக்கும் மிகமிக முக்கியமானவை. பள்ளிக்கூடங்கள் கொடுத்த புத்தகங்களுக்கிடையில் என் அப்பாவால் பைபிள் எனக்கு கொடுக்கப்பட்டதைப்போல, அப்பா வாங்கி வைத்திருக்கும் புத்தகத்தில் நானே எடுத்துக் கொண்ட புத்தகம் என்றால் அது நக்கீரன்தான்.

வீரப்பன் என்ற முகத்தை நக்கீரன் வெளிக்கொண்டு வந்தபோது... என்ன ஒரு அசாத்திய துணிச்சல் அந்த மீசைக்காரருக்கு..? என என் அப்பா சிலாகிக்கும்போதெல்லாம் எனக்கு நக்கீரன் மட்டுமே தொடர் வாசிப்பில் இருந்த புத்தகமாய் ஆகியிருந்தது. நக்கீரன் அண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற பேராசையும் எனக்கு வந்தது. சில விசயங்களில் துணிச்சலாக நான் எடுக்கிற முடிவுகளுக்கு மிக முக்கியத் தூண்டுதலாக இருந்தது நக்கீரன் என்று சொன்னால் அது மிகையாகாது .

இப்போது பள்ளிக்கும், கல்லூரிக்கும் போகும் என் இரண்டு பெரிய பையன்களுக்கு என் அப்பாவிடமிருந்து நான் எடுத்ததைப் போலல்லாமல் பொக்கிஷமாய் நான் பாதுகாத்து வைத்திருக்கும் நக்கீரனை ஒரு மலரைப்போல பரிசளித்துவிடுகிறேன்.

2018, பிப்ரவரி 1-3 இதழ்:

அட்டைப்படச் செய்தி அமர்க்களப்படுத்தியிருந்தது. "தேடப்படும் குற்றவாளியிடம் கூடிக்குலாவிய மந்திரிகள்' கட்டுரையைப் படித்து... போலீஸின் தேடல் எவ்வளவு தூரம் என்பதைவிட எந்த இடத்தில் தேடக்கூடாது என்பதைத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன்.

"அதுவும் மாநிலம்தான் இதுவும் மாநிலம்தான்... ஆனால் அதுபோல இது ஏன் இல்லை' என்கிற வரிகளைச் சுமந்த... "அசத்தும் ஆந்திரா, ஏமாற்றும் தமிழகம்' கட்டுரையும், "ரூபாயில் ஏற்றிவிட்டு பைசாவில் குறைப்பதா..?' என்கிற கட்டுரையும் மிகமிகச் சிறந்த கட்டுரைகள் என்பதைவிட, தமிழக மக்களின் உணர்வைத் தூண்டிய தூண்டுகோல் என்றே சொல்லலாம்.

வாசகர் கடிதங்கள்!

"டானிக்' தொடர்கள்!

நடிகர் ராதாரவியின் "கர்ஜனை', நடிகை கஸ்தூரியின் "சோத்துக்கட்சி' ஆகிய இரண்டு தொடர்களுமே இளைஞர்களுக்குத் தேவையான ஓர் அத்தியாவசிய "டானிக்'காக உள்ளது.

-ஆர்.கார்த்திகேயன்,ஜோலார்பேட்டை, வேலூர்.

மிரட்டல்!

தினமணி ஆசிரியர், ஜீயரிடம் அட்டணைக்கால் போட்டு சரணாகதி அடைந்தது பயம் கலந்த ஆன்மிக விசுவாசத்தையே காட்டுகிறது. இது தற்காலிக தீர்வு அல்ல காலத்துக்குமான பத்திரிகை சுதந்திரத்திற்கு விடப்பட்ட மிரட்டல்.

-கோ.ஆறுமுகம், ஒரத்தநாடு.

இதையும் படியுங்கள்
Subscribe