kulanthiraj

டக சுதந்திரத்திற்காகவும் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் மக்கள் ஆதரவோடு தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் பத்திரிகை நக்கீரன். நக்கீரன் தாக்கப்படும்போதெல்லாம் அது பத்திரிகை/ ஊடகங்கள் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் என்பதை உணர்ந்துதான் நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டபோது பத்திரிகையாளராக நானும் களத்தில் இறங்கி அவருக்காகப் போராடினேன்.

நக்கீரன் தொடங்கிய காலத்திலிருந்து வாசிக்கக்கூடிய வாசகன் நான். எந்தச்சூழலில் எதற்கும் அட்ஜஸ்ட் பண்ணாமல் துணிவுடன் எழுதும் பத்திரிகை என்பதால் எனக்கு மிகவும் பிடிக்கும். வீரப்பன் என்கிற ஒருவரை நாட்டுக்கு காண்பித்த மாபெரும் சாதனையோடு நின்றுவிடவில்லை. சாமியார் என்கிற போர்வையில் இளம்பெண்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் போலி சாமியார்களை படம்பிடித்துக் காட்டியது நக்கீரன்தான். நான், இலக்கிய பத்திரிகை நடத்தி வந்தாலும் நக்கீரனின் புலனாய்வு செய்திகளைத்தான் விரும்பிப் படிப்பேன்.

Advertisment

2018, ஜனவரி 29-31 இதழ்:

நமது தாய்மொழித் தமிழை "நீச’பாஷை' என்று கீழ்த்தரமாக எண்ணித்தான் விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது எழுந்து நிற்கவில்லை என்பதை அட்டைப் படத்தில் வெளியிட்டிருப்பதன் மூலம் தெளிவாகவே புரிந்துகொள்ள முடிகிறது. "வெளியே வருகிறார் சசி' என்ற செய்தியில் வைக்கப்பட்ட புகைப்படம் ஜெயிலில் கண் கலங்கி நிற்கும் சசியின் உண்மை நிலையை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது. "ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் உல்லாச உலகம்' செய்தி படித்தபோது இதற்காகவா இவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள் என்று கேட்கத் தோன்றுகிறது. "விபத்தை தடுக்கவேண்டிய காவல்துறை உயிரை பறிப்பதா?' செய்தி காவல்துறையின் அத்துமீறல்களை வெளிப்படுத்துகிறது.

Advertisment

வாசகர் கடிதங்கள்!

செலவாளிகள்!

கேரள வளர்ச்சிக்காக அறிவார்ந்த முறையில் செயல்பட்டு மாநிலத்தை முன்னுக்கு கொண்டு செல்ல முனைப்பு காட்டுகிறார் முதல்வர் பினராய் விஜயன். நம்ம தமிழக அமைச்சர்களோ வாய்ப்பந்தல் போடுவதும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதுமாய் காலம் கழிக்கிறார்கள். இந்த லட்சணத்தில் முதல், துணை என இரண்டு அமைச்சர்கள்.

-வி.ஆனந்த்குமார், திருச்சி.

தெற்கை நோக்கி...!

தமிழகத்தில் ரயில், வங்கி, நகைக்கடை என வடக்கத்தியர்களின் கன்னக்கோல் நீண்டது. தங்கள் பங்குக்கு இப்போது கொள்ளையர்களும் வடக்கு வாழ்வதற்காக போஸ்ட்ஆபீஸ் ஏ.டி.எம். கார்டுகள் வழியே தெற்கைத் தேய்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

-ஆ.சிவசங்கர், கும்பகோணம்.