வந்த செய்தி! விசாரித்த உண்மை!

kajal,nayan

வந்த செய்தி: தி.மு.க.தலைமை மீது நேரு உள்ளிட்ட சீனியர்கள் அதிருப்தி.

knnehruவிசாரித்த உண்மை: கடந்த மாதம் ஈரோட்டில் நடந்த தி.மு.க. மண்டல மாநாட்டிற்கு, அதிக நிதி கொடுத்தவர்களில் திருச்சி தெற்கு மா.செ.வும் கட்சியின் சீனியருமான கே.என்.நேருவும் ஒருவர். மாநாட்டில் அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ.வுக்கு கிடைத்த பேசும் வாய்ப்பு நேருவுக்கு கிடைக்கவில்லை. அடுத்ததாக திருவெறும்பூரில், ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்ட போஸ்டர் சர்ச்சையால் நேரு ஆதரவாளரான ஒ.செ. நவல்பட்டு விஜியை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, அந்த இடத்தில் மாரியப்பன் என்பவரை ஒ.செ.வாக நியமித்துள்ளது தலைமை. இது எல்லாமே நேருவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதன் எஃபெக்ட்தான், தஞ்சைக்கு திடீரெனச் சென்று சசிகலாவைச் சந்தித்தது என்கிறார்கள் ஒரு தரப்பினர். மேலும் நேரு, எ.வ.வேலு, க.பொன்முடி போன்ற சீனியர்கள் தனி ஆலோசனையில் இருப்பதாகவும் தகவல் கசிகிறது. கே.என்.நேருவோ, "தலைமை மீது கடுகளவு அதிருப்தியும் இல்லை, தலைமைக்கு எதிரான சிந்தை எந்தக் காலத்திலும் இல்ல

வந்த செய்தி: தி.மு.க.தலைமை மீது நேரு உள்ளிட்ட சீனியர்கள் அதிருப்தி.

knnehruவிசாரித்த உண்மை: கடந்த மாதம் ஈரோட்டில் நடந்த தி.மு.க. மண்டல மாநாட்டிற்கு, அதிக நிதி கொடுத்தவர்களில் திருச்சி தெற்கு மா.செ.வும் கட்சியின் சீனியருமான கே.என்.நேருவும் ஒருவர். மாநாட்டில் அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ.வுக்கு கிடைத்த பேசும் வாய்ப்பு நேருவுக்கு கிடைக்கவில்லை. அடுத்ததாக திருவெறும்பூரில், ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்ட போஸ்டர் சர்ச்சையால் நேரு ஆதரவாளரான ஒ.செ. நவல்பட்டு விஜியை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, அந்த இடத்தில் மாரியப்பன் என்பவரை ஒ.செ.வாக நியமித்துள்ளது தலைமை. இது எல்லாமே நேருவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதன் எஃபெக்ட்தான், தஞ்சைக்கு திடீரெனச் சென்று சசிகலாவைச் சந்தித்தது என்கிறார்கள் ஒரு தரப்பினர். மேலும் நேரு, எ.வ.வேலு, க.பொன்முடி போன்ற சீனியர்கள் தனி ஆலோசனையில் இருப்பதாகவும் தகவல் கசிகிறது. கே.என்.நேருவோ, "தலைமை மீது கடுகளவு அதிருப்தியும் இல்லை, தலைமைக்கு எதிரான சிந்தை எந்தக் காலத்திலும் இல்லை'’என்கிறார் உறுதியாக. ஏப். 01-ஆம் தேதி சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின், அன்று முழுவதும் நேருவை தனது அருகிலேயே வைத்துக்கொண்டது முக்கியமானது.

-ஜெ.டி.ஆர்.

வந்த செய்தி: கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தேர்தலில் முத்தரசனுக்காக விட்டுக்கொடுத்த சி.மகேந்திரன்.

mahendranவிசாரித்த உண்மை: மன்னார்குடியில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சி.பி.ஐ.)யின் தமிழ் மாநிலச் செயலாளராக இரண்டாம் முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் முத்தரசன். சென்ற முறை நடந்த தேர்தலின்போது, 2 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியுற்றார் சி.மகேந்திரன். இந்தமுறை வெற்றிபெறக்கூடிய அளவுக்கு அதிக ஓட்டுக்கள் வைத்திருந்தும், சி.மகேந்திரனே முத்தரசன் பெயரை செயலாளர் பதவிக்கு முன்மொழிந்தார். இதனால் சற்றே நொந்துபோன, மகேந்திரன் ஆதரவு காம்ரேடுகள்... "நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்கள் வரவுள்ள நிலையில், நீங்கள் மாநிலச்செயலாளராக இருந்தால், மிகவும் கௌரவமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் நீங்களே ஏன் விட்டுக் கொடுத்தீர்கள்?'’என கடுகடுப்புடன் கேட்டுள்ளனர். "கட்சியின் ஒற்றுமை கருதி எடுத்த முடிவு இது, எனவே யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம்' என காம்ரேடுகளை அமைதிப்படுத்தியுள்ளார் சி.மகேந்திரன்.

-அறிவு

kajal-nayan

வந்த செய்தி: நயன்தாரா, காஜல் அகர்வால் ஆகியோரின் மேக்-அப் மேன்களின் பேட்டா, சம்பளம். கிறுகிறுத்துப்போகும் தயாரிப்பாளர்கள் தடாலடி முடிவு.

விசாரித்த உண்மை: இப்போதைய ஹீரோயின்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் பெருமைக்குரியவர் நயன்தாராதான். சம்பளம் 5 கோடி ரூபாய் போக... நயனின் மேக்-அப்மேன், டச்சப் கேர்ள், உதவியாளர் தங்குவதற்கு ஃபைவ் ஸ்டார் ஓட்டல், சம்பளம், தினசரி பேட்டா இந்த வகையில் கோடியைத் தாண்டுகிறதாம். இதேபோல் காஜல் அகர்வாலின் மேக்-அப்மேனுக்கு ஃபைவ் ஸ்டார் ஓட்டலும், தினசரி பேட்டா 35,000 ரூபாயும் கொட்டி அழ வேண்டியிருப்பதாக நொந்து புலம்புகின்றனர் தயாரிப்பாளர்கள். இதற்கெல்லாம் கிடுக்கிப்பிடி போடும்விதமாக, "கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோயின்கள்... இனிமேல், அவர்களின் சம்பளத்திலிருந்தே மேக்-அப்மேன் மற்றும் உதவியாளர்களுக்கு கொடுத்துக் கொள்ளவேண்டும்' என தடாலடி முடிவு எடுத்திருக்கிறார்களாம். சினிமா ஸ்டிரைக் முடிந்ததும் இதை அமல்படுத்தும் ஐடியாவில் இருக்கிறதாம் தயாரிப்பாளர்கள் சங்கம்.

-பரமேஷ்

வந்த செய்தி: திருவண்ணாமலை கலெக்டரை மாற்றக்கோரி அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு.

விசாரித்த உண்மை: விடுமுறை நாட்களில் ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் அரசு ஊழியர்களை அலைக்கழிப்பது, மரியாதைக் குறைவாகப் பேசுவது, ஊழியர்களின் நலன் சார்ந்த ஃபைல்களை மாதக்கணக்கில் பெண்டிங் வைப்பது என முற்றிலும் அரசு ஊழியர்களுக்கு எதிரான வினோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி. இவரின் எல்லைமீறலைக் கண்டித்து கடந்த வாரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அலுவலகத்திலிருந்து புறப்பட்ட கந்தசாமியின் காரை மறித்து ஆவேசமாக குரல் எழுப்பிய போது ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டு, அரசு ஊழியர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. "கந்தசாமியை மாற்றியே தீரவேண்டும்' என முதல்வர் அலுவலகத்திற்கு புகார் மனுக்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றனர் அரசு ஊழியர்கள்.

-இளையர்

வந்த செய்தி: நுண்ணறிவுப் பிரிவு ஏ.சி.யை நூதன முறையில் மிரட்டும் அ.தி.மு.க. எம்.பி.

mpkumar

விசாரித்த உண்மை: திருச்சி மாநகர் அ.தி.மு.க. மா.செ.வாகவும் சட்டமன்ற அ.தி.மு.க. கொறடாவாகவும் மனோகரன் இருந்த போது, அவரின் சிபாரிசால் திருச்சி மாநகர நுண்ணறிவுப் பிரிவு ஏ.சி.யாக வந்தவர் கபிலன். இப்பதவிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், மனோகரன் இப்போது தினகரன் அணியில் இருப்பதாலும், கபிலனை டிரான்ஸ்பர் பண்ணும் முடிவுக்கு வந்தது திருச்சி மாநகர காவல்துறை. இதைத் தெரிந்துகொண்ட அ.தி.மு.க. எம்.பி. குமார், "உங்களுக்கு டிரான்ஸ்பர் வராம நான் பாத்துக்குறேன். அதுக்குக் கைமாறாக, எங்க ஆளுங்க லாட்டரி டிக்கெட் விற்பதையோ, நைட் பத்து மணிக்கு மேல பார்களில் சரக்கு விற்பதையோ கண்டுக்கக்கூடாது'’என நூதன முறையில் அன்பாக மிரட்டி வருகிறாராம். இதுக்கு டிரான்ஸ்பரே தேவலை என நினைக்கிறாராம் கபிலன்.

-தாவீது

Kajalagarwal Nayanthara
இதையும் படியுங்கள்
Subscribe