உமரி பொ.கணேசன், மும்பை-37
தமிழகம் செயின் திருடர்களின் சொர்க்க பூமியாய் மாறி வருகிறதே, காரணம் என்ன?
குவாரி -டெண்டர் -காண்ட்ராக்ட் கொள்ளையர்கள் எல்லாவற்றையும் வாரிச்சுருட்டி விடுவதால், திருடர்களுக்கு மிஞ்சுவது அப்பாவிகளின் கழுத்தில் உள்ள தங்கச் செயின்தான்!
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
"ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க பா.ஜ.க. பண உதவி செய்யாது' என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியது பற்றி?
பா.ஜ.க. மட்டுமல்ல, எந்தவொரு தனிப்பட்ட கட்சியும், தனிப்பட்ட மனிதர்களும் உதவி செய்ய வேண்டிய அவசியமின்றி, மத்திய அரசே செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தின் வாயிலாக இத்தகைய இருக்கைகள் அமைய தமிழிசை தனது தலைமையை வலியுறுத்தி நிறைவேற்றினால் போதும்.
எஸ்.பூவேந்தஅரசு, பெரியமதியாக்கூடலூர்
சசிகலாவால் நியமனம் பெற்றவர் என்பதற்காக முதல்வர் எடப்பாடியார் அமைத்த விசாரணைக் கமிஷன் மீது சந்தேகம் கொள்வது சரிதானா?
மக்க
உமரி பொ.கணேசன், மும்பை-37
தமிழகம் செயின் திருடர்களின் சொர்க்க பூமியாய் மாறி வருகிறதே, காரணம் என்ன?
குவாரி -டெண்டர் -காண்ட்ராக்ட் கொள்ளையர்கள் எல்லாவற்றையும் வாரிச்சுருட்டி விடுவதால், திருடர்களுக்கு மிஞ்சுவது அப்பாவிகளின் கழுத்தில் உள்ள தங்கச் செயின்தான்!
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
"ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க பா.ஜ.க. பண உதவி செய்யாது' என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியது பற்றி?
பா.ஜ.க. மட்டுமல்ல, எந்தவொரு தனிப்பட்ட கட்சியும், தனிப்பட்ட மனிதர்களும் உதவி செய்ய வேண்டிய அவசியமின்றி, மத்திய அரசே செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தின் வாயிலாக இத்தகைய இருக்கைகள் அமைய தமிழிசை தனது தலைமையை வலியுறுத்தி நிறைவேற்றினால் போதும்.
எஸ்.பூவேந்தஅரசு, பெரியமதியாக்கூடலூர்
சசிகலாவால் நியமனம் பெற்றவர் என்பதற்காக முதல்வர் எடப்பாடியார் அமைத்த விசாரணைக் கமிஷன் மீது சந்தேகம் கொள்வது சரிதானா?
மக்களின் சந்தேகம் என்பது விசாரணைக் கமிஷன் மீதானதல்ல. முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு 2016 செப்டம்பர் 22-ந் தேதியிலிருந்து டிசம்பர் 5-ந் தேதிவரை என்ன நடந்தது என்பதுதான். ஜெ.வின் மரணத்தின் மீதான சந்தேகத்தை தெளிவுபடுத்தாதவரை சசிகலா, எடப்பாடி, விசாரணைக் கமிஷன் என எல்லாத் தரப்பினர் மீதும் சந்தேகமே நீடிக்கும்.
பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி, பொள்ளாச்சி
ஜார்கண்ட் மாநிலம், முசாபலி மாவட்டம் பலிகோடா கிராமத்தைச் சேர்ந்த மனோகர் நாயக் என்பவர், வழிதெரியாமல் தொலைந்துபோன தன் மனைவி அனிதாவை, 24 நாட்கள் 600 கி.மீ. தூரம் சைக்கிளில் தேடி அலைந்து, கடைசியில் கண்டுபிடித்துள்ளாரே.. அந்தக் கணவரின் பாசம் பற்றி?
வாட்ஸ்அப்களில் மனைவியின் "டார்ச்சர்' பற்றிய மீம்ஸ்களையும் ஜோக்குகளையும் விழுந்து விழுந்து சிரித்து ரசிக்கும் கணவன்மார்கள் பலரும், அந்த "டார்ச்சர்' இல்லாத நாட்களே உண்மையான டார்ச்சர் என்பதை உணர்ந்தவர்கள். ஆண்கள் தங்களின் உணர்வை வெளிக்காட்டமாட்டார்கள் என்பது பொதுவான வழக்கு. ஆண்மைக்குரியதான அந்த அடையாளத்தை தகர்த்தெறிந்து, தன்னுள்ளும் கருணை சுரக்கும் பெண்மை உண்டு என்பதைத்தான் அனிதாவின் புகைப்படத்துடன் தேடி அலைந்து போலீஸ் துணையுடன் மீட்ட மனோகர் நாயக்கின் 600 கி.மீ. சைக்கிள் பயணம் காட்டுகிறது. மனைவி என்பவர் வீட்டு வேலையாள் என்று நினைத்த குடும்பத்தினரின் மனநிலை, பெண்களின் விழிப்புணர்வுகளாலும், நவீன வசதிகளாலும் மெல்ல மெல்ல மாறி வரும் நிலையில், மனைவிதான் ஆணிவேர் என்பதை உணர்த்தும் வகையில் 24 நாட்கள் அலைந்த மனோகர் நாயக், மனிதருள் நாயகர்.
லட்சுமி செங்குட்டுவன், நாமக்கல் (சேலம்)
"எத்தனை தடைகள் வந்தாலும் எனது பயணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது' என தீபா கூறுகிறாரே?
தானாக சேர்ந்த கூட்டத்தால் அரசியல் ஆசையில் தள்ளப்பட்டவர் தீபா. அவரது தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது. ஆனால், எங்கிருந்து அவருக்குத் தடைகள் வருகின்றன என்பது எல்லோருக்கும் தெரியும்போது, அவர் மட்டும் அறியாமல் இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
"ஆந்திர மக்களை ஏமாற்றினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்' என்று பா.ஜ.க.வுக்கு சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளாரே?
பா.ஜ.க.வுடன் வெளிப்படையான கூட்டணி அமைத்திருந்தாலும் இந்த விஷயத்தில் நிமிர்ந்து நிற்கும் முதல்வராக இருக்கிறார் ஆந்திராகாரர். மறைமுக இயக்கத்தில், எல்லா விஷயத்திலும் அடிமைகளாகவே இருக்கிறார்களே நம்ம மாநிலத்தவர்கள்.
தூயா, நெய்வேலி
கமல்ஹாசனின் "மக்கள் நீதி மய்யம்' ஏற்படுத்தியுள்ள முதல் தாக்கம் என்ன?
தி.மு.க.வின் செயல்தலைவர் சொன்னதை அ.தி.மு.க. அமைச்சர் முதன்முறையாக ஆமோதித்திருப்பது.
ஆன்மிக அரசியல் அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72 ஆன்மிக அரசியல் ஏற்படுத்தும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? ஆன்மிகம் என்றால் தெய்விகம். அது தொடர்பான நம்பிக்கைகளை விமர்சிப்பது மனதைப் புண்படுத்தும் என்பதே தற்போதைய நிலை. அரசியல் என்று வந்துவிட்டால், விமர்சனம்தான் முதலிடம் பெறும். ஆன்மிகத்தை அரசியல் கொள்கையாக முன்வைக்கும்போது, புனிதம் என்னும் நிலை மாறி, மக்கள்மயமாகி கேள்விகள் எழுப்பப்படும். கோவில் கருவறைக்குள் அனைத்து சாதியினரும் நுழைய வருணாசிரமம் ஏன் தடுக்கிறது, பெண்களுக்கு மதங்கள் அளிக்கும் உரிமைகள் என்ன, அறிவியல் பார்வை குறித்து எல்லா மதங்களும் என்ன சொல்கின்றன என்கிற கேள்விகள் விமர்சனப் பார்வையுடன் வைக்கப்படும்போது, அவை தொடர்பான உண்மையான பதில்கள் கிடைக்கும். அதைத் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது ஆன்மிக அரசியலால் விளையக்கூடிய நன்மை. அதே நேரத்தில், ஆன்மிகத்திற்கு மதச்சாயம் பூசி, ஓட்டு அரசியலுக்காக அதனைக் கையில் எடுக்கும்போது பெரும்பான்மைக்கும் சிறுபான்மைக்குமான நல்லிணக்கம் தகர்க்கப்படும். அமைதிப் பூங்கா என்பது ரத்த பூமியாகும் அபாயமும் உண்டு. |