எம்.சுந்தரமூர்த்தி, செய்யாறு
"பத்திரிகை தர்மம்' என்றால் என்ன?
எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் உண்மையை உரைப்பதும், வன்முறைத் தீ பரவாதபடி சமுதாய அமைதிக்குத் துணை நிற்பதுமே பத்திரிகை தர்மம். அது இன்று "ஊடக அறம்' எனப் பெயர் பெற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் "அரசு கேபிள்' எனும் கயிறு கழுத்தில் சுற்றப்பட்டு மூச்சுத் திணறுகிறது. இந்திய அளவில் கார்ப்பரேட்டுகளின் கைக்குழந்தையாகிவிட்டது.
வி.கார்மேகம், தேவகோட்டை
"அணைகள் பராமரிப்பை விட்டுக்கொடுப்பதன் மூலம் "மாநில சுயாட்சி'க் கொள்கையை விட்டுத் தரப்போகின்றீர்களா' என்கின்றனரே பா.ஜ.க.வினர்?
நீட் தேர்வு, ஜி.எஸ்.டி என எல்லாவற்றிலும் மாநிலங்களின் உரிமைகளைப் படிப்படியாகப் பறித்துவிட்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் ஜனநாயகத்தின் எதிரிகள், "மாநில சுயாட்சி' பற்றி கேள்வி கேட்பது, ஆடுகளுக்காக கண்ணீர்விடும் ஓநாயின் நடிப்புக்கு நிகரானது.
நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக
எம்.சுந்தரமூர்த்தி, செய்யாறு
"பத்திரிகை தர்மம்' என்றால் என்ன?
எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் உண்மையை உரைப்பதும், வன்முறைத் தீ பரவாதபடி சமுதாய அமைதிக்குத் துணை நிற்பதுமே பத்திரிகை தர்மம். அது இன்று "ஊடக அறம்' எனப் பெயர் பெற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் "அரசு கேபிள்' எனும் கயிறு கழுத்தில் சுற்றப்பட்டு மூச்சுத் திணறுகிறது. இந்திய அளவில் கார்ப்பரேட்டுகளின் கைக்குழந்தையாகிவிட்டது.
வி.கார்மேகம், தேவகோட்டை
"அணைகள் பராமரிப்பை விட்டுக்கொடுப்பதன் மூலம் "மாநில சுயாட்சி'க் கொள்கையை விட்டுத் தரப்போகின்றீர்களா' என்கின்றனரே பா.ஜ.க.வினர்?
நீட் தேர்வு, ஜி.எஸ்.டி என எல்லாவற்றிலும் மாநிலங்களின் உரிமைகளைப் படிப்படியாகப் பறித்துவிட்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் ஜனநாயகத்தின் எதிரிகள், "மாநில சுயாட்சி' பற்றி கேள்வி கேட்பது, ஆடுகளுக்காக கண்ணீர்விடும் ஓநாயின் நடிப்புக்கு நிகரானது.
நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
இளையராஜாவுக்கு கலைஞர் வழங்கிய "இசைஞானி' பட்டம், நடுவண் அரசு அளித்துள்ள "பத்மபூஷன்' பட்டம். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
இரண்டுமே அவரது இசைத்திறமைக்கான விருது என்றாலும் இசைக்கலைஞருக்கு முதல்வர் கலைஞர் கொடுத்த பட்டம் என்பது மக்களின் உணர்வு. அரசு தந்திருப்பது ஆயிரத்தில் ஒன்று.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
"மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியாவில் "ஆபரேஷன் திராவிடம்' என்ற பெயரில் காலூன்ற ரூபாய் 4,800 கோடியை ஒரு தேசிய கட்சி ஒதுக்கியுள்ளது' என தெலுங்கு நடிகர் சிவாஜி குற்றம்சாட்டியுள்ளாரே?
மாநிலத்துக்கு மாநிலம் புதுப்புது ஆபரேஷன்கள் மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் தேசிய கட்சியின் பார்வை தென்னிந்தியாவில் பதிவதையும், "ஆபரேஷன் திராவிடம்' என்ற பெயரில் பல்லாயிரம் கோடிகளை ஒதுக்குவதையும் அலட்சியப்படுத்த முடியாது. அரசியலில் காலூன்ற அடுத்த மதத்தாரின் வழிபாட்டுச் சின்னத்தைக்கூட இடித்துத்தள்ளி கலவரக் குட்டையில் மீன் பிடித்தவர்கள் தென்னிந்தியாவில் என்னென்ன செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதை 5 தென்னிந்திய மாநில அரசியல் களமும் ஆராய வேண்டியது அவசியம்.
பி.மணி, வெள்ளக்கோவில்
ஒரு காலத்தில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி தற்போது பலகீனமான நிலையில் உள்ளதே?
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருந்த காலத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்வது எளிதாக இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய அணியின் வலிமை குறைந்ததுடன், உலக அளவில் ஹாக்கி ஆட்டத்தின் நுணுக்கங்களும் மாறிவிட்டன. மேற்கு நாடுகள் ஹாக்கியை ஆக்கிரமித்தன. 1980ல் ரஷ்யத் (சோவியத் யூனியன்) தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக்கில் அமெரிக்காவும் அதற்கு ஆதரவான மேற்கு நாடுகள் பலவும் கலந்துகொள்ளாத நிலையில் இந்தியா கடைசியாக தங்கப்பதக்கம் வென்றது. தற்போது இந்தியாவின் ஆண்-பெண் ஹாக்கி அணிகளில் திறமையானவர்கள் இருக்கிறார்கள். விளையாட்டு அரசியலைத் தவிர்த்து, சரியான முறையில் பயிற்சியும் உதவியும் தரப்பட்டால் மீண்டும் ஹாக்கியில் இந்தியா ஒளிரும்.
மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்
தமிழ்நாட்டில் கடன் சுமை அதிகமாக இருக்கும்போது அரசாங்கத்தின் "சாதனை விளம்பரங்கள்' தேவையா?
"இப்படியொரு அரசாங்கமே தேவையா?' என்பதுதான் தமிழக மக்களின் கேள்வி.
---------------------------------
ஆன்மிக அரசியல்
ப.பாலாசத்ரியன், பாகாநத்தம்
கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியில் இருந்தபோது ஆன்மிக அரசியல் நுழைக்கப்பட்டதா?
ஆன்மிக உரிமைகளும் அதனடிப்படையில் வழிபாடும் திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்கள் ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்டன. இதில் கலைஞருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், நின்று போயிருந்த திருவாரூர் தேரோட்டத்தை நடத்தியவர் அவர்தான். மயிலை கபாலீசுவரர் கோவில் தெப்பக்குளத்தை தூர்வாரச் செய்தார். பல கோவில்களிலும் திருப்பணியை மேற்கொண்டதுடன், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகவும் தமிழ்வழி அர்ச்சனைக்கும் சட்டரீதியாகப் பாதை போட்டார்.
எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை தன் தாயின் வடிவில் மூகாம்பிகை அம்மனைக் காண்பதாகச் சொல்லி வழிபட்டவர். அவரது ஆட்சிக்காலத்தில்தான் திருவரங்கம் கோவில் கோபுரம் புனரமைக்கப்பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது தொடர்பாக நீதிபதி மகராசன் கமிஷனை அமைத்தார். பாதுகாப்பற்ற கோவில்களில் உள்ள பழங்கால சாமி சிலைகளை பாதுகாக்க திருவாரூர் பெரியகோவிலில் பெட்டக அறை வசதி செய்து தந்தவர்.
செல்வி.ஜெயலலிதா வெளிப்படையாக தன் ஆன்மிக வழிபாட்டை மேற்கொண்டதுடன் தனக்காகத் தன் கட்சிக்காரர்களையும் பால்குடம் எடுக்கச் செய்தவர். அவரது ஆட்சியிலும் பல கோவில்கள் புனரமைக்கப்பட்டதுடன், கோவில்களில் அன்னதானத் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. இதில் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் பயன்படுத்தி மதவாத அரசியலை விதைக்க இந்துத்வா சக்திகள் முயற்சி செய்தன. அவர்களின் தனிப்பட்ட ஆளுமையின் காரணமாக அந்த முயற்சி முழு வெற்றிபெறாவிட்டாலும் "ஸ்லீப்பர் செல்'களாக இருந்தவர்கள் இப்போது நேரடியாகவும், புதுப்புது பெயர்களிலும் வெளிப்படுகிறார்கள்.