மாவலி பதில்கள்!

stephen-hawing

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118

டார்ச்லைட், மெழுகுவத்தி, லாந்தர் விளக்கு இவைகளை இருட்டுக்குப் பயந்து தயார்படுத்தி வைக்கலாமா அல்லது மின்சார வரவை நம்பி கோடையைக் கடந்து விடலாமா?

மின்வெட்டு நேரத்திலேயே "மின்மிகை மாநிலம்' என கூசாமல் சொன்ன ஆட்சியாளர்கள் உள்ள மாநிலத்தில், இருட்டை எதிர்கொள்ளும் விளக்குகள் மட்டுமல்ல, வியர்வையைச் சமாளிக்கும் விசிறிகளையும் தயாராக வைத்துக்கொள்வது புத்திசாலித்தனம்.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

சிறைச்சாலைகள், வசதி குறைந்த கைதிகளுக்கு வதை முகாம்களாகவும் வசதி படைத்தவர்களுக்கு சொகுசு விடுதிகளாகவும் இருப்பதுதான் எழுதப்படாத விதியா?

எழுதி வைக்கப்பட்டுள்ள விதிகள் காற்றில் பறக்கும்போது, எழுதப்படாத விதிகள் அரசாளத் தொடங்கிவிடுகின்றன. கிடைத்த ஜாமீனுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாத நிலையில் பல கைதிகள் சிறைப்பட்டுள்ள நாட்டில், கிடைத்த தண்டனைக்குரிய உடையைக்கூட அணியாமல் சுடிதாரில் சுற்றி வருவதற்கு சிலருக்கு அரசாங்கத்தின் ஆதரவே கிடைக்கிறது. சிறை சிலருக்கு போதி மரம், சிலருக

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118

டார்ச்லைட், மெழுகுவத்தி, லாந்தர் விளக்கு இவைகளை இருட்டுக்குப் பயந்து தயார்படுத்தி வைக்கலாமா அல்லது மின்சார வரவை நம்பி கோடையைக் கடந்து விடலாமா?

மின்வெட்டு நேரத்திலேயே "மின்மிகை மாநிலம்' என கூசாமல் சொன்ன ஆட்சியாளர்கள் உள்ள மாநிலத்தில், இருட்டை எதிர்கொள்ளும் விளக்குகள் மட்டுமல்ல, வியர்வையைச் சமாளிக்கும் விசிறிகளையும் தயாராக வைத்துக்கொள்வது புத்திசாலித்தனம்.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

சிறைச்சாலைகள், வசதி குறைந்த கைதிகளுக்கு வதை முகாம்களாகவும் வசதி படைத்தவர்களுக்கு சொகுசு விடுதிகளாகவும் இருப்பதுதான் எழுதப்படாத விதியா?

எழுதி வைக்கப்பட்டுள்ள விதிகள் காற்றில் பறக்கும்போது, எழுதப்படாத விதிகள் அரசாளத் தொடங்கிவிடுகின்றன. கிடைத்த ஜாமீனுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாத நிலையில் பல கைதிகள் சிறைப்பட்டுள்ள நாட்டில், கிடைத்த தண்டனைக்குரிய உடையைக்கூட அணியாமல் சுடிதாரில் சுற்றி வருவதற்கு சிலருக்கு அரசாங்கத்தின் ஆதரவே கிடைக்கிறது. சிறை சிலருக்கு போதி மரம், சிலருக்கு போதை தரும்.

stephen

வி.கார்மேகம், தேவகோட்டை

ஸ்டீபன் ஹாக்கிங்..?

கேள்விக்குறிகளை ஆச்சரியக்குறிகளாக மாற்றியவர், உடலாலும் அறிவாலும். நரம்பு மண்டலமும் தசைப் பகுதிகளும் செயலிழந்த நிலையில் கணினித் தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன அறிவியல் கருவிகள் துணையுடன், நெருங்கி வந்த மரணத்தை பல ஆண்டு தொலைவுக்கு விரட்டியவர். பேச முடியாத நிலையிலும் கன்னத்து அசைவுகளை கணினிக் குரல்மொழியாக மாற்றி, தம் சிந்தனைகளை ஒலியாக வழங்கிய அண்டவியல் விஞ்ஞானி. பேரண்டத்தின் தோற்றம், அதன் விரிவு, பரிணாமம், இயக்கவியல் குறித்த அவருடைய ஆய்வுகள் அறிவியல் உலகில் ஆச்சரியத்தை உருவாக்கின. கடவுளால் உலகம் படைக்கப்பட்டது என்பதை விஞ்ஞானப்பூர்வமாக மறுத்த பகுத்தறிவுச் சிந்தனையாளர். 21 வயதில் நோயால் பாதிக்கப்பட்டு, 76 வயதுவரை வாழ்ந்த ஸ்டீபன் ஹாக்கிங் இறந்தும் வாழ்கிறார் பேரண்டம் போன்ற தம் அறிவாற்றலால்.

உமரி.பொ.கணேசன், மும்பை-37

இந்திய ஹாக்கி அணியை ஒடிசா மாநிலம் தத்து எடுத்த மாதிரி மற்ற எல்லா விளையாட்டுகளையும் ஏதாவது ஒரு மாநிலம் எடுக்கலாம் அல்லவா?

இங்கே கிரிக்கெட்டுக்கு மட்டுமே தனி அக்கறையும் கூடுதல் நிதியும் கிடைத்து வந்த நிலையில், கிரிக்கெட் வீரர்கள் சிலரே கால்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளை ஊக்கப்படுத்தியதால் லேசான மாற்றம் தருகிறது. இந்நிலையில், சஹாரா என்ற தனியார் நிறுவனத்தின் ஸ்பான்ஸரிலிருந்த இந்திய ஹாக்கி அணியை, ஒடிசா மாநிலம் தத்து எடுத்திருப்பது நல்ல தொடக்கம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு சிலையை இரண்டு ரிமோட் கண்ட்ரோலால் திறப்பது போன்ற புதுமையான விளையாட்டுகளை ஆட்சியாளர்களே தத்தெடுத்திருப்பதால், வழக்கமான விளையாட்டுகள் வேறு மாநிலங்களின் ஆதரவை நாடுவதே நல்லது.

மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை

மூப்பனாரிடம் இருந்த வீச்சும் வேகமும்கூட வாசனுக்கு இல்லையே?

டெல்லி அரசியலில் கற்ற பாடத்தை வைத்து தமிழக அரசியலைக் கையாண்டவர் மூப்பனார். டெல்லியின் அரசியலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தமிழக அரசியலில் தடுமாறுபவர் வாசன்.

ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

கமல்-ஸ்ரீதேவி, ரஜினி-ஸ்ரீதேவி?

இருவருக்குமே பொருத்தம் என்றாலும், "மயிலு' மனம் கவர்ந்தது ரசிகர்களை.

------------------------------------------------------------

ஆன்மிக அரசியல்

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

"கோவில்களில் பெண்களை அர்ச்சகராக நியமிக்கவேண்டும்' என திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி சேலத்தில் மாநாடு நடத்தியிருப்பது சரியா?

மதங்கள் பலவும் பெண்களை உயர்பீடத்தில் உட்கார வைப்பதில்லை. ஒரு பெண் போப்பாண்டவர், ஒரு பெண் சங்கராச்சாரியார் இதுவரை வாய்க்கவில்லை. கேரளாவின் மலப்புரத்தில் ஜமைதா என்ற பெண் இமாம் கடந்த ஜனவரியில் நியமிக்கப்பட்டது, இஸ்லாம் மதத்தில் ஏற்பட்ட மாற்றம். இந்துக் கோவில்களைப் பொறுத்தவரை, பிராமணர்களிலேயே குறிப்பிட்ட சிலரைத் தவிர மற்ற சமுதாயத்து ஆண்களையே அர்ச்சகராக்க முடியாமல் ஆகமத்தின் பெயரால் ஏற்படுத்தப்பட்டிருந்த தடைகள், அண்டை மாநிலமான கேரளா உள்பட பல இடங்களில் மெல்ல மெல்ல உடையத் தொடங்கியுள்ளன. பெண் அர்ச்சகர்களோ சில கிராமக் கோவில்களிலும் தனிப்பட்ட குடும்பங்களின் வழிபாட்டுக்குரிய கோவில்களிலும் மட்டுமே அரிதாக இடம்பெற்றுள்ளனர். கேரளாவில் நாராயணகுரு சிலைக்கு பெண் அர்ச்சகர்கள் வழிபாடு செய்கிறார்கள். தமிழ்நாட்டில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் கருவறைக்குள் மாதவிலக்கு நாட்களிலும்கூட பெண்கள் சென்று பூசை செய்ய அனுமதி உண்டு. ஆனாலும் ஆகமவிதிப்படியான கோவில்களில் இந்த வாய்ப்பு பெரும்பாலும் மறுக்கப்பட்டே வருகிறது. அதனை 2014-ல் மராட்டிய மாநிலம் தகர்த்தது. அங்கு சோலாப்பூர் மாவட்டம் பண்டர்பூரில் உள்ள விட்டல் நாராயணன் கோவிலில் ஹேமா அஷ்டேகர் என்ற பெண், ருக்மணிதேவி சன்னதிக்கு அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். முறையாக வேத மந்திரங்கள் கற்றிருக்கிறார்களா என நேர்காணலுக்கு வந்த பல பெண்களிடமும் கேள்விகள் கேட்டு, அதன் அடிப்படையில் தேர்வானவர் ஹேமா. பல நூறாண்டுகளாக ஆண் அர்ச்சகர்களால் அர்ச்சனை-அபிஷேகம் -உடைமாற்றம் செய்யப்பட்ட ருக்மணிதேவி முதன்முறையாக பெண் அர்ச்சகர், தம் கருவறைக்குள் வந்தபோது மனம் குளிர்ந்திருப்பார். மராட்டிய மாநிலம் காட்டிய வழியில், தமிழக கோவில்களில் உள்ள அம்மன்களின் மனமும் குளிரட்டும் என விடுதலை சிறுத்தைகள் நினைத்தால் தவறில்லையே!

stephen-hawing
இதையும் படியுங்கள்
Subscribe